என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.
    • பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, அம்மன்கோவில் புதூரில் இருந்து முருங்கத்தொழுவு செல்லும் ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.

    இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ் மட்டும் அல்லாமல், தனியார் நிறுவன கம்பெனி பஸ்கள், லாரிகள் என போக்குவரத்து மிகுந்த ரோடு. மேலும் இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் செல்கிறது. இந்த நிலையில் இந்த குழி ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    தற்போது ரோட்டின் 2 பக்கமும் குழி ஏற்பட்டு பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பஸ் போக்குவரத்து இன்றி தடுமாறி வருகின்றனர்.

    மேலும் இந்த இடத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் முன்னதாவது அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், தாளவாடி, ஆசனூர், நம்பியூர் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த சென்னிமலை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் லெட்சுமணன் (வயது 29),

    கருங்கல்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாபு (52), தாளவாடி நாயக்கர் தெருவை சேர்ந்த அல்லம்மா (55), கோத்தகிரி பகுதியை சேர்ந்த மதன் மகன் பரமேஸ்வரன் (34),

    கோபிசெட்டிபாளையம் கடைசெல்லிபாளையத்தை சேர்ந்த பழனி மகன் ரெங்கசாமி (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பவானி மெயின் ரோடு பகுதியில் பொது இடத்தில் குடிபோதையில் சுற்றி திரிந்த பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுரேஷ் (38) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் சாலையின் பக்க வாட்டில் உள்ள தென்னை மரத்தின்மீது மோதியது
    • இதில் அருண்பிரசாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வெங்மேட்டை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன் அருண்பிரசாத் இவர் டாக்டராக உள்ளார்.

    இவருக்கு திருமணம் செய்வதற்காக நிச்சம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் டாக்டர் அருண்பிரசாத்திற்கு அவரது மாமனார் புதிய கார் ஒன்றை வாங்கி தந்தார். இதையடுத்து அந்த காரில் அவர் காங்கேயத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அந்த காரை மாமனாரிடம் காட்டினார். பின்னர் அவர் காங்கேயம் அருகே உள்ள ஒரு கோவிலில்அந்த காருக்கு பூஜை போட்டு விட்டு தனது தாயுடன் அரச்சலூருக்கு வந்து கொண்டிருந்துள்ளார் .

    தொடர்ந்து அவர் அரச்சலூர் நல்லமங்கா பாளையம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் பக்க வாட்டில் உள்ள தென்னை மரத்தின்மீது மோதியது. இதில் கார்முழுவதுமாக நொறுங்கி சேதமடைந்தது.

    இதில் அருண்பிரசாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது தாயார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து அருண்பிரசாத் மற்றும் அவரது தாயாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகி ச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக அருண்பிரசாத் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    ஈரோடு:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்க ப்படுவது போல தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும்,

    100 நாள் திட்ட கணினி உதவியா ளர்களை பணி வரன்முறை செய்ய வே ண்டும், பதவி உயர்வு உள்ளி ட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்க ப்பட்டது.

    இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவ ட்டத்தில் கலெக்டர் அலுவ லகம், 14 ஊராட்சி ஒன்றி யங்கள், ஊராட்சி அலுவலக ங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில் அரசு தரப்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் சென்னையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க த்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசின் உறுதி மொழியை ஏற்று காலவரை யற்ற வேலை நிறுத்த போரா ட்டம் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.

    இதை யடுத்து ஊரக வளர்ச்சிதுறை இயக்கு நரிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 16 அம்ச கோரிக்கைகள் தொடர்பான அரசாணைகள் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சி செ யலாளர்கள் பணி விதிகள் தொடர்பான அரசாணை 2 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறியதையடுத்து மாநில செயற்குழு கூட்ட முடிவுகளின் படி காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    • தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    மத்திய அரசால் ஆயுஷ்மான் பவ என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சி யாக அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும்,

    ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், பாகுபாடு இன்றி எந்த உயிரிழப்பும் ஏற்படாத இருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    மேலும் நம் நாட்டில் உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்க தங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படுத்த கூடிய எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
    • சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற் குட்பட்ட சிப்காட் தொழிற் பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் சார்பிலான தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொழிற்துறை யினருடனான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தொடர்பான பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் அனைத்து தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசை பொறுத்தளவில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களின் நலனுக்காக தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கியுள்ளது.

    அதேபோன்று, தொழிற்சாலைகள் பொதுமக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசின் விதி முறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுத்தும் வகையில், விதி முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விரைவில் நல்ல தீர்வு மேற்கொள்ளப்படும்.

    தொடர்ந்து வரும் நாட்களில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் முத்துசாமி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், சென்னி மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், பெருந்துறை தாசில்தார் பூபதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுலவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார்.
    • உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.

    இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    • போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    தாளவாடி:

    தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள்.

    நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில் இன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் பாக்யராஜ் தலைமையில் 38-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்டம் தாவாடி அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    • மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
    • தேனீ கொட்டியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த தூரபாளையம் திருவ ள்ளூவர் தெருவை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 34). இவருக்கு இன்னும் திரும ணம் ஆகவில்லை. கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவ த்தன்று முத்துசாமி அவரது உறவினர் மணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய 3 பேரும் ஆலுச்சாம்பாளையத்தில் உள்ள குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் மரம் வெட்டுவதற்கு சென்ற னர். இந்நிலையில் முத்து சாமி மரத்தில் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்த போது அவரை தேனீ கொட்டி விட்டது.

    இதனால் முத்துசாமி மரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை அங்கிரு ந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
    • இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மின் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலை யங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமை யில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் பணி நடைபெற்றது.

    மின் துறை சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளும், ரோகு இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மீன் குஞ்சுகளும் என மொத்தம் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணியின் நீர்த்தேக்க பகுதியில் விடப்பட்டது. தற்போது விடப்பட்ட மீன் குஞ்சுகள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த உடன் மீனவ ர்கள் மூலம் பிடி க்கப்பட்டு விற்ப னைக்கு அனுப்பி வைக்க ப்படும் எனவும், ஆண்டொ ன்றுக்கு பவானி சாகர் அணையில் 39 லட்சம் மீன் குஞ்சுகள் விட ப்படுவ தாகவு ம் தற்போது இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    • மதுவிற்ற 7 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
    • 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யபட்டன

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெரு ந்துறை, ஈரோடு டவுன், ஆசனூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இன்றி மது விற்று கொண்டி ருந்த புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பகுதி யைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கண்ணன் (வயது 38), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டை தங்கராசு மகன் பாரதி (24), கர்நாட காவைச் சேர்ந்த லிங்க ராஜூ (32), திருப்பூர் மாவ ட்டம் பல்லடத்தை சேர்ந்த பாபு மகன் ஜெயக்குமார் (34), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோ (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவ ர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் தீனாரை பகுதியில் மது கடத்திய தாளவாடி பகுதியைச் சேர்ந்த கோபாலகிரு ஷ்ணன் 51 சித்தராஜ் 44 ஆகியோரை தாளவாடி போலீசார் பிடித்தனர். மேலும் அவ ர்கள் மது கடத்த பயன்ப டுத்திய 2 மோட்டார் சைக்கி ள்களை பறிமுதல் செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோனவாய்க்கால் சுக்கான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற மாநகராட்சி பூங்கா பராமரிப்பாளர் ஆவார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள மோட்டா ரை ஆப் செய்து விட்டு மோட்டாரின் வால்வை திறந்து விட்டார். அப்போ து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சேகர் கீேழ விழுந்தார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜனார்த்தனன் ஈரோடு தெற்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×