மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு

விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறு கிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னிமலை, ெரயில் நிலையம், அம்மா பேட்டை, கடத்தூர் பகுதி யில் அனுமதியின்றி மதுவி ற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விவேக்ராஜ் (வயது 37), சென்னிமலை ரோடு பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முருகேசன் (41), பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (43), கடத்தூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி மகன் ஆறுமுகம் (63) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல் கருங்க ல்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த முபாரக் மகன் இப்ராஹிம் (22) என்பவரை கருங்கல்பாளையம் போலீ சார் பிடித்தனர்.

பின்னர் அவரிடம் இரு ந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com