search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 shops"

    • பவானி உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.
    • 2 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு வட்டாரத்திற்க்கு உட்பட்ட சித்தோடு பகுதியில் கலெக்டர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை ஆகியோர் பரிந்துரைபடி தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என மளிகை கடைகள் மற்றும் சிறிய அளவிலான பெட்டிக்கடை ஆகியவற்றில் பவானி உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 கடைகளில் ஹான்ஸ் 10 பாக்கெட், பான் மசாலா 15 பாக்கெட் விற்பனை செய்ய வைத்து இருந்ததா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேண்டு கோள் விடுத்துள்ளார். 

    • சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

     உடுமலை:

    உடுமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தா (வயது 65) .இவர் காந்தி சவுக் பகுதியில் தளி ரோடு மேம்பாலத்திற்கு அருகில் பேன்சி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதே போல் இந்த பகுதியில் உள்ள ஏசா (48) என்பவர் கடையின் பூட்டை உடைத்து ரூ. 500 சில்லறை காசுகளை மர்ம நபர்கள்திருடி சென்றனர். மேலும் இதே பகுதியில் உள்ள பாலமுருகன் (58) என்பவர் வீடு புகுந்து மர்மநபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    ×