search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில்  ஒரே  நாளில்  2 கடைகளில்   திருட்டு
    X

    கோப்புபடம். 

    உடுமலையில் ஒரே நாளில் 2 கடைகளில் திருட்டு

    • சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தா (வயது 65) .இவர் காந்தி சவுக் பகுதியில் தளி ரோடு மேம்பாலத்திற்கு அருகில் பேன்சி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதே போல் இந்த பகுதியில் உள்ள ஏசா (48) என்பவர் கடையின் பூட்டை உடைத்து ரூ. 500 சில்லறை காசுகளை மர்ம நபர்கள்திருடி சென்றனர். மேலும் இதே பகுதியில் உள்ள பாலமுருகன் (58) என்பவர் வீடு புகுந்து மர்மநபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×