search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறச்சலூர் அருகே கார் மோதி அரசு மருத்துவர் பலி
    X

    அறச்சலூர் அருகே கார் மோதி அரசு மருத்துவர் பலி

    • கார் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் அரசு மருத்துவர் ஆவார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அறச்சலூரை அடுத்த ஓடா நிலை ஜெயராமபுரம் அருகே காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கார் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மேகநாதன் உடல்நசுங்கி பலியானார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறி்ந்த அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மருத்துவர் மேகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×