என் மலர்
திண்டுக்கல்
- ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர்.
- இந்த பன்னீர் திராட்சைகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி, முருகன்பட்டி, பூசாரிபட்டி, ஜாதிகவுண்டன்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர்.
பருவமழை கைகொடுத்த நிலையில் விவசாயிகள் வழக்கத்தை விட அதிகமாக பன்னீர்திராட்சை சாகுபடி செய்தனர். சுமார் 120 நாட்களில் மகசூல் தரக்கூடிய பன்னீர்திராட்சை இப்பகுதி மண்ணின் தன்மை மற்றும் விவசாயிகளின் பராமரிப்பு காரணமாக அதிகசுவையுடன் காணப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பன்னீர்திராட்சை கொத்து கொத்தாக நன்கு விளைந்து காணப்படுகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ஒரு கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை விலை கொடுத்து வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்பகுதியில் அறுவடை முடியும் வரை மழையோ, காற்றோ வீசாமல் இருந்தால் விளைச்சல் மேலும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஸ்டீபன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக திராட்சை நல்ல விளைச்சலை கொடுத்தது. அறுவடையின்போது மழை பெய்யாததால் ஓரளவு லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது சில இடங்களில் திராட்சைகள் பறிக்காமல் விடப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பன்னீர் திராட்சைகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரசுபன்னீர் திராட்சை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பைக் மீது மோதியில் குடிபோதையில் இருந்தவர்கள் தொழிலாளி மீது கல்லை போட்டு கொலை செய்தனர்.
- போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சிறுமலையை சேர்ந்தவர் வீரன்(45). கூலித்தொழி லாளி. இவருக்கு தனம் என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். வீரனின் தந்தை சின்னு திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைபேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக அடிக்கடி திண்டுக்கல் வந்து சென்றார். அேதபோல் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த அன்பி ல்ராஜ்(32), காளிதாஸ்(30) ஆகியோர் வீரனின் பைக் மீது மோதினர். அப்போது 3 பேருமே குடிபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்பில்ராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் வீரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர். இருந்தபோதும் ஆத்திரம் தீராமல் அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர்.
இதில் தலைநசுங்கி வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்தில் ஒரு செல்போன் இருந்தது.அதை துருப்புசீட்டாக வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அன்பில்ராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் நகரில் கடந்த 2 நாட்களில் 3 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது பொதுமக்களி டையே பீதியை கிளப்பி யுள்ளது.
- விரிவாக்கப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பார்வை யிட்டார்.
- கொடைக்கானலில் ரூ.90 கோடி செலவில் நடை பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் சீசன் காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானல் பகுதியில் பஸ் நிலையம் சீரமைத்தல், ஏரி அபிவிருத்தி பணிகள். புதிய காய்கறி அங்காடி அமைக்கும் பணி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறைகள், ஆடு, மாடு வதைக்கூடம், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நடைபெற்று வரும் விரிவாக்கப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வை யிட்டார்.
அவருடன் நகராட்சி களின் மண்டல இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் மனோகரன், கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றத்தலைவர் செல்லத்துரை,துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், பொறியாளர் முத்துக்குமார் உட்பட நகராட்சித்துறை அதிகாரி கள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது,
கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரி பகுதி யில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக சுமார் ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் சீசன் கால ங்களுக்குள் இவை நடத்தி முடிக்கப்படும் என எதிர்பா ர்க்கப்படுகிறது. அதேபோல மீதமுள்ள 17 கி.மீ தொலை சாலைகள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு ள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரில் உள்ள கே.ஆர். ஆர் கலையரங்கம் பகுதியில் சுமார் ரூ. 35 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது. இதில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெறும். அத்துடன் நகரின் மையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடத்திலும் ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக இடம் பார்வையிடப்பட்டது. கொடைக்கானல் நகரில் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ரூ.2½ கோடி செலவில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிச் சாலையை சுற்றியுள்ள சாலை நெடுஞ்சாலை த்துறைக்கு சொந்தமானது.
அதனை முழுமையாக அமைக்கும் பணி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள பஸ் நிலையம் சுமார் ரூ.1½ கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக தனியார் வசம் டெண்டர் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.சென்னையில் உள்ளது போல தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும்.
நகரில் உள்ள 1918 மின்விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டு எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. மேலும் 600 இடங்களில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் ரூ.90 கோடி செலவில் நடை பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் சீசன் காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான பிரகாசபுரம் பகுதியில் ஏற்கனவே குப்பைகளை அகற்றுவது குறித்து இடம் பார்வை யிடப்பட்டு அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளராக இருப்பவர் திருநாவுக்கரசு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 22ந் தேதி தனது மனைவியுடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 170 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது.
இதே போல் அருகில் வசிக்கும் உதவி பொது மேலாளர் செந்தில் (42) என்பவர் வீட்டில் ரூ.10 ஆயிரம், பாஸ்கர் வீட்டில் ரூ.40 ஆயிரம் பணம் திருடு போனது.
அதற்கு அடுத்து வசிக்கும் வேல்முருகன் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்த போது அங்கு எதுவும் கிடைக்காததால் விட்டுச் சென்றனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. துர்காதேவி வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, சரத்குமார் அடங்கிய தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
தனியார் சிமெண்ட் ஆலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருப்பதால் அவர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அரியலூர் உள்ளிட்ட சிமெண்ட் கம்பெனிகள் உள்ள இடங்களில் இதேபோல் அதிக அளவு நகை பணம் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.
முக்கிய கைரேகைகளை வைத்து ஆய்வு செய்ததில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர் இதில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் விரைந்தனர்.
அங்குள்ள தார் மாவட்டம் பசோலி பகுதியில் அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போது அதே பகுதியை சேர்ந்த பாயாமெர்சின் பாப்ரியா (30) என்பவரிடம் இருந்த நகையை பரிசோதனை செய்தனர். அந்த நகையை கொள்ளைபோன உரிமையாளரிடம் செல்போன் மூலம் காட்டியதில் அது தனது நகை என உறுதி செய்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் கொள்ளைக்கு மூளையாக இருந்த நபர் பல்வேறு இடங்களில் நகைகளை கொடுத்து வைத்திருப்பதும், அதில் ஒரு பவுன் மட்டும் தனக்கு கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.
அதன்பேரில் அந்த வாலிபரை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
- 7-ந்தேதி தெப்பஉற்சவம் நடக்கிறது.
திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.
இரவு அலங்கார மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கையில் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், குழந்தைகளை சுமந்தபடியும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இன்று மாலை திருத்தேர் உலா நடைபெறுகிறது. நாளை (4-ந்தேதி) தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள்நீராட்டுதல் நடைபெறும். 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 7-ந்தேதி தெப்பஉற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
- பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (36) ஒட்டி வந்தார். பஸ் உலுப்பகுடி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் கிருபாகரன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் டிரைவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார்.
- திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (45). இவரது உறவினர் கருப்பையா (46). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அகஸ்தியர் புரம்-தென்மலை ரோட்டில் உள்ளது.
இவர்களுக்கும் காரைக்குடியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி முன்விரோதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தனபால் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமலைக்கு வந்து ராஜாக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார். இதனை தடுக்க வந்த கருப்பையா மீதும் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் ஒன்றுகூடவே தனபால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமலைக்கு விரைந்து வந்து காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜாக்கண்ணு, கருப்பையா ஆகிய 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு நாட்டுத்துப்பாக்கி பயன்பாட்டில் உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு அதனை கைப்பற்றினாலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கிகளை பலர் பதுக்கி வைத்துள்ளனர். எனவே இச்சம்பவத்திற்கு பிறகாவது துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படவேண்டும். விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முன்னாள் ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ். தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). வயது மூப்பால் கடந்த மாதம் 24ம் தேதி மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.
- காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு போதிய அளவு பஸ் சேவை இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது.
- ஏணிகளில் ஏற முடியாதபடி இரும்பு தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான பயணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என பஸ் உரிமையாளர்கள் நம்புகின்றனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரைச்சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் டவுன் பஸ்களில் செல்கின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு போதிய அளவு பஸ் சேவை இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. இதில் ஒருபடி மேலே போய் பல மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி பயணம் செய்கின்றனர். குக்கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களில் பின்பக்க ஏணிகள் மற்றும் பஸ்களின் மேற்புறத்தில் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஆபத்தான பயணங்கள் தொடர்ந்து வருகிறது. டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மாணவர்களை கண்டித்தால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சிைன தொடர்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக திண்டுக்கல் பகுதியில் உள்ள பஸ்களில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஏணிகளில் ஏற முடியாதபடி இரும்பு தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான பயணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என பஸ் உரிமையாளர்கள் நம்புகின்றனர். இருந்தபோதும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே விபத்தை தடுக்க முடியும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 3 நாட்களாக அகஸ்தியர்புரம்- தென்மலை பகுதியில் அடிக்கடி காட்டுதீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
- இதில் சிக்கி பல ஏக்கர் நிலங்களில் உள்ள மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் கருகி நாசமாகின.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சிறுமலையில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதில் காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் ஏராளமான பறவைகளும் உள்ளன. குளிரின் தாக்கம் குறைந்து கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வனப்பகுதியில் வறண்ட வானிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அகஸ்தியர்புரம்- தென்மலை பகுதியில் அடிக்கடி காட்டுதீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதில் சிக்கி பல ஏக்கர் நிலங்களில் உள்ள மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் கருகி நாசமாகின. தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று வனத்துறையினருடன் இணைந்து காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், சிறுமலை தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக மாறியுள்ளது. இதில் சிலர் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வீசிசெல்வதால் அடிக்கடி காட்டு தீ பற்றுகிறது. மேலும் வறண்ட வானிலையும் ஒரு காரணமாகும். எனவே வனத்துறையினர் சிறுமலைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். காட்டுதீயை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.
- வடமதுரை பகுதிகளில் 3-வது முறையாக சார்பதி வாளர் அலுவலகத்தை பற்றி செய்திகளை ஒட்டி உள்ளனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
வடமதுரை சார்பதி வாளர் அலுவலகத்திற்கு வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் பத்திர பதிவுக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வடமதுரை பகுதிகளில் 3-வது முறையாக சார்பதி வாளர் அலுவலகத்தை பற்றி செய்திகளை ஒட்டி உள்ளனர். அதில் வில்லங்கச் சான்று வழங்குவதற்கும், பழனி பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக த்தில் பணம் கேட்பதாகவும் அங்கு பணிபுரியும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆண்டுகளில் விண்ண ப்பித்தவர்களுக்கு வில்லங்கச் சான்று வழங்கா மல் இழுத்தடிப்பதாகவும், ஆண்டாய்வு தணிக்கை ஆய்வை எப்படி முடித்தா ர்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவ ர்கள் கலக்கமடைந்துள்ள னர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேண்டீனில் உணவு சாப்பிடுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
- ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு தாக்கியும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் விழுந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை வண்டிகரு ப்பண்ணசாமி கோவில் பின்புறம் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
விடுதியில் தங்கி படித்தும், பல மாணவர்கள் தினசரி வந்து செல்லும் மாணவர்களாகவும் பயின்று வருகின்றனர். இவர்களில் சீனியர், ஜூனியர் என்ற வேறுபாடுகளை தாண்டி குழு அமைத்து தகராறில் சில மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது முதற்கொண்டு கேண்டீனில் உணவு சாப்பிடுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
கல்லூரி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்தும் எச்சரிக்கை விடுத்தும் கண்டித்து வந்து ள்ளனர். இருந்தபோதும் இவர்களது மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வந்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட இந்த தகராறு கல்லூரிக்கு வெளியிலும் பயங்கரமாக வெடித்தது. அய்யலூர் - கடவூர் பிரிவில் நேற்று மாலை கல்லூரி மாணவர்கள் இரு குழுக்க ளாக பிரிந்து 30க்கும் மேற்பட்டோர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு தாக்கியும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் விழுந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆடுடோவில் வந்த ஒரு கும்பல் மாணவர்களை தாக்கினர். இதனை அருகில் இருந்த பொதுமக்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை.
இதனையடுத்து வடமதுரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட சில மாணவர்களை விசா ரணைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்கப்படும் என்று போலீசார் தெரி வித்தனர். இதனிடையே மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு மாவட்டங்க ளில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அது பஸ்நிலையம் உள்பட பொது இடங்களிலும் பயங்கரமாக வெடித்து ள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இது போன்ற மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அது போன்ற சம்பவம் நடைபெறாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் உரிய விசா ரணை நடத்தி வருங்கா லங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






