திண்டுக்கல்லில் குடிபோதையில் தொழிலாளியை கொன்ற 2 பேர் கைது

பைக் மீது மோதியில் குடிபோதையில் இருந்தவர்கள் தொழிலாளி மீது கல்லை போட்டு கொலை செய்தனர்.போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சிறுமலையை சேர்ந்தவர் வீரன்(45). கூலித்தொழி லாளி. இவருக்கு தனம் என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். வீரனின் தந்தை சின்னு திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைபேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக அடிக்கடி திண்டுக்கல் வந்து சென்றார். அேதபோல் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த அன்பி ல்ராஜ்(32), காளிதாஸ்(30) ஆகியோர் வீரனின் பைக் மீது மோதினர். அப்போது 3 பேருமே குடிபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அன்பில்ராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் வீரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர். இருந்தபோதும் ஆத்திரம் தீராமல் அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர்.

இதில் தலைநசுங்கி வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் ஒரு செல்போன் இருந்தது.அதை துருப்புசீட்டாக வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அன்பில்ராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் நகரில் கடந்த 2 நாட்களில் 3 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது பொதுமக்களி டையே பீதியை கிளப்பி யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com