search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "town buses"

    • சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அரசு பஸ்களில் பணிக்கு வந்து செல்கின்றனர்.
    • பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பனியன், கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன், கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், வெளி மாவட்டம், வெளி மாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அரசு பஸ்களில் பணிக்கு வந்து செல்கின்றனர். திருப்பூரிலி ருந்து பெருமாநல்லூர்், பாண்டியன் நகர், நம்பியூர், ஈட்டி வீரம்பாளையம், அப்பியாபாளையம் உட்பட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பல அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பனியன், கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, திருப்பூரிலிருந்து சுற்றுப்பகுதிகளுக்கு சென்றுகொண்டிருந்த அனைத்து டவுன் பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    • காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு போதிய அளவு பஸ் சேவை இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது.
    • ஏணிகளில் ஏற முடியாதபடி இரும்பு தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான பயணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என பஸ் உரிமையாளர்கள் நம்புகின்றனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரைச்சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் டவுன் பஸ்களில் செல்கின்றனர்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு போதிய அளவு பஸ் சேவை இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. இதில் ஒருபடி மேலே போய் பல மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி பயணம் செய்கின்றனர். குக்கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களில் பின்பக்க ஏணிகள் மற்றும் பஸ்களின் மேற்புறத்தில் பயணிக்கின்றனர்.

    இதுகுறித்து பலமுறை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஆபத்தான பயணங்கள் தொடர்ந்து வருகிறது. டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மாணவர்களை கண்டித்தால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சிைன தொடர்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக திண்டுக்கல் பகுதியில் உள்ள பஸ்களில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஏணிகளில் ஏற முடியாதபடி இரும்பு தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான பயணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என பஸ் உரிமையாளர்கள் நம்புகின்றனர். இருந்தபோதும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே விபத்தை தடுக்க முடியும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடலாடி அருகே உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்துக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் மேலச் செல்வனூர் ஊராட்சி எம்.எஸ். புதுக்குடியிருப்பு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடித்த தொழிலாளர்கள் உள்ளனர். கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் கடலாடி- முதுகுளத்தூர் சாலைக்கு வரவேண்டும். அதுவும் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    இந்த கிராமத்திற்காக முதுகுளத்தூர் பணிமனை யில் இருந்து டவுன் பஸ் முதுகுளத்தூர், ஒருவா னேந்தல், ஆப்பனூர், புனவாசல், மாரந்தை, ஓரிவயல், ஆலங்குளம், வழியாக எம்.எஸ் புது க்குடியிருப்பு கிராமத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 8.45-க்கும் 2 முறை சென்று வந்தது. பொதுமக்களின் தேவைக்கு கூடுதல் சேவை இயக்க கேட்டு முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    சட்டமன்ற அலுவலர்கள் கிராம மக்களின் கோரிக்கையை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்தனர். கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து கிராமத்திற்கு கூடுதல் நேரத்தில் டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டார்.

    அதன்படி நாள் ஒன்றுக்கு கூடுதலாக காலை 11.45 மணிக்கும், மாலை 3 மணிக்கும் 2 முறை கிராமத்திற்கு பஸ் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நேற்று கிராமத்திற்கு வந்த டவுன் பஸ்சை கிராம மக்கள் மாலை அணிவித்தும், டிரைவர்- கண்டக்டருக்கு சால்வை அணிவித்தும், பஸ்சுக்கு சூடம் காண்பித்தும் வரவேற்பு அளித்தனர்.

    மனு கொடுத்த மறுகணமே கிராமத்திற்கு கூடுதல் பஸ் விட நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், முதுகுளத்தூர் பணிமனை மேலாளர் அறிவரசன், தொழிற்சங்க காரைக்குடி மண்டல இணை பொது செயலாளர் லிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தமிழ்நாடு அரசு சேலம் போக்குவரத்து கழக கோட்டத்திற்கு புதிய வழிதடத்தில் 3 டவுன் இயக்க அனுமதி வழங்கியது.
    • சிறப்பு விருந்தினராக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராேஜந்தி ரன் எம்.எல்.ஏ. பங்கேற்று கொடி அசைத்து புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    நகருக்குள் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமங்களில் இருந்து நகருக்கு வந்து செல்வது முழுவதும் தவிர்க்கப்பட்டு பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு சேலம் போக்குவரத்து கழக கோட்டத்திற்கு புதிய வழிதடத்தில் 3 டவுன் இயக்க அனுமதி வழங்கியது.

    எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    இந்த பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குநர் பொன்முடி, மண்டல மேலாளர் லட்சு மணன் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராேஜந்தி ரன் எம்.எல்.ஏ. பங்கேற்று கொடி அசைத்து புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதைத்தவிர ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஒரு பஸ்சின் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டது. புதிய வழிதடத்தில் இந்த பஸ் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதில் ஒரு பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு, ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர் பைபாஸ்,கந்தம்பட்டி பைபாஸ், கொண்ட லாம்பட்டி பைபாஸ், சீலநாய்கன்பட்டி பைபாஸ், உடையாப்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணம் பகுதி வரை இயக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அதே வழியாக சேலத்திற்கு வருகிறது. ஒரு நாளைக்கு மொத்தம் 28 நடைகள் இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    மற்றொரு பஸ், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மணக்காடு வழியாக கன்னங்குறிச்சி பகுதிக்கு இயக்கப்படுகிறது. அதுபோல் அங்கிருந்து மறுமார்க்கமாக பழைய பஸ் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.

    வழிதட மாற்றம்

    வழிதடம் மாற்றம் செய்யப்பட்ட பஸ் ஏற்கனவே பஸ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்தது.

    இனிமேல் இந்த பஸ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னங்குறிச்சி, பாலபாரதி பள்ளி, மணக்காடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு, வழியாக பெரியகொல்லப்பட்டி பகுதிக்கு இயக்கப்படுகிறது. பின்னர் மறுமார்க்கமாக அதே வழியாக சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. காலை 8.15 மணி முதல் மாலை 4.50 மணி வரை இயக்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் ெதா.மு.ச. மணி உள்பட போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×