என் மலர்
திண்டுக்கல்
- வெயில் சுட்டெரித்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.
- பக்தர்களின் வரிசை வெளிப்பிரகாரம் வரை இருந்தது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட பிரதான பாதைகள் வழியாக சென்று ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகியவற்றின் மூலமும் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்குள்ள நிலையங்களில் கவுண்ட்டரை கடந்தும் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் கோவிலின் தரிசன வழிகளிலும் கூட்டம் அதிகம் இருந்ததால் பக்தர்களின் வரிசை வெளிப்பிரகாரம் வரை இருந்தது. இதனால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே பழனியில் நேற்று கடும் வெயில் சுட்டெரித்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். இருப்பினும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
பழனியில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. கிழக்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்தால் அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று பகல் முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ரோப்கார் இயக்கப்பட்டது. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
- ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- மணிகண்டன் பீடி குடிப்பதற்காக தீயை பற்றவைத்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் வடபருத்தியூர் கிராமத்தில் உடுமலைப்பேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவர் தனது தோட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தொழிலாளர்கள் வந்து அங்கே தங்கியிருந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த சின்னராஜ் மகன் மணிகண்டன் (வயது 33) என்பவரும் கிணறு தோண்டும் பணிக்காக வந்திருந்தார். இந்த பகுதி பாறைகள் அதிகஅளவு உள்ள இடம் என்பதால் அதனை வெடிக்க வைக்க வெடிபொருட்கள் வைத்திருந்தனர். அந்த வெடிபொருட்கள் அங்கே தற்காலிக பந்தலில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று அந்த வெடிபொருட்கள் இருந்த பந்தலில் மணிகண்டன் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மணிகண்டன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்காலிக பந்தலும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததும், அங்கே மணிகண்டன் பீடி குடிப்பதற்காக தீயை பற்றவைத்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைத்தது குறித்தும் இதனை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிகண்டன் உடல் துண்டுதுண்டாக சிதறியதால் பிரேத பரிசோதனைக்கு கூட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் அதே இடத்தில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மீனாவை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
- சம்பவம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். வாரத்தில் முதல் நாள் என்பதால் கல்லூரியில் அசம்பிளி ஹாலில் கூடுவது வழக்கம். அதன்படி இன்று காலை அனைத்து மாணவிகளும் அந்த அரங்கில் ஒன்று கூடினர். கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் பேசிக் கொண்டு இருந்தபோது கூட்டத்துக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்தது.
இதனால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். அப்போது வேகமாக சென்ற பாம்பு மீனாவை கடித்தது. இதனால் அவர் கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மீனாவை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
மேலும் கல்லூரி ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். இறந்த பாம்புடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மீனாவை சிகிச்சைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் அந்த பாம்பையும் காண்பித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெண் பணியாளர்கள் மோடி பிரசாத்தை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- அம்பிகா அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மோடிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் மோடிபிரசாத் (வயது40) என்பவர் பணித்தள பொறுப்பாளர் அம்பிகாவிடம் கட்சி நிதியாக ஒவ்வொரு பணியாளரிடம் இருந்து ரூ.50 வசூலித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தெரிந்ததும் பெண் பணியாளர்கள் மோடி பிரசாத்தை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிமேல் பணம் கேட்டு வரமாட்டேன் என அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில் அம்பிகா அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மோடிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 16-ம்தேதி 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அந்த வகையில் பழனி கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரை பூஜை நடைபெறுகிறது.
அப்போது உச்சிக்கால பூஜைக்கு முன்பு மலைக்கோவிலில் உள்ள சண்முகர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 12 புண்ணிய கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க மண்டல பூஜை செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையின்போது 12 கலசங்களில் உள்ள புண்ணிய நீரில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருவதால் பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் வருகிற 16-ந் தேதியுடன் 48 நாள் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பிறகு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
- திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
- தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பழனி கல்வி மாவட்ட த்தில் 87 பள்ளிகளை சேர்ந்த 3931 மாணவர்கள், 4437 மாணவிகள் என மொத்தம் 8369 பேர் தேர்வு எழுதுவத ற்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. மாவட்டம் முழுவதும் 215 பள்ளிகளை சேர்ந்த 22,914 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 9 இடங்களில் வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு குருடிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.
- விரைவில் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இருந்து பெரியகுளத்துக்கு அடுக்கம் வழியாக செல்வதற்கு மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் குறைவான பயண நேரத்தில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குருடிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக மூட்டைகள் அடுக்கி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த நிலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை த்துறை மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி தொடங்கி உள்ளது. ஜே.சி.பி., பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாலும் பாறைகள் சாலையில் உருண்டு வரு வதாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுக்கத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் பயிர்களை பெரியகுளம் மற்றும் வத்தலக்குண்டு பகுதிக்கு இந்த சாலை வழியாகவே கொண்டு செல்கின்றனர். தற்போது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வத்தலக்குண்டு வழியாக சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் மற்றும் பணம் விரையம் ஆகிறது. எனவே விரைவில் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உறவினர்களுக்கும் இடையே சொத்துபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- சம்பவ இடத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகில் உள்ள ரெங்கயசேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள்(65). கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் பெரியம்மாள் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது ஒரே மகன் திருமணமாகி குடும்பத்துடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். பெரியம்மாள் ரெங்கயசேர்வைகாரன்பட்டி மயானம் அருகே உள்ள வீட்டில் வசித்து வேலைக்கு சென்றுவந்துள்ளார்.
நேற்றிரவு அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் உறவினரான கோபிராஜா நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
பெரியம்மாளுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்துபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் துணியால் கழுத்து இறுக்கப்பட்டு பெரியம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு முன்விரோதம் காரணமாக மோதலில் ஈடுபட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் போலீசார் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகின்றனர்.
- முகூர்த்த தினம் என்பதால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. எனவே நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என முருகனை வேண்டி வழிபட குடும்பத்துடன் வந்திருந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதிகள், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், திருஆவினன்குடி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
மலைக்கோவிலுக்கு படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாகவும், பக்தர்கள் நடந்து சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல் பொழுதில் கடுமையான வெயில் சுட்டெரித்த போதும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கோடை காலங்களில் குடிநீர் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இது போல் இடம்பெயர்வதால் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.
- ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக மீண்டும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. கோம்பை, பழனி, தாசரிப்பட்டி, புதுக்கோட்டை, வடகாடு, பாச்சலூர் வழியாக பரப்பலாறு அணை வரை வந்து சேதப்படுத்தி விடுகின்றன. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீர் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இது போல் இடம்பெயர்வதால் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (50). இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தபோது உள்ளே புகுந்த யானை பயிர்களை சேதப்படுத்தியது. இதைப் பார்த்ததும் யானையை விரட்ட முயன்றார். உடனே ஆவேசமடைந்த யானை அவரை தும்பிக்கையால் தூக்கி கீழே வீசி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்ற போது பொதுமக்கள் தடுத்து கோஷமிட்டனர்.
விவசாயி இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை உடலை எடுக்க விடமாட்டோம் என்று ஆவேசமாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சமாதானம் செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராமபட்டினம் புதூரில் கடந்த 5-ந் தேதி அதிகாலையில் யானை மிதித்து தண்டபாணி (52) என்பவர் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக மீண்டும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்
- மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே செட்டியார்குளம், அம்மன்குளம், பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
- திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன.
- திடீரென ஏராளமான போலீசார் குவிக்க ப்பட்டதால் அய்யலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை யினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைதொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைக்கா ரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 6 நாட்களுக்குள் கடைகளை அகற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. சிலர் தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றிக்கொ ண்டனர். இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்பு கடை களை நெடுஞ்சாலைத்துறை யினர் அகற்ற வந்தனர். மேலாளர் செந்தில்குமரன், சங்கர், என்ஜீனியர் சூர்யா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, கூடுதல் துணை மண்டல கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி தலைமை யில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திடீரென ஏராளமான போலீசார் குவிக்க ப்பட்டதால் அய்யலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






