என் மலர்
திண்டுக்கல்
- ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார் என பேசினார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதன்படி, எல்ல ப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்லப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணிகள், ரூ.10.84 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுதல், ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மார்க்கம்பட்டி ஊராட்சியில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ஐ.வாடிப்பட்டி ஊராட்சியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ஓடைப்பட்டி ஊராட்சியில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகள், குத்திலியப்பை ஊராட்சியில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்தல் பணிகள் ஆகிய பணிகளை அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பேசியதாவது:-
ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றில் இருந்து தனித் திட்டம் கொண்டு வர ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதன் மூலம் கிராமப்பகுதி மக்கள் அனைவருக்கும் சுகாதார மான குடிநீர் கிடைக்கும். 2 ஆயிரம் கி.மீ தூரத்துக்கான சாலைப்பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒட்டன்சத்திரம் சட்மன்ற தொகுதிக்கு மட்டும் 100 கி.மீ சாலை அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஒட்ட ன்சத்திரத்தில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மேலும் 6.40 லட்சம் மரக்கன்றுகள் இடையகோட்டை பகுதியில் நடவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு ள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார். காலை உணவு திட்டம் விரைவில் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவி களையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யம்மாள், ஜோதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் பொன்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணை த்தலைவர் ராஜாமணி, வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.
- 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
- பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்தது. அதன்படி தினமும் உச்சிக்காலத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதனால் திருவிழாவைப்போல் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் கார்த்திகை மண்டபத்தில் விநாயகர் பூஜை, பிரதான கலசம் வைத்து சிறப்பு யாகம், புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, சங்கு பூஜை நடைபெற்றது.
2-வது நாளாக நேற்று காலை சிறப்பு யாகம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசம் மேளதாளம் முழங்க உட்பிரகாரம் வலம் வந்தது. பின்னர் உச்சிக்கால பூஜையில் சுவாமிக்கு கலசநீரால் சிறப்பு அபிஷேகம், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு நாளில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், சுப்பிரமணியன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடா்ந்து கோவில் மண்டபத்தில் கும்பாபிஷேக பணிக்கு உதவிய உபயதாரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது கோவில் சார்பில் அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
- நத்தம் அருகே செந்துறை - நல்லபிச்சன்பட்டி பகுதியில் வெள்ளரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
- தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பணியாற்றும் தொழி லாளர்கள் செந்துறை - நத்தம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை - நல்லபிச்சன்பட்டி பகுதியில் வெள்ளரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
தொழிற்சாலைக்கு செல்லும் லாரிகள் நல்லபிச்சன்பட்டி சாலையில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் சாலை சேதமடைந்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக தனியார் தொழிற்சாலை நிறுவனம் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை.மாற்றுப் பாதையில் தொழி ற்சாலைக்கு லாரிகளை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தும் கேட்கவில்லை.
இந்நிலையில் அந்த வழியாக பொருட்கள் ஏற்றி சென்ற லாரியை அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லாரியை விடுவிக்க கோரியும் வெள்ளரி தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பணியாற்றும் தொழி லாளர்கள் செந்துறை - நத்தம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து தொழி லாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் செந்து றை - நத்தம் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லாரியை சிறைபிடித்த கிராம மக்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அதையடுத்து கிராம மக்கள் லாரியை விடுவித்தனர்.
- பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், அலுவலகஉதவியாளர்கள் உள்பட 281 பணியிடங்களுக்கு மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு வெளியானது.
- விண்ணப்பங்கள் தபால் மற்றும் கூரியர் மூலமாக மூட்டை, மூட்டையாக வருகின்றன. ஏப்ரல் 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
பழனி:
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், அலுவலகஉதவியாளர்கள் உள்பட 281 பணியிடங்களுக்கு மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு வெளியானது. 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பின்பு தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அரசு வேலைவாய்ப்பை பெறும் எண்ணத்தில் உள்ள பட்டதாரிகள்பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
பழனி மட்டுமின்றி வெளிஊர்களில் இருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் தபால் மற்றும் கூரியர் மூலமாக மூட்டை, மூட்டையாக வருகின்றன. ஏப்ரல் 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. எனவே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வர வாய்ப்புள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- நண்பகல் 11 மணிக்கு பூர்ணாகுதி நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவுபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, 1,008 சங்காபிஷேகம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி இன்று காலை 2-வது காலபூஜை, பாராயணம் நடைபெறுகிறது. நண்பகல் 11 மணிக்கு பூர்ணாகுதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறது.
- பாலகிருஷ்ணன் லாரியை நிறுத்தாமல் சென்றதால் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்தனர்.
- தங்களை பின்தொடர்ந்து வந்த கார் எண் குறித்தும் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(53). லாரி டிரைவரான இவர் ஓசூரிலிருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மார்க்கெட்டில் இறக்குவதற்காக சென்றார். லாரியில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள காளையம்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார்(23). என்ப வரும் வந்து கொண்டிருந்தார். இவர்கள் தக்காளி லோடு இறக்கிவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இவர்களை பின்தொடர்ந்து வந்த கார் திடீரென மறிக்க முயன்றனர். ஆனால் பாலகிருஷ்ணன் லாரியை நிறுத்தாமல் சென்றதால் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை கட்டிப்போட்டு லாரியை தாங்களே ஓட்ட தொடங்கினர்.
அப்போது மற்றொரு நபர் லாரியில் இருந்த ரூ.11.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டார். பின்னர் விருதலைப்பட்டியில் லாரியை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பிஓடியது. கைகள் கட்டப்பட்டு இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் தினேஷ் ஆகியோர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வெளியே வந்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தனர். தங்களிடமிருந்த ரூ.11.50 லட்சம் பணம், செல்போன்களை பறித்துச்சென்ற கும்பல் யார்? என்பது குறித்தும், தங்களை பின்தொடர்ந்து வந்த கார் எண் குறித்தும் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிலையத்தின் நடைமேடையில் மேற்கூரை சிமெண்ட் தளம் திடீரென பெயர்ந்து விழுந்தது.
- பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மேற்கூறையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பிற மாநிலங்களின் பெருநகரங்களுக்கும் திண்டுக்கல் வழியாக பஸ்கள் செல்கின்றன.
இதுதவிர திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்மூலம் உள்ளூர், வெளியூர் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஸ் நிலையத்தில் குவிகின்றனர். இதனால் இரவு, பகல் என்று 24 மணி நேரமும் திண்டுக்கல் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தேனி, கம்பம் மற்றும் நத்தம் பேருந்துகள் நிற்கும் நடைமேடை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நடைமேடையில் பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். இந்த நிலையில் பஸ் நிலையத்தின் நடைமேடையில் மேற்கூரை சிமெண்ட் தளம் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்கூரை எந்த நேரத்திலும் பயணிகளின் தலையை பதம் பார்க்கும் சூழ்நிலையில் உள்ளது.
இதுகுறித்து கடைக்காரர் கூறுகையில், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோந்து வந்த போலீசாரின் தலையில் பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. ஆகவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மேற்கூறையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
- கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா ஆகியோர் கோவிலூர் மயானப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் பகுதியில் பொது பயன்பாட்டில் உள்ள மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இறப்புகள் நிகழும்போது போலீசார் பாதுகாப்புடனே உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.
மின் வாரியம் அமைந்துள்ள பகுதியில் மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வருவதாகவும் மின் மயானத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி அமர்வு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மின் பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா ஆகியோர் கோவிலூர் மயானப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் பல ஆண்டுகளாக மயானம் செயல்பட்டு வந்த இடத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்த நிலையில் ஒரு சிலரின் தூண்டுதலால் மயானத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. இதனை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இந்த நிலையில் மயான ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே அதன் முடிவு தெரியும் என்பதால் பொதுமக்கள் அதனை எதிர்பார்த்து உள்ளனர்.
- முனீஸ்வரர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
- இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணா ச்சலபுரத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. மெயின் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த விநாயகர் கோவிலில் கடந்த 3-ந் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடந்து வருவதால் கும்பாபிஷேக த்தின் போது புதிதாக மூன்றரை அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தற்போது மண்டலாபிஷேகத்துக்காக தினந்தோறும் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இங்கிருந்த முனீஸ்வரர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இன்று காலை சிலை சேதமாகி இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வத்தலக்குண்டு போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதி யில் சி.சி.டி.வி காமிராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டு ள்ளதா என்றும், அதில் குற்றவாளிகள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகிகளும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி செல்வராணி (வயது 45). கணவர் இறந்து விட்டதால் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனபால் (25), சண்முகசுந்தரம் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தனபாலுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார். சண்முக சுந்தரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் செல்வ ராணிக்கும் குமரன் திருநகரைச் சேர்ந்த பிரபு (44) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபரம் செல்வராணியின் மகன்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் பிரபுவின் தொடர்பை செல்வராணி துண்டிக்க நினைத்தார். அதன்படி அவருடன் பேசுவதை குறைத்து வந்துள்ளார். கடந்த 2-ந் தேதி இருவரும் ஒரே இடத்துக்கு வேலைக்கு சென்றனர். அப்போது பிரபு தனது காதலிக்கு உணவு வாங்கி வந்துள்ளார். அதனை செல்வராணி சாப்பிட மறுத்தார். ஏன் என்று கேட்டபோது இனிமேல் எனக்கு எதுவும் வாங்கித் தர வேண்டாம். என்னுடன் பேசவும் வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இதனால் வேதனை யடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது செல்வராணி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனது வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் பிரபுவும் வீட்டுக்கு வந்து நீ என்னுடன் பேசாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
அதற்கு செல்வராணி அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இனிமேல் என் மகன்கள் சொல்வதை த்தான் நான் கேட்பேன் என்று கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த பிரபு நானே சாகப்போகிறேன். நீ மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் எனக்கூறி அருகில் இருந்த குளவிக் கல்லை அவரது தலையில் போட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பிரபு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெ க்டர் அருள்நாராயணன் தலைமையிலான போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களை அதற்காக தயார்படுத்தும் முயற்சியில் கடுமையாக ஆசிரியர்கள் தண்டிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
- பிரம்பால் அடிப்பது கூட குற்றம் என்று வாதிடப்படும் இந்த காலகட்டத்தில் வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடந்தது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வர அறிவுறுத்தியிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும், பள்ளிக்கு காலதாமதமாக வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆசிரியர் ரகுநாத் அந்த மாணவரை அழைத்து திட்டியுள்ளார். மேலும் பள்ளியில் மதியம் உச்சி வெயிலில் மைதானத்தில் முட்டி போட்டுக்கொண்டே படிக்க வைத்துள்ளார். இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான். இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களை அதற்காக தயார்படுத்தும் முயற்சியில் கடுமையாக ஆசிரியர்கள் தண்டிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பிரம்பால் அடிப்பது கூட குற்றம் என்று வாதிடப்படும் இந்த காலகட்டத்தில் வெயிலில் முட்டி போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 45). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், ஜான்பாண்டியன் (24), தினேஷ்பாண்டியன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜான்பாண்டியனுக்கு திருமணமாகிவிட்டது. தர்மராஜ் கடந்த 3 நாட்களாக குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல்-மதுரை ரோடு செட்டியப்பட்டி பிரிவு தனியார் கல்லூரி அருகே வசந்தம் நகர் பகுதியில் தர்மராஜ் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவருக்கு மேல் இரு சக்கர வாகனம் கிடந்தது. இதனை அந்த வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்மராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்த கும்பல் விபத்து போல் காட்டுவதற்காக அவர் மீது பைக்கை போட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட தொழிலாளி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






