search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul bus stand"

    • பஸ் நிலையத்தின் நடைமேடையில் மேற்கூரை சிமெண்ட் தளம் திடீரென பெயர்ந்து விழுந்தது.
    • பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மேற்கூறையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பிற மாநிலங்களின் பெருநகரங்களுக்கும் திண்டுக்கல் வழியாக பஸ்கள் செல்கின்றன.

    இதுதவிர திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்மூலம் உள்ளூர், வெளியூர் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஸ் நிலையத்தில் குவிகின்றனர். இதனால் இரவு, பகல் என்று 24 மணி நேரமும் திண்டுக்கல் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தேனி, கம்பம் மற்றும் நத்தம் பேருந்துகள் நிற்கும் நடைமேடை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நடைமேடையில் பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். இந்த நிலையில் பஸ் நிலையத்தின் நடைமேடையில் மேற்கூரை சிமெண்ட் தளம் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்கூரை எந்த நேரத்திலும் பயணிகளின் தலையை பதம் பார்க்கும் சூழ்நிலையில் உள்ளது.

    இதுகுறித்து கடைக்காரர் கூறுகையில், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோந்து வந்த போலீசாரின் தலையில் பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. ஆகவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மேற்கூறையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதையில் திரிந்த பெண் அது தனது குழந்தை என்று சொல்லிக்கொண்டே நடக்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார்.
    • 50 வயது மதிக்கத்தக்க பெண் உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தையை கையில் வைத்து அந்த குழந்தைக்கு வாயில் மதுஊற்றி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

    மேலும் தானும் மதுபானம் குடித்துகொண்டு அந்த குழந்தையை அடித்து கொண்டே இருந்தார். இதைபார்த்த அப்பகுதி வியாபாரிகள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அந்த குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை வாங்கி பார்த்தபோது அது மயக்கத்தில் இருந்தது. மேலும் அந்த போதை பெண்ணின் மடியில் மேலும் சில மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 2 கிலோ 600 கிராம் எடை கொண்ட அந்த ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்தான் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    போதையில் திரிந்த பெண் அது தனது குழந்தை என்று சொல்லிக்கொண்டே நடக்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார். ஆனால் 50 வயது மதிக்கத்தக்க அவர் உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் வைத்திருந்த பையில் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த குழந்தை கடத்தி வரப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் இருந்த பெண்ணை மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் தற்போது சிகிச்சையில் உள்ளது.

    திண்டுக்கல் பஸ்நிலைய விரிவாக்க பணியால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல்லில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, வாகன நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் நிலையத்தை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு அனுமதி கிடைக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து ரூ.5 கோடி மதிப்பில் பஸ்நிலையம் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழனி பஸ்கள் நிறுத்தும் பகுதியில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பி பஸ்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனி பாதைகள், பயணிகள் காத்திருப்பு அறை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரூர், சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியிலும் கடைகள் இடிக்கப்பட்டு அப்பகுதியில் பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இப்பகுதியில் பயணிகள் நிற்பதற்கும், ஒதுங்குவதற்கும் இட வசதி இல்லை.

    மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் வானமே கூரையாக தவிப்பில் இருந்து வருகின்றனர். குறிப்பாக காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதால் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    ×