நாளை பிளஸ்-2 தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பழனி கல்வி மாவட்ட த்தில் 87 பள்ளிகளை சேர்ந்த 3931 மாணவர்கள், 4437 மாணவிகள் என மொத்தம் 8369 பேர் தேர்வு எழுதுவத ற்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. மாவட்டம் முழுவதும் 215 பள்ளிகளை சேர்ந்த 22,914 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 9 இடங்களில் வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com