என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம்- பாலூர் கடைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் கொடிக்கம்பத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு அப்போது மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச கூட்டத்துக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தின் அருகே தங்களது கட்சியின் கொடி கம்பத்தை திடீரென்று நட்டு விட்டு சென்றனர்.
இன்று காலை அங்கு வந்த விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், தங்களது கட்சி கொடி கம்பத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்கள் இயங்காததால் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டக்காரர்கள் ஏற்கனவே தங்களது கட்சி கொடி கம்பத்தை வைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. எனவே, உடனடியாக கோட்டாட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தகவல்அறிந்த வருவாய் கோட்டாட்சியர் அதியமான கவியரசு சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பம்- பாலூர் கடைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் கொடிக்கம்பத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு அப்போது மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச கூட்டத்துக்கு வருமாறு அழைத்தனர்.
அதன்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தின் அருகே தங்களது கட்சியின் கொடி கம்பத்தை திடீரென்று நட்டு விட்டு சென்றனர்.
இன்று காலை அங்கு வந்த விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், தங்களது கட்சி கொடி கம்பத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்கள் இயங்காததால் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டக்காரர்கள் ஏற்கனவே தங்களது கட்சி கொடி கம்பத்தை வைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. எனவே, உடனடியாக கோட்டாட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் யாரும் வரவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்தது.
சம்பவ இடத்தில் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி செல்ல பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 27). இவருக்கும் அண்ணாதுரை என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த மாதம் 27-ந் தேதி ஜீவிதா தான் வசித்து வரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த ஜீவிதா உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த வளையல், நெக்லஸ், தங்க காசு, கைச்செயின் உள்பட சுமார் 17 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து புவனகிரி போலீசில் ஜீவிதா புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் இன்றுகாலை நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.
நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி புதிய கவுன்சிலர்களுகு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மற்ற கவுன்சிலர்கள் அவரை மீட்டு மயக்கத்தை தெளிய வைத்தனர். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தென் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அருகே உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபரும், சிறுமியும் திருமணம் செய்து கொள்வதற்காக தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதையடுத்து அந்த சிறுமி மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பிவிட்டார். அப்போது அவரது பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்தனர். காதலித்த வாலிபரை நம்பி சென்று திருமணமும் செய்யவில்லை. வீட்டுக்கு திரும்பி வந்தால் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளாமல் திட்டுகிறார்கள் என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் கொளஞ்சி. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி அமுதா. விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களது மகன் நிஷாந்த் (வயது21). டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிஷாந்த் தன் உடலின் பாலியல் செயல்பாடுகள் மாற, தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனே வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்தார். பின்னர் தனது பெயரை நிஷா என மாற்றிக்கொண்டார்.
நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து, உயிரியல் யதார்த்ததை உணர்ந்த அவரது பெற்றோர் நிஷாவை வீட்டுக்கு அழைத்தனர். பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.
அவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை மங்கையாக அவரது பெற்றோர் அங்கீகரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நிஷாவுடன் படித்த பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, விருந்து உபசரிப்பில் பங்கேற்றனர்.
பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு தங்கி விடுவது வழக்கம். அவ்வாறு செல்பவருக்கு மூத்த திருநங்கைகள், மஞ்சள் நீராட்டு விழா நடத்தி, அவரை பெண்ணாக அங்கீகரிப்பதுண்டு. இந்நிகழ்ச்சியை முதன்முறையாக ஒரு திருநங்கையின் குடும்பத்தினரே செய்து உள்ளனர்.






