என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
புவனகிரி அருகே காதல் பிரச்சினையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
புவனகிரி அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தென் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அருகே உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபரும், சிறுமியும் திருமணம் செய்து கொள்வதற்காக தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதையடுத்து அந்த சிறுமி மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பிவிட்டார். அப்போது அவரது பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்தனர். காதலித்த வாலிபரை நம்பி சென்று திருமணமும் செய்யவில்லை. வீட்டுக்கு திரும்பி வந்தால் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளாமல் திட்டுகிறார்கள் என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தென் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அருகே உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபரும், சிறுமியும் திருமணம் செய்து கொள்வதற்காக தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதையடுத்து அந்த சிறுமி மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பிவிட்டார். அப்போது அவரது பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்தனர். காதலித்த வாலிபரை நம்பி சென்று திருமணமும் செய்யவில்லை. வீட்டுக்கு திரும்பி வந்தால் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளாமல் திட்டுகிறார்கள் என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






