என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
    X
    கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

    கடலூர் மாநகராட்சியில் 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

    கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக வெற்றிபெற்ற 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு பந்தல் மற்றும் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்துமுடிந்தது. இதில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள், அ.தி.மு.க, பா.ஜ.க., பா.ம.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தங்களது தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக வெற்றிபெற்ற 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு பந்தல் மற்றும் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 45 வார்டு கவுன்சிலர்களும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது இதனைத்தொடர்ந்து தலா 5 கவுன்சிலர்கள் என 45 கவுன்சிலர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் உறுதி மொழி மற்றும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×