search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதவி ஏற்பு விழாவில் மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்
    X
    பதவி ஏற்பு விழாவில் மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்

    நெல்லிக்குப்பம் நகராட்சியில் பதவி ஏற்பு விழாவில் மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்

    பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் இன்றுகாலை நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.

    நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி புதிய கவுன்சிலர்களுகு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மற்ற கவுன்சிலர்கள் அவரை மீட்டு மயக்கத்தை தெளிய வைத்தனர். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×