என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே 2 தரப்பினர் பயங்கர மோதலால் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டனர்.

    கடலூர்

    பண்ருட்டியை சேர்ந்தவர்கள் கொளஞ்சி, சுரேஷ். இவர்கள் இருவரும் பண்ருட்டி அருகே கடைநடத்தி வருகின்றனர். நேற்று இரவு இவர்களது கடைக்கு பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 பேர்உணவு சாப்பிட வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரும்தாக்கப்பட்டாதாக கூறபடுகிறது. ஆத்திரமடைந்த பனப்பாக்கத்தை சேர்ந்த 50 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ராசாபாளையத்திற்கு வந்தனர். அங்கு ரோட்டோரத்தில் இருந்த பாஸ்ட் புட் கடை, பானி பூரி கடை மற்றும் வீடுகளையும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர் அந்த வழியாக வந்தவர்களை தடியால் தாக்கினார்.

    இதனால் ராசா பாளையம் கலவர பூமியாக மாறியது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எனவே அதிகளவு போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்ம உற்சவம் விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பிரம்ம உற்சவ விழா கடந்த 30 -ந் தேதி பிடாரி அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று (1 -ந் தேதி) விநாயகர் பூஜை மற்றும் பெரியசாமி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இன்று பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து நடன பாதேஸ்வரர் மற்றும் அஸ்தாளம்பிக்கை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் சிறப்பு அலங்காரத்தில் சாமி புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள இசை வாசித்தபடி கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, இரவு பல்வேறு வாகனத்தில் சாமி மீது நடைபெற உள்ளது. 7-ம் நாள் உற்சவமான வருகிற 8- ந்தேதி காலையில் அதிகார நந்தி மற்றும் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 10 -ந் தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அன்று இரவு தேரடி இறங்குதல், மறுநாள் (11- ந்தேதி) காலை நடராஜர் தரிசனம், மாலை தீர்த்தவாரி மற்றும் 12- ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனம் வீதி உலா, 13- ந் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே மின்சாரத்துறை பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 51). இவர் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார். அவரிடம் பணம் இல்லாததால், மகாலட்சுமி தொடர்ந்து பணம் கேட்டதற்காக தன்னுடைய சம்பள வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாய் லோன் எடுத்து மகாலட்சுமிக்கு வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கோடீஸ்வர ஆனந்த் பலமுறை மகாலட்சுமியிடம் தான் வழங்கிய 4 லட்சம் ரூபாய் பணத்தை வழங்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் மகாலட்சுமி பணம் தராமல் காலம் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோடீஸ்வர ஆனந்த் மீண்டும் பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது என மகாலட்சுமி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 9-ம் வகுப்பு மாணவியை திடீரென்று காணவில்லை.
    • அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இந்த மாணவி கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வடலூர் சத்திய ஞான சபை பகுதியில் தனியாக இருந்து வந்ததால் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாணவியை மீட்டு வந்து அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து இருந்தனர். மேலும் இங்கிருந்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மாணவி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அரசு குழந்தைகள் காப்பக இடைநிலை ஆசிரியர் ரமா கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிந்து செய்து வாலிபர்இளங்கோவனை கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார். எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார்கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிந்து செய்து  வாலிபர்இளங்கோவனை கைது செய்தனர். 

    • நெல்லிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் அமைச்சர் சி.வெ‌ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்று விழா நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகர அவைத் தலைவர் ஷேக் மொய்தீன், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, மூத்த நிர்வாகி வேலு, இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் மாருதி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் கவுன்சிலர்கள் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காட்டுமன்னார்கோவிலில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்தது.
    • பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வாத்தியார் தெருவில் குடியிருப்பு பகுதியில் 3 அடி நீளம் நாகப்பாம்பு புகுந்ததுஇதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கொளஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்கு சென்று பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    • பெண்ணாடம் அருகே பஞ்சாயத்து தலைவர் மகளிடம் நகைகளை திருடிச் சென்றனர்.
    • வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே காரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவர் தனது மனைவியுடன் நேற்று வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அக் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதின் காரணமாக அனைவரும் வீட்டின் வரண்டாவில் படுத்துள்ளனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் பொழுது வராண்டாவில் படுத்து இருந்த கலையரசியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பரித்துள்ளனர்.

    அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட கலையரசி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதை அறிந்த மர்ம நபர்கள் கலையரசியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஊர் மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. நகைகளை திருடிச் சென்ற திருடர்கள் வீட்டின் அருகில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அங்கிருந்து துணியால் மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அன்பழகன் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பெண்ணாடம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கலையரசி கூறும்போது மர்ம நபர்கள் கால் சட்டை அணிந்தும், லுங்கியை கழுத்தில் போட்ட படியும் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

    • பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    • வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இதற்கு ஒருதரப்பை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்றாலும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் கணடிப்பாக உள்ளதால் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே வெளி மாவட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கருதுகிறார்கள். இந்த வலையை பயன்படுத்தினால் மீன்வளம் அழியும் என்று அவர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் மீனவ கிராமங்களில் ஊர்கூட்டம் நடத்த தயாராக உள்ளனர். மேலும் மீனவர்கள் போராட்டத்தால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மீனவ கிராமங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று மாறுபடுவதால் பலத்த இடியுடன் கூடிய மழை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை காரணமாக இரவு மின்தடை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை 4 மணி அளவில் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் மின்சாரத்தில் ஊழியர்கள் விடிய விடிய மின் இணைப்பு தருவதற்கு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.

    மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே பணிகள் பாதிப்பதோடு நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் இருந்து வந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு-கடலூர் - 45.9, ஆட்சியர் அலுவலகம் - 45.8,புவனகிரி - 42.0,காட்டுமன்னா ர்கோயில்- 38.2, லால்பேட்டை - 37.0, காட்டுமயிலூர் - 27.0, ஸ்ரீமுஷ்ணம் - 19.2, வேப்பூர் - 16.0, சிதம்பரம் - 13.2, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 12.5,அண்ணாமலைநகர் - 9.6, சேத்தியாத்தோப்பு - 5.8, விருத்தாசலம் - 5.0, பரங்கிப்பேட்டை - 4.2, 15. குறிஞ்சிப்பாடி - 4.0 கொத்தவாச்சேரி - 4.0 வானமாதேவி - 3.0 பண்ருட்டி - 1.2 மொத்தம் - 333.60 மழையளவு பதிவாகி உள்ளது

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.
    • பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

    பண்ருட்டி:

    கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

    அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார்.

    எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து வாலிபர் இளங்கோவனை கைது செய்தனர்.

    • பண்ருட்டியில் ஜமாபந்தி நிறைவுவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தலைமைஇடத்துதுணைதாசில்தார்கிருஷ்ணா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில்ஜமாபந்தி நிறைவுவிழா நடந்தது.தாசில்தார்சிவா.கார்த்திகேயன் வரவேற்றார்.இதில்ஜமாபந்திஅலுவலரும், மாவட்ட வழங்கல்அலுவலருமான உதயகுமார் கலந்து கொண்டு 9 பேருக்கு மனை பட்டா, 69 பேருக்கு உதவிதொகைக்கான ஆணை, 21 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 64 பேருக்கு சமூக பாதுகாப்புதிட்ட உதவிகள், இ -பட்டா,ஆகியவை மொத்தம் 16.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை வழங்கினார். இதில்சிறப்புதிட்ட தாசில்தார் பலராமன், மண்டலதுணைதாசில்தார் சிவக்குமார்,தலைமைஇடத்துதுணைதாசில்தார்கிருஷ்ணா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×