search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்
    X

    பண்ருட்டியில் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்

    • பண்ருட்டியில் வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிந்து செய்து வாலிபர்இளங்கோவனை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார். எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார்கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிந்து செய்து வாலிபர்இளங்கோவனை கைது செய்தனர்.

    Next Story
    ×