என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரத்தில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய போலீசார் சாக்கினை பிரித்து பார்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் சின்னகடை பகுதிகளில் சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் சாக்கில் வைத்து பொருட்களை எடுத்து வந்ததை பார்த்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய போலீசார் சாக்கினை பிரித்து பார்த்தனர்.

    அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஓமக்குளத்தைச் சேர்ந்த அபாஸ் அலி (வயது 42), என்பதும், இவர் சேதியூர் பகுதியில் உள்ள கமலக்கண்ணன் (50) என்பவரிடமிருந்து இதனை வாங்கி வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அபாஸ் அலி, கமலக்கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.
    • இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலா ப்பட்டு இடையர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது காயத்ரி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்தார். அதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து டீக்கடை நடத்தி வருகிறார்.அப்போது முருகதாஸ்சுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

    இந்த விவகாரம் காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. இதில் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்தனர். இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் முருக தாஸ் தற்கொலைக்கு தூண்டியதால்தான் காயத்ரி இறந்து இருப்பது தெரியவந்தது. எனவே அதன்பேரில் வழக்குபதிந்து முருகதாசை போலீசார் கைது செய்தனர்.

    • ஆன்-லைன் மூலம் வரிவசூல்செய்யும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பூங்குணம் ஊராட்சியில் ஆன்-லைன் மூலம் வரிவசூல்செய்யும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி தொடங்கி வைத்தார். தமிழக அரசு ஊராட்சி களில் வரிவசூல்செய்யும் பணியினை ஆன்லைன் முறையில்மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட அளவில் முதன் முதலில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சியில் வரிவசூல் பணிக்காக பி.ஓ.எஸ். கருவியை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர்கூறு கையில், பொதுமக்களி டமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யப்படுவதற்கு மாற்றாக வங்கிகள் மூலமாகவும், நெட் பேங்கிங் மூலமாகவும், 'ஜிபே' மூலமும் வரிகளை அரசு கணக்கில் சேர்க்கலாம். இந்த ஊராட்சியை மாதிரி ஊராட்சியாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகவே இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

    பின்னர் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஊராட்சியில் தகுதியுள்ள முதியோர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் முதியோர் உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுக் கொண்டார். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன், துணை தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் ராஜ்குமார், ஆரோக்கியராஜ் உடனிருந்தனர்.

    ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது

    கடலூர்:

    மீன்சந்தையில் விற்கப்படும் மீன்கள் நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒருசில வியாபாரிகள் ரசாயன கலவைகள் பூசி மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது.

    இந்த ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன், கடலோர அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் அடங்கிய குழு கடலூர் துறைமுகத்தில் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனக்கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளதா? மீன்கள் தரமாக, சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளதா? என மீன்வளத்துறை அதிகாரிள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் மற்றும் ரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்படவில்லை.

    மேலும் மீன்வியாபாரிகளால் தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து மீன்வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.
    • பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 42). கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று குருவிநத்ததிலிருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பவீஷ்குமார், கணபதி 2 பேரும் காயம் அடைந்தனர். மேலும் 2பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கொடுக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி நந்தினி (வயது 23). சம்பவத்தன்று நந்தினியை இவரது மாமியார் அஞ்சம்மாள் மற்றும் உறவினர்கள் திடீரென்று வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நந்தினி நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சம்மாள் (55), வாசுகி, திருமகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார்.
    • ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தொட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 28). புவனகிரி சூர்யா மங்களம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (27). இவர்கள் 2 பேரும் கடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார். இதனால் சுஜாதா ஜெயக்குமாரிடம் போனில் பேச வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர்.
    • 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது காட்டு வேகாக்கொல்லை சிவன் கோவில்அருகில்அருகில்விற்பனைக்காக இருந்த 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்அவர்பண்ருட்டி நல்லூர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தயாளன்(36)என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்‌. இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்க சென்ற போது துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவகாசம் வழங்கி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த அதிமுக கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    அப்போது பொதுமக்களிடம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்துள்ளனர். ஆனால் கடந்த முறை நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என தெரிவித்து கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து நாங்கள் வீடுகளை இடிக்காமல் சென்றோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி வருகிற 6-ம் தேதிக்குள் கண்டிப்பாக வீடுகளை இடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். ஆகையால் வருகிற 4-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அல்லது வீடுகளை காலி செய்யுங்கள் இதனை மீறினால் பாரபட்சம் இன்றி கண்டிப்பாக வீடுகள் இடிக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினமும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம்.
    • அதிகாலையில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் செல்லவில்லை.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காகவும், மருத்துவமனைகளுக்கும், வேலைக்காகவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம். புதுச்சேரி யூனியன் பிரதே சத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டம் அறிவித்தனர்.

    அதன்படி இன்று அதிகாலையில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் செல்லவில்லை. புதுச்சேரிக்கு செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அந்த சமயத்தில் ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே வந்து புதுச்சேரிக்கு கிளம்பியது. இதைத் தொடர்ந்து பல பஸ்கள் வரும் என்று எதிர் பார்த்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு மேல் கடலூர் டெப்போவில் இருந்து பயணிகளின் எண்ணிக்கைக் ஏற்ப பஸ்கள் வரவழைக்கப்பட்டு புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இந்த பஸ்கள் புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு செல்லவில்லை. பயணிகள் அனைவரும் புதுச்சேரி இந்திராகாந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டனர். மேலும், கடலூரில் இருந்து இயக்க ப்படும் அரசு பஸ்களை தமிழக பகுதிகளில் போலீ சார் கண்காணித்து வருகி ன்றனர்.  இது தவிர ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், குமாரமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கடலூருக்கு வரும் தனியார் நிறுவன தொழிலாளர்களும் பஸ்கள் இயக்கப்படாததால் பாதிக்கப்பட்டனர்.

    • காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர்.
    • பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டு க்கூடலூரை சேர்ந்தவர் முருகவேல். விவசாயி. நேற்று இவரது வீட்டில் நிறுத்தப் பட்டிந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர். இதை பார்த்த முருகவேல் மற்றும் கிராம மக்கள் பேட்டரி திருடர்களை மடக்கிபிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

    முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ராஜாராம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வடலூர் அடுத்த ராஜாகுப்பம் வடக்கு தெரு தட்சணா மூர்த்தி (வயது 22), கருங்குழி மாரியம்மன் கோவில் தெரு விஜயராகவன் (22) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்து பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
    • தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.

    ×