என் மலர்tooltip icon

    கடலூர்

    • பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர். இதில் பண்ருட்டி எரிப்பாளையம் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 20) இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் குத்து விளக்கு செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று கடலூருக்கு வருவதாக கூறிவிட்டு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் இன்று காலை தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும்.
    • நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ந்தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி விதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைற்றது. இதனை ஒட்டி இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது.

    சுமார் 8 மணி அளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகர், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடை பெறுவதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.

    முன்னதாக தேரோடும் வீதிகளில் திரளான பெண்கள் சாலைகளை சுத்தம் செய்து கோலமிடுவதும், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பதிகங்களை, மேளதாளம் முழங்க பாடி வருவதும் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தேர் நிலையான கீழரதவீதி வந்தடையும். அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடக்கவுள்ள நிலையில், நாளை அதிகாலை இரண்டு மணி முதல் ஆறு மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும், நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாளை மாலை சுமார் 4 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    • மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

    கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

    ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 23 வயது பெண் செவிலியர் கடலூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் சேர்ந்த 23 வயது பெண் செவிலியர் கடலூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பெண் செவிலியர் வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மணியளவில் பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.
    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. இவர் பனங்கிழங்கு விளைவித்து விற்பனை செய்து வருகிறார். இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட கள் பானத்தை தனக்கு சொந்தமான மரத்தில் இறக்கி குடிப்பதை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார். ஊமத்தங்காய் கள் அருந்துபவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும், அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று சந்தானம் திட்டமிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்த போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா, இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து பனைமரங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், விஷ கள் குடித்து 2 பேர் வாந்தி, மயக்கத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார்.
    • ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.

    கடலூர்:

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபுராஜ் (வயது 42). இவர் சுற்றுலா ஆம்னி பஸ்சின் டிரைவராக உள்ளார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகால் பகுதியில் இருந்து 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கோவில்களை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை மேல்மருத்துவர் கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு புதுச்சேரிக்கு வந்தனர்.

    புதுச்சேரியில் தங்கிவிட்டு இன்று அதிகாலை ஆம்னி பஸ்சினை எடுத்துக் ெகாண்டு காலை 6 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 48 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ்சினை ஓட்டியபடி வந்தார். அப்போது வடக்கு ரத வீதியில் வரும் போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணி களை உஷார்படுத்திய அவர், ஆம்னி பஸ்சினை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளை பஸ்சை விட்டு இறங்க வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் பஸ்சின் முன்பக்கம் சென்று பார்த்த போது, ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார். 

    உடனடியாக அவரை மீட்ட சுற்றுலா பயணிகள் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் புத்திசாலித்தனமாக ஆம்னி பஸ்சினை சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவர் இறந்து போன சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகத்தையும், சிதம்பரம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது. 

    • கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
    • 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும், உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் வெ ே 6-ந் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

    • வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது.
    • கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட 45 வார்டுகளில் அகற்றப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே ஆற்று ஓரமாகவும், சாலைகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆங்காங்கே அகற்றப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    அதன்படி கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதன் மூலம் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் செய்து வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கூட்டம் நடைபெற்றதில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபுரம் ஆகிய ஊரை சேர்ந்த அனைத்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி குப்பைகளை கொட்ட திட்டமிடுவதை கைவிட வேண்டும். அரசு விதைப்பண்ணை நிலத்தை மீண்டும் விவசாய பண்ணையாக மாற்ற முன்வர வேண்டும்.

    அரசு விதை பண்ணை நிலம் அருகில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களின் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தென்பெண்ணையாறு அருகாமையில் உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு தொட ர்ந்து ஏற்படுவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் வெள்ளப்பாக்கம் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு அமைக்க ப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என தொடர்ந்து குப்பை கிடங்கு அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி வருகின்றனர் . 

    இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டு மானால் மக்களாகிய உங்கள் அனுமதியை முழுமையாக பெற்ற பிறகு குப்பை கிடங்கு அமைக்கப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு முக்கிய பிரமுகர்கள் 10 நபர்கள் கடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஏற்கனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது இது போன்று அதிகாரிகள் தெரிவித்துவி ட்டு சென்றனர். ஆனால் இதனால் வரை இதற்கு தீர்வு ஏற்படவில்லை. மேலும் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அரசு முழு வீச்சில் நடவடி க்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் போராட்ட களத்திற்கு நேரில் வருகை தந்து இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் தான் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என திட்ட வட்டமாக தெரிவித்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்க ப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழை க்கப்பட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே லால்புரம் அருகே காமராஜ்நகர் 3-வது குறுக்கு வீதியில் வசிப்பவர் செந்தில்நாதன் (வயது 38). இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு தனி அதிகாரியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவியும் பல்கலைக் கழகத்திலேயே பணி செய்வதால், 2 பேரும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்று மதிய உணவிற்கும், மாலையில் வீட்டிற்கு வருவர்.

    அதன்படி நேற்று காலை 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி 2 பேரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வேலைக்கு சென்றனர். மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த இவர்களால் வீட்டின் முன்கதவை திறக்கமுடியவில்லை. உள்பக்கம் பூட்டியிரு க்கலாம் என்ற சந்தேகத்தில் பின்பக்கமாக சென்று செந்தில்நாதன் பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகை திருடப்பட்டு துணிகள் அனைத்தும் வெளியில் தூக்கிவீசப்பட்டிருந்தது.

    இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசாருக்கு செந்தில்நாதன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை யிலான போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழை க்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் கேரேகையை சேகரித்து எடுத்து சென்றுள்ளனர். காமராஜ் நகர் பகுதியைச் சுற்றிவந்த மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    இது தொடர்பாக சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர். பட்ட ப்பகலில் சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடந்தது அப்பகுதி மக்க ளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.
    • வீட்டை சுற்றிவளைத்து வாலிபரை கைது செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டி க்குப்பத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ் பேர்பெரியான் குப்பத்தில் கடந்த 31-ந் தேதி இரவு நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சினை தட்டினர். இதனை தட்டி க்கேட்ட டிரைவர் முருகனை தாக்கிவிட்டு பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்படி மானடிக்குப்பம் ராஜதுரை (24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து பண்ருட்டிக்கு அழைத்து வந்தனர். அப்போ து பிரவின்குமார் என்ற வாலிபர் தப்பி ஒடிவிட்டார்.

    இதையடுத்து பண்ருட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அறிவுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரைபாண்டியன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடிவந்தனர். தப்பி ஓடிய பிரவி ன்குமாரின் உறவினர்கள் வீடுகள் உள்ள சென்னை, விழுப்புரம் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பிரவின்குமார் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக விழுப்புரம் சென்ற போலீசார் அந்த வீட்டினை சுற்றிவளைத்து நேற்று நள்ளிரவு கைது செய்தனர். விழுப்புரம் பகுதியில் நள்ளிரவில் போலீசார் ஒரு வீட்டை சுற்றிவளைத்து வாலிபரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தண்ணீர் பிடிக்க சென்றபோது, சின்னபொண்ணுவை திட்டி, மிரட்டல்விடுத்தனர்.
    • ராஜச்சந்திரன, மனோகர் மீது விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் வயலூரை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சின்னபொண்ணு. ,அதே பகுதியைச் சேர்ந்த ராஜச்சந்திரன், என்பவரது வீட்டின் அருகேஉள்ள மினி டேங்கில் தண்ணீர் பிடிக்க சென்றார்.அப்போது, ராஜசந்திரன் அவரது ஆதரவாளர் மனோகர், ஆகியோர் சின்னபொண்ணுவை திட்டி, மிரட்டல்விடுத்தனர்.இதுகுறித்தபேரில்,புகாரி ன்ராஜச்சந்திரன, மனோகர் மீது விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இவரதுகூரை வீடு தீடீரென தீ பிடித்து எரிந்தது.
    • உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே எழுமாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. கூலித்தொழிலாளி.இவர் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இவரதுகூரை வீடு தீடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பெயரில் திட்டக்குடி தீயணைப்பு துறை நிலை அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தீயை ஊர் பொதுமக்கள் அணைத்துக் கொண்டிரு ந்தபோது தீயணைப்பு வீரர்கள் மேலும் அருகில் உள்ள கூரை வீடுகளில் தீ பரவாமல் இருக்க முழுவதும் அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்து உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×