என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 7 மற்றும் 8-ந் தேதிகளில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கின்றன.
    • இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள பாலமலை ஶ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அரங்கநாதர் அன்ன வாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும், கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

    அதனையடுத்து செங்கோதையம்மன் அழைப்பு நடக்கிறது. வியாழக்கிழமையன்று நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி மாலை 3 மணி அளவில் நடக்கிறது. மாலை 4 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாடவீதிகளில் வலம் வருகிறார்.

    6-ந் தேதி நடக்கும் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் நடக்கின்றன. 7 மற்றும் 8-ந் தேதிகளில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கின்றன. விழாவில் தினமும் அன்னதானமும், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டி யினரின் பஜனைகளும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்துள்ளார்.

    அதேபோல, இடிகரை பேரூராட்சி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 1000 வருடங்களுக்கு முந்தைய ஸ்ரீ பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில் திருத்தேர் உற்சவ விழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது. கடந்த 26-ந் தேதி தொடங்கிய விழாவில் 28-ந் தேதி கொடியேற்றம், அன்ன வாகனம் நிகழ்ச்சிகள். தொடர்ந்து, ரங்கநாதர் சிம்ம வாகனத்திலும், அநுமந்த வாகனத்திலும், கருடவாகனத்திலும், அதன்பிறகு, மோகினி அலங்காரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளியும், திருக்கல்யாண மகோத்சவம் மற்றும் யானை வாகனத்தி லும் காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் வருகிற 4-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து 5-ந் தேதி, குதிரை வாகனத்திலும், 6-ந் தேதி சேஷ வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

    • ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
    • 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

    கோவை,

    கோவையில் தேசிய பறவையான மயில்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி மயில்கள் உயிரிழ ப்பதை தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.

    இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

    இந்நிலையில் இன்று ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் 2 மயில்கள் சுற்றி வந்தது. பின்னர் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 8-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது
    • 28-ந்தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திரு விழா நிறைவு பெறுகிறது.

    பொள்ளாச்சி,

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டி ற்கான தேர் திருவிழா வருகிற 8-ந் தேதி காலை முகூர்த்தக்கால் நடும் நிக ழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி காலை வேல் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு பூச்சாட்டு விழாவும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது. 16-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை யாக சாலை ஆரம்பம் அதனை தொடர்ந்து கொடி யேற்றம் நிகழ்ச்சி நடைபெறு கிறது. இரவு மாரியம்மன் சிம்மவாகனத்தில் திருவீதி உலா விழா நடைபெறுகிறது.

    18-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனை தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரி யம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 5 மணிக்கு மாரியம்மன், திருத்தேர் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    26-ந்தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 28-ந்தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திரு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்த சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கோவையில் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
    • உணவ உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவையில் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப டுவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட அதிகாரி களுக்கு கோவை யில் உள்ள சில கடைகள் மற்றும் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப ட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சவுரிபாளையம் உடையாம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில், 13 வயது சிறுவனை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. அதிகாரிகள் சிறுவனை மீட்டு பீளமேடு போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், சிறு வனை பணிக்கு அமர்த்திய உணவக உரிமையாளர் ஜெகன் (வயது 30) என்பவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல், சவுரிபா ளையம் உடையாம்பாளை யத்தில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்த 12 வயது சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் சிறுவனை பணிக்கு அமர்த்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் (33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ்நிறுத்தத்தில் நின்ற பயணிகள் அலறல்
    • இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

     சூலூர்,

    கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் இன்று காலை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்தார். அவர் ஆனந்த்தை ஓட, ஓட அரிவாளால் வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க ஆனந்த் ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆனந்த்தை அந்த வாலிபர் வெட்டினார்.

    இதில் ஆனந்த்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்துப்பகுதியில் மற்றொரு வெட்டு விழுந்தது.

    பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர். சிலர் ஆனந்த்தை வெட்டிய வாலிபரை கண்டித்து அவரை தடுத்தனர். கூட்டம் அதிகமாக திரண்டதால் அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து சர்வசா தாரணமாக தப்பிச்செ ன்றார்.

    ஆனந்த்தை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறியபடியே அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    காயம் அடைந்த ஆனந்த்தை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    விசார ணையில் ஆன ந்தை வெட்டியது கோவை ப்புதூரைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகார த்தில் ஆனந்த்தை அந்த நபர் வெட்டிய விவரம் தெரிய வந்தது. இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

    • பல்வேறு விளையாட்டுகளுக்கான பொருட்கள் போடப்பட்டுள்ளது.
    • பூங்காவில் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்கின்றனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டா முத்தூர் சாலையில் கிருஷ்ணாம்பதி குளம் உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளத்தின் குளக்க ரைகள் தூய்மைப்ப டுத்தப்பட்டு நடைபாதை, குழந்தைகள் விளையாடி மகிழ பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்க ப்பட்டுள்ளது.

    இதுதவிர பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் குழந்தை களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளை யாட்டு உள்பட பல்வேறு விளை யாட்டுகளுக்கான பொரு ட்கள் போடப்ப ட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இதுதவிர காலை, மாலை நேரங்களில் ஏராள மானோர் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது கோடை விடு முறை விடப்பட்டுள்ளதால் இந்த குளத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் அதிகரித்து விட்டது. சீரநாயக்கன் பாளையம், பூசாரிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக வர தொடங்கி யுள்ளனர்.

    அவர்கள் தங்கள் குழந்தை களுடன் குளக்கரைகளில் அமர்ந்தும், அங்குள்ள பூங்காவில் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்கின்றனர்.

    தற்போது இங்குள்ள நடைப்பாதையில் புற்கள் அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அந்த புற்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மாணவியின் தாயாருக்கும், அவரது 2-வது கணவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
    • மாணவி, தனக்கு பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவரத்தை தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    கோவை:

    கோவை வடவள்ளி பகுதியில் வசிப்பவர் 17 வயது சிறுமி. இவர் டிப்ளமோ படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது மாணவிக்கு 2 வயதாக இருந்தது. கைக்குழந்தையுடன் தவித்த அவரது தாயார் பெயிண்டர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பிறகு சிறுமி தனது தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் பராமரிப்பிலேயே வளர்த்து வந்தார். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் மாணவியின் மீது வளர்ப்பு தந்தையான பெயிண்டர் சபலம் கொண்டார்.

    மனைவி வெளியில் சென்று இருந்த நேரத்தில் மகள் முறை கொண்டவர் என்பதையும் மறந்து அந்த மாணவிக்கு அவர் செக்ஸ் தொல்லை கொடுத்தார். பல நாட்கள் இவ்வாறு மாணவியை அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி வெளியில் சொல்லாமல் தவித்து வந்தார்.

    இந்தநிலையில் மாணவியின் தாயாருக்கும், அவரது 2-வது கணவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு பெயிண்டர் வெளியே சென்றார். அந்த சமயம் மாணவி, தனக்கு பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவரத்தை தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை தெரிவிக்க வேண்டும்
    • மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கலெக்டர் கூடுதல் அலுவ லகத்தில், கோடை விழாவை முன்னிட்டு, ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகள், பேக்கரி, உணவக உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், ஓட்டல் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகரின் பிரதான சாலைகளை ஒட்டி இடங்களில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை வெளி யில் அழைத்து செல்லும் போது வாகனங்க ளை சாலைகளில் நடுவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. மேலும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை தெரிவிக்க வேண்டும்.

    உணவக உரிமையாள ர்கள், பேக்கரி உரிமையா ளர்கள் சுற்றுலா பயணிக ளுக்கு தரமான உணவினை வழங்க வேண்டும். வாகனங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடம் தங்களது வாகனத்தினை உரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் நகரின் சாலையோரங்களில் நடைபாதை கடைகள் அமைத்து பாதசாரிகள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். மேலும் நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டி ல்களை பயன்படுத்தா தவாறும், குப்பைகளை வனப்பகுதிகளில் கொட்டா தவாறும், உள்ளாட்சி அமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் மொபைல் கழிப்பிடங்கள் அமைத்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தபட வேண்டும் எனவும், சுற்றுலா பயனிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபா கர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியத ர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர் நடராஜ், வட்டாட்சியர் ராஜசேகர், ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்தபகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதில் கோபம் அடைந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து சிறுமி காணாமல் போனதை கண்டு அவரது தந்தை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார்.
    • ஊழியர் சந்தேகத்தால் திருப்பிக் கொடுத்து ஓட்டம்

    கோவை,

    கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள், லேப்டாப் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு லேப்டாப் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைக்கு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண் வந்தனர். அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் கம்ப்யூட்டருக்கு மவுஸ் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த விற்பனையாளர் இளம் பெண்ணுடன் வந்த வாலிபருக்கு மவுஸ் காண்பித்துக் கொண்டிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட அந்த இளம்பெண் கடையில் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார். இதையடுத்து வாலிபரிடம் மவுஸ் காண்பித்துவிட்டு வந்த அந்த விற்பனையாளர் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த லேப்டாப் மாயமானதால் அந்த இளம்பெண் மீது விற்பனையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து இளம்பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார். முதலில் அந்த பெண் தான் எடுக்கவில்லை என மறுத்தார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த விற்பனை யாளர் பெண்ணிடம் இருந்த பையை திறந்து காண்பி க்கும்படி வலியுறு த்தியுள்ளார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது அதில் லேப்டாப் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து இருவரும் எதுவும் வாங்காமல் கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை பூலுவம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 40) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடையில் அதிகம் விற்பனையாகி இருந்தது. மொத்தம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகி இருந்தது. இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.

    எனவே வசூலான பணத்தை நாளை (செவ்வாய்க்கி ழமை) தான் வங்கியில் கட்ட முடியும். இதனால் கடையில் பணத்தை வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்காது, எனவே தனது கட்டு ப்பாட்டில் வைத்திருக்கலாம் என சண்முகசுந்தரம் கருதினார். இதையடுத்து இரவு 11.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    வடிவேலம் பாளையத்தை நெருங்கிய வேளையில் அங்குள்ள ஒரு சந்திப்பில் மோட்டா ர்சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்த னர். 3 பேரும் சேர்ந்து சண்முகசு ந்தரத்தை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் பண த்தை பையுடன் பிடுங்கிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் பணம் பறித்தவர்கள் யாரும் சிக்கவில்லை.

    சண்முகசுந்தரம் பணத்து டன் செல்வதை நோட்டமி ட்டே மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறித்தது விசா ரணையில் தெரியவந்தது. பணம் பறித்த நபர்கள் என்பது குறித்து பேரூர் சரக டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
    • எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை, மே.1-

    கோவை போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது68). இவரது மகன் பிரித்திவிராஜ் (33). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவரது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராகவேந்திரனும் அவரது மனைவியும் மணப்பா றையில் உள்ள அவரது உறவினர் குடும்ப விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரித்தி விராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. உடனே பக்கத்து வீட்டில் உள்ள எழில் குமாருக்கு தொடர்பு கொண்டு, தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் எடுக்கவில்லை என்றும், அவரை பார்க்குமாறும் கூறினார்.

    அங்கு அவரது வீட்டிற்கு சென்ற எழில், பிரித்தி விராஜ் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×