search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பள்ளி மாணவி மாயம்
    X

    கோவையில் பள்ளி மாணவி மாயம்

    • பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்தபகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதில் கோபம் அடைந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து சிறுமி காணாமல் போனதை கண்டு அவரது தந்தை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×