என் மலர்
கோயம்புத்தூர்
- டாக்டர்கள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.
- தலைமறைவாக உள்ள சுசீந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அந்த பகுதியில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார்.
அப்போது சிறுமிக்கு ஏ.பி.எஸ். காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுசீந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது சுசீந்திரன் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.
பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இதனால் கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அப்போது மாணவியை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.
அவர்கள் இது குறித்து மாணவியின் தாயிடம் தெரிவித்தனர். அவர் தனது மகளிடம் விசாரித்தார்.
அப்போது சுசீந்திரன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சுசீந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ஐ.ஓ. காலனி பஸ் நிறுத்தத்தில் 50 வயது மதிப்புத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
- இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை வடவள்ளி ஐ.ஓ. காலனியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சம்பவத்தன்று 50 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் அடையாளம் தெரியாத ஆணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் சில மாதங்களாக மருதமலை அடிவார பகுதியில் யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வீரம்பாளையத்தில் சம்பவத்தன்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர் தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவரது மகன் சபரீஸ்வரன் (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மணிகண்டனின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்ற பெற்றோர் தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அவர்கள் தூக்கு கயிற்றில் இருந்த இறக்கி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவர் முதலீடு செய்து நீண்ட நாட்களாக ஆகியும், அவருக்கு முதலீட்டு தொகையும், லாபமும் கிடைக்கவில்லை.
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள கஸ்தூரி பாய் வீதியை சேர்ந்தவர் சத்ய நாகிரா (வயது 28). ஐ.டி ஊழியர். கடந்த மாதம் 7-ந் தேதி இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அதில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதனை பார்த்து ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பிய சத்ய நாகிரா அதில் உள்ள லிங்கில் அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார்.
பின்னர் சத்ய நாகிராவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் எவ்வாறு பணத்தை முதலீடு செய்வது, லாப பணத்தை எப்படி பெறுவது என விளக்கி கூறினார். இதனை உண்மை என நம்பிய சத்ய நாகிரா அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் வெவ்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்து 920 பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அவர் முதலீடு செய்து நீண்ட நாட்களாக ஆகியும், அவருக்கு முதலீட்டு தொகையும், லாபமும் கிடைக்கவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த சத்ய நாகிரா இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி ஐ.டி. ஊழியரிடம் மோசடி செய்த மர்மநபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
- தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சி தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கிய விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடை பெற்றது.
தொடர்ந்து நேற்று குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை தொடங்கியது.
இதில் அம்மனுக்கு வெண்ணை சாற்றிஉருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள் என ஒவ்வொருவராக பூக்குண்டத்தில் இறங்கினர்.
தொடர்ந்து பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பூக் குண்டத்தில் இறங்கினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பிரியங்கா வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை பீளமேடு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 23). நர்சிங் மாணவி. சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து பிரியங்காவின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.
சாய்பாபா காலனி அருகே உள்ள கருணாநிதி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (18). இவர் பி.பி. வீதியில் உள்ள கவரிங்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் காயத்ரி (26). இவரது தாய் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் காயத்ரி தங்கி இருந்தார். சம்பவத்தன்று திடீரென அவர் மாயமாகி விட்டார். அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
- 8 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை இடையர்பாளையம் கல்லிமேடு பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சூலூர் பாப்பம் பட்டியை சேர்ந்த திருமால்சாமி (வயது 53) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம், கே.ஜி சாவடி, கோமங்களம், சூலூர் மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக கார்த்திக் (22), ஸ்டீபன்ராஜ் (21), முகமது ரபிக் (18), நந்தலால் (43), அஜித்குமார் (22), அரவிந் (21), மனோகரன் (51) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.
கோவை,
கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.
இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அருண்குமாரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
- போலீசார் அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய 3 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை புலியகுளம் ரோடு கிரீன் பீல்ட் காலனி சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவருக்கு சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
இதனால் அடிக்கடி வர்ஷினி ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றார். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு வர்ஷினி, ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு வர்ஷினி ராஜேஸ்வரிக்கு இரவு உணவு கொடுத்து தூங்க வைத்தார்.
பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் ராஜேஸ்வரியின் படுக்கை அறையில் கப்போர்டில் வைத்திருந்த 100 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 2.50 கோடி ரொக்க பணம் ஆகியவற்றை தனது கூட்டாளிகளான அருண்குமார், கார் டிரைவர் நவீன் குமார் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பி சென்றார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த வர்ஷினி, அருண்குமார், நவீன் குமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அருண்குமாரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்குள்ள வீட்டில் பதுங்கி இருந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மேட்டு தெருவை சேர்ந்த அருண்குமார் (37), அவருக்கு உதவிய பிரவீன் (32), மற்றும் சுரேந்தர் (25)ஆகியோரை கைது செய்தனர்.
அப்போது அருண்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கொள்ளையடித்த பணத்தில் இருந்து ரூ. 33 லட்சத்து 20 ஆயிரம், மற்றும் 6 ஜோடி தங்க வளையல்களை வர்ஷினியிடமிருந்து வாங்கிக் கொண்டு எனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சுரேந்தர் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தேன்.
கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பிய பணம் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரத்து 500 சேலம் வருமானவரித்துறை அதிகாரியிடம் பிடிபட்டது. நகைகளை தனது மற்றொரு நண்பரான சுரேந்தரிடம் கொடுத்து வைத்துள்ளேன்.
இவர் அவர் கூறினார்.
அவரிடம் இருந்து போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்க பணம் 6 ஜோடி தங்க வளையல்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் போலீசார் அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய 3 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வர்ஷினி, கார்த்திக், நவீன் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது
- ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.
கோவை,
கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்த த்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார்.
இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் 'மினி' நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.
இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து பயிற்சி பெற்றனர்.
- வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை, -
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (54). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அவர் தனது வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு உயர்கல்வியை பெற்று சுயவேலை வாய்ப்பை உருவாக்கலாம் என கூறினார்
கோவை
மே தினத்தினை முன்னிட்டு தொண்டா முத்தூர் வட்டாரம் இக்கரை போளுவாம்பட்டி, முள்ளாங்காடு சமுதாய நலக் கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது :-
குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர்தினம், உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே தினத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது.
இந்த கிராமம் அழகானதாக உள்ளது. தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு போன்ற திட்டங்களில் இந்த கிராமம் முன்னோடியாக விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு இந்தப் பகுதியில் தான் உள்ளது. இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். பிளா ஸ்டிக் பயன்படு த்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சிறுவாணி சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இங்கு உள்ளன. சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்ப டுகிறது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு போன்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கூடாது. இந்த இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பள்ளி படிப்பு முடிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரி கல்வியை பயின்றால்தான் அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்பை பெற முடியும். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மாவட்ட ங்கள், மாநிலங்களை சேர்ந்த வர்களுக்கு வேலைவா ய்ப்பை வழங்கும் இடமாக நம் மாவட்டம் திகழ்கிறது. புதுமை பெண்கள் திட்டம், உள்ளிட்ட அரசின் திட்டங்க ளை சிறப்பாக பயன்படுத்தி குழந்தை களுக்கு உயர்கல்வியை பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.
உயர்ந்த பணி வாய்ப்பினை பெறலாம். குழந்தை திருமணம் இல்லாத கிராமமாகவும், குழந்தை தொழிலாளர் இல்லாத கிராமமாகவும், சிறப்பான ஊராட்சியாக உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






