என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 Peacocks killed"
- ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
- 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை,
கோவையில் தேசிய பறவையான மயில்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி மயில்கள் உயிரிழ ப்பதை தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.
இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் 2 மயில்கள் சுற்றி வந்தது. பின்னர் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்