என் மலர்
செங்கல்பட்டு

கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கார் இருப்பதாக சேகர் கூறவும், அதற்கு அந்த வாலிபர் காரை எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தளி பகுதிக்கு வர சொன்னார்.
அங்கு சென்ற சேகரை அங்கு தயாராக நின்றிருந்த 4 வாலிபர்கள் தாக்கி, மிரட்டி அவரது கார் மற்றும் அணிந் திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து தளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் ராஜ் (24), அருள்ராஜ் (28), சேவாக் (20), மரியாஅபின் ஆகியோரை பொள்ளாச்சியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. வியாபாரியை தாக்கி காரை பறித்து சென்ற சம்பவம் குறித்து தளி போலீசார் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.
அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் காரில் தளியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினர்.
பொள்ளாச்சி போலீசார் திப்பம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குறிப்பிட்ட அந்த கார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை மறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் நிற்பதை பார்த்த கொள்ளையர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கி சென்றனர்.
உடனடியாக போலீசார் வாகனத்தில் கொள்ளையர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். சினிமா காட்சியில் வருவது போல் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அவர்களை விரட்டி சென்று சின்ன பாளையம் பகுதியில் காரை மடக்கினர்.
போலீசார் மறித்ததும் அதிர்ச்சியான கொள்ளையர்கள் காரை திறந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால் அதற்குள் போலீசார் காரை சுற்றி வளைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே 28 லட்சம் நிவாரண தொகை மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள 46 பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு ரூ.4.6 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பசரன் கலந்து கொண்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கும் நிவாரண உதவி, வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் 296 குழந்தைகளுக்கு ரூ.14 கோடியே 80 லட்சம் நிவாரண உதவியும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 9,803 குழந்தைகளுக்கு ரூ.294 கோடியே 9 லட்சம் நிவாரண உதவியும், ஆக மொத்தம் 10 ஆயிரத்து 99 குழந்தைகளுக்கு ரூ.308 கோடியே 89 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 102 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 6 லட்சம் நிவாரண உதவியும், ஆக மொத்தம் 104 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 16 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
நிதி உதவிகள் பெற்ற குழந்தைகள் உயர் கல்வி கற்கும் வரை மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடவேண்டிய 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 18லட்சத்து 29 ஆயிரத்து 200 ஆகும். அவர்களில் இதுவரை முதல் தவணையாக 13லட்சத்து 14 ஆயிரத்து 930 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது 72 சதவீதம் ஆகும். 2-வது தவணையாக 6,62,116 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது 36 சதவீதம் ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கால மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் தினமும் 96 நடமாடும் மருத்துவ முகாம்களும் அரசு மருத்துவமனைகளில் 46 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
மாவட்டத்தில் இதுவரை 233 முகாம்கள் அமைக்கப்பட்டு 9 ஆயிரத்து 978 பேர் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சித் தலைவர் செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன், செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் எஸ்.நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







