என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    ஆடு திருடர்களால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், ஆடு திருடர்களால் நேற்று இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடல்  பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படட்து. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான சோழமாநகருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

    அதன்பின்னர் சோழமாநகர் இடுகாட்டில் பூமிநாதனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    அச்சரப்பாக்கம் அருகே விபத்தில் கிளீனர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை சாலையோரமாக நிறுத்தி பயணிகளை இறக்க முற்பட்டனர். அந்த நேரத்தில் பஸ்சின் பின்னால் சென்னையிலிருந்து பல்லடத்திற்கு கறிக்கோழி ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இதில் அரசு பஸ்சின் பின்பக்கம் சேதமடைந்தது. மினி லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் லாரியின் கிளீனர் செந்தில்குமார் (வயது 43) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். லாரியில் வந்த சுமை தூக்கும் தொழிலாளி அசோக்குமார் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருப்பத்தூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையால் வீடுகளில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்து வருவதாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை விடாது கனமழை கொட்டியது. இதனால் மழைநீர் ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரி, கானாறுகளிலும் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததால் மாவட்டம் முழுவதும் ஏராளமான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    திருப்பத்தூர் நகரில் கடந்த 2 நாட்களாக விடாது கொட்டிய கனமழையால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு வளாகத்தில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதேபோல் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. நேற்று மதியம் வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் தாலுகா கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கர்ப்பிணிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் அறை, நோயாளிகள் உட்கார வைக்கும் இடம், சிகிச்சை அளிக்கும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து முழங்கால் அளவு தேங்கியது.

    டாக்டர்‌ ஷர்மிளா நேற்று காலை நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை பூச்சு விழுந்தது. இதனால் நோயாளிகள் அலறி அடித்து வெளியே ஓடினார்கள்.

    தகவலறிந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில், நேர்முக உதவியாளர் சங்கரன் நேரில் வந்து பார்வையிட்டனர். உடனே நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார் அருகில் இருந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட மாற்றி கொடுத்தார்.

    ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவான 124 அடியை எட்டியது. அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் மதகுகளில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை இருந்தது. அவர்களை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் அழைத்து வந்தனர்.

    ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரி நிரம்பி உபரிநீர் சாலை நகர் அருகில் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

    திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர், லட்சுமி நகர், தென்றல் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டு வெளியேற்றினர். 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது.

    ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாமலேரிமுத்தூர் ஏரி நிரம்பி பள்ளி கட்டிடத்தில் மழைநீர் புகுந்ததால் குளம் போல காட்சி அளித்தது.

    நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆலங்காயம்- 134, வாணியம்பாடி- 126.20, திருப்பத்தூர்- 124.20, நாட்டறம்பள்ளி- 122.80, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை- 113, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை- 102.60, ஆம்பூர்- 85.70.
    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இந்தலூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இந்தலூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தேன்பாக்கம், அரப்பேடு, அம்மணம்பாக்கம், புத்தமங்கலம், ஆயகுணம், கோட்டை புஞ்சை, மதுராபுதூர், சின்ன கயப்பாக்கம், பெரிய கயப்பாக்கம், சிட்லபாக்கம், புத்தூர், பருக்கல், கொளத்தூர் மற்றும் வேட்டரம்பாக்கம் உட்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சார வினியோகம் இருக்காது என்று அச்சரப்பாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கிறிஸ்டோபர் லியோ ராஜ் தெரிவித்துள்ளா
    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    ரியல்மியின் புதிய ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கெண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலில் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 பிளாஷ் மெமரி, 6.51 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா சென்சார்கள், முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆட்டோபோக்கஸ், ஓ.ஐ.எஸ். மற்றும் இ.ஐ.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    கல்பாக்கம் அருகே பாலாற்றில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வாயலூர் பாலாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது தூண்டிலில் மீன் சிக்கிவிட்டதாக நினைத்து இழுத்தபோது, எதிர்பாராதவிதமாக தூண்டில் அறுந்து விழுந்ததில் அவர் பாலாற்றில் தவறி விழுந்தார். இதனால், ஆற்றில் இருந்த புதருக்குள் அவர் சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கார் இருப்பதாக சேகர் கூறவும், அதற்கு அந்த வாலிபர் காரை எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தளி பகுதிக்கு வர சொன்னார்.

    அங்கு சென்ற சேகரை அங்கு தயாராக நின்றிருந்த 4 வாலிபர்கள் தாக்கி, மிரட்டி அவரது கார் மற்றும் அணிந் திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து தளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் ராஜ் (24), அருள்ராஜ் (28), சேவாக் (20), மரியாஅபின் ஆகியோரை பொள்ளாச்சியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதற்கிடையே கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. வியாபாரியை தாக்கி காரை பறித்து சென்ற சம்பவம் குறித்து தளி போலீசார் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.

    அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் காரில் தளியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினர்.

    பொள்ளாச்சி போலீசார் திப்பம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குறிப்பிட்ட அந்த கார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை மறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் நிற்பதை பார்த்த கொள்ளையர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கி சென்றனர்.

    உடனடியாக போலீசார் வாகனத்தில் கொள்ளையர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். சினிமா காட்சியில் வருவது போல் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அவர்களை விரட்டி சென்று சின்ன பாளையம் பகுதியில் காரை மடக்கினர்.

    போலீசார் மறித்ததும் அதிர்ச்சியான கொள்ளையர்கள் காரை திறந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால் அதற்குள் போலீசார் காரை சுற்றி வளைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 233 முகாம்கள் அமைக்கப்பட்டு 9 ஆயிரத்து 978 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே 28 லட்சம் நிவாரண தொகை மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள 46 பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு ரூ.4.6 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் தா.மோ.அன்பசரன் கலந்து கொண்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கும் நிவாரண உதவி, வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் 296 குழந்தைகளுக்கு ரூ.14 கோடியே 80 லட்சம் நிவாரண உதவியும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 9,803 குழந்தைகளுக்கு ரூ.294 கோடியே 9 லட்சம் நிவாரண உதவியும், ஆக மொத்தம் 10 ஆயிரத்து 99 குழந்தைகளுக்கு ரூ.308 கோடியே 89 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 102 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 6 லட்சம் நிவாரண உதவியும், ஆக மொத்தம் 104 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 16 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    நிதி உதவிகள் பெற்ற குழந்தைகள் உயர் கல்வி கற்கும் வரை மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடவேண்டிய 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 18லட்சத்து 29 ஆயிரத்து 200 ஆகும். அவர்களில் இதுவரை முதல் தவணையாக 13லட்சத்து 14 ஆயிரத்து 930 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது 72 சதவீதம் ஆகும். 2-வது தவணையாக 6,62,116 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது 36 சதவீதம் ஆகும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கால மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் தினமும் 96 நடமாடும் மருத்துவ முகாம்களும் அரசு மருத்துவமனைகளில் 46 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

    மாவட்டத்தில் இதுவரை 233 முகாம்கள் அமைக்கப்பட்டு 9 ஆயிரத்து 978 பேர் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சித் தலைவர் செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன், செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் எஸ்.நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். 

    பிரபுதேவா

    நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.

    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் திருக்கழுக்குன்றம் நகரில் மளிகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன் முருகன் தனது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால் அதை சரி செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி முருகன் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு, திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,521 பேர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 320 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 775 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,261 பேர் உயிரிழந்துள்ளனர். 284 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது.
    ஆவுடையார்கோவில்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆவுடையார் கோவிலில் இருந்து இந்த வழியாக செல்லும் மினி பஸ் குளத்து குடியிருப்பு, பெருநாவலூர், கறம்பக்குடி, காடங்குடி, திருவாகுடி, குருங்கலூர் வரை சென்று திரும்புகிறது. இந்த பஸ்சில்தான் பெருநாவலூர் மற்றும் ஆவுடையார் கோவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 முறை ஆவுடையார்கோவிலில் இருந்து குருங்கலூர் வரை இந்த மினி பஸ் சென்று வருகிறது. இதனால், மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×