search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்றால் ஒரே நாளில் 62 பேர் பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,521 பேர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 320 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 775 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,261 பேர் உயிரிழந்துள்ளனர். 284 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×