என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
- கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.
புதுச்சேரி:
தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நேரு இளையோர் மையம் சார்பில், புதுவை காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது.
அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது.
கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.
கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல.
சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் வெள்ளி, சனியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது
- புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. 2 நாட்களாக மழை புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை அடுத்தடுத்து வேகம் பிடித்து கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாநிலம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுதினம் என 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என
- கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்பட்டது.
- அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
- ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரெஞ்சு நாடு ஆதரவாக உள்ளது.
- புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி:
ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரெஞ்சு நாடு ஆதரவாக உள்ளது.
புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
நீலம்-மஞ்சள் நிறத்தில் இடம்பெறும் உக்ரைன் தேசியக்கொடி வண்ணத்தைப் பதிந்து அதில் பிரான்ஸ் உக்ரைனுடன் இருக்கிறது என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சு துணை தூதரகத்தில் மேலே பிரான்ஸ் தேசியக்கொடி பறக்க, கீழே உக்ரைன் கொடி வண்ணம் இட்டு அதில் தனது ஆதரவை மக்கள் அறியும் வகையில் பிரான்ஸ் அரசு பதிவு செய்துள்ளது.
- நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
- நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.
ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.
இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.
அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.
- மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.
- சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை.
புதுச்சேரி:
காரைக்கால் கடலில் நேற்று குளித்த திருவாரூர் மருத்து வக்கல்லூரி மாண வர்களில், 4 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர், இதில் 3 பேர் மீட்கபப்ட்ட நிலையில், ஒருவர் மாயமாகி யுள்ளார். அவரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிர மாக தேடிவருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வரும், சிவக்குமார் (வயது 20), கரோனா (20), அகிலாண்டேஸ்வரி (19), கனகலட்சுமி (19) உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காரைக்காலுக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்களில், சிவக்குமார், கரோனா, அகிலாண்டேஸ் வரி, கனகலட்சுமி உள்ளிட்ட 4 பேர், மாவட்ட நிர்வாக த்தின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் வந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் சிலர் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை. தொடர்ந்து, காரைக்கால் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் நிலையத்திற்கு மாண வர்கள் தகவல் அளித்த னர். அதன்பேரில், கடலில் மாயமான பட்டு கோட்டை யைச்சேர்ந்த மாணவர் சிவக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். காப்பாற்றப்பட்ட 3 மாணவி கள், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை கக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து, காரைக் கால் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டும், அப்பகுதியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையில் ஈடுபட்டாமல் இருந்ததாக கூறப்படு கிறது.கடலில் குளிக்க வேன்டாம் என மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்திருந்தாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் நேரத்தில், போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வல ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- புதுவை மாநிலத்தில் 24 மணி நேரமும் வர்த்தக வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது தவறானது.
- 24 மணி நேரம் கடை திறப்பு அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பதே குறிக்கோளாக கொண்டது.
புதுச்சேரி:
புதுவை அரசின் தொழிலாளர் துறை இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்று 24 மணி நேரம் கடை, நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் 10 பணியாளர்களுக்கும் மேல் வேலை செய்யும் கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம். பெண்களுக்கு உரிய வசதிகளை செய்து விருப்பமுள்ளவர்கள் பணியாற்றலாம் என்பது உட்பட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது எப்போது முதல் அமலாகிறது என்ற விபரங்கள் குறிப்பிடவில்லை. 24 மணி நேர கடை திறப்பு என்பது மதுபார்களுக்கும், மதுபான விடுதிகளுக்கும் பொருந்துமா? என்பதும் குறிப்பிடவில்லை. கலால்துறை இதற்காக தனியாக கட்டணம் வசூலித்து அனுமதியளிக்குமா? என தெரியவில்லை.
புதுவையை பொறுத்தவரை விடுதிகளில் சுற்றுலா மதுபான விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வணிக வளாகம், பெரிய நிறுவனங்கள்,ஷோரூம்கள் என அனைத்தையும் திறக்க அனுமதிக்கப்படுமா? இவற்றை அனுமதிக்க தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? காவல்துறையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சட்டம்- ஒழுங்கை சீர்செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இரவு முழுவதும்கடைகளை திற ந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க போதிய போலீசார் உள்ளார்களா? 15 நாட்களுக்கு ஒரு முறைமின்தடை அறிவிக்கப்பட்டு பகுதி, பகுதியாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இரவு முழுவதும் கடைகளை திறந்தால் மின்பயன்பாடு அதிகரிக்கும். இந்த மின்தேவைக்கு மின்சாரம் அதிகமாக உள்ளதா? என பல கேள்விகள் எழுகிறது. இதனால் 24 மணி நேர கடை திறப்பு சாத்தியமா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
24 மணி நேரம் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. எந்த கடைகள் திறக்க வேண்டும்? எதை திறக்கக்கூடாது? என பட்டியல் வெளியிடவில்லை. அத்தியாவசியமான தேவை கடைகளை திறப்பதில் ஆட்சேபனை இல்லை. மதுபார்கள், பப் திறப்பதால் புதுவையில் சாராய ஆறுதான் ஓடும். எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல், அறிவித்துள்ளது குளறுபடியை ஏற்படுத்தும். எனவே அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் 24 மணி நேரமும் வர்த்தக வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது தவறானது. 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வர்த்தக, வியாபார கடை நிறுவனங்கள், மதுபான ரெஸ்டாரண்டுகள், ஓட்டல்கள், ஸ்பா, மால்கள், மசாஜ் சென்டர்கள், பப் பார்கள் நடைபெறும். இது சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? முதலில் இரவு நேரம் இதுபோன்ற கடைகள் திறப்பதற்கு சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் அனுமதி கேட்கப்பட்டதா? இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட நம்மிடம் அதிகப்படியான காவலர்கள் உள்ளனரா? இப்போது உள்ள நிலையில் பணி சுமையோடு பணிபுரியும் காவல் துறையினரால், புதுவையில் வெளிமாநிலத்தவர்களின் சந்தோஷத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்திற்காக துன்பத்திற்கு ஆளாக்கப்பட வேண்டுமா?
இரவு முழுவதும் கடைகள் திறந்திருந்தால் துப்புரவு பணி எவ்வாறு செயல்படுத்த முடியும். இரவு முழு நேர இந்த உத்தரவால் நிச்சயம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். யார் யாரையோ திருப்திபடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்கால இளைஞர்களின் ஒரு தலைமுறையை நாம் வீணடிப்பதை போன்று அமைந்துவிடும்.
எனவே முழு இரவு நேர கடைகள் திறப்பு சம்பந்தமாக தொழில்துறையின் இந்த உத்தரவை முதல்-அமைச்சர் மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
24 மணி நேரம் கடை திறப்பு அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பதே குறிக்கோளாக கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காகவும், சாராய வியாபாரிகளை திருப்திப்படுத்த சுயநல லாப நோக்கோடும்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
24 மணி நேரமும் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சட்டம்-ஒழுங்குதான் சீர்கெடும். ஏற்கனவே ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, 24 மணி நேரமும் பாதுகாப்பு, போக்குவரத்து பணியில் யார் ஈடுபடுவார்?
இதனால், போதைப்பொருள் நடமாட்டம், விபசாரம், பாலியல் வன்கொடுமைகள், அண்டைமாநில சமூகவிரோதிகளின் கூடாரமாக புதுவை மாறும். அரசின் இந்த அறிவிப்பால் இளைஞர்கள் உழைப்பு மேலும் சுரண்டப்படும். மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கிய அரசு, அந்த மது வகைகளை விற்பனை செய்ய இந்ததிட்டத்தை நயவஞ்சகமாக வகுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே அம்பகரத்தூரிலிருந்து, தனியார் பஸ் ஒன்று காரைக்கால் நோக்கி சென்றது. இந்த பஸ்சை அய்யப்பன்(வயது40) என்பவர் ஓட்டி வந்தார். செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர், பூட்டி இருந்த கடையில் மோதி நின்றது.
இதில் டிரைவர் அய் யப்பன், கண்டக்டர் மகேஸ்வரன்(41) மற்றும் 17 பயணிகள் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை, அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அனை வரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் இது குறித்து, காரை க்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- காரைக்காலில் கல்லூரி மாணவி மாயமானார்.
- 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு மாரியம்மன் கோவில் தெருவை ச்சேர்ந்தவர் ஆரவமுதன். இவரது மகள் ஈஸ்வரி தெய்வநாயகி(வயது19). இவர் கடந்த 21-ந் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கா ததால், தந்தை ஆரவமுதன், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில், மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். மேலும், ஈஸ்வரி தெய்வநாயகி கல்லூரி சென்ற அன்று, கருநீலம் மற்றும் வெள்ளை கலரில் சுடிதார் அணிந்தி ருந்ததாகவும், இடது கை மணிகட்டில் ஏ.இ.எஸ்எச்யு. என பச்சை குத்தியிருப்பார்., இவரை பற்றி தகவல் தெரிந்தால், காரைக்கால் நகர காவல்நிலையம அல்லது, 04368228007, 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மதுபானக்கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில், பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் இயங்கி வரும் தனியார் மதுபானக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடை மூடப்பட்டது. இந்த கடையில் நெடுங்காடு பொன்பற்றி கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கர் (வயது60). காவலாளியாக இருந்தார். நள்ளிரவு திடீரென கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், கடையை திறக்குமாறு வற்புதியுள்ளனர். காவலாளி மறுக்கவே, மர்ம நபர்கள் காவலாளியை தாக்கி, கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபானங்களை திருடிகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து, பாஸ்கர், கடை உரிமையாளர் மற்றும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடை வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகேவுள்ள விழிதியூரைச் சேர்ந்த ஜெகன் (23), நளன் குளம் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர், அவர்களிமிமிருந்து, ரூ.1 லட்சத்து 43 பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். (சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. திருட்டு நடந்த ஒரு சில மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த திருநள்ளாறு போலீசாரை, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பாராட்டினார்.
- காரைக்காலில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு நல்லாத்தூர் கடைவீதி அருகே, பொது இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் ஆபாச மாக பேசி ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 பேர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, போலீசார் அந்த 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்க ளில் 4 பேர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச்சேர்ந்த சத்தியராஜ்(வயது30), சிலம்ப ரசன்(32), சசிகுமார் (28), மதன்ராஜ்(30) மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த சுரேஷ்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய ரகளை யில் ஈடுபட்ட குற்றத்தி ற்காக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் ஆசாரிதெரு அருகே பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய கலையரசன்(20) சூரியா(22) ஆகிய 2 பேரை திரு.பட்டினம் போலீசார் கைது செய்தனர்.






