search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் கடலில் குளித்த   மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் கடல் அலையில் சிக்கினர்  3 பேர் மீட்பு; ஒருவர் மாயம்
    X

    காரைக்கால் கடலில் குளித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் கடல் அலையில் சிக்கினர் 3 பேர் மீட்பு; ஒருவர் மாயம்

    • மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.
    • சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் கடலில் நேற்று குளித்த திருவாரூர் மருத்து வக்கல்லூரி மாண வர்களில், 4 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர், இதில் 3 பேர் மீட்கபப்ட்ட நிலையில், ஒருவர் மாயமாகி யுள்ளார். அவரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிர மாக தேடிவருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வரும், சிவக்குமார் (வயது 20), கரோனா (20), அகிலாண்டேஸ்வரி (19), கனகலட்சுமி (19) உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காரைக்காலுக்கு சுற்றுலா வந்தனர்.

    அவர்களில், சிவக்குமார், கரோனா, அகிலாண்டேஸ் வரி, கனகலட்சுமி உள்ளிட்ட 4 பேர், மாவட்ட நிர்வாக த்தின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் வந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் சிலர் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை. தொடர்ந்து, காரைக்கால் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் நிலையத்திற்கு மாண வர்கள் தகவல் அளித்த னர். அதன்பேரில், கடலில் மாயமான பட்டு கோட்டை யைச்சேர்ந்த மாணவர் சிவக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். காப்பாற்றப்பட்ட 3 மாணவி கள், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை கக்காக சேர்த்துள்ளனர்.

    இது குறித்து, காரைக் கால் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டும், அப்பகுதியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையில் ஈடுபட்டாமல் இருந்ததாக கூறப்படு கிறது.கடலில் குளிக்க வேன்டாம் என மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்திருந்தாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் நேரத்தில், போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வல ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×