என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.
    • ரசிகர்கள் செல்பி எடுக்க போட்டி போட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.

    அலிப்பிரி நடப்பாதை வழியாக தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர் மகன் கவுதம், மகள் சிதாரா ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து வந்தார்.

    நடைபாதையில் வந்த பக்தர்கள் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினருடன் செல்பி எடுக்க போட்டி போட்டனர். இதனால் அலிபிரி நடைபாதையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நடைபாதைக்கு வந்து மகேஷ்பாபு குடும்பத்தினரை பத்திரமாக திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்றனர்.

    மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இன்று காலை மகேஷ்பாபு குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவரை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
    • செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நாளை ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். 


    • பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
    • அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார்.

    ஆந்திரா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.

    அந்த சேவலுக்கு ஜிமிக்கி போட்டு சிங்காரித்திருந்தார். இறக்கைகளை வண்ணம் தீட்டி அலங்கரித்து பூ சூட்டி கொண்டு வந்திருந்தார். அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார். இதனை கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.

    சேவலை அலங்கரித்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி வேண்டுதலை நிறைவேற்றினேன் என அவர் தெரிவித்தார்.

    • ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு விருந்து.
    • விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

    தமிழில் ஆடி மாதம் போன்று ஆந்திரா மாநிலத்தில் ஆஷாதா மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம் ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆகும்.

    இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

    விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

    பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா," ஒரே இடத்தில் 100 வகையான உணவுகளை கண்டது மகிழ்ச்சி. மாமியாரின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியது" என்றார்.

    • வனவிலங்குகள் அச்சம்பேட்டை சிவன் கோவில் சுற்றுப்புறங்களில் சுற்றித் திரிகின்றனர்.
    • மக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளன. நாராயணன்பேட்டை மாவட்டம், மோகனூர் மலைகளில் இருந்து வரும் மழை நீரால் அப்பகுதி முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அச்சம்பேட்டை சிவன் கோவில் சுற்றுப்புறங்களில் சுற்றித் திரிகின்றனர்.


    இதேபோல் ஏராளமான மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து துள்ளி குதித்து விளையாடியது. இதனை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

    • சாராய வழக்குகளில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பொதுத்தேர்தலின்போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதியில் வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப்பாட்டில்கள் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி மாவட்டத்துக்கு பல்வேறு வாகனங்களில் கடத்தி வரபட்டு பறிமுதல் செய்து, அது சம்பந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சாராய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை முடிந்ததும், திருப்பதி பாலாஜி காலனி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சாலையில் மதுபானப் பாட்டில்களை அடுக்கி வைத்து நேற்று ரோடு ரோலர் மூலம் அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு பங்ககேற்று மதுபானப் பாட்டில்களை அழிக்கும் ரோடு ரோலரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரோடு ரோலர் மதுபானப் பாட்டில்கள் மீது ஏறி நசுக்கி அழித்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடராவ், குலசேகர், சாந்தி பத்ரதல், கலால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி மாவட்டத்துக்கு யாரேனும் மதுபானங்களை கடத்தி வந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்தலின்போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 27 ஆயிரத்து 568 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதவிர மாவட்டத்தில் சாராய வழக்குகளில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுசார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிந்ததும், மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபானப் பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 150 ஆண்டுகள் பழமையான நித்ரா கன்னேறு மரம்.
    • மரம்‌ சினிமா படப்பிடிப்புக்கு பிரபலமானது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோவூர் அருகே உள்ள குமாரசாமி குளித்தலை என்ற இடத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் கரையில் 150 ஆண்டுகள் பழமையான நித்ரா கன்னேறு மரம் ஒன்று உள்ளது.

    இந்த மரத்தை பிரபல இயக்குனர்கள் பாபு, கே. விஸ்வநாத் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோர் தங்கள் படங்களில் அதிக அளவில் காட்டி வந்தனர்.

    இதனால் இந்த மரம் சினிமா படப்பிடிப்புக்கு பிரபலமானது. இதுவரை இந்த மரத்தின் அடியில் 300 சினிமா பட பிடிப்புகள் நடந்துள்ளன.

    தெலுங்கு சினிமாவை பொருத்தவரை கிராமக் காட்சிகள் என்றால் இந்த மரம் இடம்பெறாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு பிரபலமானதால் இதனை சினிமா மரம் என அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக 150 ஆண்டுகள் பழமையான சினிமா மரம் வேரோடு சாய்ந்தது. கிராம மக்கள் மரத்தை பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தனர்.

    இந்த மரம் இதற்கு முன்பு 1953, 1986, 2022 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தையும் 1996 பயங்கர சூறாவளி காற்றையும் தாங்கி நின்றது.

    இது குறித்து கிராம மக்களுக்கு கூறுகையில், `இந்த மரத்தை உள்ளூர் கிராமவாசியான சிங்குலூரி தாதாபாய் என்பவர் நட்டு உள்ளார். மரத்தின் வீழ்ச்சி எங்களை கவலை கொள்ள செய்தது.

    இதில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்துள்ளன. மீண்டும் அந்த இடத்தில் புதிய மரம் ஒன்றை நட்டு சினிமா படப்பிடிப்பு தளத்தை புதுப்பிக்க வேண்டும் என்றனர்.

    • விதியை ரத்து செய்ய முடிவு.
    • சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனை கூட்டம்

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த கடந்த 1994-ம் ஆண்டு புதிய விதிமுறை ஒன்றை அரசு கொண்டு வந்தது. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

    அது மட்டுமின்றி வெளி மாநிலங்களில் அரசு வேலைகளில் ஈடுபடுவது, சில அரசு சலுகைகளை பெறவும் தடை செய்யப்பட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள தனிநபர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் 16 ஓட்டங்களையும் பறிமுதல் செய்தனர்.
    • விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம்,திருப்பதி அடுத்த அன்னமய்யா மாவட்டம், சம்பப்பள்ளிக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து இறைச்சிக்காக 16 ஒட்டகங்கள் கடத்தி வரப்பட்டன.

    இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 16 ஓட்டங்களையும் பறிமுதல் செய்தனர். ஒட்டகங்கள் அங்குள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஒட்டகங்களை கடத்தி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி சங்கர் லால் மற்றும் ஒட்டகங்களை வாங்கிய சையத் பாபுஜி ஆகியோர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் ஒட்டகம் இருப்பதால் யாரும் ஒட்டகங்களை இறைச்சிகாக விற்கவோ வாங்குவோ கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

    • திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மாதந்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
    • கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்களை விசாரிக்க என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

    ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 10 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டிய ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை ரூ.14,449 கட்டணத்தில் டிக்கெட்களை குறிப்பிட்ட 545 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் 545 பேரும் இதுவரை 15 கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 500 தரிசன டிக்கெட் வாங்க செலவு செய்திருப்பதும், ஒவ்வொருவரும் தலை 2 லட்சத்து 78 ஆயிரத்து 378 ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தி ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவர்களில் பலர் இடைத்தரகர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் வாங்கிய டிக்கெட்டுகளுடன் தரிசனத்திற்காக அடுத்த முறை திருப்பதிக்கு வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏராளமான பக்தர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம், மூட்டு வலியால் அவதி.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வைரஸ் காய்ச்சல் சிக்குன் குனியாவை ஒத்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் பரவி வருகிறது.

    வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்ற அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    3,4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை. 4 முதல் 6 வாரங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

    காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    2 வாரங்களுக்கு மேல் மூட்டு வலி இருந்தால் குறைந்த அளவு ஸ்டீராய்டு மருந்தை கொடுத்தால் நிவாரணம் பெறலாம் என நுரையீரல் நிபுணர் டாக்டர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

    நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இது ஆந்திராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏழுமலையன் கோவிலில் நேற்று 75,356 பேர் தரிசனம் செய்தனர்.
    • புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் குழந்தை பிறக்கும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 நாட்கள் கருடசேவை நடக்கிறது. வருகிற 9-ந் தேதி கருட பஞ்சமி மற்றும் 19-ந் தேதி ஆவணி மாத பவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் எழுந்தருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    9-ந் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடன் மீது திருமாட வீதிகளில் ஏழுமலையான் வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

    இதில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு கருடனை போல் வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

    19-ந் தேதி ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    ஒரே மாதத்தில் 2 கருட வாகன சேவை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையன் கோவிலில் நேற்று 75,356 பேர் தரிசனம் செய்தனர். 21,815 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×