என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு எளிய முறையில் வீட்டிலேயே பாசிப்பருப்பு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு -1 கப்
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    நெய் - 100 கிராம்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு -10



    செய்முறை :

    வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் மாவாக்கிக்கொள்ளவும். அதனை சலித்துக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

    பின்னர் அவற்றை பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அதனை உருக்கி மாவு மீது ஊற்றி சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

    ருசியான பாசிப்பருப்பு லட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு தேன்குழல் முறுக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கிலோ
    தோல் நீக்கிய முழு உளுந்து - 150 கிராம்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை தண்ணீரில் அலசி கழுவிவிட்டு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.

    உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் இரண்டையும் மாவாக இடித்து சலித்துக்கொள்ளவும்.

    பின்னர் மாவுடன் பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெயும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து அச்சில் போட்டு கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

    சூப்பரான தேன்குழல் முறுக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாசி - 1 துண்டு (25 கிராம்)
    பெரிய  வெங்காயம் - 100 கிராம்
    பழுத்த தக்காளி - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்
    கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாசி தொக்கு ரெடி.

    சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விருதுநகர் மட்டன் சுக்காவை தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த சுக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்னவெங்காயம் - 200 கிராம்
    எலும்பில்லாத மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 30 கிராம்
    சீரகத்தூள் - 40 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    நல்லெண்ணெய் - 30 மில்லி.
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    மட்டன் நன்கு வெந்தது தண்ணீர் ஏதும் இல்லாமல் டிரையாக வந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 300 கிராம்,
    வறுத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
    சின்னவெங்காயம் - 200 கிராம்,
    நல்லெண்ணெய் - 50மி.லி.,
    தக்காளி - 2,
    புளி - எலுமிச்சைப்பழ அளவு,
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்.




    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

    சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

    பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு ரெடி.

    சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், புலாவ், தோசை, சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காலிஃபிளவர் - 1 பூ
    பட்டாணி - 1/4 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    கடுகு - தேவையான அளவு

    பொடி செய்ய தேவையான பொருட்கள்:

    கடலை பருப்பு - 100 கிராம்
    உளுந்தம் பருப்பு - 100 கிராம்
    தனியா (மல்லி) - 150 கிராம்
    சீரகம் - 150 கிராம்
    வர மிளகாய் - தேவையான அளவு
    பட்டை - 25 கிராம்
    இலவங்கம் (கிராம்பு) - 25 கிராம்
    ஏலக்காய் - சிறிதளவு



    செய்முறை :

    பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    காலிஃபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாணி போட்டு வதக்க வேண்டும்.

    பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

    காய்கள் வெந்தவுடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி.

    இந்த சப்ஜியை சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக, சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இன்று கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி சாதம் - 1 கப்
    கொண்டைக்கடலை - 1 கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 2
    நெய் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - ½ கப்
    கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
    புதினா - 1 கைப்பிடி
    இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசி நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    எல்லாம் சேர்த்து வரும் போது உதிரியாக வடித்த சாதம் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்து பரிமாறவும். 

    சூப்பரான ஆலு சுண்டல் பிரியாணி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 100 கிராம்
    வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - ஒன்று
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
    கறிவேப்பிலை - 5 இலைகள்
    பூண்டுப் பல் - ஒன்று
    பட்டர் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் பட்டர் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

    குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

    பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான சூப்பரான சிக்கன் சூப் ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 15
    நெய் - 50 கிராம்
    தக்காளி - 2
    குடை மிளகாய் - 1
    இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க...

    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    பட்டை - 1 சிறிய துண்டு
    சோம்பு - ½ ஸ்பூன்



    செய்முறை :

    பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி கொள்ளவும்.

    குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிய பின்னர் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

    இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.

    தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரெட் பொரியலை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 3 கப்
    கடலை மாவு - 1 ½ கப்
    அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
    இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
    புதினா இலை - 12
    கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
    சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.

    பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

    சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அனைத்து விதமாக காய்கறிகளையும் சேர்த்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    பச்சைப்பாட்டாணி - ஒரு கைப்பிடி
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பீன்ஸ் - ஐந்து
    தக்காளி - ஒன்று
    வெங்காயம் - 1
    புதினா - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - கால் தேக்கரண்டி

    அரைக்க :

    துருவிய தேங்காய் - ஒரு மேஜைக் கரண்டி
    பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - மூன்று
    கிராம்பு - இரண்டு
    ஏலக்காய் - ஒன்று.



    செய்முறை :

    வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், தக்காளி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    நறுக்கிய காய்கறிகளை திட்டமாக தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும்.

    ஐந்து நிமிடம் இதை கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

    சூப்பரான காய்கறி கூட்டு ரெடி.

    பின்குறிப்பு : இதை மிதமான தீயில் சமைத்தால் ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன், பன்னீர் சேர்த்து கபாப் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சோளம் - 2
    உருளை கிழங்கு - 1 கப்
    பன்னீர் - 1/2 கப்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
    இஞ்சி - சிறிது
    கொத்தமல்லி - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள் - 1/2 ஸ்பூன்
    சோள மாவு - 2 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப



    செய்முறை :

    சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

    இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.

    சூப்பரான கார்ன் - பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×