என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ரவை (அ) மைதா மாவு - கால் கிலோ
    சர்க்கரை - அரை கிலோ
    வறுகடலை - கால் கிலோ
    தேங்காய் - 2
    ஏலக்காய் பொடி - சிறிதளவு
    நெய் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.

    தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)

    அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

    சூப்பரான இனிப்பு சோமாஸ் ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் விருப்பம் தான்.. அதிலும் பிஷ் ஃப்ரைடு ரைஸ் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்று பிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்
    வறுத்த மீன் - 2 துண்டுகள்
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தக்காளி சாஸ் - 1
    வினிகர் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    முட்டை - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ், கோஸ் - ஒரு கப்
    நெய் - 3 ஸ்பூன்
    பூண்டு - 4 பல்



    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.

    முட்டையை உதிரியாக பொரித்து வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.

    அடுத்து அதில் பொரித்த முட்டை, வறுத்த மீன் மற்றும் சாதத்தை கொட்டி கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று பாலக்கீரை சிக்கன் சேர்த்து சூப்பரான பாலக் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கட்டு
    சிக்கன் - 1/2 கிலோ
    வெங்காயம் - 300 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, இட்லி, தோசை, நாண், புலாவ், பிரியாணி, சாதத்திற்கு என அனைத்து வகையான உணவிற்கும் இந்த பகரா பேங்கன் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - கால் கிலோ,
    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சை அளவு,
    வெங்காயம் - 100 கிராம்,
    தனியா - 3 டீஸ்பூன்,
    எள், சீரகம் -  தலா 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
    வேர்க்கடலை - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பூண்டு - 5 பல்,
    எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பை நீக்கி துண்டுளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்…  

    தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும்.

    வதக்கிய அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, பச்சை வாசனை போனவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு புளிக்கரைசல், அரைத்த விழுது, அரைத்த மசாலா பொடி, சேர்த்து வதக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயுடன் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பகரா பேங்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    கர்நாடகாவில் இந்த அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்வதால் சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பொங்கலை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் புளிப்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உடைத்த அரிசி ரவை - 200 கிராம்
    புளி - 100 கிராம்
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 100 மில்லி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    அரிசி ரவையை நன்றாக கழுவி வைக்கவும்.

    ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும்.

    புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ரவை கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

    விசில் போனவுடன் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான புளிப்பொங்கல் ரெடி.

    குறிப்பு: வடகம் வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இடியாப்பம் மீந்து போனால் மாலையில் அதை வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம். இன்று இடியாப்ப புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் - 6,
    வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1,
    பட்டை - ஒரு சிறிய துண்டு,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம், உப்பு சேர்த்து கிளறவும்.

    மசாலா அனைத்து இடியாப்பத்தில் சேர்ந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்ப புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 1 கப்
    எலுமிச்சை சாறு - 1/2 கப்
    சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1/4 கப்



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

    சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.

    பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

    அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.

    இப்போது பூண்டு ஊறுகாய் தயார்!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வடமாநிலங்களில் டோக்ளா மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்,
    புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.

    ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும்.

    இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து மேலே பரவலாக போடவும்.

    அடுத்து அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.

    பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.

    கோதுமை ரவை டோக்ளா தயார்.

    இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில்லி சோயாவை புலாவ், தயிர், சம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :      

    சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 30,   
    தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன்,   
    இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,   
    சோள மாவு - 3 டீஸ்பூன்,   
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   
    தக்காளி, குடைமிளகாய் - தலா ஒன்று,   
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,   
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :     

    தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி தண்ணீரை வடித்து விட்டு உருண்டைகளை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

    இந்த சோயா உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தக்காளி விழுது, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சோள மாவு, உப்பு சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும, பிசிறி வைத்த சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான சில்லி சோயா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    தோசை, இட்லி, நாண், புலாவ், சாம்பார் சாதத்திற்கு அருமையான மட்டன் ஈரல் வறுவலை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் ஈரல் - 200 கிராம்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 4,
    இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி,  
    மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி,
    மல்லித்தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
    சோம்பு - அரை தேக்கரண்டி,
    பட்டை - அரை தேக்கரண்டி,
    எண்ணெய் - 5 தேக்கரண்டி,
    கொத்தமல்லி, உப்பு - சிறிது.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மட்டன் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    தண்ணீர் எல்லாம் வற்று ஈரல் வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன், காய்கறி நூடுல்ஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன், வெஜிடபிள் சேர்த்து நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - 5 தேக்கரண்டி,
    வெங்காயம் - 2,
    குடைமிளகாய் - 1,
    முட்டைகோஸ் - 1/4,
    கேரட் - 3,
    பீன்ஸ் - 2,
    முட்டை - 2,
    மட்டன் - 100 கிராம்,
    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
    உப்பு, சர்க்கரை - ½ தேக்கரண்டி,
    சோயா சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    மட்டனை உப்பு, வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் முட்டையை ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.

    கடைசியாக பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×