என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைக்க...

    மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    உப்பு - சிறிது.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனில் ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 250 கிராம்,
    தக்காளி - 2,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியாதூள் - அரை டீஸ்பூன்,
    புளி - சிறிதளவு,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    உப்பு - தேவையான அளவு.  

    தாளிக்க...

    மிளகு - அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டனை குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி நன்றாக நசுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி, ப.மிளகாய், தனியா, சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

    கடைசியாக கரைத்த புளி கரைசல், கொத்தமல்லி தூவி கொதி வரும் போது இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குடல் வறுவல். இன்று இந்த மட்டன் குடல் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் குடல் - 1 (சிறியது)
    சின்னவெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 4,
    பச்சை மிளகாய் - 4,
    எண்ணெய் - 6 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகு தூள் - தேவையான அளவு,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய  பின்னர் வேகவைத்த குடலை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன், மட்டன் மசாலா, உப்பு, மிளகு தூள் சேர்த்து தண்ணீர் எல்லாம் வற்றி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி கிளறி எடுத்து பரிமாறவும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை வகை உணவுகளுடன் மட்டன் ரோகன் ஜோஸினை சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    கிராம்பு - 3
    ஏலக்காய் - 5
    இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டேபிள்ஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    அரைத்த தக்காளி விழுது - 100 மில்லி
    முந்திரிப்பருப்பு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எண்ணெயில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் அதில் மட்டன், தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    கலவை நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    கலவையை நன்கு கலக்கிவிட்டு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

    10 நிமிடங்கள் வரை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.

    5-10 மில்லி வெண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை தூவி இறக்கவும்.

    சூப்பரான மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், பழைய சாதம், சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாவடு. இன்று மாவடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாவடு - 8 கப்
    கல் உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த் தூள் - தேவைக்கு
    வெந்தய தூள் - 2 டீஸ்பூன்
    கடுகு தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    கடுகு - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    கெட்டியான மாவடுக்களைக் கழுவி, ஈரம் போக துடைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போடுங்கள்.

    அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கலக்குங்கள்.

    தூள் செய்த கல் உப்பை அதில் சேர்த்து, தினமும் கைபடாமல் குலுக்கிவிடுங்கள். மூன்று நாட்களில் தண்ணீர் ஊறிவரும்.

    பின்னர் கடுகு, வெந்தயப் பொடிகளைச் சேர்த்து மஞ்சள் தூளைச் சேருங்கள். மரக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிடுங்கள்.

    இரண்டு நாட்கள் ஊறியபின் அரை கப் நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து ஆறிய பின்னர் மாவடுவில் கலந்துவிட்டால் சுவையான மாவடு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    லெமன் ஐஸ் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த லெமன் ஐஸ் டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வதும் மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    தேயிலைத் தூள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை - 2
    சர்க்கரை - 8 டீஸ்பூன்
    புதினா இலைகள் - சிறிது
    ஐஸ் கட்டிகள் - 1 டம்ளர்



    செய்முறை :


    இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் தேயிலைத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு எலுமிச்சை பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    தேநீரில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

    கண்ணாடி டம்ளரில் ஐஸ் துண்டுகளைக் கால் பகுதி வரை நிரப்புங்கள்.

    இதில் அரை டம்ளர் அளவுக்குத் தேநீரைச் சேருங்கள்.

    பிறகு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள்.

    நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள்.

    குளுகுளு லெமன் ஐஸ் டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப்,
    பேரீச்சம்பழம் - 20,
    காய்ந்த திராட்சை - 10,
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
    பொடித்த முந்திரி - 1 டீஸ்பூன்,
    வெல்லம் - சிறிதளவு,
    உப்பு - சிறிது,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லம், முந்திரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் பிஸிபேளாபாத் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் பிஸிபேளாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    துவரம்பருப்பு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    தக்காளி - 3,
    புளி - ஒரு சிறிய உருண்டை,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    வறுத்துப் பொடிக்க:

    காய்ந்த மிளகாய் - 6,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்.



    செய்முறை:

    அரிசியையும் பருப்பையும் நாலரை கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

    வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக நறுக்குங்கள்.

    தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

    வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில், கொப்பரையைத் தவிர, மீதி எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.

    கடைசியில் கொப்பரை துருவலையும் சேர்த்து, வறுத்து இறக்கி ஆறவிட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள்.

    குக்கரில் இருக்கும் சாதத்தை, அப்படியே (குக்கரோடு) மீண்டும் அடுப்பில் வைத்து, புளிக்கரைசலை அதோடு சேர்த்து, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கிளறுங்கள்.

    பிறகு, பொடித்து வைத்துள்ள தூளை அதில் தூவுங்கள்.

    மற்றொரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

    பிறகு, தக்காளி சேர்த்து, நன்கு கரைய வதக்கி சாதத்தில் சேருங்கள்.

    எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

    விருப்பம் உள்ளவர்கள் கடைசியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான பிஸிபேளாபாத் ரெடி.

    குறிப்பு: கொப்பரை என்பது தண்ணீர் சத்து இல்லாமல் இருக்கும். அது கிடைக்காத பட்சத்தில், தேங்காய் துருவலை, தண்ணீர் சத்து போக வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்துச் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் சேர்த்து சூப்பரான இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    பன்னீர் துருவல் - ஒரு கப்,
    காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    இனிப்பு சேர்க்காத கோவா - கால் கப்,
    பொடித்த சர்க்கரை - கால் கப்,
    வெனிலா எசன்ஸ் - சில துளிகள்,
    வறுத்துப் பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:  

    பன்னீர் துருவலுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, கோவா, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதுவே பூரணம்.

    கோதுமை மாவுடன் பால்விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும்.

    ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணம் வைத்து மற்றொரு பூரியால் மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும் (மைதா பேஸ்ட் தொட்டும் ஒட்டலாம்).

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாரித்த பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டப்ஃடு இனிப்பு பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட உருளைக்கிழங்கு கார குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பூண்டு - 10 பல்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 1,
    கீறிய பச்சை மிளகாய் - 3,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை:

    உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, கரைத்த புளியை ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு கார குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ,
    பெரிய வெங்காயம் - 4,
    தக்காளி - 2,
    பூண்டு - 4 அல்லது 5 பல்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

    மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

    பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

    அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹாங்காங் ஃப்ரைடு இறாலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 500 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
    மைதா மாவு - 25 கிராம்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
    செலரி இலைகள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு - 10 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயத்தாள் - 10 கிராம்
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை:

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹாங்காங் ஃப்ரைடு இறால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×