என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு ஜெல்லி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜெல்லி பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இளநீர் - ஒரு கப்
    அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) (agar agar kadal pasi) - ஒரு டீஸ்பூன்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    தேங்காய்ப் பால் - ஒரு கப்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.

    ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கைவிடாமல் கிளறுங்கள்.

    கண்ணாடி போல் கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.

    இதேபோல் தேங்காய்ப் பாலில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொஞ்சம் கொட்டியானதும் முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.

    அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும்.

    பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

    சூப்பரான ஜெல்லி பர்பி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 3
    உருளைக்கிழங்கு - 2
    பீன்ஸ் - 50கிராம்
    கேரட் - 50கிராம்
    பட்டாணி - 50கிராம்
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய்துருவல் - கால்மூடி
    கசகசா - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    சோம்பு - 1  ஸ்பூன்
    முந்திரி பருப்பு  - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்  - 5 ஸ்பூன்

    தாளிக்க

    கிராம்பு
    பட்டை
    ஏலக்காய்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

    காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து   நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதோ சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
    புதினா -   சிறிதளவு
    மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

    அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

    மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

    பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

    முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    சூப்பரான அவித்த முட்டை பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த குளிர் காலத்தில் மாலையில் காபி, டீயுடன் சூடாக வாழைப்பூ பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று எளிய முறையில் வாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது பேல் பூரி. இன்று இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசிப் பொரி - 3 கப்,
    கேரட் - 2,
    வெங்காயம், தக்காளி - 3,
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
    வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, - தலா கால் கப்,
    உருளைக்கிழங்கு - 2
    சாட் மசாலா - கால் டீஸ்பூன்.

    கார சட்னிக்கு:

    கொத்தமல்லி, புதினா - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 3,
    உப்பு - தேவையான அளவு.

    ஸ்வீட் சட்னிக்கு:

    புளி - 50 கிராம்,
    வெல்லம் - கால் கப்,
    பேரீச்சம்பழம் - சிறிதளவு,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்… கார சட்னி தயார்.

    வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து… மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்… ஸ்வீட் சட்னி ரெடி.

    வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து… அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான பேல் பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வித விதமான பூரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து சூப்பரான ருசியான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்
    தக்காளி - 4
    காய்ந்த மிளகாய் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் ப.மிளகாய், தக்காளியை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் ஆறியதும் தோலூரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய் விழுது, நெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவை பூரிகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான தக்காளி பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - 1 கட்டு
    கோதுமை மாவு - 1 கப்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
    ப.மிளகாய் - 1
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெண், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
    உப்பு - 1/4 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 150 கிராம்,
    நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
    வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
    வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
    வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),
    முட்டை: 1 (பெரியது) .



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

    பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.

    பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

    பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

    பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 50 கிராம்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    புளி - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம் - தலா 2
    ஏலக்காய் - 2
    உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :


    வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.

    சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.

    ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

    சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

    பின் அதை வடிகட்டி விடவும்.

    பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.

    இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.

    இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 300 கிராம்
    முட்டை  - 3
    வடித்த சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு



    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு
    சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
    முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரி, பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஜவ்வரிசி சேர்க்கவும்

    நன்றாக கலக்கி அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஜவ்வரிசியை வேக விடவும்.

    ஜவ்வரிசி வெந்தவுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வைக்கவும்.

    வேக வைத்து நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

    பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

    சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

    குறிப்பு :

    ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பேரீச்சை - 10
    கரும்புச்சாறு - 1 கப்
    நெய் - சிறிதளவு
    முந்திரி பருப்பு - 10
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை பச்சரிசியோடு சேர்த்து நீரில் கழுவி குக்கரில் கொட்டவும்.

    அதனுடன் கரும்புச் சாறு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    நான்கு விசில் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

    பின்னர் அதனை பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கி ருசிக்கவும்.

    சூப்பரான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×