search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana Flower Pakoda"

    இந்த குளிர் காலத்தில் மாலையில் காபி, டீயுடன் சூடாக வாழைப்பூ பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று எளிய முறையில் வாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பூவில் வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்  :

    வாழைப்பூ - 1
    வெங்காயம் - 2
    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    கொத்தமல்லி, கறிபேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×