என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இன்று ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்

    பிரிஞ்சி இலை - 5 இலை
    பட்டை - இரண்டு இன்ச் சைஸ் - 3
    கிராம்பு - 10 எண்ணிக்கை
    ஏலம் - 6 எண்ணிக்கை
    மிளகு - ஒரு மேசைகரண்டி
    ஷாஜீரா - ஒரு மேசைகரண்டி
    சீரகம்- இரண்டு மேசைகரண்டி
    ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
    ஜாதிபத்திரி - முன்று இதழ்
    அன்னாசி பூ - ஒன்று

    இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.

    செய்முறை

    மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர்களில் போட்டு வைத்து கொள்ளவும்.

    பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.

    இதில் பிரிஞ்சி இலையின் காம்பை கிள்ளி விட்டு திரிவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம்முடைய உணவில் தற்பொழுது இடம்பெற்று வரும் ஒரு முக்கிய உணவு பதார்த்தம் பன்னீர். இன்று பன்னீரை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 2 லிட்டர்
    எலுமிச்சை பழம் - 2

    செய்முறை

    எலுமிச்சையை விதை இல்லாமல் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடுபண்ணுங்கள். பால் முதல் கொதி வருகிற மாதிரி எழும்பி வரும் சமயம் அடுப்பை அணைத்து விடுங்கள். பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாலில் ஊற்றி விடுங்கள். பாலை கரண்டியால் நன்றாக கலக்கி கொண்டே இருங்கள்.

    பன்னீர்

    சிறிது நேரம் கலக்கும் பொழுது பால் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து வரும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது காட்டன் துணியில் பாலை வடிகட்டுங்கள். துணியை சுருட்டி நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு துணி மூட்டையை ஒரு தட்டில் வைத்து ஏதாவது கனமான பொருளை அதன் மேல் வைத்து ஒரு 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

    3 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தேவையான பன்னீர் அழகாக ரெடி ஆகி இருக்கும்.

    உங்கள் தேவைக்கு துண்டுகளாக போட்டு வைத்து கொள்ளுங்கள்.

    பன்னீர் துண்டுகளை இறுக்கமான டப்பாக்களில் அடைத்து பிரீஸரில் வைத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய் என்றால் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான். இன்று 10 நிமிடத்தில் சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்
    மாங்காய் - 2
    சின்ன வெங்காயம் - 15
    பச்சை மிளகாய் - 2
    கேரட் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
    பூண்டு - 4 பல்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - ஒரு கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    வறுத்த நிலக்கடலை - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 10
    கொத்தமல்லித் தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியைக் களைந்து குழையாமல் சாதத்தை வேக வைத்து எடுத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஆறவிடவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வறுத்த நிலக்கடலை சேர்த்து தாளிக்கவும்.

    பருப்பு வகைகள் சிவந்ததும் பூண்டைச் சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் மாங்காய்த் துருவல், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் வதங்கியதும் கேரட் துருவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    அத்துடன் ஆற வைத்த சாதம் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.

    நன்கு கலந்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்.

    வண்ணமயமான சுவையான மாங்காய் சாதம் தயார்.

    சர்க்கரை சேர்ப்பதால் மாங்காயின் புளிப்புத் தன்மை குறைத்து, சுவையை அதிகரித்துக் கொடுக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சூப்பரான ரெசிபி செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :
     
    இறால் - 1/2 கிலோ
    உருளை கிழங்கு - 2 பெரியது
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை :
       
    இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    உருளைக் கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
     
    ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்
     
    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.
     
    நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

    இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரமலான் நோன்பு காலத்தில் தயார் செய்யும் ஒரு ஆரோக்கிய உணவு தான் நோன்பு கஞ்சி. இன்று மட்டன் கீமா சேர்த்து நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன்-100 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு- தேவையான அளவு
    மஞ்சள் தூள்-  அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகம்- 1  டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய்  - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சை அரிசி - 3/4 கப்
    பாசிப்பருப்பு - 5 டேபிள் ஸ்பூன்
    சின்ன வெங்காயம்  - 10
    தக்காளி  - 1
    கேரட்  - 1
    பச்சை மிளகாய்  -3 சிறியது
    கொத்தமல்லி இலை - 1/4 கப்
    புதினா இலை- 1/4 கப்
    கறிவேப்பில்லை- 1 கொத்து
    தேங்காய் எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1/2 இன்ச்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2  
    வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
    பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை
    தண்ணீர்  - 5 கப்
    உப்பு - தேவையான அளவு
    துருவிய தேங்காய் - 1/4 கப்

    செய்முறை

    மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த மட்டன் (எலும்பு இல்லாதது) போட்டு மட்டன் கைமா போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், மட்டன் கைமா, மஞ்சள் தூள் பாதி, கரம் மசாலா தூள் பாதி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி இலை, புதினா இலைகளை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

    மிக்ஸி ஜாரில் அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும்

    தேங்காய் மற்றும் சீரகம் (1/4 டீஸ்பூன்) சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மீதியுள்ள சீரகம், வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்  சேர்க்கவும்.

    பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், கேரட், புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்

    பின்பு மீதியுள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது வதங்கியதும், அரிசி பருப்பு குருனையை கழுவி சேர்க்கவும். இதனுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

    இதனுடன் வேக வைத்த மட்டன் கைமா மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறவும்

    குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    பின்பு விசில் அடங்கியதும், நன்றாக கலக்கி விட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.

    மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பின்பு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹைதராபாத் உணவு வகையான ஹலீம் ரமலான் மாதத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இந்த உணவு ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த உணவை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 300 கிராம்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    ஜாதிக்காய் - 1 பிஞ்சு
    மூங் டால் - 3 டேபிள் ஸ்பூன்
    துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    மைசூர் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
    கோதுமை - 1/2 கப்
    கோதுமை ரவை - 3/4 கப்
    நெய் - தேவையான அளவு
    பாதாம் - சிறிதளவு

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் நெய் சேர்த்து சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், மிளகு சேர்த்து அதனை வதக்கவும்.

    பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது கலந்து கிளறவும்.

    பிறகு அதில் சின்ன சின்ன துண்டுகளாக மட்டன் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

    பிறகு அதனுடன் பச்சை மிளகாய், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா, கொத்தமல்லி மற்றும் ஜாதிக்காய் சேர்த்து கிளறவும்.

    நன்றாக வெந்ததும் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

    பிறகு மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பருப்பு வகைகள் மற்றும் அரிசியினை அதனுடன் சேர்க்கவும்.

    பிறகு அரைத்த கோதுமை மற்றும் கோதுமை ரவை அதில் சேர்த்து மீண்டும் அதனை நன்றாக வேக விடவும்.

    நன்றாக வெந்ததும் கரண்டி கொண்டு மசிய வைத்து அதன் மீது நெய் ஊற்றி நறுக்கிய பாதாம் போட்டு இறக்கினால் சுவையான ஹைதராபாத் மட்டன் ஹலீம் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 2
    பெ.வெங்காயம் - 1
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    முந்திரி பருப்பு - 6
    தேங்காய்த்துருவல் - கால் கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை:

    குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரி பருப்பை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    அதில் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் குடை மிளகாய், தனியா தூள், மிளகாய் தூள், முந்திரி பருப்பு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டவும்.

    அவை அனைத்தும் கலந்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - ஒரு கப்
    குடைமிளகாய் - 2
    உருளைக்கிழங்கு - 1
    பெ.வெங்காயம் - 1
    தக்காளி - 2
    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காய தூள் - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கடுகு - சிறிதளவு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரைடீஸ்பூன்
    மிளகு - கால் டீஸ்பூன்
    பூண்டு - 3 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரில் பருப்பை போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.

    பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் ஓரளவு வதங்கியதும் குடைமிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

    அவை நன்கு வதங்கியதும் மிளகுதூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.

    பின்னர் வேகவைத்த பருப்பை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    சற்று கெட்டியாகி சாம்பார் பதத்துக்கு வந்ததும் பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    ருசியான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் ரெடி.

     இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த மாம்பழ மஸ்தானியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாம்பழம் சதைப் பற்றுள்ளது - 1 பெரியது,
    கொழுப்பு சத்து நிறைந்த பால் அல்லது கிரீம் - 100 மில்லி,
    சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
    மாம்பழ ஐஸ்கிரீம் அல்லது வெனிலா ஐஸ்கிரீம் -  2 ஸ்கூப் (குழிகரண்டி).

    மேலே அலங்கரிக்க

    பாதாம், பிஸ்தா, முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
    செர்ரி - 2 அலங்கரிக்க,
    மாம்பழம் (கொஞ்சம் - பொடியாக நறுக்கியது.

    செய்முறை

    மிக்சியில் மாம்பழம், கிரீம், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்து நன்கு அடிக்கவும்.

    பின் அதை டம்ளரில் ஊற்றி (சிறிது இடம் விட்டு ஊற்றவும்) ஐஸ்கிரீம் அதில் சேர்த்து பொடியாக நறுக்கிய மாம்பழம், நட்ஸ் தூவி செர்ரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

    மாம்பழ சீசன் என்பதால் இதை ருசியான மாம்பழம் கொண்டு எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ருமாலி ரொட்டியை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ருமாலி ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 2 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    பால், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.

    பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

    நான்ஸ்டிக் தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

    தேய்த்த ரொட்டியை போட்டு வேக வைக்கவும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சுவையான ருமாலி ரொட்டி தயார்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இந்த கமகமக்கும் பிரியாணி மசாலாவை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    நட்சத்திர சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பிரியாணி இலை - 6
    பட்டை - 5
    கிராம்பு - 2
    டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஜாதிக்காய் - 3
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 7

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்யவும். அதில், நட்சத்திரப் பூ, பட்டை, பிரியாணி இலை, பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கிராம்பு, தனியா, மிளகு சேர்த்து மிதமாக வறுத்துக் கொள்ளவும்.

    பின்னர் இதனை ஆறவைத்ததும், மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அவ்வளவு தாங்க.. கமகமக்கும் பிரியாணி மசாலா ரெடி..!

    ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவும், ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவும், மீன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவும், குஸ்கா, முட்டை பிரியாணிக்கு முக்காய் டேபிள் ஸ்பூன் மசாலா அளவும் சேர்த்தால் சுவையாக இருக்கும்..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சுரைக்காயை வெயில் காலங்களில் அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. அதுவும் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுரைக்காயைக் கொண்டு பருப்பு குழம்பு செய்தால், அற்புதமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய் - 1/2
    பாசிப் பருப்பு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    வரமிளகாய் - 3
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் சுரைக்காயை நன்கு கழுவி உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை குக்கரில் போட்டு, அத்துடன், தக்காளி சேர்த்து 3 கப் அல்லது தேவையான நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

    பின் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

    பிறகு குக்கரில் உள்ள பாசிப்பருப்பு மற்றும் சுரைக்காய் துண்டுகளை போட்டு, அதோடு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான சுரைக்காய் பருப்பு குழம்பு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×