என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் செய்து இருப்பீர்கள். ஆனால் கசகசாவை வைத்துக் கூட சுவையான பாயாசம் செய்யலாம் தெரியுமா? இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கசகசா விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
    பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் - 1/2 கப்
    வெல்லம் - 3/4 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பச்சரி மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10-15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.

    பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி, அத்துடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.

    குறிப்பு:

    பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

    உங்களுக்கு இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக வேண்டுமானால், அதற்கு ஏற்ப வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஜில்லுனு சாப்பிடவே பிரியப்படுவார்கள். எவ்வளவு நாள் தான் பழச்சாறும் ரோஸ் மில்க்குமே செஞ்சி குடுப்பீங்க. கொஞ்சம் வித்தியாசமாக டிரை பண்ணலாமா?
    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நீக்காத பால் - 1 கப்
    சர்க்கரை - 2 டேபின் ஸ்பூன்
    கிரீம் பிஸ்கட் - 4 துண்டுகள்
    ஐஸ்கட்டி -  தேவையான அளவு

    செய்முறை

    மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியிலோ பிளெண்டரிலோ நன்றாக பிளெண்ட் செய்து ஜில்லுனு குடிக்கலாம்.

    பிஸ்கட் தூளை தூவி பருக கொடுத்தால் பிள்ளைகள் குஷியாகி விடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் சாட் ரெசிபிக்களை செய்யும் போது அதனுடன் சேர்த்து சாட் மசாலா தூளை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - கால் கப்,
    தனியா - கால் கப்,
    அம்சூர் பவுடர் - கால் கப் (மாங்காய்த் ள் – பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்)
    மிளகு – ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் – அரை கப்,
    கருப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன்,
    ஏலக்காய், லவங்கம் – தலா 5,
    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை  :

    முதலில் வெறும்  கடாயில்  சீரகம் மற்றும்  தனியா சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும்.

    பின் இதனை ஆறவைத்து, இவற்றோடு காய்ந்த மிளகாய், மாங்காய் தூள், மிளகு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் இதனுடன் தூளாக்கிய கருப்பு உப்பை நன்கு கலந்தால்  சாட் மசாலா  தயார் !!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடைகளில் கிடைக்கும் ரசப்பொடியை வாங்கி உபயோகிக்காமல் வீட்டிலேயே எளிய முறையில் மண மணக்கும் ரசப்பொடியை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகாய் வற்றல் - 200 கிராம்
    தனியா - 500 கிராம்
    மிளகு - 200 கிராம்
    சீரகம் -200 கிராம்
    துவரம் பருப்பு -250 கிராம்
    விரளி மஞ்சள் -100கிராம்
    காய்ந்த  கறிவேப்பிலை - தேவையான அளவு
    கடுகு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:


    எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.

    மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அரைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.

    வீட்டிலேயே  குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.

    மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.

    இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

    ரசம் வைக்கும் போது 1 லிட்டருக்கு 1 ஸ்பூன் ரசப் பொடி போட வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனில் குழம்பு, வறுவல் என்று எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் இன்று வித்தியாசமான முறையில் மீன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்

    சதைப்பிடிப்புள்ள மீன் - 200 கிராம்
    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    உலர்ந்த ரொட்டித்தூள் - 1 கப்
    நெய் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை பழச்சாறு -  1 டீஸ்பூன்
    மைதா மாவு -  1 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    மிளகுத்தூள் - அரை  டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை  டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    மீன் மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    மீனின் தோல், முள் ஆகியவற்றை நீக்கி, உருளைக்கிழங்கை தோலை அகற்றி நெய் விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    மீனை உதிர்த்து விட்டு அத்துடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைபழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    சப்பாத்தி பலகையில் மைதா மாவை தூவி, பிசைந்த மீன் கலவையை வைத்து 2 செ.மீ கனத்துக்கு நீளமாக வெடிப்பு இல்லாமல் உருட்ட வேண்டும். பின்னர் அதை 6 அல்லது 8 துண்டுகளாக நறுக்கவும். அதன் பின் ஒவ்வொரு துண்டும் சம அளவில் இருக்குமாறு தட்ட வேண்டும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியான குழம்பு போல கரைத்து கொள்ள வேண்டும். அதில் மீன் துண்டுகளை நன்றாக தோய்த்து அதை ரொட்டி தூளில் அழுத்தமாக புரட்டி எல்லா பக்கமும் படியுமாறு செய்ய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மீன் துண்டுகளை போட்டு பொரித்துஎடுக்கலாம் அல்லது தோசைக்கல்லை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வேக வைத்தும் எடுக்கலாம்.

    சுவை மிகுந்த மிருதுவான மீன் கேக் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டிராகன் ஃப்ரூட் நார்சத்து மிகுந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மூச்சுத் திணறலுக்கு நல்லது. சுவாசத்தை சரி செய்யும்.
    தேவையான பொருட்கள்

    மில்க் மெய்ட் - 4 டேபிள் ஸ்பூன்,
    டிராகன் பழம் (துரியன்) - 1 (தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவும்),
    சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
    குளிர்ந்த பால் - 1 கப்,
    ஐஸ்கட்டி - தேவையெனில்,
    டிராகன் (துரியன்) - 2 துண்டு அலங்கரிக்க.

    செய்முறை

    மிக்சியில் டிராகன் பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

    பின் அதில் மில்க்மெய்ட், சர்க்கரை, பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து ஐஸ்கட்டி போட்டு டிராகன் பழத்தைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஐயங்கார் வீட்டு சாம்பார் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். சரி வாங்க இன்று ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி எப்படி திரிக்கிறதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தனியா - அரை கிலோ
    குண்டு மிளகாய் - கால் கிலோ
    துவரம்பருபு்பு - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 100 கிராம்
    மிளகு - 50 கிராம்
    வெந்தயம் - 20 கிராம்
    விரளி மஞ்சள் - 50 கிராம்

    பதப்படுத்தும் முறை

    மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். அதுவே மழைக்காலமோ பனி காலமாகவோ இருந்தால் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே உலர்த்தி, தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

    சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.

    பொடி அரைக்கும்முன் மில்லில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்த சாம்பார் பொடி அரைப்பதற்கு முன்னால் அந்த மெஷினில் வேறு ஏதேனும் சுாம்பு கலந்து பொடி அரைக்கப்படாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

    அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்காதீர்கள். அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை குழிப்பணியாரத்தை காலையில் டிபன் போன்றும் சாப்பிடலாம், மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - ஒரு கப்
    முட்டை - 2
    சின்ன வெங்காயம் - 15
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கடுகு - கால் தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    முட்டை குழிப்பணியாரம்

    செய்முறை


    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

    பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும்

    முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.

    இட்லி மாவுடன் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.

    பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

    வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

    அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.

    முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

    குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.

    பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

    முட்டைப் பணியாரம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    லிச்சி பழத்தில் அதிகமான நார்சத்து, விட்டமின் - `B’ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் சீக்கிரமே வயதான தோற்றம் அடைவதை தடுக்கிறது. லிச்சி லெமனேட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    லிச்சி - 12-15 (சதையை எடுத்து வைக்கவும்),
    தண்ணீர் - 2 கப்,
    எலுமிச்சை சாறு - 1 சிறியது,
    உப்பு - 1 சிட்டிகை,
    சர்க்கரை - தேவைக்கேற்ப,
    புதினா இலை - அலங்கரிக்க,
    எலுமிச்சை - சீவியது அலங்கரிக்க.

    செய்முறை

    மிக்சியில் முதலில் லிச்சியை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஊற்றி நன்கு கலந்து ஐஸ்கட்டி போட்டு புதினா, எலுமிச்சை பழத்தைக்கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    லிச்சி பழத்தில் அதிகமான நார்சத்து, விட்டமின் - `B’ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் சீக்கிரமே வயதான தோற்றம் அடைவதை தடுக்கிறது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே பலாப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பலாப்பழம் (கொட்டை நீக்கியது) - 100 கிராம்,
    தேங்காய்ப்பால் - 50 மில்லி,
    வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்பு - 1/4 கப்,
    முந்திரி பொடியாக நறுக்கியது - மேலே அலங்கரிக்க.

    செய்முறை

    பலாப்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் பலாப்பழம் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

    பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும்.

    பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    தேவையெனில் பொடியாக நறுக்கிய பலாப்பழ துண்டுகளைத் தூவியும் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், புலாவ், இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - ஒரு கிலோ
    முழு தேங்காய் ( சிறியது) - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
    தக்காளி - 2 (பெரியது)
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை
     
    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

    அனைத்து பொடி வகைகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

    தேங்காயை அரைத்து 2 கப் பால் எடுத்து வைக்கவும்.

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து பொடி வகைகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்க்கவும்.

    தக்காளி வதங்கியதும் பிசறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    சிறிது நேரம் வேக விடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதும் வேண்டுமெனில் சிறிது சேர்க்கலாம்.

    சிக்கன் தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான சிக்கன் தேங்காய் பால் கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கைக் கொண்டு பலவாறு குழம்புகள் செய்யலாம். அந்த வகையில் குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி சற்று வித்தியாசமாக இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு போன்ற சுவைகள் கலந்து இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 500 கிராம் (சிறியது மற்றும் நறுக்கியது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.

    சர்க்கரையானது கரைந்து, பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
    பின்பு அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளற வேண்டும்.

    பின் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, தயிர் சேர்த்து மீண்டு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    இப்போது சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×