என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ஓட்டல் சுவையில் வீட்டில் ருசியான உணவு கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஹரியாலி சிக்கன் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த உணவை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ
    கொத்தமல்லி -  1 கப்
    புதினா - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    வறுத்த வெங்காயம் - 4
    முழு முந்திரி - 10
    தயிர் - 200 மில்லி
    இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    கரம்மசாலா - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வறுத்த வெங்காயம், முந்திரியை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஊறவைத்த சிக்கனுடன் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வைத்து சமைக்கவும்.

    ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.

    பிறகு தனியா தூள், சீரகத்தூள, கரம் மசாலா, உப்பு சேர்த்து வாணலியை மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து இறக்கினால் சுவையான ஹரியாலி சிக்கன் தயார்.

    இதை சப்பாத்தி, நாண், புலாவ் மற்றும் ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
    குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். கடைகளில் வாங்கும் குக்கீஸ்களை வீட்டிலேயே எளிய முறையில் செய்ய முடியும். இன்று சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 65 கிராம்
    ஐசிங் சுகர் - 30 கிராம்
    பட்டர் ஜி.எஸ்.எம் -  30 கிராம்
    உப்பில்லாத வெண்ணெய் - 20 கிராம்
    பால் பவுடர் - 5 கிராம்
    வெனிலா எசென்ஸ் - 5 மில்லி
    சாக்கோ சிப்ஸ் - 10 கிராம்
    கோகோ பவுடர் - 2.5 கிராம் (அ) அரை டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 2 கிராம்

    அலங்கரிக்க:

    சாக்கோ சிப்ஸ் - சிறிதளவு

    செய்முறை:

    அவனை 150 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும்.

    மைதா மாவைச் சலிக்கவும்.

    ஜி.எஸ்.எம்மை நன்கு அடிக்கவும்.

    அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பஞ்சு போல் மென்மையாக வரும் வரை அடிக்கவும்.

    பிறகு ஐசிங் சுகர் சேர்த்துக் கலக்கவும்.

    அதனுடன் மைதா மாவு, பால் பவுடர் சேர்த்து மென்மையான, பிசுபிசுப்பான கலவையாக ஆக்கவும்.

    இதில் வெனிலா எசென்ஸ், கோகோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

    மாவுக் கலவையை 5 - 7 கிராம் எடையுள்ள சிறிய உருண்டைகளாக்கி வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் அடுக்கி மேலே சிறிதளவு சாக்கோ சிப்ஸ் தூவவும்.

    இந்த ட்ரேயை ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 15 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

    ஆறிய பிறகு நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
    வேர்க்கடலையில் புரதமும், இரும்புச்சத்தும் மிக அதிகம். இரத்த சோகை வராது. வேர்க்கடலையில் இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
    வெல்லம் -  200 கிராம்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

    வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும்.

    சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை ரெடி
    மாலையில் குழந்தைகள் சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான் - 1/2 கிலோ
    உருளைக்கிழங்கு - 3 சிறியது
    வெங்காயம் - 2
    பச்சைப் பட்டாணி - ¼ கப்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 5 பல்லு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்துமல்லி - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - ½ தேக்கரண்டி
    பிரெட் தூள் - 1 1/2 கப்
    முட்டை - 2
    சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துகொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும்.

    அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

    உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து சிறிது நேரம் வரை நன்றாகக் கலக்கவும்.

    நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.

    ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.

    செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

    பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும்.

    பிரெட் தூள் தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

    மசாலாவை சிறிய பந்துகள் போல் பிடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் தூளில் பிரட்டி பின் தடாவில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் போட்டு இருபுறமும் சிவக்கும்வரை பொறுத்திருந்து எடுக்கவும்.

    சுவையான காளான் கட்லெட் தயார்.
    உடலுக்கு ஆரோக்கியம் தரும் கோதுமை மாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று கோதுமை கச்சாயம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை - 250 கிராம்
    கட்டி வெல்லம் - 250 கிராம்
    வாழைப்பழம் - 1
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    ஏலக்காய் - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். கோதுமையுடன் கட்டிவெல்லம் வாழைப்பழம் சேர்த்து நன்றாக தோசை மாவு பக்குவத்தில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கி எண்ணெய் காய்ந்ததும் பொரித்து பரிமாறலாம்.

    குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு. முதல் முறை செய்யம்போது பொறுமையாக கைப்பக்குவம் வரும் வரை பொரிக்கவும்.
    தர்ப்பூசணியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பது நிறையபேருக்கு தெரியாது. அதன் மூலம் சாம்பார் தயாரித்து புதுமையான சுவையை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.
    கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அனைவரும் தர்ப்பூசணிபழத்தை விரும்பி உண்பதுண்டு. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய இந்தப்பழம் உடலின் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பழத்தின் உட்பகுதியில் உள்ள சிவப்பான பகுதியை சாப்பிட்டு விட்டு மேற்புற பசுமையான தோல் பகுதியை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் பல்வேறு சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பது நிறையபேருக்கு தெரியாது. அதன் மூலம் சாம்பார் தயாரித்து புதுமையான சுவையை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

    நாவில் நீர் ஊற வைக்கும் தர்ப்பூசணி சாம்பாரை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்
    மாங்காய் துண்டுகள் - 6
    தர்ப்பூசணியின் தோல் பகுதி - 1 பழத்தின் துண்டுகள்
    வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
    தக்காளி -  பொடியாக நறுக்கியது
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    எலுமிச்சை சாறு - அரை மூடி
    எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    துவரம் பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும்.

    தர்ப்பூசணியின் தோல் பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்று வதக்கி விட்டு மாங்காய், தர்ப்பூசணி துண்டுகள், தக்காளியை போட்டு வதக்கி மூடி வைக்க வேண்டும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். அதில் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப சிறிது நீர் விட வேண்டும்.

    அனைத்தும் ஒன்றாக கலந்து சாம்பார் பதம் கிடைக்கும் நிலையில் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக துருவிய தேங்காய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை தூவி இறக்கி வைத்தால் சூடான சாதத்துக்கு சுவையான சாம்பார் ரெடி.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்பத்தினரின் மனம் கவரும் வகையில் இனிப்பான கோதுமை மாவு ஸ்நாக்ஸ் தயாரிக்கும் வழிமுறைகள் இதோ...
    தேவையான பொருட்கள்

    தயிர் - கால் கப்
    நெய் - 2 டீஸ்பூன்
    கோதுமை மாவு -  1 கப்
    பால் - 2 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் சோடா - அரை டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    பாகு தயாரிக்க..

    சர்க்கரை - முக்கால் கப்
    ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
    தண்ணீர் - 1 1/4 கப்

    செய்முறை

    சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

    பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் பயன்படுத்தலாம்.

    பிசைந்த மாவை சப்பாத்தி கல்லில் இட்டு அடர்த்தியாக தேய்க்கவும்.

    பின்னர் அதை சிறு சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சதுர வடிவ மாவுத் துண்டுகளை இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    குலோப் ஜாமுன் செய்யும் பாகு போன்றே அதை தயாரிக்கவும்.

    மிதமான சூட்டில் பொரித்த கோதுமை கேக்கை பாகில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். ஜீரா முழுவதையும் மாவு உறிஞ்சிய பின்னர் சாப்பிடுவதற்கு சுவையான கோதுமை மில்க் கேக் தயார்.

    உணவு பொருட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பப்படுவது பிஸ்கட். வீட்டில் மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இந்த முறையில் பிஸ்கட் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்,
    வெண்ணெய் - 100 கிராம்,
    பொடித்த சர்க்கரை - 75 கிராம்,
    உப்பு, பேக்கிங் பவுடர் - தலா கால் டீஸ்பூன்.

    செய்முறை:


    மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பலமுறை சலித்துக் கொள்ளவும்.

    வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை குழைக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசையவும்.

    இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு வட்டமாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை 'போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக குத்திவிடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும். அடிகனமான வாணலியில் மணலை சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டர் பிஸ்கட் ரெடி.
    கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி சாறு - அரை கப்
    ஓட்ஸ் - கால் கப்
    பால் - அரை லிட்டர்
    சர்க்கரை - தேவையான அளவு
    முந்திரி பருப்பு, பாதாம் - சிறிதளவு

    செய்முறை:


    ஓட்ஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    பாலை கொதிக்கவைத்து ஆறவிடவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    ஓட்ஸ் மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறிவிடவும்.

    ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

    பின்னர் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாறை ஊற்றி கிளறி இறக்கி விடவும்.

    பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

    நீங்கள் ரசப் பிரியராக இருந்தால், வித்தியாசமான சுவையுடைய ரசங்களை செய்து சுவைக்க விரும்புபவராக இருந்தால், தேங்காய் பால் சேர்த்த மசாலா ரசம் செய்து சுவையுங்கள். இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் - 8-10
    தக்காளி - 2 (பெரியது)
    பூண்டு - 3 பல்
    பச்சை மிளகாய் - 4
    துருவிய தேங்காய் - 1/4 கப்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    கிராம்பு - 5
    பட்டை - 1 இன்ச்
    அன்னாசிப்பூ - 2
    சோம்பு - சிறிது

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தக்காளியை மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தேங்காயை போட்டு அரைத்து, அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதன் பின் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    இந்நிலையில் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்போது கொத்தமல்லி மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் தயார்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை கொண்டு பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 2 டீஸ்பூன்
    பால் - 2 கப்
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
    மாம்பழ கூழ் - 1/2 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி - 5
    மாம்பழம் - சிறிது
    ஏலக்காய் - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

    பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அதனுள் அந்த பால் பாத்திரத்தை வைத்து, அத்துடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி, பின் குக்கரை மூடி 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

    பின் அதனை ஒரு அகன்ற கடாயில் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, மேலே முந்திரியையும், சிறிது மாம்பழத் துண்டுகளையும் தூவினால், மாம்பழ பாயாசம் ரெடி!!!
    வத்தக்குழம்பு செய்யும் போது கடையில் வாங்கும் பொடியை போட்டு செய்யலாமல் இந்த பொடியை போட்டு செய்தால் வீடே மணக்கும். இந்த இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
    தோலுரித்த முழு உளுந்து - 2 டீஸ்பூன்
    மிளகு - ½ டீஸ்பூன்
    வெந்தயம் - ½ டீஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    தனியா - 6 டீஸ்பூன்
    கார சிகப்பு மிளகாய் - 20
    அரிசி - 2 டீஸ்பூன்
    பெருங்காயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 2 கப்

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுந்து, மிளகு, வெந்தயம், சீரகம், தனியா என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை கிளற தனியா நிறம் மாறி நல்ல வாசனை வரும்.

    அடுத்து மிளகாய், அரிசி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துகிளற வேண்டும். மிளகாய் காந்த கூடாது. வீடு முழுதும் வாசனை தூக்கும்.

    அனைத்தையும் வறுத்த பின்னர் ஆறவைத்து சூடு ஆறியதும் மிக்சியில் போட்டுபொடித்து கொள்ளவும்.

    அரைத்த பொடியை காற்று புகாத (air tight container) ஜாரில் வாரகணக்கில் சேமித்து வைக்கலாம்.

    வத்தல் குழம்பு செய்யும் பொழுது, 6 கப் குழம்பிற்கு 2 மேஜை கரண்டி பொடி சேர்க்க வேண்டும். முடியும் தருவாயில் பொடி சேர்த்து 2 கொதி வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
    ×