என் மலர்
சமையல்
இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப் ,
அஸ்வகந்த தூள் - 1 தேக்கரண்டி,
எலுமிச்சை பழம் - பாதி,
தேன் - சுவைக்கு ஏற்ப
செய்முறை:
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
அதில் அஸ்வகந்தா பொடியைச் சேர்க்கவும், அல்லது நீங்கள் இரண்டு அஸ்வகந்த வேர்களைப் பயன்படுத்தலாம்.
மூடியை மூடி 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு இதனை ஒரு டம்ளரில் வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் சேர்க்கவும்.
இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாக்லெட் - 50 கிராம்,
சர்க்கரை - 1/2 கப்
கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
பால் - 2 கப்
ஹெவி கிரீம் - 40 மி.லி.
செய்முறை
சாக்லெட்டை துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, கோகோ பவுடர், அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மிதமான தீயில், கடாயில் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
சிறிது கெட்டியாக ஆனதும், துருவிய சாக்லெட்டை சேர்த்து கிளறவும்.
இக்கலவை பாதியாக வரும்வரை கைவிடாமல் கிளறி, ஹெவி கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும்.
ஒரு கிண்ணத்தில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, துருவிய வெள்ளை சாக்லெட்டால் அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான சாக்லேட் புட்டிங் தயார்…
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
தாளிக்க :
கடுகு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை :
பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயம், துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் உப்புச் சேர்த்து வதக்கி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
சத்தான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.
கத்தரிக்காயை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 500 கிராம்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம் பழ அளவு,
மிளகாய்தூள் - 50 கிராம்,
வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, ‘கட்’ செய்யவும்.
புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்திரிக்காயுடன் கலக்கவும்.
அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும்.
பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்… கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.
அழகு நிறைந்திருக்கும் செம்பருத்தி பூவில், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் இலை, மொட்டு, வேர் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ - 10
தண்ணீர் - 3 கப்
எலுமிச்சம் பழம் - 1
தேன் - தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விடவும்.
செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்கவும்.
வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். தேவையான தேன் கலக்கவும்.
சுவைமிக்க 'செம்பருத்தி பூ ஜூஸ் தயார்.
குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் பரிமாறலாம்.
இந்த மீன் குழம்பு சோற்றுக்கு மட்டுமல்ல, இட்லி மற்றும் தோசைக்கும் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாளை மீன் - ½ கிலோ
சின்ன வெங்காயம் - ¼ கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 12
தேங்காய் - அரை மூடி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்.
சோம்பு - 2 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாளை மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2 ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
10 பச்சை மிளகாய், கசகசா, சோம்பு சேர்த்து மையாக அரையுங்கள்.
அடுப்பில் மண்சட்டியை வைத்து, அது சூடானதும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் 2 பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.
அடுத்து சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள்.
எண்ணெய் பிரிகையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
அடுத்து தக்காளியை போட்டு மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள். அது வதங்கும் நேரத்தில், அரைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
வாளை மீன் - ½ கிலோ
சின்ன வெங்காயம் - ¼ கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 12
தேங்காய் - அரை மூடி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்.
சோம்பு - 2 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாளை மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2 ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
10 பச்சை மிளகாய், கசகசா, சோம்பு சேர்த்து மையாக அரையுங்கள்.
அடுப்பில் மண்சட்டியை வைத்து, அது சூடானதும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் 2 பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.
அடுத்து சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள்.
எண்ணெய் பிரிகையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
அடுத்து தக்காளியை போட்டு மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள். அது வதங்கும் நேரத்தில், அரைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
இப்போது, கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாளை மீனைச் சேர்த்து, இன்னொரு 10 நிமிடம் கொதிக்க விட்டால், புளி சேர்க்காத வாளை மீன் குழம்பு ரெடி.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
தேவையான பொருள்கள் :
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிது
செலரி - 1 கொத்து
தக்காளி சாஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தாள், செலரி, பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும்.
தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.
சுவையான வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி தயார்.
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிது
செலரி - 1 கொத்து
தக்காளி சாஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தாள், செலரி, பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும்.
தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.
சுவையான வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி தயார்.
சப்பாத்திக்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு. இந்த கேக்கை கடையில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே ருசியாக செய்து அன்பால் பறிமாறுவதுதான் இதன் சிறப்பு.
தேவையான பொருட்கள்
மைதா - 220 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 220 கிராம்
உலர்ந்த பழங்கள் - தேவையான அளவு
முட்டை - 3
வெண்ணெய் - 220 கிராம்
பாதாம் - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் சீவியது - 1 ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை அரைத்த பொடி - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்குக் கலக்க வேண்டும்.
அடுத்ததாக முட்டைகளை உடைத்து அதையும் நன்குக் கலந்துகொள்ள வேண்டும்.
பின் மைதா மாவு அதோடு உப்பு, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பேக்கிங் சேடா ஆகியவற்றையும் சேர்த்து கிளற வேண்டும்.
இறுதியாக உலர்ந்த பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் தோலை சீவி அதை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு சீராகக் கலக்க வேண்டும்.
பின் அதை ஒரு வட்டமான பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் பாதாமை தூவவும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் வேக வைக்கலாம். குக்கரில் அடியில் உப்பு கொட்டி அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மிதமான சூடு பதத்தில் 40 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
பின் திறந்து பார்த்தால் கேக் உப்பி வந்திருக்கும்.
மைதா - 220 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 220 கிராம்
உலர்ந்த பழங்கள் - தேவையான அளவு
முட்டை - 3
வெண்ணெய் - 220 கிராம்
பாதாம் - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் சீவியது - 1 ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை அரைத்த பொடி - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்குக் கலக்க வேண்டும்.
அடுத்ததாக முட்டைகளை உடைத்து அதையும் நன்குக் கலந்துகொள்ள வேண்டும்.
பின் மைதா மாவு அதோடு உப்பு, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பேக்கிங் சேடா ஆகியவற்றையும் சேர்த்து கிளற வேண்டும்.
இறுதியாக உலர்ந்த பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் தோலை சீவி அதை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு சீராகக் கலக்க வேண்டும்.
பின் அதை ஒரு வட்டமான பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் பாதாமை தூவவும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் வேக வைக்கலாம். குக்கரில் அடியில் உப்பு கொட்டி அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மிதமான சூடு பதத்தில் 40 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
பின் திறந்து பார்த்தால் கேக் உப்பி வந்திருக்கும்.
சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயார்.
குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கும். அவர்களுக்கு இப்படி கோதுமை மாவில் காய்கறிகளை சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
முட்டை கோஸ் - 50 கிராம்
கோதுமை மாவு - 1 கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - கால் கப்
கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 ,
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் அரிசி மாவை கலந்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
அதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம், உப்பு போன்றவைகளை சேர்த்து, தோசைமாவு பக்குவத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
முட்டை கோஸ் - 50 கிராம்
கோதுமை மாவு - 1 கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - கால் கப்
கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 ,
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் அரிசி மாவை கலந்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
அதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம், உப்பு போன்றவைகளை சேர்த்து, தோசைமாவு பக்குவத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட்டை சேர்க்காமல் அருமையாக கேக் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
சர்க்கரை பொடி - 1/4 கப்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
உப்பு - 1 கப்
செய்முறை:
முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சர்க்கரை பொடி மற்றும் 1/4 கப் வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் 1/4 கப் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி விட்டு, குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும்.
உப்பு சூடாவதற்குள், அடித்து வைத்துள்ள கண்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு அடித்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பேக்கிங் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் தடவி, பின் 1 டேபிள ஸ்பூன் மைதாவை தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
பிறகு கேக் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். கேக் நன்கு வெந்துவிட்டால், கத்தி கொண்டு குத்தும் போது அதில் மாவு ஒட்டாமல் இருக்கும். பின் அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பேக்கிங் பௌலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.
மைதா - 1 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
சர்க்கரை பொடி - 1/4 கப்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
உப்பு - 1 கப்
செய்முறை:
முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சர்க்கரை பொடி மற்றும் 1/4 கப் வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் 1/4 கப் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி விட்டு, குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும்.
உப்பு சூடாவதற்குள், அடித்து வைத்துள்ள கண்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு அடித்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பேக்கிங் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் தடவி, பின் 1 டேபிள ஸ்பூன் மைதாவை தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
பிறகு கேக் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். கேக் நன்கு வெந்துவிட்டால், கத்தி கொண்டு குத்தும் போது அதில் மாவு ஒட்டாமல் இருக்கும். பின் அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பேக்கிங் பௌலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.
இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, கத்தி கொண்டு வெட்டினால், எக்லெஸ் கேக் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - சிறிய துண்டு,
தேங்காய் - 1 பத்தை,
தனியா - கால் டீஸ்பூன்,
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - இரண்டு,
பூண்டு - நாலு பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.
வாழைத்தண்டு - சிறிய துண்டு,
தேங்காய் - 1 பத்தை,
தனியா - கால் டீஸ்பூன்,
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - இரண்டு,
பூண்டு - நாலு பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.
சூப்பரான வாழைத்தண்டு துவையல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
பச்சை பட்டாணி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
உருளைக் கிழங்கு - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலிபிளவரை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.
பட்டாணி, உருளைக் கிழங்கை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவல், சோம்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காலிபிளவரை கொட்டி வதக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கை மசித்து போட்டு கிளறி விட வேண்டும்.
அதைத்தொடர்ந்து பட்டாணி, அரைத்த தேங்காய் விழுதை போட்டு கிளற வேண்டும்.
பின்னர் போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
காலிபிளவர் - 1
பச்சை பட்டாணி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
உருளைக் கிழங்கு - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலிபிளவரை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.
பட்டாணி, உருளைக் கிழங்கை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவல், சோம்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காலிபிளவரை கொட்டி வதக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கை மசித்து போட்டு கிளறி விட வேண்டும்.
அதைத்தொடர்ந்து பட்டாணி, அரைத்த தேங்காய் விழுதை போட்டு கிளற வேண்டும்.
பின்னர் போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






