என் மலர்tooltip icon

    சமையல்

    அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருள்களான ஒன்பது பொருள்களை காலையில் குடிக்கும் டீயில் கலந்து குடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது.
    தேவையான பொருள்:

    இஞ்சி - 1 கப் 
    கிராம்பு, பட்டை - 10 
    அன்னாசிப்பூ -5 
    ஏலக்காய் - 5 கிராம் 
    துளசி - ஒரு கைப்பிடி 
    மிளகு - 5 கிராம் 
    அதிமதுரம் - 2 ஸ்பூன் அளவு 
    அஸ்வகந்தா - 1/4 ஸ்பூன் 

    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

    பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும். 

    துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும். 

    பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும். 

    அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். 

    வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 

    பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

    இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சீஸ் நிறைந்த இந்த லசானியா, காய்கறிகளால் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு நிச்சயம் அவர்கள் ‘நோ’ சொல்லமாட்டார்கள்.
    தேவையான பொருட்கள்:

    லசான்யா பாஸ்தா ரோல்ஸ் - 9  
    பச்சை குடைமிளகாய் - 1
    மஞ்சள் குடைமிளகாய் - 1
    சிவப்பு குடைமிளகாய் - 1
    பசலைக் கீரை - சிறிதளவு
    மோஸெரெல்லா சீஸ்  - 120 கிராம்
    பார்மீசான் சீஸ் - 40 கிராம்
    காட்டேஜ் சீஸ் - 240 கிராம்
    உப்பு - 5 கிராம்   
    வெங்காயம் - 100 கிராம்
    தாக்காளி கான்சாஸ் - 400 கிராம்
    முட்டை - 1

    செய்முறை

    கீரை, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில், கீரை, மோஸெரெல்லா, காட்டேஜ் சீஸ், லுகப் பார்மீசான் சீஸ் மற்றும் முட்டை ஆகியவற்றை போட்டு ஒன்றாக கலக்கவும். 

    அதை ஒரு கப்பில் 1/3 பகுதியளவு எடுத்துக் கொண்டு, லசான்யா ஷீட்டில் வைக்கவும். 

    உருட்டி, பற்குத்தும் குச்சியை குத்தி இறுக்கமாக்கவும்.

    இப்படி பிணைக்கப்பட்ட பகுதிகள் கீழே இருக்குமாறு ஒரு பேக்கிங் டிரேவில் குக்கிங் ஸ்ப்ரேவைத் தெளித்து வைக்கவும். அதை மூடி ஒரு இரவு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பேக் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஃப்ரிட்ஜிலிருந்து எடுக்கவும். 

    ரோல்களின் மேலே தக்காளி சாஸை தாராளமாக ஊற்றவும்.

    இதை மூடி 350கு இல் 33- & 38 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். 

    மீதமுள்ள பார்மீசான் சீஸை மேலே தூவி, குச்சிகளை அகற்றி விட்டு பரிமாறவும்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 10
    இட்லி மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவு

    தாளிக்க

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும். 

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து... வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான நெல்லிக்காய் பொரியல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கும்பகோணம் டிகிரி காஃபி என்றால் நறுமணத்துடன் சேர்ந்த சுவை நம் மனதை வருடிச் செல்லும். மணமும் சுவையும் கலந்த கும்பகோணம் டிகிரி காபியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    தெறிக்க வறுத்து அரைத்த புதிய காஃபி பவுடர் (சிக்கரி கலந்தது) - 3 மேசைக் கரண்டி,
    பால் -  ஒன்றரை கப்,
    சர்க்கரை: - அரை தேக்கரண்டி,
    தண்ணீர் - 1/2 கப்

    செய்முறை

    தண்ணீரை குமிழிகள் வரும் வரை கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் மூன்று மேசைக் கரண்டி காஃபி பவுடரை பில்டரில் போட்டு மெதுவாக அழுத்தவும்.

    உடனடியாக வெந்நீரை அதில் ஊற்றி முடவும்.

    அரை மணி நேரத்திற்குப் பின்பு ஸ்ட்ராங்கான டிகாஷன் தயார்

    ஒன்றரை கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். 

    அரை கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில் விடவும். 

    அதில் 4/3 கப் பாலும், அளவுக்கேற்ப சர்க்கரையும் சேர்த்து பித்தளை அல்லது சில்வர் டவராவில் நுரை பொங்க ஊற்றி கலக்கவும். 

    நறுமணத்துடன் கும்பகோணம் டிகிரி காபி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் மிக்ஸ்டு ஃப்ரூட் சேர்த்து குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - அரை கிலோ
    வாழைப்பழம் - 2 (பெரியது)
    ஸ்ட்ராபெரி - 1 கப்
    தேன் - தேவையான அளவு
    சப்போட்டா - 1 கப்
    மாதுளம் பழம் - 1 கப்
    ஆப்பிள் - 1 கப்
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை மாவில் தேவையான அளவு நீரை ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும்.

    வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து, கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் சேர்க்கவேண்டும்.

    அடுத்ததாக தேவையான அளவு நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கரைத்து, ஊற வைக்கவேண்டும்.

    பின்னர், மவை பணியாரக்க குழிக்குள் ஊற்றுவதற்கு முன்பாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை நறுக்கி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    மாவுடன் சேர்த்து பிசைந்துகெள்ளவேண்டும்.

    பணியாரக்குழிக்குள் மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுத்து பரிமாறவும். 

    சூப்பரான சத்தான மிக்ஸ்டு ஃப்ரூட் கோதுமை குழிப்பணியாரம் ரெடி.

    பணியாரத்தை தேனில் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது, பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீல் மேக்கரில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மீல் மேக்கர் வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக் கடலை மாவு - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூம் - கால் தேக்கரண்டி
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறதளவு
    புதினா - சிறதளவு
    கறிவேப்பிலை - சிறதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

     மீல் மேக்கரை சுடுதண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

    பிறகு, வெந்நீரில் கேவ வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 

    எண்ணெய் சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மீல் மேக்கர் வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கை இலையில் இருந்து தேநீரும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    முருங்கைக்கீரை பொடி - ஒரு தேக்கரண்டி 
    கிரீன் தேநீர் பொடி - ஒரு தேக்கரண்டி 
    புதினா இலைகள் - 4, 
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி , 
    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி 

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முருங்கைக்கீரை பொடி, கிரீன் தேநீர் பொடி, புதினா இலைகள் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்த பின் அதனை இறக்கி எலுமிச்சை சாறு, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தம்ளரில் ஊற்றி குடிக்கலாம்

    காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது மோரிங்கோ தேநீர் பருகலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே தயாரிக்ககூடிய ஒரு அருமையான குளிர் பானம் ஐஸ் டீ. இதை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டஸ்ட் டீ -30 கிராம்
    டீ பேக்- 3
    சர்க்கரை -100 கிராம்
    எலுமிச்சை  - 2
    ஏலக்காய் -3
    இஞ்சி - 15 கிராம்
    லவங்கப் பட்டை - 1 அங்குலம்

    செய்முறை

    எலுமிச்சையிலிருந்து ஜூஸ் எடுத்து அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும், அதன் தோலையும் வைத்துக் கொள்ளவும்.

    ஏலக்காய், லவங்கம், எலுமிச்சை தோல் மற்றும் இஞ்சியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 200 மிலி தண்ணீரை ஊற்றி, லேசாக கொதிக்க வைக்கவும்.

    மசாலாக்கள் தண்ணீரில் கலக்கும் வரை காத்திருந்து, ஐந்து நிமிடங்கள் கழித்து, டீ டஸ்ட், டீ பேக் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    சரியாக 2 நிமிடங்கள் கழித்து, பாத்திரத்தை சூட்டிலிருந்து விலக்கி, முழுமையாக குளிர விடவும்.

    நீங்கள் விரும்பும் ஜூஸ் கிளாஸை எடுத்து, அதில் ஐஸ்கட்டியால் நிரப்பவும். அதில் எலுமிச்சை ஜூஸை ஊற்றி, அதன் கால் பங்கு அளவுக்கு தயாரித்த டீயை ஊற்றவும்.

    கிளாஸ் மேல் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும். உங்கள் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஜூஸைச் சேர்க்கவும்.

    சூப்பரான ஐஸ் டீ ரெடி. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.
    தேவையான பொருட்கள்

    பால் - 1 லிட்டர்
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
    பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    நன்கு கனிந்த வாழைப்பழம் - 2

    செய்முறை

    வாழைப்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்றாக கொதிக்க வைத்து பால் அரை லிட்டராக சுண்டியதும் இதில் நாட்டு சர்க்கரை அல்லது தேனை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பழத்தை கலந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும். 

    சத்தான வாழைப்பழ பால் தயார். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்காக பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 1,
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1,
    கீறிய பச்சைமிளகாய் - 2,
    குழம்பு மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை :

    பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

    நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும். 

    அருமையான பீட்ரூட் குழம்பு தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை பிரெட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று சத்தான சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைத்த கோதுமை பிரெட் - 1 கப்
    கடலை மாவு - 1/4 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    தயிர் - 1/4 கப்
    வெங்காயம் - 1/4 கப்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    சீரகம் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பவுலின் அரைத்த கோதுமை பிரெட், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், சுவையான கோதுமை பிரெட் ஊத்தாப்பம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் பால் மீன் குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    தேங்காய் பால் - 2 கப்
    குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 4
    பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புளி தண்ணீர் - 2 கப்
    உப்பு – தேவைக்கேற்ப

    செய்முறை

     மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

     வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

     பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்த பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்க்கவும்..

    குழம்பு பொடி சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

    பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்ததும் மீன் சேர்த்து வேக விடவும்.

    மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்தவுடன் இறக்கினால் சுவையான தேங்காய் பால் மீன் குழம்பு.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×