என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா
    X
    காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா

    காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா

    நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காலிபிளவர் - 1
    பச்சை பட்டாணி - கால் கப்
    தேங்காய் துருவல் - கால் கப்
    உருளைக் கிழங்கு - 5
    சோம்பு - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    காலிபிளவரை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.

    பட்டாணி, உருளைக் கிழங்கை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய் துருவல், சோம்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காலிபிளவரை கொட்டி வதக்க வேண்டும்.

    அதனுடன் உருளைக்கிழங்கை மசித்து போட்டு கிளறி விட வேண்டும்.

    அதைத்தொடர்ந்து பட்டாணி, அரைத்த தேங்காய் விழுதை போட்டு கிளற வேண்டும்.

    பின்னர் போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    காலிபிளவர்  பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×