என் மலர்
சமையல்
தினமும் சிறிது வேப்பம்பூவை சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம், பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீரல் பாதுகாக்கப்படும்.
தேவையான பொருட்கள்
காய வைத்த வேப்பம்பூ - 3 கப்
உளுந்து - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகாய் பிளேக்ஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்.
உளுந்தை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
வேப்பம்பூ வடகம் தயார்.
இதனை ஒரு சுத்தமான் காய்ந்த கண்ணாடி டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சாதம், புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு
இதற்கு வெங்காயத்தை நல்ல நீளவாக்கில் வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து உடயோகிக்கலாம். கெட்டு போகாது.
காய வைத்த வேப்பம்பூ - 3 கப்
உளுந்து - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகாய் பிளேக்ஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்.
உளுந்தை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
வேப்பம்பூ வடகம் தயார்.
இதனை ஒரு சுத்தமான் காய்ந்த கண்ணாடி டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சாதம், புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு
இதற்கு வெங்காயத்தை நல்ல நீளவாக்கில் வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து உடயோகிக்கலாம். கெட்டு போகாது.
வாரத்திற்கு ஒரு மூன்று முறையாவது முட்டைகோஸ் உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலிலுள்ள நச்சுகழிவுகள் நீங்கும். முட்டை கோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 1 கப்
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 2 பல்
சிகப்பு மிளகாய் - 2
புளி - மிக சிறிய அளவு
உ.பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை
முட்டைக்கோஸை நல்லா கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பை போட்டு வறுத்த பின்னர் சிவப்பு மிளகாய்,வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி போட்டு நல்லா வதக்கவும்.
பின்னர் கோஸை போட்டு வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
சூப்பரான முட்டைகோஸ் சட்னி ரெடி.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.
முட்டைக்கோஸ் - 1 கப்
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 2 பல்
சிகப்பு மிளகாய் - 2
புளி - மிக சிறிய அளவு
உ.பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை
முட்டைக்கோஸை நல்லா கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பை போட்டு வறுத்த பின்னர் சிவப்பு மிளகாய்,வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி போட்டு நல்லா வதக்கவும்.
பின்னர் கோஸை போட்டு வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
சூப்பரான முட்டைகோஸ் சட்னி ரெடி.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.
ஆரஞ்சு தோலை பயன்படுத்தி தயாரிக்கும் இந்த டீயில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றன. இதில் நிறைய பெக்டின் காணப்படுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு
தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள். இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள்.
இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது.
அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு
தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள். இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள்.
இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது.
ஆரஞ்சு தோலில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி காணப்படுகிறது. இதைத் தவிர இன்னும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ப்ரோ விட்டமின் ஏ, தயமின், விட்டமின் பி6 மற்றும் கால்சியம் போன்றவை காணப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 1,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஆரஞ்சுதோலை போட்டு நன்கு வதக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.
வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
இப்போது சூப்பரான ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி.
பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 1,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஆரஞ்சுதோலை போட்டு நன்கு வதக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.
வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
இப்போது சூப்பரான ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி.
தற்போது மற்ற காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டித் தயிர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
பச்சை மிளகாய் - 1/2
கறிவேப்பிலை - 3 இலை
இஞ்சி - 1/4 இன்ச்
செய்முறை:
முதலில் தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!
கெட்டித் தயிர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
பச்சை மிளகாய் - 1/2
கறிவேப்பிலை - 3 இலை
இஞ்சி - 1/4 இன்ச்
செய்முறை:
முதலில் தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!
காலையில் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்ப உடனடியாக செய்யக்கூடிய கோதுமை ரவை கடலைமாவு அடை செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
ரவை - 2 கப்
கடலைமாவு - முக்கால் கப்
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 5
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
ஊற வைத்த ரவையுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
ருசியான கோதுமை ரவை கடலைமாவு அடை தயார்.
இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.
ரவை - 2 கப்
கடலைமாவு - முக்கால் கப்
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 5
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
ஊற வைத்த ரவையுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
ருசியான கோதுமை ரவை கடலைமாவு அடை தயார்.
இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.
வெள்ளரிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
வெள்ளரிக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டி ஜூஸில் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!
வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
வெள்ளரிக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டி ஜூஸில் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!
குழந்தைகள் பழங்களை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இவ்வாறு ஃப்ரூட் கஸ்டர்டு போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
பால் - ஒரு கிளாஸ்,
கஸ்டர் பவுடர் - இரண்டு தேக்கரண்டி,
நறுக்கிய பழங்கள் - ஒரு கப் (வாழை, அன்னாசி, கொய்யா, மாதுளை முத்துகள், ஆப்பிள்),
நாட்டு சர்க்கரை - தேவைக்கு
செய்முறை
ஒரு கப் பாலில், இரண்டு தேக்கரண்டி கஸ்டர் பவுரை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதனோடு நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்தால், பால் கெட்டியாக வரும். அதை பிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து வெளியே எடுங்கள்.
இப்போது குளுகுளுவென பால் கலவை ரெடியாகி இருக்கும்.
அதில் நறுக்கி இருக்கும் பழங்களை கலந்து உடனடியாகவும் சுவைக்கலாம். அல்லது மீண்டும் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தும் சாப்பிடலாம்.
சூப்பரான ஃப்ரூட் கஸ்டர்டு ரெடி.
பால் - ஒரு கிளாஸ்,
கஸ்டர் பவுடர் - இரண்டு தேக்கரண்டி,
நறுக்கிய பழங்கள் - ஒரு கப் (வாழை, அன்னாசி, கொய்யா, மாதுளை முத்துகள், ஆப்பிள்),
நாட்டு சர்க்கரை - தேவைக்கு
செய்முறை
ஒரு கப் பாலில், இரண்டு தேக்கரண்டி கஸ்டர் பவுரை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதனோடு நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்தால், பால் கெட்டியாக வரும். அதை பிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து வெளியே எடுங்கள்.
இப்போது குளுகுளுவென பால் கலவை ரெடியாகி இருக்கும்.
அதில் நறுக்கி இருக்கும் பழங்களை கலந்து உடனடியாகவும் சுவைக்கலாம். அல்லது மீண்டும் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தும் சாப்பிடலாம்.
சூப்பரான ஃப்ரூட் கஸ்டர்டு ரெடி.
இந்த சட்னியை பிரிட்ஜில் வைக்காமல் 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பரான காரசாரமான இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு - 3
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமல்லி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கு
செய்முறை
ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கெட்டிப் பதத்தில் புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு 3 முழு பூண்டுகளை தோலுரித்து சுத்தம் செய்து உரலில் போட்டு நசுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, துருவி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயில் சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பூண்டை வதக்க வேண்டும். பூண்டு கருகிப் போய் விடக் கூடாது. அதே சமயம் பச்சை வாடையும் வீசக் கூடாது.
வர மல்லியை இடுக்கியில் போட்டு இடித்து நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பூண்டினை பச்சை வாடை போக வதக்கிய பின்பு, ஒரு 1 ஸ்பூன் இடித்து வைத்திருக்கும் வர மல்லியை பூண்டுடன் சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக தனி மிளகாய்த் தூளை எண்ணெயில் சேர்த்து பூண்டுடன் நன்றாக வதக்கவேண்டும். மிளகாய் தூள் கருதிவிடக்கூடாது. மிளகாய்த்தூளை பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கினால் போதும்.
அடுத்தபடியாக 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்தூளின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 3 லிருந்து 4 நிமிடங்கள் இந்த சட்னி நன்றாக கொதித்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து உப்பு காரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். புளியின் பச்சை வாடை போகும் வரை மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் ஓரத்தில் பிரிந்து மேலே மிதந்து வரும் பட்சத்தில், சட்னி பக்குவத்தில் வரும்போது, இறுதியாக பெருங்காயம், வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள் போதும். சூப்பரான பூண்டு சட்னி தயார். இந்த சட்னியை பிரிட்ஜில் வைக்காமல் 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிடலாம்.
பூண்டு - 3
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமல்லி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கு
செய்முறை
ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கெட்டிப் பதத்தில் புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு 3 முழு பூண்டுகளை தோலுரித்து சுத்தம் செய்து உரலில் போட்டு நசுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, துருவி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயில் சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பூண்டை வதக்க வேண்டும். பூண்டு கருகிப் போய் விடக் கூடாது. அதே சமயம் பச்சை வாடையும் வீசக் கூடாது.
வர மல்லியை இடுக்கியில் போட்டு இடித்து நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பூண்டினை பச்சை வாடை போக வதக்கிய பின்பு, ஒரு 1 ஸ்பூன் இடித்து வைத்திருக்கும் வர மல்லியை பூண்டுடன் சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக தனி மிளகாய்த் தூளை எண்ணெயில் சேர்த்து பூண்டுடன் நன்றாக வதக்கவேண்டும். மிளகாய் தூள் கருதிவிடக்கூடாது. மிளகாய்த்தூளை பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கினால் போதும்.
அடுத்தபடியாக 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்தூளின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 3 லிருந்து 4 நிமிடங்கள் இந்த சட்னி நன்றாக கொதித்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து உப்பு காரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். புளியின் பச்சை வாடை போகும் வரை மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் ஓரத்தில் பிரிந்து மேலே மிதந்து வரும் பட்சத்தில், சட்னி பக்குவத்தில் வரும்போது, இறுதியாக பெருங்காயம், வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள் போதும். சூப்பரான பூண்டு சட்னி தயார். இந்த சட்னியை பிரிட்ஜில் வைக்காமல் 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிடலாம்.
நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும். தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
கொய்யாப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - அரை கப்
ஐஸ்கட்டி - தேவையான அளவு
செய்முறை:
கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் கொய்யாபழத்தை போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை, உப்பு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
சூப்பரான தேங்காய்ப்பால் கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.
கொய்யாப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - அரை கப்
ஐஸ்கட்டி - தேவையான அளவு
செய்முறை:
கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் கொய்யாபழத்தை போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை, உப்பு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
சூப்பரான தேங்காய்ப்பால் கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.
தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில துளிகள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!
கடலைப்பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில துளிகள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!
தினமும் கோதுமை ரவையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். உடல் பலம் அதிகரிக்கும், ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1/2 கப்,
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
வெங்காயம் – 1,
ப.மிளகாய் – 2,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய் – 2 டீஸ்பூன் மற்றும் பணியாரம் செய்வதற்கு தேவையான அளவு.
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை ரவை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம். ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான கோதுமை ரவை குழிப்பணியாரம் ரெடி.
கோதுமை ரவை – 1/2 கப்,
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
வெங்காயம் – 1,
ப.மிளகாய் – 2,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய் – 2 டீஸ்பூன் மற்றும் பணியாரம் செய்வதற்கு தேவையான அளவு.
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை ரவை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம். ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான கோதுமை ரவை குழிப்பணியாரம் ரெடி.






