என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
X
கோதுமை ரவை கடலைமாவு அடை
Byமாலை மலர்22 March 2022 5:20 AM GMT (Updated: 22 March 2022 5:20 AM GMT)
காலையில் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்ப உடனடியாக செய்யக்கூடிய கோதுமை ரவை கடலைமாவு அடை செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
ரவை - 2 கப்
கடலைமாவு - முக்கால் கப்
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 5
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
ஊற வைத்த ரவையுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
ருசியான கோதுமை ரவை கடலைமாவு அடை தயார்.
இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.
ரவை - 2 கப்
கடலைமாவு - முக்கால் கப்
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 5
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
ஊற வைத்த ரவையுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
ருசியான கோதுமை ரவை கடலைமாவு அடை தயார்.
இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X