என் மலர்tooltip icon

    சமையல்

    ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 2 கப்
    ரவை - அரை கப்
    கடலைமாவு - அரை கப்
    மோர் - 3 கப்
    கேரட் - 1
    முட்டைகோஸ் - சிறிய துண்டு
    குடைமிளகாய் - பாதி
    தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு(பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    முட்டைகோஸ், குடைமிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    பிறகு கடலை மாவை பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.

    மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மூன்றையும் பொடித்துக் கொள்ளவும்.

    பிறகு வறுத்த மாவு கலவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு ஒன்றாகக் கலக்கவும்.

    பிறகு அதனுடன் மோர் விட்டு கரைத்து, அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு ஆகிய மூன்றையும் போடவும்.

    பிறகு கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் ஆகிய அனைத்தையும் மாவுடன் கலக்கவும்.

    பிறகு ஊத்தாப்பம் பதத்திற்கு கரைத்து, கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடியான ஊத்தப்பமாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ரெடி.
    பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
    தேவையான பொருட்கள்  :

    கேரட் - கால் கிலோ கேரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
    வெங்காயம் - 2
    பீட்ரூட் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு -  5 பல்
    காய்கறி சத்து நீர் - 7 கப்
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

    செய்முறை :

    கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி, பீட்ரூட் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவும்.

    இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

    பின்னர் இதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.
    தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்:     

    சின்ன வெங்காயம் - 50 கிராம்,  
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    புதினா - ஒரு கைப்பிடி
    காய்ந்த மிளகாய் - 12,  
    கல் உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:  

    புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

    ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.

    பின்னர் அதில் உரித்த சின்ன வெங்காயம், புதினா, கறிவேப்பலை, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

    வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.

    மிச்கியில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

    சத்தான சுவையான சின்ன வெங்காய புதினா துவையல் ரெடி.
    கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலையின் பொடியையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 20
    நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    அரைக்க :

    கறிவேப்பிலை - 2 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

    தாளிக்க  :

    கடுகு - சிறிதளவு,
    உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

    நார்ச்சத்து அதிகம் உள்ள அவரைக்காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    தேவையான பொருட்கள்

    அவரைக்காய் - 50 கிராம்
    சின்ன வெங்காயம் - 5
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - சிறிது
    முட்டை - 2
    உப்பு - தேவைக்கு ஏற்ப

    தாளிக்க

    எண்ணெய்
    கடுகு
    உளுந்து
    சீரகம்
    கடலை பருப்பு
    கறிவேப்பிலை

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அதன் பிறகு அவரைக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அவரைக்காய் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

    மேலும், இரண்டும் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும்.

    இப்போது சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

    இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
    கர்ப்பிணிகளுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான போலிக் ஆசிட் இந்த கீரையில் அதிகம் உள்ளது. பாலக்கீரை ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - ஒரு கட்டு,
    மிளகு, சீரகம் - தேவைக்கு,
    பாசிப் பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
    வெங்காயம் , தக்காளி - தலா ஒன்று,
    பூண்டு - 5 பல்,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கீரை, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி , தண்ணீர் சேர்த்து வேக விட்டு இறக்கவும்.

    ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.

    அதனுடன் பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பருகலாம்..
    சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பட்டி - 1/4 கப்,
    காபித்தூள் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்

    செய்முறை :

    கருப்பட்டியை துளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் காபித்தூளைப் போட்டு டிகாக்‌ஷன் இறங்கும் வரை கொதிக்க விடவும்.

    பின்னர் அதில் தூளாக்கிய கருப்பட்டியை போட்டு டிகாக்‌ஷன் இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.

    விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.

    பலன்கள்: சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.
    காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதில் மிளகு, சீரகம் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி (புழுங்கல்) அரிசி - 1 கப்
    உளுத்தம் பருப்பு - அரை கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - அரை கப்
    முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
    உப்பு - தேவைக்கேற்றவாறு

    செய்முறை:

    அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக தண்ணீரில் 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.

    மறுநாள், ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.  

    அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு சூடானதும் மிளகு, சீரகம் ஆகியவற்றை முழுவதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகவும் பொடித்து சேர்க்கவும்.

    இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து இதையும் மாவில் கொட்டவும்.

    தேங்காய் துண்டுகளையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

    இட்லி குக்கர் அல்லது இட்லி பானையை அடுப்பிலேற்றி, தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.  

    ஒரே அளவுள்ள டம்ளர்களை எடுத்து எண்ணெய் தடவி அதில் முக்கால் அளவிற்கு மாவை ஊற்றவும். இதை இட்லி குக்கர்/பானை உள்ளே வைத்து மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

    குக்கர் பாத்திரம் அல்லது வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து, துண்டுகளாகவும் வெட்டி பரிமாறலாம். அல்லது சாதரண இட்லி போல், இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைக்கலாம்..

    இப்போது சூப்பரான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.
    ரொட்டி, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு ஏற்ற முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி எப்படி எளிய முறையில் செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க...
     தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ் - 250 கிராம்
    பட்டாணி - 1 கப்
    தக்காளி சாறு - 2 கப்
    மஞ்சள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    கொத்தமல்லி இலை - 1 கைப்பிடியளவு
    பச்சை மிளகாய் - 2

    செய்முறை

    முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் நறுக்கிய முட்டைகோஸை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பட்டாணியை சேர்த்து தீயை சிம்மில் வைத்து உப்பையும் சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வேகவிடவும்.

    2 நிமிடங்கள் கழிச்சி மூடியை திறந்து தக்காளி ப்யூரியை அதில் சேர்க்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

    இப்போது நம்மோட முட்டைகோஸ் பட்டாணி மசாலா ரெடி!

    இதை கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிச்சு ரொட்டி அல்லது சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா தொட்டு சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.
    வயிற்று வலி, வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஞ்சியை வாரம் இருமுறை குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - அரை கப்
    பூண்டு - 75 கிராம்
    மிளகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - சிறிதளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு
    காய்ச்சிய பால் - 1 கப்

    செய்முறை


    அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.

    பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்த பின்னர் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.

    பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்க வேண்டும்.

    குக்கர் விசில் போனதும் மூடியை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விட்டு பால் கலந்து பரிமாறவும்.

    சத்தான பூண்டு கஞ்சி ரெடி.
    ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.
    தேவையான பொருட்கள்:

    காலிஃப்ளவர் – 1,
    பால் – ஒரு கப்,
    மிளகுத்தூள் – சிறிதளவு,
    கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் – ஒன்று,
    பூண்டு – 5 பல்,
    வெண்ணெய் – தேவையான அளவு,
    உப்பு – தேவைக்கேற்ப.

    செய்முறை:

    காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பூவை மட்டும் எடுத்து துருவிக்கொள்ளவும்.

    காலிஃப்ளவர் தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

    விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

    இப்போது சத்தான சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி.
    இட்லி, தோசை, சாதத்துடன்.. சேர்த்து சாப்பிட இந்த கடலைப்பருப்பு தனியா துவையல் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
    மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் -  6
    சின்ன வெங்காயம் - 10 (தோலுரிக்கவும்)
    பூண்டுப் பல் -  6
    தக்காளி - 2
    புளி - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி இலை (காம்புடன்) - 2 கைப்பிடி அளவு
    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    தனியாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    மற்ற பொருள்களை எண்ணெய்விட்டு வதக்கி ஆற வைக்கவும்.

    மிக்சியில் முதலில் வறுத்த தனியாவை போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் வதக்கிய மற்ற பொருட்களை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    சூப்பரான கடலைப்பருப்பு தனியா துவையல் ரெடி.

    இந்தத் துவையல் இட்லி தோசைக்கு மட்டுமன்றி தயிர் சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.
    ×