என் மலர்
குழந்தை பராமரிப்பு
ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர்.
நாம் பிறக்கையில் இந்த உலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. அதுபோல் போகும்போது எதையும் கொண்டு செல்வதில்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழவேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டுபவர் ஆசிரியர்களே. அவர்கள் உறவு முக்கியமானது, முதன்மையானது. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும், சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடத்திலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூறலாம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.
இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.
மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.
நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.
மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.
இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.
மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.
நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.
மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
உலகறிந்த மந்திரவாதி சிறுவனான, ஹாரி பாட்டரின் வாழ்க்கையை சொல்லும் ‘ஹாரி பாட்டர்’ வரிசை புத்தகங்கள் ஏழு பாகங்களாக கிடைக்கின்றன.
ஹாரி பாட்டரும், அவனுடைய நண்பர்களும் படிக்கிற மாயாஜால பள்ளியை பற்றியும், அதைச் சார்ந்திருக்கிற உலகத்தையும், இதன் எழுத்தாளரான ரவுலிங்கின் நேர்த்தியான எழுத்தாற்றலில், படிக்க படிக்க திகட்டாதது.
‘பேமஸ் பைவ் மற்றும் சீக்ரெட் செவன் வரிசைப் புத்தகங்கள்’, துப்பறியும் கதைகளை கொண்டவை. ‘ஹாரிபிள் ஹிஸ்டரி’, வரலாற்றை இப்படியும் சுவையாகச் சொல்ல முடியுமா என, திகைக்க வைக்கும் வரிசைப் புத்தகங்கள் இவை.
கிட்டத்தட்ட, ‘காமிக்ஸ்’ மாதிரி தான் இருக்கும். அதனால் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே...
நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
வயதுக்கு ஏற்ப குழந்தைகள், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களைப் பற்றி, இங்கே பார்ப்போம்...
* மூன்று முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளுக்கு...
படங்கள் அதிகம் உள்ள, எழுத்துக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. வண்ண மயமான படங்களை, குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். பெற்றோர், அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டி இருக்கும். சில சொற்களை, குழந்தையை சொல்ல வைக்கலாம். படங்களை சுட்டிக்காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்கலாம். ‘இதே போல் பொம்மை நம்ம வீட்ல இருக்கே. அதைக்காட்டு பார்க்கலாம்..’ என்று புதிர் போடலாம்.
* ஏழு வயது முதல் பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு...
இந்த வயது குழந்தைகளும் படம் உள்ள புத்தகங்களை தான் அதிகம் விரும்புவர். ஆனாலும், படத்துக்கு சமமாக, எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை இவர்கள் விரும்பி படிப்பார்கள்.
இவர்களுக்கு பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.
ஆங்கில வரிசையில், ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’, ‘ஆலிஸ் இன் ஒன்டர்லாண்ட்’ போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’ இது ஒரு ஜாலியான, மாயாஜாலக் கதை. அழகழகான படங்களுடன் கிடைக்கும். ஆலிசின் அற்புத உலகம், இதுவும் முந்தைய கதையை போலவே, மாய உலகம் சம்பந்தப்பட்டது தான். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.
* பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு...
தானாகவே தேடித்தேடி வாசிக்க ஆரம்பிக்கும் இந்த வயதினருக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக, துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் சாகச கதைகள் என, ஏராளமான புத்தகங்கள் உள்ளன.
ஹாரி பாட்டரும், அவனுடைய நண்பர்களும் படிக்கிற மாயாஜால பள்ளியை பற்றியும், அதைச் சார்ந்திருக்கிற உலகத்தையும், இதன் எழுத்தாளரான ரவுலிங்கின் நேர்த்தியான எழுத்தாற்றலில், படிக்க படிக்க திகட்டாதது.
‘பேமஸ் பைவ் மற்றும் சீக்ரெட் செவன் வரிசைப் புத்தகங்கள்’, துப்பறியும் கதைகளை கொண்டவை. ‘ஹாரிபிள் ஹிஸ்டரி’, வரலாற்றை இப்படியும் சுவையாகச் சொல்ல முடியுமா என, திகைக்க வைக்கும் வரிசைப் புத்தகங்கள் இவை.
கிட்டத்தட்ட, ‘காமிக்ஸ்’ மாதிரி தான் இருக்கும். அதனால் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே...
நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
வயதுக்கு ஏற்ப குழந்தைகள், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களைப் பற்றி, இங்கே பார்ப்போம்...
* மூன்று முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளுக்கு...
படங்கள் அதிகம் உள்ள, எழுத்துக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. வண்ண மயமான படங்களை, குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். பெற்றோர், அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டி இருக்கும். சில சொற்களை, குழந்தையை சொல்ல வைக்கலாம். படங்களை சுட்டிக்காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்கலாம். ‘இதே போல் பொம்மை நம்ம வீட்ல இருக்கே. அதைக்காட்டு பார்க்கலாம்..’ என்று புதிர் போடலாம்.
* ஏழு வயது முதல் பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு...
இந்த வயது குழந்தைகளும் படம் உள்ள புத்தகங்களை தான் அதிகம் விரும்புவர். ஆனாலும், படத்துக்கு சமமாக, எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை இவர்கள் விரும்பி படிப்பார்கள்.
இவர்களுக்கு பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.
ஆங்கில வரிசையில், ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’, ‘ஆலிஸ் இன் ஒன்டர்லாண்ட்’ போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’ இது ஒரு ஜாலியான, மாயாஜாலக் கதை. அழகழகான படங்களுடன் கிடைக்கும். ஆலிசின் அற்புத உலகம், இதுவும் முந்தைய கதையை போலவே, மாய உலகம் சம்பந்தப்பட்டது தான். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.
* பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு...
தானாகவே தேடித்தேடி வாசிக்க ஆரம்பிக்கும் இந்த வயதினருக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக, துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் சாகச கதைகள் என, ஏராளமான புத்தகங்கள் உள்ளன.
மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான் மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.
எப்படிக் கண்டுபிடிப்பது?
தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்
மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது
மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது
மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது
பசியின்மை
எடை குறைவு
மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது
மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது
மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு
அடிவயிற்றில் வலி
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.
மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்
உணவு மாற்றம் அவசியம்:
மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.
வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.
இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம்.
கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.
அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
மலச்சிக்கலைத் தடுக்கும் தண்ணீர்:
விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம்.
தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான் மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.
எப்படிக் கண்டுபிடிப்பது?
தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்
மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது
மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது
மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது
பசியின்மை
எடை குறைவு
மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது
மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது
மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு
அடிவயிற்றில் வலி
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.
மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்
உணவு மாற்றம் அவசியம்:
மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.
வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.
இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம்.
கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.
அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
மலச்சிக்கலைத் தடுக்கும் தண்ணீர்:
விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம்.
தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.
இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
பெற்றோர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பள்ளி செல்லும் குழந்தைகள் எழுத்துக்களை சிலேட்டில் எழுதி பழகுவதற்கு உபயோகப்படுத்தும் பல்பம் எனப்படும் சிலேட் குச்சியை வாயில் வைத்து மென்று தின்கிறார்கள். சிறுமிகள்தான் அதிகமாக இதை தின்கிறார்கள். பின்னாளில் பல்பம் ஏற்படுத்தும் பாதிப்பால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள்.
பல்பத்தில் கால்சியம் கார்பனேட் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தின்றால் சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். பல்பம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்கு உடலில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.
டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பக்க விளைவுகளால் அவதிப்பட நேரிடும். இரும்பு, கால்சியம் சத்து கொண்ட உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்பம் மீதான மோகத்தில் இருந்துவிடுபடலாம்.
இரும்பு சத்து அதிகம் கொண்ட இறைச்சி வகைகள், இறால், வஞ்சீரம் போன்ற மீன் வகைகளை சாப்பிட்டு வரலாம். உலர்திராட்சை, உலர் பழங்கள், கோதுமை, சோயா, கீரை வகைகள், ஓட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம். பால், பாலாடை கட்டி, தயிர், பாதாம் பருப்பு போன்ற கால்சியம் அதிகம் கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பல்பத்தில் கால்சியம் கார்பனேட் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தின்றால் சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். பல்பம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்கு உடலில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.
டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பக்க விளைவுகளால் அவதிப்பட நேரிடும். இரும்பு, கால்சியம் சத்து கொண்ட உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்பம் மீதான மோகத்தில் இருந்துவிடுபடலாம்.
இரும்பு சத்து அதிகம் கொண்ட இறைச்சி வகைகள், இறால், வஞ்சீரம் போன்ற மீன் வகைகளை சாப்பிட்டு வரலாம். உலர்திராட்சை, உலர் பழங்கள், கோதுமை, சோயா, கீரை வகைகள், ஓட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம். பால், பாலாடை கட்டி, தயிர், பாதாம் பருப்பு போன்ற கால்சியம் அதிகம் கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தையொட்டி தஞ்சை ஆர்.கே. மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரு மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் உஷாநந்தினி பேசியபோது எடுத்த படம். டாக்டர்கள் ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரன், மணிராம்கிருஷ்ணா, எழிலன் ஆகியோர் அருகில் உள்ளனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.
ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.
ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம்.
குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம்.
மனிதனின் இருகால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பது இயல்பானது. ஆனால், சிலருக்கு 2 கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு வளர்ச்சி குருத்துகளில் முறிவு ஏற்பட்டிருக்கலாம்.
அடிபட்டதும் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறுமாறாக கூடிவிடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளர வாய்ப்பு உண்டாகும்.
ஒரு கால் உயரம் குறைவாகவோ, வளைவாகவோ அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும்.
இது போன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து மற்றும் கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளிலும் உண்டாகி, அந்த கால் உயரம் குறைவாகவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
'செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்' எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நமது நாட்டில் இது போன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே தகுந்த டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.
கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம் மூலம் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுவிடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய், பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும்.
அடிபட்டதும் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறுமாறாக கூடிவிடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளர வாய்ப்பு உண்டாகும்.
ஒரு கால் உயரம் குறைவாகவோ, வளைவாகவோ அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும்.
இது போன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து மற்றும் கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளிலும் உண்டாகி, அந்த கால் உயரம் குறைவாகவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
'செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்' எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நமது நாட்டில் இது போன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே தகுந்த டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.
கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம் மூலம் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுவிடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய், பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை. உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
குழந்தையின் பிறந்த நாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்.
குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.
1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.
2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.
3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்
4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்
5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்
8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.
9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.
2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.
3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்
4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்
5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்
8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.
9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் அதிக அளவில் சிறுவர், சிறுமிகளை இது பாதிக்கிறது.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம்.
மக்கள்தொகை பெருக்கம், பொதுசுகாதார-சுத்த குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியாபர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன.
காளான் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.
காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவப் பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் இரண்டு கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியவை. இந்தக் கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன.
பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக்குறைவு. மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு.
மக்கள்தொகை பெருக்கம், பொதுசுகாதார-சுத்த குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியாபர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன.
காளான் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.
காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவப் பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் இரண்டு கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியவை. இந்தக் கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன.
பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக்குறைவு. மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு.
குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும்.
இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1,000 குழந்தைகளுக்கு 0.8 என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் கண் பார்வை இல்லாமல் உள்ளனர். மேலும் 18 மில்லியன் குழந்தைகள் மிதமான மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டுடன் உள்ளனர்.
அவர்களில் நான்கில் 3 பேர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கு குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1000-க்கு 1.5 என்ற அளவில் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு கார்னியா தொடர்பான பிரச்சினைகளே காரணமாக இருக்கிறது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது ஆஸ்டிஜிமாடிசம் (அருகாமை மற்றும் தொலைதூர பார்வை மங்கலாக தெரிவது) போன்ற ஒளிவிலகல் பிழைகள், கண்ணாடிகளை பயன்படுத்தாதது அல்லது முறையற்ற கண்ணாடியைப் பயன்படுத்துவது போன்றவையும் பார்வை இழப்பு பிரச்சினைக்கு வழிவகுக்கின்றன. அத்துடன் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கற்றல் குறைபாடு பிரச் சினையை எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்கன் அகாடமி ஆப் ஆப்தமாலஜி (ஏ.ஏ.ஓ) ஆய்வின் படி, குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தட்டம்மை நோய் பாதிப்பாகும். ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடு கண் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. இரவில் பார்வை இழப்பு ஏற்படுவது வைட்டமின் ஏ குறைபாட்டுக்கான முக்கியமான அறிகுறியாகும். அதனை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுத்துவிடும்.
உலக சுகாதார அமைப்பின் கருத்து படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்குள் பாதி பேர் இறந்து விடுகிறார்கள்.
குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும். பொதுவாக வயதாகும்போது கண் புரை பிரச்சினை ஏற்படும் என்றாலும் பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு கண் புரை பாதிப்பு உண்டாகும். இதுவும் குழந்தை பருவ பார்வை இழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.
குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு மற்றொரு காரணம் கிளேகோமா ஆகும். கண்களில் உருவாகும் திரவ அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்தும்போது இந்த பிரச்சினை உண்டாகும். பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் இந்த பாதிப்பை எதிர்கொள்வார்கள். ஆதலால் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்களில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியமானது.
அவர்களில் நான்கில் 3 பேர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கு குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1000-க்கு 1.5 என்ற அளவில் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு கார்னியா தொடர்பான பிரச்சினைகளே காரணமாக இருக்கிறது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது ஆஸ்டிஜிமாடிசம் (அருகாமை மற்றும் தொலைதூர பார்வை மங்கலாக தெரிவது) போன்ற ஒளிவிலகல் பிழைகள், கண்ணாடிகளை பயன்படுத்தாதது அல்லது முறையற்ற கண்ணாடியைப் பயன்படுத்துவது போன்றவையும் பார்வை இழப்பு பிரச்சினைக்கு வழிவகுக்கின்றன. அத்துடன் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கற்றல் குறைபாடு பிரச் சினையை எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்கன் அகாடமி ஆப் ஆப்தமாலஜி (ஏ.ஏ.ஓ) ஆய்வின் படி, குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தட்டம்மை நோய் பாதிப்பாகும். ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடு கண் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. இரவில் பார்வை இழப்பு ஏற்படுவது வைட்டமின் ஏ குறைபாட்டுக்கான முக்கியமான அறிகுறியாகும். அதனை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுத்துவிடும்.
உலக சுகாதார அமைப்பின் கருத்து படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்குள் பாதி பேர் இறந்து விடுகிறார்கள்.
குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும். பொதுவாக வயதாகும்போது கண் புரை பிரச்சினை ஏற்படும் என்றாலும் பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு கண் புரை பாதிப்பு உண்டாகும். இதுவும் குழந்தை பருவ பார்வை இழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.
குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு மற்றொரு காரணம் கிளேகோமா ஆகும். கண்களில் உருவாகும் திரவ அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்தும்போது இந்த பிரச்சினை உண்டாகும். பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் இந்த பாதிப்பை எதிர்கொள்வார்கள். ஆதலால் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்களில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியமானது.






