என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள் இங்கே:
குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள் இங்கே:
கேள்வி கேட்பதற்கு ஊக்குவித்தல்:
குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் முக்கியமான ஒன்று, அவர்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிப்பது. கேள்வி கேட்கும் முன், அது சார்ந்த விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள்.
பாடமாக இருந்தால், அந்த பாடத்தை முதலில் ஆழ்ந்து படித்து, அதில் எழும் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்க வேண்டும். இந்தப் பயிற்சியால், சிக்கலான விஷயங்களில் சிந்திப்பது, அதற்கு தீர்வுக்காண முடிவுகள் எடுப்பது குறித்த திறன் இளம் வயதிலேயே மேம்படும்.
செயல்வழி கற்றல்:
குழந்தைகளை ஒரே இடத்தில், அமர வைத்து கற்றுத் தரும் கல்வியால் அவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுமே தவிர, நினைவாற்றல் மேம்படாது. எனவே, எந்த விஷயத்தையும் குழந்தைகளின் விளையாட்டுடனே கற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பைக் கொடுத்து, அதில் குழந்தைகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
இது பொதுவான தலைப்பாகவோ அல்லது பாடம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அதில், நீங்கள் கேள்வி கேட்டு, குழந்தைகளைப் பதிலளிக்க வைக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படுவது டன், எந்த பிரச்சினையாக இருந்தாலும், எளிதில் தீர்வு காணும் பக்குவமும் கிடைக்கும்.
படமாக மாற்றுங்கள்:
குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை வரி வடிவத்தில் சொல்லிக் கொடுக்காமல், திரையில் தோன்றும் படமாக ஓட்டிப் பார்க்கும் வகையில் பயிற்சி அளியுங்கள். இதன் வழியாக அவர்களால், நீங்கள் சொல்லும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். பாடத்தில் உள்ள வரிகள், சூத்திரங்கள் என அனைத்தையும் எளிதில் நினைவுப்படுத்த முடியும்.
உதாரணம் கொடுங்கள்:
நினைவாற்றலை மேம்படுத்துவதில் மற்றொரு பயிற்சி, உதாரணம் மூலம் கற்றுக்கொடுத்தல். பாடம் சார்ந்த விஷயங்களுக்கு, உங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறுங்கள். இதை குழந்தைகளால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அறிவாற்றலும் மேம்படும்.
ஆசிரியராக மாற்றுங்கள்:
நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது போன்று, குழந்தைகளையும் உங்களுக்கு ஆசிரியராக மாறி, சில விஷயங்களைக் கற்றுத்தர வையுங்கள். இதன் மூலம், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும். பிறருக்கு கற்பிக்கும்போது, இயல்பாகவே அறிவாற்லும் மேம்படும்.
அறிவு வரைபடம்:
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த வரைபடத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் திறன் உருவாகும். இதுவே, பாடத்தைப் புரிந்து கொள்வதிலும் செயல்பட வைக்கலாம்.
கேள்வி கேட்பதற்கு ஊக்குவித்தல்:
குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் முக்கியமான ஒன்று, அவர்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிப்பது. கேள்வி கேட்கும் முன், அது சார்ந்த விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள்.
பாடமாக இருந்தால், அந்த பாடத்தை முதலில் ஆழ்ந்து படித்து, அதில் எழும் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்க வேண்டும். இந்தப் பயிற்சியால், சிக்கலான விஷயங்களில் சிந்திப்பது, அதற்கு தீர்வுக்காண முடிவுகள் எடுப்பது குறித்த திறன் இளம் வயதிலேயே மேம்படும்.
செயல்வழி கற்றல்:
குழந்தைகளை ஒரே இடத்தில், அமர வைத்து கற்றுத் தரும் கல்வியால் அவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுமே தவிர, நினைவாற்றல் மேம்படாது. எனவே, எந்த விஷயத்தையும் குழந்தைகளின் விளையாட்டுடனே கற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பைக் கொடுத்து, அதில் குழந்தைகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
இது பொதுவான தலைப்பாகவோ அல்லது பாடம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அதில், நீங்கள் கேள்வி கேட்டு, குழந்தைகளைப் பதிலளிக்க வைக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படுவது டன், எந்த பிரச்சினையாக இருந்தாலும், எளிதில் தீர்வு காணும் பக்குவமும் கிடைக்கும்.
படமாக மாற்றுங்கள்:
குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை வரி வடிவத்தில் சொல்லிக் கொடுக்காமல், திரையில் தோன்றும் படமாக ஓட்டிப் பார்க்கும் வகையில் பயிற்சி அளியுங்கள். இதன் வழியாக அவர்களால், நீங்கள் சொல்லும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். பாடத்தில் உள்ள வரிகள், சூத்திரங்கள் என அனைத்தையும் எளிதில் நினைவுப்படுத்த முடியும்.
உதாரணம் கொடுங்கள்:
நினைவாற்றலை மேம்படுத்துவதில் மற்றொரு பயிற்சி, உதாரணம் மூலம் கற்றுக்கொடுத்தல். பாடம் சார்ந்த விஷயங்களுக்கு, உங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறுங்கள். இதை குழந்தைகளால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அறிவாற்றலும் மேம்படும்.
ஆசிரியராக மாற்றுங்கள்:
நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது போன்று, குழந்தைகளையும் உங்களுக்கு ஆசிரியராக மாறி, சில விஷயங்களைக் கற்றுத்தர வையுங்கள். இதன் மூலம், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும். பிறருக்கு கற்பிக்கும்போது, இயல்பாகவே அறிவாற்லும் மேம்படும்.
அறிவு வரைபடம்:
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த வரைபடத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் திறன் உருவாகும். இதுவே, பாடத்தைப் புரிந்து கொள்வதிலும் செயல்பட வைக்கலாம்.
உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. அப்படி பேசுவது குழந்தைகளிடத்தில் மன பலத்தை குறைத்துவிடும்.
குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது ஒப்பீடு செய்யாமல் இருப்பது. உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. அப்படி பேசுவது குழந்தைகளிடத்தில் மன பலத்தை குறைத்துவிடும். எந்த குழந்தையுடன் ஒப்பீடு செய்கிறோமோ அந்த குழந்தைகளை எதிரியாக நினைக்க தொடங்கிவிடுவார்கள்.
இதனால் அவர்கள் மீது இயல்பாகவே வெறுப்பு உண்டாகிவிடும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்தால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடக்கூடும். இதற்கு காரணம் பெற்றோர்தான்.
சிலர் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் பேசாமலேயே இருப்பார்கள். குழந்தைகளிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அவர்களிடம் வெளிப்படும் நல்ல குணங்களை, எண்ணங்களை, செயல்பாடுகளை ஊக்குவிப்பது நல்லது.
உதாரணமாக ஒரு வீட்டில் 10 வயதில் ஒரு சிறுமியும், 5 வயதில் மற்றொரு சிறுமியும் இருந்தால் 10 வயது சிறுமியைப் போல் 5 வயது சிறுமியின் பேச்சு, செயல்பாடும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ‘நீ ஏன் அப்படி பேச வில்லை... இப்படி பேசுவது சரியா?’ என்று குழந்தைகளை பெரியவர்கள் போல் நினைத்து பேசக்கூடாது. குழந்தைகளை குழந்தைகளாய் அவர்களது சுபாவத்தை வெளிப்படுத்த அனுமதித்தாலே போதுமானது.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை பெற்றோரிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் பேச்சை கேட்க வேண்டும். அவர்களிடத்தில் எரிச்சல்படக்கூடாது.
‘‘என்னை ஏன் எப்பவும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்..’ என்று கூறி அவர்களை மனம் நோகச்செய்யக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகள் உங்களிடம் பேச வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் உங்களை நாடுவது அன்பு, அரவணைப்பை எதிர்பார்த்துத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படி அவர்கள் நெருங்கி வரும்போது எரிச்சலாக பேசுவதன் மூலம் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும். பெற்றோரிடம் முழுமையான அன்பு கிடைக்காமல், பயம் உருவாக ஆரம்பித்துவிடும். ‘நாம் எதுவும் பேசினால் திட்டிவிடுவார்களோ?’ என்ற தயக்கம் அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். பெற்றோரை பார்த்தாலே பயந்த சுபாவம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். எதிர்காலத்திலும் இந்த பயம் தொடரலாம்.
பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்திலோ, கோபத்திலோ, டென்ஷனாகவோ இருக்கும் போது குழந்தைகள் நெருங்கி வந்தால் எரிச்சல் கொள்ளாமல் பக்குவமாக பேசுவது நல்லது. அது குழந்தைகளிடத்தில் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிக ரிக்கச்செய்யும்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை மீது ஏதாவது ஒரு அடையாளத்தை பதித்துவிடுவார்கள். ‘இவனுக்கு படிப்பு வராது. டான்ஸ் ஆடுவதற்குத்தான் லாயக்கு.. இவன் நன்றாக ஓவியம் வரைவான்' என்று தாங்களாகவே முடிவு செய்து குழந்தைகளிடத்தில் அதனை திணிக்க முயற்சிப்பார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஏதேனும் தனித்திறன்களை கொண்டிருந்தால் அவர்களை போல் தன் பிள்ளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதுவும் தவறான பழக்கம். அடுத்த வீட்டு குழந்தைகளை புகழ்ந்து பேசி தங்கள் குழந்தைகளை மட்டம் தட்டவும் செய்வார்கள். அப்படி பேசுவது அவர்களிடத்தில் வெளிப்படும் தனித்திறன்களை மூழ்கடிக்க செய்துவிடும்.
உங்களுடைய குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்கள், திறமைகளை புகழ்ந்து பேசி அவர்களை மேலும் மேம்படுத்தலாம். அவர்களிடத்தில் சின்ன குறைகள் இருக்கலாம். சில குழந்தைகள் ரொம்ப நேரம் தூங்கலாம். சிலர் அலட்சியமாக இருக்கலாம். இதை மற்றவர்களிடம் குறையாக சொல்லக் கூடாது. குழந்தைகளிடம் சின்னச்சின்ன குறும்புகளும், விளையாட்டுத்தனமும் அதிகமாக இருக்கும். குழந்தைகள் என்றாலே அப்படித்தான். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் குழந்தைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்களின் மனம் நோகும்படி பேசக் கூடாது.
குழந்தைகளிடம் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கூடாது. அவர்கள் எதாவது தவறு செய்யும்போது. ‘உன்னோட வயசில... உங்கப்பாவும் இப்படித்தான் நடந்துகொண்டாராம்’ என்று பேசுவது அபத்தமான விஷயம். அது குழந்தைகள் செய்யும் தவறு களுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். அதுபோன்ற தவறுகளை செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட தொடங்கிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களுக்கு பெரியவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இதனால் அவர்கள் மீது இயல்பாகவே வெறுப்பு உண்டாகிவிடும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்தால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடக்கூடும். இதற்கு காரணம் பெற்றோர்தான்.
சிலர் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் பேசாமலேயே இருப்பார்கள். குழந்தைகளிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அவர்களிடம் வெளிப்படும் நல்ல குணங்களை, எண்ணங்களை, செயல்பாடுகளை ஊக்குவிப்பது நல்லது.
உதாரணமாக ஒரு வீட்டில் 10 வயதில் ஒரு சிறுமியும், 5 வயதில் மற்றொரு சிறுமியும் இருந்தால் 10 வயது சிறுமியைப் போல் 5 வயது சிறுமியின் பேச்சு, செயல்பாடும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ‘நீ ஏன் அப்படி பேச வில்லை... இப்படி பேசுவது சரியா?’ என்று குழந்தைகளை பெரியவர்கள் போல் நினைத்து பேசக்கூடாது. குழந்தைகளை குழந்தைகளாய் அவர்களது சுபாவத்தை வெளிப்படுத்த அனுமதித்தாலே போதுமானது.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை பெற்றோரிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் பேச்சை கேட்க வேண்டும். அவர்களிடத்தில் எரிச்சல்படக்கூடாது.
‘‘என்னை ஏன் எப்பவும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்..’ என்று கூறி அவர்களை மனம் நோகச்செய்யக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகள் உங்களிடம் பேச வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் உங்களை நாடுவது அன்பு, அரவணைப்பை எதிர்பார்த்துத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படி அவர்கள் நெருங்கி வரும்போது எரிச்சலாக பேசுவதன் மூலம் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும். பெற்றோரிடம் முழுமையான அன்பு கிடைக்காமல், பயம் உருவாக ஆரம்பித்துவிடும். ‘நாம் எதுவும் பேசினால் திட்டிவிடுவார்களோ?’ என்ற தயக்கம் அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். பெற்றோரை பார்த்தாலே பயந்த சுபாவம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். எதிர்காலத்திலும் இந்த பயம் தொடரலாம்.
பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்திலோ, கோபத்திலோ, டென்ஷனாகவோ இருக்கும் போது குழந்தைகள் நெருங்கி வந்தால் எரிச்சல் கொள்ளாமல் பக்குவமாக பேசுவது நல்லது. அது குழந்தைகளிடத்தில் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிக ரிக்கச்செய்யும்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை மீது ஏதாவது ஒரு அடையாளத்தை பதித்துவிடுவார்கள். ‘இவனுக்கு படிப்பு வராது. டான்ஸ் ஆடுவதற்குத்தான் லாயக்கு.. இவன் நன்றாக ஓவியம் வரைவான்' என்று தாங்களாகவே முடிவு செய்து குழந்தைகளிடத்தில் அதனை திணிக்க முயற்சிப்பார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஏதேனும் தனித்திறன்களை கொண்டிருந்தால் அவர்களை போல் தன் பிள்ளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதுவும் தவறான பழக்கம். அடுத்த வீட்டு குழந்தைகளை புகழ்ந்து பேசி தங்கள் குழந்தைகளை மட்டம் தட்டவும் செய்வார்கள். அப்படி பேசுவது அவர்களிடத்தில் வெளிப்படும் தனித்திறன்களை மூழ்கடிக்க செய்துவிடும்.
உங்களுடைய குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்கள், திறமைகளை புகழ்ந்து பேசி அவர்களை மேலும் மேம்படுத்தலாம். அவர்களிடத்தில் சின்ன குறைகள் இருக்கலாம். சில குழந்தைகள் ரொம்ப நேரம் தூங்கலாம். சிலர் அலட்சியமாக இருக்கலாம். இதை மற்றவர்களிடம் குறையாக சொல்லக் கூடாது. குழந்தைகளிடம் சின்னச்சின்ன குறும்புகளும், விளையாட்டுத்தனமும் அதிகமாக இருக்கும். குழந்தைகள் என்றாலே அப்படித்தான். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் குழந்தைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்களின் மனம் நோகும்படி பேசக் கூடாது.
குழந்தைகளிடம் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கூடாது. அவர்கள் எதாவது தவறு செய்யும்போது. ‘உன்னோட வயசில... உங்கப்பாவும் இப்படித்தான் நடந்துகொண்டாராம்’ என்று பேசுவது அபத்தமான விஷயம். அது குழந்தைகள் செய்யும் தவறு களுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். அதுபோன்ற தவறுகளை செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட தொடங்கிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களுக்கு பெரியவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
குழந்தைகளை மேம்படுத்த நீங்கள் ஒரு வன்முறை அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், குழந்தையை மேம்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் அவர்களை மேலும் கோபப்படுத்துகிறீர்கள்.
கோபம் என்பது ஒருவருடைய உள்ளத்தில் வாழும் ஒரு வகை உணர்ச்சி. இது ஒரு வகையான எதிர்மறை உணர்ச்சியாகும், இது நிறைய குற்ற உணர்ச்சி, மனக்கசப்பு, பொறாமை போன்றவற்றை உள்ளடக்கியது. கோபம் நபரின் நேர்மறையான சிந்தனையை கிட்டத்தட்ட கொல்லும். இப்போது குழந்தைகள் மிகவும் பிடிவாதமாகவும் கோபமாகவும் மாறிவருகிறார்கள். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கோபத்தை சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தைகளின் கோபத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன.
குழந்தை தனது கோபத்தை வெளிப்படுத்தட்டும்
சில நேரங்களில் மனதில் இருந்து வெளியேறுவதும் நல்லது. உங்கள் பிள்ளை மிகவும் கோபமடைந்து கால்களை இடிக்கிறான் என்றால், அவனுடைய கோபத்தை வெளியே எடுக்க ஒரு தலையணையை அவனுக்குக் கொடு. அதனால் அவர் நுழைந்த அளவுக்கு தலையணையை அடித்து கோபத்தை அமைதிப்படுத்த முடியும். இது வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் அபாயத்தை எழுப்புகிறது.
உங்களை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் குழந்தைக்கு நேரம் கொடுங்கள்
பெற்றோர் ஒருபோதும் ஓய்வூதிய அளவைக் குறைக்கக் கூடாது. குழந்தைகள் கோபப்படும்போதெல்லாம், தங்களைத் தாங்களே கோபப்படுத்துவதற்குப் பதிலாக, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒரு நாள் சோர்வுக்குப் பிறகு நீங்கள் சோர்வாக இருக்கும்போது, பின்னர் சிறியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் இந்த விஷயத்திலும் குழந்தைகள் கோபப்படுகிறார்கள். குழந்தைகள் பார்ப்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் குழந்தைகளுக்கு நேரம் கொடுங்கள்.
உங்களை ஆக்ரோஷமாக நடத்துவதைத் தவிர்க்கவும்
குழந்தை எப்போது தவறு செய்தாலும், கையை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை மேம்படுத்த நீங்கள் ஒரு வன்முறை அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், குழந்தையை மேம்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் அவர்களை மேலும் கோபப்படுத்துகிறீர்கள். அதனால்தான் குழந்தைகளை எப்போதும் அன்போடு நடத்த வேண்டும்.
குழந்தைக்கு அன்பு கொடுங்கள்
பல முறை குழந்தைகள் மிகவும் கோபமாக இருக்கும்போது, அவை உருகி, கொஞ்சம் காதல் கிடைத்தவுடன் காலில் இருந்து கால் வரை அழ ஆரம்பிக்கின்றன. உங்கள் குழந்தையை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லுங்கள். கன்னங்களில் அவருக்கு அன்பைக் கொடுங்கள், அவருடைய துன்பத்தைப் பற்றி மிகவும் அன்பாக அவரிடம் கேளுங்கள். காதலில் நிறைய சக்தி இருக்கிறது.
குழந்தைகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்
குழந்தைகள் தங்களை கவனத்தை ஈர்க்க கோபப்படத் தொடங்குகிறார்கள், குழந்தைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குழந்தைகள் உணரும்போது, அவர்கள் கோபப்படுகிறார்கள், தங்களைத் தாங்களே கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். தங்கள் குழந்தையை கோபத்திலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு நிறைய நேரம் கொடுங்கள்.
குழந்தை தனது கோபத்தை வெளிப்படுத்தட்டும்
சில நேரங்களில் மனதில் இருந்து வெளியேறுவதும் நல்லது. உங்கள் பிள்ளை மிகவும் கோபமடைந்து கால்களை இடிக்கிறான் என்றால், அவனுடைய கோபத்தை வெளியே எடுக்க ஒரு தலையணையை அவனுக்குக் கொடு. அதனால் அவர் நுழைந்த அளவுக்கு தலையணையை அடித்து கோபத்தை அமைதிப்படுத்த முடியும். இது வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் அபாயத்தை எழுப்புகிறது.
உங்களை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் குழந்தைக்கு நேரம் கொடுங்கள்
பெற்றோர் ஒருபோதும் ஓய்வூதிய அளவைக் குறைக்கக் கூடாது. குழந்தைகள் கோபப்படும்போதெல்லாம், தங்களைத் தாங்களே கோபப்படுத்துவதற்குப் பதிலாக, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒரு நாள் சோர்வுக்குப் பிறகு நீங்கள் சோர்வாக இருக்கும்போது, பின்னர் சிறியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் இந்த விஷயத்திலும் குழந்தைகள் கோபப்படுகிறார்கள். குழந்தைகள் பார்ப்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் குழந்தைகளுக்கு நேரம் கொடுங்கள்.
உங்களை ஆக்ரோஷமாக நடத்துவதைத் தவிர்க்கவும்
குழந்தை எப்போது தவறு செய்தாலும், கையை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை மேம்படுத்த நீங்கள் ஒரு வன்முறை அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், குழந்தையை மேம்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் அவர்களை மேலும் கோபப்படுத்துகிறீர்கள். அதனால்தான் குழந்தைகளை எப்போதும் அன்போடு நடத்த வேண்டும்.
குழந்தைக்கு அன்பு கொடுங்கள்
பல முறை குழந்தைகள் மிகவும் கோபமாக இருக்கும்போது, அவை உருகி, கொஞ்சம் காதல் கிடைத்தவுடன் காலில் இருந்து கால் வரை அழ ஆரம்பிக்கின்றன. உங்கள் குழந்தையை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லுங்கள். கன்னங்களில் அவருக்கு அன்பைக் கொடுங்கள், அவருடைய துன்பத்தைப் பற்றி மிகவும் அன்பாக அவரிடம் கேளுங்கள். காதலில் நிறைய சக்தி இருக்கிறது.
குழந்தைகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்
குழந்தைகள் தங்களை கவனத்தை ஈர்க்க கோபப்படத் தொடங்குகிறார்கள், குழந்தைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குழந்தைகள் உணரும்போது, அவர்கள் கோபப்படுகிறார்கள், தங்களைத் தாங்களே கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். தங்கள் குழந்தையை கோபத்திலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு நிறைய நேரம் கொடுங்கள்.
பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும்கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.
உங்கள் குழந்தை விழித்திருக்கும்போது மற்றும் கண்காணிக்கப்படும்போது நீங்கள் அவளைக் குப்புறப் படுக்க வைக்கலாம். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மொத்தமாக 1 1/2 மணி நேரம் (90 நிமிடங்கள்) குப்புறப் படுத்திருக்கவேண்டும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும்கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.
உங்கள் குழந்தை விழித்திருக்கும்போது மற்றும் கண்காணிக்கப்படும்போது நீங்கள் அவளைக் குப்புறப் படுக்க வைக்கலாம். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மொத்தமாக 1 1/2 மணி நேரம் (90 நிமிடங்கள்) குப்புறப் படுத்திருக்கவேண்டும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும்கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
சுற்றுச்சூழலை நுகர்ந்தபடி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நகர்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் மட்டுமல்ல கிராமப்புற குழந்தைகளும் நவீன கருவிகளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன், லேப்டாப், டேப்லட், டி.வி., வீடியோ கேம் போன்றவைதான் அவர்களின் பிரதான பொழுதுபோக்காக விளங்குகின்றன. இது நல்லதல்ல என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகள் திறந்தவெளியில் ஓடியாடி விளையாட வேண்டும். ஏன் தெரியுமா?
வீட்டுக்குள்ளேயே முடங்கி திரை காட்சிகளில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளைவிட திறந்த வெளியில் விளையாடும் குழந்தை களின் பார்வைத்திறன் மேம்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் திறந்த வெளியில் குழந்தைகள் விளையாடு வதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
வெளியே சென்று விளையாடும் அல்லது நேரத்தை செலவிடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட சமூகம் சார்ந்த விஷயங்களை அதிகமாக தெரிந்து கொள்கிறார்கள், சமூகம் சார்ந்த சிந்தனை திறனும் அவர்களிடம் மேம்படுவதாக குழந்தைகள் நல நிபுணர்கள் கருதுகிறார்கள். தன்னம்பிக்கை, நடத்தை, கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனும் அவர்களிடம் மேம்படுகிறது.
வீட்டுக்குள்ளேயே இருக்காமல் அடிக்கடி வெளியே சென்று வரும் குழந்தைகள் பெற்றோர்களை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களின் தனித் திறன், அறிவாற்றல் திறன் வளரும். சமூகத்தில் சிறந்த குழந்தையாக வளர்வார்கள்.
வீட்டுக்குள் நான்கு சுவர்களுக்குள் நேரத்தை போக்காமல் நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாது. சுற்றுச்சூழலை நுகர்ந்தபடி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு ஏற்படும் வைட்டமின் டி பற்றாக்குறையை வெளியே சென்று விளையாடுவதன் மூலம் ஈடுகட்ட முடியும். எதிர் காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சினைகள், இதயநோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பதற்கு வைட்டமின் டியின் பங்களிப்பு இன்றியமையாதது. சூரியன்தான் வைட்டமின் டியை வழங்கும் இயற்கை சக்தியாக இருப்பதால் அதன் வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாட வேண்டியது அவசியமானதாகும்.
வெளிக்காற்றை சுவாசித்தபடி ஜாக்கிங் செய்வது குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கச்செய்யும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏ.டி.எச்.டி. எனும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வீடு மற்றும் பள்ளிக்கூடத்தில் கவனமின்றி செயல்படுவது, மற்றவர்களுடன் பேச மறுப்பது, பொருட்களை எங்காவது மறந்து வைப்பது, திடீரென கூச்சலிடுவது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். திறந்த வெளி காற்றில் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு நேராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி திரை காட்சிகளில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளைவிட திறந்த வெளியில் விளையாடும் குழந்தை களின் பார்வைத்திறன் மேம்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் திறந்த வெளியில் குழந்தைகள் விளையாடு வதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
வெளியே சென்று விளையாடும் அல்லது நேரத்தை செலவிடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட சமூகம் சார்ந்த விஷயங்களை அதிகமாக தெரிந்து கொள்கிறார்கள், சமூகம் சார்ந்த சிந்தனை திறனும் அவர்களிடம் மேம்படுவதாக குழந்தைகள் நல நிபுணர்கள் கருதுகிறார்கள். தன்னம்பிக்கை, நடத்தை, கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனும் அவர்களிடம் மேம்படுகிறது.
வீட்டுக்குள்ளேயே இருக்காமல் அடிக்கடி வெளியே சென்று வரும் குழந்தைகள் பெற்றோர்களை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களின் தனித் திறன், அறிவாற்றல் திறன் வளரும். சமூகத்தில் சிறந்த குழந்தையாக வளர்வார்கள்.
வீட்டுக்குள் நான்கு சுவர்களுக்குள் நேரத்தை போக்காமல் நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாது. சுற்றுச்சூழலை நுகர்ந்தபடி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு ஏற்படும் வைட்டமின் டி பற்றாக்குறையை வெளியே சென்று விளையாடுவதன் மூலம் ஈடுகட்ட முடியும். எதிர் காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சினைகள், இதயநோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பதற்கு வைட்டமின் டியின் பங்களிப்பு இன்றியமையாதது. சூரியன்தான் வைட்டமின் டியை வழங்கும் இயற்கை சக்தியாக இருப்பதால் அதன் வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாட வேண்டியது அவசியமானதாகும்.
வெளிக்காற்றை சுவாசித்தபடி ஜாக்கிங் செய்வது குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கச்செய்யும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏ.டி.எச்.டி. எனும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வீடு மற்றும் பள்ளிக்கூடத்தில் கவனமின்றி செயல்படுவது, மற்றவர்களுடன் பேச மறுப்பது, பொருட்களை எங்காவது மறந்து வைப்பது, திடீரென கூச்சலிடுவது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். திறந்த வெளி காற்றில் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு நேராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பெண் குழந்தை மூலம் தாய்க்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தோழி போல மகளிடம் பழகும்போது அவர்கள் அடையும் ஆனந்தம் அலாதியானது.
பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாகுபாடின்றி அன்பை பொழிபவள் தாய். தன் நலன் பாராது தாய்மை உணர்வுடன் குழந்தையை வளர்க்கும் சுபாவம் பெண்மைக்கு மட்டுமே உண்டு. பெண் குழந்தைகள் தந்தையிடம் அதிக பாசமாக இருப்பார்கள் என்ற கருத்து நிலவினாலும், அவர்கள் ஒருபோதும் தாயை விட்டுக்கொடுப்பதில்லை. தாய்க்கும், மகளுக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. பெண் குழந்தை மூலம் தாய்க்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தோழி போல மகளிடம் பழகும்போது அவர்கள் அடையும் ஆனந்தம் அலாதியானது.
* பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் பொழுதை போக்குவதற்கோ, தங்கள் உணர்வுகளை பரிமாறுவதற்கோ தோழிகள் யாரையும் தேடவேண்டியிருக்காது. துயரமான சூழலிலும், சந்தோஷமான தருணங்களிலும் மனதுக்கு பிடித்தமானவர்களை கூட தேட வேண்டிய அவசியமிருக்காது. மகளையே தோழியாக்கி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும். சில சமயங்களில் கணவரோ, மகனோ, மற்ற குடும்ப உறுப்பினர்களோ குடும்ப தலைவியின் பேச்சுக்கோ, உணர்வுக்கோ உரிய மதிப்பளிக்காமல் போகலாம். ஆனால் மகள் அப்படியில்லை. தாயின் மன நிலையை புரிந்து கொண்டு நிச்சயமாக ஆறுதல் அளிப்பார். தாயின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்பார். ஆலோசனையும் வழங்குவார்.
* சிறுவயதில் கலைப்படைப்புகளின் மீது ஆர்வம் இருந்திருக்கலாம். ஆனால் குடும்ப சூழல் அதனை கற்றுக்கொண்டு அதில் சிறப்பான பங்களிப்பை வழங்க அனுமதித்திருக்காது. தனது கலை ஆர்வத்தை மகனை விட மகளிடம் எளிதில் கொண்டு சேர்த்துவிட முடியும். இந்த விஷயத்தில் ஆண்களுக்கு பொறுமையும், நிதானமும் இருக்காது. பெண்கள் அப்படியில்லை. தாயின் அருகில் இருந்து கற்றுக்கொள்வதற்கு மகள் ஆர்வம் காட்டுவார். தையல், சமையல், அலங்காரம் என எதில் ஆர்வம் இருந்தாலும், அதே ஆர்வத்தை மகளிடமும் எளிதாக புகுத்திவிட முடியும். இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக அதில் கவனம் செலுத்தவும் முடியும்.
* ஷாப்பிங் விஷயத்தில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். கணவருடனோ, மகனுடனோ ஷாப்பிங் செல்வதை விட மகளுடன் செல்வதற்குத்தான் தாய்மார்கள் விரும்புவார்கள். ஏனெனில் ஷாப்பிங் செய்யும்போது ஆண்கள் விலகியே இருப்பார்கள். தங்கள் விருப்பங்களை வெளிக்காட்டவும் மாட்டார்கள். ஆனால் மகள் தன் கருத்துக்களை தயக்கமின்றி பதிவு செய்வார். தாயுடன் மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்வார். தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை இருவரும் மன நிறைவோடு தேர்வு செய்யலாம்.
* பெண் குழந்தைகள் இருந்தால் வீடே கலகலப்பாக இருக்கும் என்பார்கள். ஓய்வு நேரத்தை இனிமையாக கழிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொள்வார்கள். மகளுடன் இணைந்து ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனை தயக்கமின்றி செய்யலாம்.
* வெளியிடங்களுக்கு புறப்பட்டு செல்லும்போது அலங்கார விஷயத்தில் மகளின் ஒத்துழைப்பை பெறலாம். விரைவாகவே அலங்காரத்தை முடித்துவிடவும் செய்யலாம்.
* மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் நவீன பேஷன்கள் குறித்து மகளிடம் விவாதித்து தெரிந்து கொள்ளலாம்.
* புதிதாக வாங்கிய ஆடைகள் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை மகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும், எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களை மகள் தான் தயக்கமின்றி சொல்வார். ஆனால், கணவர் அல்லது மகனிடம் இக்கேள்விகளைக் கேட்டால் ‘சூப்பராக இருக்கிறது’ என்ற ஒரே பதில்தான் வரும். நிறை, குறைகளை மகளிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
* பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் பொழுதை போக்குவதற்கோ, தங்கள் உணர்வுகளை பரிமாறுவதற்கோ தோழிகள் யாரையும் தேடவேண்டியிருக்காது. துயரமான சூழலிலும், சந்தோஷமான தருணங்களிலும் மனதுக்கு பிடித்தமானவர்களை கூட தேட வேண்டிய அவசியமிருக்காது. மகளையே தோழியாக்கி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும். சில சமயங்களில் கணவரோ, மகனோ, மற்ற குடும்ப உறுப்பினர்களோ குடும்ப தலைவியின் பேச்சுக்கோ, உணர்வுக்கோ உரிய மதிப்பளிக்காமல் போகலாம். ஆனால் மகள் அப்படியில்லை. தாயின் மன நிலையை புரிந்து கொண்டு நிச்சயமாக ஆறுதல் அளிப்பார். தாயின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்பார். ஆலோசனையும் வழங்குவார்.
* சிறுவயதில் கலைப்படைப்புகளின் மீது ஆர்வம் இருந்திருக்கலாம். ஆனால் குடும்ப சூழல் அதனை கற்றுக்கொண்டு அதில் சிறப்பான பங்களிப்பை வழங்க அனுமதித்திருக்காது. தனது கலை ஆர்வத்தை மகனை விட மகளிடம் எளிதில் கொண்டு சேர்த்துவிட முடியும். இந்த விஷயத்தில் ஆண்களுக்கு பொறுமையும், நிதானமும் இருக்காது. பெண்கள் அப்படியில்லை. தாயின் அருகில் இருந்து கற்றுக்கொள்வதற்கு மகள் ஆர்வம் காட்டுவார். தையல், சமையல், அலங்காரம் என எதில் ஆர்வம் இருந்தாலும், அதே ஆர்வத்தை மகளிடமும் எளிதாக புகுத்திவிட முடியும். இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக அதில் கவனம் செலுத்தவும் முடியும்.
* ஷாப்பிங் விஷயத்தில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். கணவருடனோ, மகனுடனோ ஷாப்பிங் செல்வதை விட மகளுடன் செல்வதற்குத்தான் தாய்மார்கள் விரும்புவார்கள். ஏனெனில் ஷாப்பிங் செய்யும்போது ஆண்கள் விலகியே இருப்பார்கள். தங்கள் விருப்பங்களை வெளிக்காட்டவும் மாட்டார்கள். ஆனால் மகள் தன் கருத்துக்களை தயக்கமின்றி பதிவு செய்வார். தாயுடன் மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்வார். தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை இருவரும் மன நிறைவோடு தேர்வு செய்யலாம்.
* பெண் குழந்தைகள் இருந்தால் வீடே கலகலப்பாக இருக்கும் என்பார்கள். ஓய்வு நேரத்தை இனிமையாக கழிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொள்வார்கள். மகளுடன் இணைந்து ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனை தயக்கமின்றி செய்யலாம்.
* வெளியிடங்களுக்கு புறப்பட்டு செல்லும்போது அலங்கார விஷயத்தில் மகளின் ஒத்துழைப்பை பெறலாம். விரைவாகவே அலங்காரத்தை முடித்துவிடவும் செய்யலாம்.
* மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் நவீன பேஷன்கள் குறித்து மகளிடம் விவாதித்து தெரிந்து கொள்ளலாம்.
* புதிதாக வாங்கிய ஆடைகள் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை மகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும், எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களை மகள் தான் தயக்கமின்றி சொல்வார். ஆனால், கணவர் அல்லது மகனிடம் இக்கேள்விகளைக் கேட்டால் ‘சூப்பராக இருக்கிறது’ என்ற ஒரே பதில்தான் வரும். நிறை, குறைகளை மகளிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
இதையும் படிக்கலாம்...அழுது அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிப்பது எப்படி?
பிறர் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
குழந்தை அழுது அடம்பிடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான விஷயம். அது அவர்களுடைய மனநிலையை பாதிக்கும். பெற்றோர் மீது நம்பிக்கை இழக்கவும் வைத்துவிடும். ‘நீ அழுது அடம்பிடித்தாலும் நீ விரும்பியது எதுவும் நடக்காது’ என்று கூறி குழந்தைகளுடன் விவாதம் செய்யவும் கூடாது. அவர்களுடைய செயல் தவறானது என்பதை புரிய வைக்க முயற்சித்தாலும் அதனை கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள்.
அந்த சமயத்தில் குழந்தை களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேச வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயத்தை பற்றி பேசி, இயல்பு நிலைக்கு கொண்டு வர வழி காண வேண்டும்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. பிறர் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும். தன்னிடம் இருப்பதை மற்ற குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அது அடம்பிடிப்பதை தவிர்க்க உதவும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளிடம், ‘நீ அழாமல் சாப்பிட்டால் உனக்கு பிடித்தமான பிஸ்கெட், சாக்லேட் வாங்கி தருவேன்’ என்று கூறினால், பிடிவாதத்தை தளர்த்துவார்கள். அப்போது அன்பாக பேசி, அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை கூறி சாப்பிட வைக்கலாம். சாப்பிட்டதும் மறக்காமல் வாக்குறுதி அளித்த பொருளை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும். அதுபோல் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களை பாராட்டவும் வேண்டும். கூடவே பரிசு கொடுத்தும் ஊக்குவிக்கலாம். குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
குழந்தை அழுது அடம்பிடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான விஷயம். அது அவர்களுடைய மனநிலையை பாதிக்கும். பெற்றோர் மீது நம்பிக்கை இழக்கவும் வைத்துவிடும். ‘நீ அழுது அடம்பிடித்தாலும் நீ விரும்பியது எதுவும் நடக்காது’ என்று கூறி குழந்தைகளுடன் விவாதம் செய்யவும் கூடாது. அவர்களுடைய செயல் தவறானது என்பதை புரிய வைக்க முயற்சித்தாலும் அதனை கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள்.
அந்த சமயத்தில் குழந்தை களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேச வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயத்தை பற்றி பேசி, இயல்பு நிலைக்கு கொண்டு வர வழி காண வேண்டும்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. பிறர் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும். தன்னிடம் இருப்பதை மற்ற குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அது அடம்பிடிப்பதை தவிர்க்க உதவும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளிடம், ‘நீ அழாமல் சாப்பிட்டால் உனக்கு பிடித்தமான பிஸ்கெட், சாக்லேட் வாங்கி தருவேன்’ என்று கூறினால், பிடிவாதத்தை தளர்த்துவார்கள். அப்போது அன்பாக பேசி, அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை கூறி சாப்பிட வைக்கலாம். சாப்பிட்டதும் மறக்காமல் வாக்குறுதி அளித்த பொருளை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும். அதுபோல் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களை பாராட்டவும் வேண்டும். கூடவே பரிசு கொடுத்தும் ஊக்குவிக்கலாம். குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் நியூட்ரிஷியன்கள்.
குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் நியூட்ரிஷியன்கள்.
பிஸ்கெட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.
பிஸ்கெட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், உலர் பழ வகைகள், வேகவைத்த பயறு வகைகள், முட்டை, தயிர் போன்றவற்றை சுழற்சி முறையில் கொடுக்கலாம்.
குழந்தைகளை சாப்பிட வைப்பதே தனிக்கலைதான்! அவர்களுக்கு எந்த உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு அதற்கேற்ப உணவுகளை தயார் செய்து கொடுங்கள். அவர்கள் சாப்பிடும்போது பிடிவாதம் பிடிக்காமல் ரசித்து ருசிக்க வேண்டும்.
எப்போதும் பால் மட்டுமே பருக கொடுக்கக்கூடாது. நாளடைவில் பால் என்றாலே அவர்களுக்கு அலர்ஜியாகி விடும். அதனால் பாலுடன் சத்துமாவு, தேன், நாட்டு சக்கரை என ஏதாவது ஒன்றை கலந்து கொடுக்கலாம். வெண்ணெய், நெய், தயிர் போன்ற பால் பொருட்களிலும் உணவு தயாரித்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு நீங்கள் ஓய்வாக இருக்கும் சமயத்தில் உணவு ஊட்டுவதற்கு முயற்சிக்காதீர்கள். குழந்தை களுக்கு எந்த சமயத்தில் பசி உணர்வு எட்டிப்பார்க்கும் என்பதை அறிந்து உணவு கொடுங்கள். அவர்களுக்கு பசிக்காத நேரத்தில் சாப்பிடுமாறு நிர்ப்பந்திக்க கூடாது. சிறு வயதில் இருந்தே எல்லா வகையான உணவுகளையும் சாப்பிட பழக்குங்கள்.
குழந்தைகள் பெரியவர்களை பார்த்துதான் வளர்வார்கள். அவர்களை போல் தாமும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். பெரியவர்களோடு சேர்ந்து சாப்பிடவும் ஆசைப் படுவார்கள். அதனை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு தனியாக உணவு ஊட்டினால் தன்னை புறக்கணிப்பதாக கருதுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் ஒருவேளையாவது இந்த வழக்கத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை பெரியவர்களும் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டும். அதை பார்த்ததும் குழந்தைகளுக்கு சாப்பிடும் ஆர்வம் அதிகரித்துவிடும். அதனால் எந்த உணவு பொருளாக இருந்தாலும் குழந்தைகள் முன்பாக சாப்பிட வேண்டும். அதை பார்த்து அவர்களும் சாப்பிட தொடங்கிவிடுவார்கள்.
டி.வி., செல்போன் பார்த்துக் கொண்டே உணவு சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் உணவின் அளவு குறைந்து டி.வி., செல்போன் மீது மோகம் அதிகரித்துவிடும். பருவ கால நிலைகளுக்கு ஏற்ப உணவை வேறுபடுத்தி கொடுக்கலாம். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றலாம்.
பிஸ்கட், சாக்லேட், பேக்கரி வகை உணவுகளை அதிகம் ருசித்து சாப்பிட்டால் பசி அடங்கி விடும். இவைகளால் உடலுக்கு எந்த பயனும் இல்லை. குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், உலர் பழ வகைகள், வேகவைத்த பயறு வகைகள், முட்டை, தயிர் போன்றவற்றை சுழற்சி முறையில் கொடுக்கலாம். குளிர்பானம், டீ, காபி போன்றவற்றை பழக்கப்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக பழ ஜூஸ் கொடுக்கலாம்.
குழந்தைகள் கோபமோ, மன அழுத்தமோ கொண்டிருக்கும் சமயத்தில் உணவு கொடுத்தால் சாப்பிட மறுத்து, பிடிவாதம் பிடிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சாப்பிட வைப்பதற்கு முன்பு, அவர்களை ஜாலியான மன நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
எப்போதும் பால் மட்டுமே பருக கொடுக்கக்கூடாது. நாளடைவில் பால் என்றாலே அவர்களுக்கு அலர்ஜியாகி விடும். அதனால் பாலுடன் சத்துமாவு, தேன், நாட்டு சக்கரை என ஏதாவது ஒன்றை கலந்து கொடுக்கலாம். வெண்ணெய், நெய், தயிர் போன்ற பால் பொருட்களிலும் உணவு தயாரித்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு நீங்கள் ஓய்வாக இருக்கும் சமயத்தில் உணவு ஊட்டுவதற்கு முயற்சிக்காதீர்கள். குழந்தை களுக்கு எந்த சமயத்தில் பசி உணர்வு எட்டிப்பார்க்கும் என்பதை அறிந்து உணவு கொடுங்கள். அவர்களுக்கு பசிக்காத நேரத்தில் சாப்பிடுமாறு நிர்ப்பந்திக்க கூடாது. சிறு வயதில் இருந்தே எல்லா வகையான உணவுகளையும் சாப்பிட பழக்குங்கள்.
குழந்தைகள் பெரியவர்களை பார்த்துதான் வளர்வார்கள். அவர்களை போல் தாமும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். பெரியவர்களோடு சேர்ந்து சாப்பிடவும் ஆசைப் படுவார்கள். அதனை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு தனியாக உணவு ஊட்டினால் தன்னை புறக்கணிப்பதாக கருதுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் ஒருவேளையாவது இந்த வழக்கத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை பெரியவர்களும் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டும். அதை பார்த்ததும் குழந்தைகளுக்கு சாப்பிடும் ஆர்வம் அதிகரித்துவிடும். அதனால் எந்த உணவு பொருளாக இருந்தாலும் குழந்தைகள் முன்பாக சாப்பிட வேண்டும். அதை பார்த்து அவர்களும் சாப்பிட தொடங்கிவிடுவார்கள்.
டி.வி., செல்போன் பார்த்துக் கொண்டே உணவு சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் உணவின் அளவு குறைந்து டி.வி., செல்போன் மீது மோகம் அதிகரித்துவிடும். பருவ கால நிலைகளுக்கு ஏற்ப உணவை வேறுபடுத்தி கொடுக்கலாம். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றலாம்.
பிஸ்கட், சாக்லேட், பேக்கரி வகை உணவுகளை அதிகம் ருசித்து சாப்பிட்டால் பசி அடங்கி விடும். இவைகளால் உடலுக்கு எந்த பயனும் இல்லை. குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், உலர் பழ வகைகள், வேகவைத்த பயறு வகைகள், முட்டை, தயிர் போன்றவற்றை சுழற்சி முறையில் கொடுக்கலாம். குளிர்பானம், டீ, காபி போன்றவற்றை பழக்கப்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக பழ ஜூஸ் கொடுக்கலாம்.
குழந்தைகள் கோபமோ, மன அழுத்தமோ கொண்டிருக்கும் சமயத்தில் உணவு கொடுத்தால் சாப்பிட மறுத்து, பிடிவாதம் பிடிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சாப்பிட வைப்பதற்கு முன்பு, அவர்களை ஜாலியான மன நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.
சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். உதாரணமாக இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளை சொல்லலாம். இரண்டு மூன்று வாக்கியங்களை பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதுக்குள் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.
அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.
நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.
ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.
செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.
அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.
நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.
ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.
செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
ஆக்கப்பூர்வமான விஷயங்களில் குழந்தைகளுக்கு கலை ஆர்வத்தை புகுத்துவதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்தெடுக்கலாம்.
குழந்தைகளை அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதற்கான தேடலை தொடர்பவர்களாகவும் ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. அவர்கள் எந்தெந்த விஷயங்களை செய்வதற்கு கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது. வளரும் குழந்தைகளிடத்தில் இயல்பாகவே கலை ஆர்வம் மிகுந்திருக்கும். சுவரில் கிறுக்கலில் ஆரம்பித்து சித்திரம் வரைவது வரை அவர்களிடத்தில் கலை ரசனை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் அத்தகைய கலை ஆர்வத்தை புகுத்துவதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். அதற்கு வழிகாட்டும் `ஐந்து கலை' சிகிச்சைகள் பற்றி பார்ப்போம்.
களிமண் சிற்பங்கள்: களி மண்ணை கொண்டு ஏதாவதொரு உருவம் செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எளிமையான பயிற்சிகளை குழந்தைகளுக்கு வழங்கலாம். அவர்களுடன் அமர்ந்து சிறு சிறு உருவங்களை தயார் செய்து கொடுத்தாலே போதும்.
பின்பு தங்களுக்கு பிடித்தமான உருவங்களை ஆர்வமாக தயார் செய்வதற்கு பழகிவிடுவார்கள். களிமண்ணில் உருவங்கள், சிற்பங்கள் தயார் செய்வது நிதானத்தை கற்றுக்கொடுக்கும். மனதை அமைதியாக வைத்திருக்கவும் உதவும். சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும்.
காகித கலை: காகிதங்களை மடித்து பல்வேறு வடிவங்களை தயார் செய்யும் ‘ஓரிகமி’ கலை ஜப்பானில் பிரபலமானதாகும். இதில், ஒரு காகிதத்தை மடிப்பதன் மூலம் பல்வேறு வடிவங்கள் மற்றும் உயிரினங்களை உருவாக்க முடியும்.
காகிதத்தை முன்னும், பின்னும் மடிப்பதன் மூலம் எளிய முறையில் கலை படைப்புகளை தயாரித்துவிடலாம். இதனை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காத பொருட்களை தயார் செய்துவிடலாம்.
ஓவியம் வரைதல்: குழந்தைகளிடத்தில் கலை ஆர்வத்தை வளர்த்தெடுக்க உதவும் சிறந்த பயிற்சிகளுள் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. குழந்தையின் கையில் பேனா, பென்சில் கிடைத்துவிட்டால் போதும். உடனே சுவரில் தங்கள் கை வண்ணத்தை காட்டி விடுவார்கள். வண்ணமயமான நிறங்கள் குழந்தைகளை வெகுவாக கவரும். அதனை கொண்டு தூரிைககளில் தங்கள் சிந்தனை திறனை மெருகேற்றிவிடுவார்கள்.
வெறுமனே கிறுக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் அழகாக ஓவியம் தீட்டுவதற்கு ஆரம்ப காலகட்டத் திலேயே பயிற்சி கொடுக்க வேண்டும். பார்க்கும் விஷயங்களில் பிடித்தமானவற்றை ஓவியமாக வரைவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அது விரல்களுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
நடனம்: குழந்தையின் உடல் ஆற்றலை சரியான வகையில் கையாளுவதற்கான சிறந்த வழிமுறையாக நடனம் அமைந்திருக்கிறது. இந்த பயிற்சி குழந்தைகளுக்கு தேவையான உடற்பயிற்சியை வழங்கக்கூடியது. அதனால் உடற்பயிற்சி மீது நாட்டம் இல்லாத குழந்தைகளை நடன பயிற்சிக்கு பழக்கிவிடலாம். இது தனித்திறன்களை வளர்த்தெடுக்கவும் உதவும்.
இசை: மனதிற்கு இதமும், இனிமையும் அளிக்கும் இசையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. ‘குழந்தையின் மூளையின் பல்வேறு பகுதிகளை தூண்டுவதற்கும், அமைதிப்படுத்துவதற்கும் இசை உதவும்’ என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்க இசை உதவும். அதனால் அவர் களுக்கு பிடித்தமான இசைக் கருவிகளை வாசிப்பதற்கு ஊக்குவிக்கலாம். இசையை கேட்டும் ரசிக்கவைக்கலாம்.
களிமண் சிற்பங்கள்: களி மண்ணை கொண்டு ஏதாவதொரு உருவம் செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எளிமையான பயிற்சிகளை குழந்தைகளுக்கு வழங்கலாம். அவர்களுடன் அமர்ந்து சிறு சிறு உருவங்களை தயார் செய்து கொடுத்தாலே போதும்.
பின்பு தங்களுக்கு பிடித்தமான உருவங்களை ஆர்வமாக தயார் செய்வதற்கு பழகிவிடுவார்கள். களிமண்ணில் உருவங்கள், சிற்பங்கள் தயார் செய்வது நிதானத்தை கற்றுக்கொடுக்கும். மனதை அமைதியாக வைத்திருக்கவும் உதவும். சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும்.
காகித கலை: காகிதங்களை மடித்து பல்வேறு வடிவங்களை தயார் செய்யும் ‘ஓரிகமி’ கலை ஜப்பானில் பிரபலமானதாகும். இதில், ஒரு காகிதத்தை மடிப்பதன் மூலம் பல்வேறு வடிவங்கள் மற்றும் உயிரினங்களை உருவாக்க முடியும்.
காகிதத்தை முன்னும், பின்னும் மடிப்பதன் மூலம் எளிய முறையில் கலை படைப்புகளை தயாரித்துவிடலாம். இதனை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காத பொருட்களை தயார் செய்துவிடலாம்.
ஓவியம் வரைதல்: குழந்தைகளிடத்தில் கலை ஆர்வத்தை வளர்த்தெடுக்க உதவும் சிறந்த பயிற்சிகளுள் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. குழந்தையின் கையில் பேனா, பென்சில் கிடைத்துவிட்டால் போதும். உடனே சுவரில் தங்கள் கை வண்ணத்தை காட்டி விடுவார்கள். வண்ணமயமான நிறங்கள் குழந்தைகளை வெகுவாக கவரும். அதனை கொண்டு தூரிைககளில் தங்கள் சிந்தனை திறனை மெருகேற்றிவிடுவார்கள்.
வெறுமனே கிறுக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் அழகாக ஓவியம் தீட்டுவதற்கு ஆரம்ப காலகட்டத் திலேயே பயிற்சி கொடுக்க வேண்டும். பார்க்கும் விஷயங்களில் பிடித்தமானவற்றை ஓவியமாக வரைவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அது விரல்களுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
நடனம்: குழந்தையின் உடல் ஆற்றலை சரியான வகையில் கையாளுவதற்கான சிறந்த வழிமுறையாக நடனம் அமைந்திருக்கிறது. இந்த பயிற்சி குழந்தைகளுக்கு தேவையான உடற்பயிற்சியை வழங்கக்கூடியது. அதனால் உடற்பயிற்சி மீது நாட்டம் இல்லாத குழந்தைகளை நடன பயிற்சிக்கு பழக்கிவிடலாம். இது தனித்திறன்களை வளர்த்தெடுக்கவும் உதவும்.
இசை: மனதிற்கு இதமும், இனிமையும் அளிக்கும் இசையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. ‘குழந்தையின் மூளையின் பல்வேறு பகுதிகளை தூண்டுவதற்கும், அமைதிப்படுத்துவதற்கும் இசை உதவும்’ என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்க இசை உதவும். அதனால் அவர் களுக்கு பிடித்தமான இசைக் கருவிகளை வாசிப்பதற்கு ஊக்குவிக்கலாம். இசையை கேட்டும் ரசிக்கவைக்கலாம்.
இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமானவைகள் என்னவென்று பார்க்கலாம்.
1. அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் வாழும் குழந்தைகளைவிட, வீட்டில் ஒற்றைக் குழந்தையாக வளர்கிறவர்களுக்கு எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ( கூட்டுக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தையை இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நிலை வேறு.) அவர்கள், சகோதர உறவுகளுடன் இணைந்து வாழ்வதால் ஒற்றைக் குழந்தை என்று நினைக்க வேண்டியதில்லை. அதுவே, மற்றவர்களுடன் தன்னுடைய உணர்வுகளையும், உடமைகளையும் கூட்டுக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை பகிர்ந்துகொள்ளப் பழகியிருக்கும்.
2. தனிக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது. எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.
3. இரண்டு அல்லது மூன்று வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
4. ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
5. ‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும்.
2. தனிக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது. எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.
3. இரண்டு அல்லது மூன்று வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
4. ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
5. ‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும்.






