search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தையை குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்
    X
    குழந்தையை குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்

    குழந்தையை குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்

    பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும்கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
    குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

    உங்கள் குழந்தை விழித்திருக்கும்போது மற்றும் கண்காணிக்கப்படும்போது நீங்கள் அவளைக் குப்புறப் படுக்க வைக்கலாம். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மொத்தமாக 1 1/2 மணி நேரம் (90 நிமிடங்கள்) குப்புறப் படுத்திருக்கவேண்டும்.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும்கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
    Next Story
    ×