என் மலர்
குழந்தை பராமரிப்பு
ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலால் மிக அதிக அளவில் வலிப்பு வரும்.
காய்ச்சலால் இளம் குழந்தைகளுக்கு வரக்கூடியது வலிப்பு நோய். சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் அல்லது உயிருக்கு ஆபத்தான சில விஷக்காயச்சல்களாலும் வலிப்பு ஏற்படலாம். அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு வரும். சில குழந்தைகளுக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். குழந்தையின் தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களுக்குக் காய்ச்சலால் வரக்கூடிய வலிப்பு இருந்தால் குழந்தைக்கும் வரக்கூடும்.
ஏற்கெனவே ஒருமுறை வலிப்பு ஏற்பட்டிருந்தால், மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். மூளை வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு ஏற்படும்.
அறிகுறிகள்
உடல் வெப்பம் அதிகரிப்பு
கை, கால்களும், உடலும் வெட்டி வெட்டி இழுக்கும்.
காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும்.
அபாய நிலை
* குழந்தையின் வயது ஆறு மாதத்துக்குக் குறைவாகவும், ஆறு வயதுக்கு அதிகமாகவும் இருத்தல்.
* காய்ச்சல் குறைவாக இருக்கும்போது வலிப்பு.
* பரம்பரையாக குடும்பத்தினருக்கு வலிப்பு நோய்.
* மூளை வளர்ச்சி முழுமை அடைந்த குழந்தை.
* ஒருமுறைக்கு மேல் வலிப்பு.
* காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு வலிப்பு.
* ஒரு கை அல்லது கால் என உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் மட்டும் வலிப்பு.
* 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு.

மீண்டும் வலிப்பு வரும் வாய்ப்பு உள்ள குழந்தைகள்
* 30-50 சதவீத குழந்தைகளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
* மூளை வளர்ச்சி முழுமை அடையாதவர்கள்.
* குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு நோய் இருப்பது
* அசாதாரணமான காய்ச்சலுடன் வரும் வலிப்பு
கவனிக்க வேண்டியவை
1. சாதாரண காய்ச்சலால் ஏற்பட்ட வலிப்புதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
2. மூளைக் காய்ச்சலோ, வலிப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
3. நீண்ட நேரம் வலிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
4. மீண்டும் வலிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (மூளை பாதிப்பு ஏற்படலாம்)
5. வலிப்பு வரும்போது, குழந்தையின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
6. குழந்தை அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. குழந்தையைக் காற்றோட்டம் உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
8. உமிழ்நீரினால் மூச்சடைப்பு ஏற்படாமல் இருக்க, தலையை ஒருபுறமாகத் திருப்ப வேண்டும்.
9. மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் எதுவும் ஊற்றக் கூடாது.
10. குழந்தையின் கையில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது.
11. துணியைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டு வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
12. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு வரும். சில குழந்தைகளுக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். குழந்தையின் தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களுக்குக் காய்ச்சலால் வரக்கூடிய வலிப்பு இருந்தால் குழந்தைக்கும் வரக்கூடும்.
ஏற்கெனவே ஒருமுறை வலிப்பு ஏற்பட்டிருந்தால், மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். மூளை வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு ஏற்படும்.
அறிகுறிகள்
உடல் வெப்பம் அதிகரிப்பு
கை, கால்களும், உடலும் வெட்டி வெட்டி இழுக்கும்.
காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும்.
அபாய நிலை
* குழந்தையின் வயது ஆறு மாதத்துக்குக் குறைவாகவும், ஆறு வயதுக்கு அதிகமாகவும் இருத்தல்.
* காய்ச்சல் குறைவாக இருக்கும்போது வலிப்பு.
* பரம்பரையாக குடும்பத்தினருக்கு வலிப்பு நோய்.
* மூளை வளர்ச்சி முழுமை அடைந்த குழந்தை.
* ஒருமுறைக்கு மேல் வலிப்பு.
* காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு வலிப்பு.
* ஒரு கை அல்லது கால் என உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் மட்டும் வலிப்பு.
* 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு.

மீண்டும் வலிப்பு வரும் வாய்ப்பு உள்ள குழந்தைகள்
* 30-50 சதவீத குழந்தைகளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
* மூளை வளர்ச்சி முழுமை அடையாதவர்கள்.
* குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு நோய் இருப்பது
* அசாதாரணமான காய்ச்சலுடன் வரும் வலிப்பு
கவனிக்க வேண்டியவை
1. சாதாரண காய்ச்சலால் ஏற்பட்ட வலிப்புதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
2. மூளைக் காய்ச்சலோ, வலிப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
3. நீண்ட நேரம் வலிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
4. மீண்டும் வலிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (மூளை பாதிப்பு ஏற்படலாம்)
5. வலிப்பு வரும்போது, குழந்தையின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
6. குழந்தை அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. குழந்தையைக் காற்றோட்டம் உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
8. உமிழ்நீரினால் மூச்சடைப்பு ஏற்படாமல் இருக்க, தலையை ஒருபுறமாகத் திருப்ப வேண்டும்.
9. மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் எதுவும் ஊற்றக் கூடாது.
10. குழந்தையின் கையில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது.
11. துணியைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டு வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
12. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகளின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால் அடிக்கடி கை விரல்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடையும்.
எழுத்து என்பது ஒருவித ஓவியம்தான். அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம் என்பார்கள். அனைவருக்கும் அழகான கையெழுத்து இயல்பாய் அமைந்துவிடுவதில்லை. ஆனால் அழகான கையெழுத்தை பெற சில சுலபமான வழிமுறைகள் உள்ளன. அவற்றை தெரிந்துகொள்வோம்..
முதன்முதலாக எழுத்துகளைச் சொல்லிக் கொடுக்க நெல் பரப்பி அதன்மீது குழந்தையின் சுட்டுவிரல் பிடித்து எழுதக் கற்றுக்கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதன்பிறகு மணல் பரப்பி அதன் மீது எழுதக் கற்றுக்கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பென்சில், மை பேனாக்கள், பந்து முனைப் பேனாக்கள் என்று எழுதுகோல்களின் வகைகள் அதிகரித்தன.
நல்ல கையெழுத்து இருந்தால்தான் படிப்பிலும், பணியிலும் முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. தெளிவாகவும், விரைவாகவும் எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
மாணவ-மாணவிகளின் உடல், மனம், மூளை மற்றும் அறிவு வளர்ச்சியில், கையெழுத்து முக்கியப்பங்கு வகிப்பதற்கான காரணங்களைப் பல ஆய்வுகள் விளக்கி உள்ளன.
கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால் அடிக்கடி கை விரல்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடையும்.
களிமண்ணில் சின்னச்சின்ன உருவங்கள் செய்ய பழகிக்கொள்ளுங்கள். இதனால் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், மாணவர்களின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

வீட்டில் இருக்கும் மைதா, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை அகலமான தட்டில் வைத்து ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் செய்யலாம். இதனால் கை களுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் கையில் உள்ள நரம்புகள் வலுப்படும். பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.
பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் நூலை கோர்க்கச் சொல்லலாம்.
கோழிமுட்டை, யானை உருவங்களை கலர் பென்சில்களால் படம் வரைந்து வண்ணம் தீட்டுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துகளை சீராக எழுத முடியும்.
முதலில் பென்சிலை லாவகமாகப் பிடிப்பது. இரண்டாவது பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது, மூன்றாவதாக பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது. இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் பயிற்சி செய்தால் முறையாக எழுதக் கற்றுக்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
முதலில் ஆள்காட்டி விரலால் மணல் மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின் மீது பென் சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும். இந்த மூன்று பயிற்சிகளுக்கு பிறகு அவர்கள் கையெழுத்து அழகாக மாறும்.
மாணவர்கள் எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும்.
முதன்முதலாக எழுத்துகளைச் சொல்லிக் கொடுக்க நெல் பரப்பி அதன்மீது குழந்தையின் சுட்டுவிரல் பிடித்து எழுதக் கற்றுக்கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதன்பிறகு மணல் பரப்பி அதன் மீது எழுதக் கற்றுக்கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பென்சில், மை பேனாக்கள், பந்து முனைப் பேனாக்கள் என்று எழுதுகோல்களின் வகைகள் அதிகரித்தன.
நல்ல கையெழுத்து இருந்தால்தான் படிப்பிலும், பணியிலும் முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. தெளிவாகவும், விரைவாகவும் எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
மாணவ-மாணவிகளின் உடல், மனம், மூளை மற்றும் அறிவு வளர்ச்சியில், கையெழுத்து முக்கியப்பங்கு வகிப்பதற்கான காரணங்களைப் பல ஆய்வுகள் விளக்கி உள்ளன.
கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால் அடிக்கடி கை விரல்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடையும்.
களிமண்ணில் சின்னச்சின்ன உருவங்கள் செய்ய பழகிக்கொள்ளுங்கள். இதனால் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், மாணவர்களின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

வீட்டில் இருக்கும் மைதா, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை அகலமான தட்டில் வைத்து ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் செய்யலாம். இதனால் கை களுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் கையில் உள்ள நரம்புகள் வலுப்படும். பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.
பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் நூலை கோர்க்கச் சொல்லலாம்.
கோழிமுட்டை, யானை உருவங்களை கலர் பென்சில்களால் படம் வரைந்து வண்ணம் தீட்டுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துகளை சீராக எழுத முடியும்.
முதலில் பென்சிலை லாவகமாகப் பிடிப்பது. இரண்டாவது பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது, மூன்றாவதாக பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது. இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் பயிற்சி செய்தால் முறையாக எழுதக் கற்றுக்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
முதலில் ஆள்காட்டி விரலால் மணல் மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின் மீது பென் சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும். இந்த மூன்று பயிற்சிகளுக்கு பிறகு அவர்கள் கையெழுத்து அழகாக மாறும்.
மாணவர்கள் எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும்.
குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.
பழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நல்லதுக்கு கண்டித்தால் கூட விபரீத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? தீர்வு என்ன? என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகள் விடை தெரியா கேள்விகள் அல்ல.
குழந்தைகள் மனவலிமை பெற முதல் வழி குழந்தை வளர்ப்பு. அண்டை வீட்டாரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ட காலங்களில் குழந்தைகளுக்கு பாசம், விட்டு கொடுக்கும் பக்குவம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் முடித்து, சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாடிய காலம் அது. தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான்.
காலத்தின் கட்டாயம் கூட. ஆனால், இந்நாட்களில் போலி முகமூடியிட்டு, அரிய நம் வாழ்வை நாமே தொலைத்து வருகிறோம். அதையே நம் குழந்தைகளுக்கு பெருமையோடு புகட்டுகிறோம். என் பையனுக்கு மொபைலில் இருக்கும் அத்தனை
அப்ளிகேஷன்களும் அத்துப்படி, அவனே டவுன்லோடு செய்து கேம்களை விளையாடுகிறான் என பல அம்மாக்களும், அப்பாக்களும் பெருமை பேசுகிறார்கள். பழைய கால விளையாட்டுகளில் கிடைத்த மகிழ்ச்சி, உடல் மற்றும் மன திடத்துக்கு பதிலாக, ஏக்கத்தையும், அகங்காரத்தையுமே இன்றைய செல்போன், கணினி விளையாட்டுகள் விதைக்கின்றன. தான் என்ற அகங்காரம், ஆணவத்தையும், இல்லை என்ற ஏக்கம் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தும்போது விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.
நம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடலாக விளங்குகிறோம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்ற மனோபாவத்தை கடந்து நல்லொழுக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களின் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை விட, சற்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும். மாதந்தோறும், ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் சந்திப்புகள் நடைபெறுவது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளை அரவணைத்து, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.
-கலைச்செல்வி சரவணன்
குழந்தைகள் மனவலிமை பெற முதல் வழி குழந்தை வளர்ப்பு. அண்டை வீட்டாரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ட காலங்களில் குழந்தைகளுக்கு பாசம், விட்டு கொடுக்கும் பக்குவம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் முடித்து, சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாடிய காலம் அது. தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான்.
காலத்தின் கட்டாயம் கூட. ஆனால், இந்நாட்களில் போலி முகமூடியிட்டு, அரிய நம் வாழ்வை நாமே தொலைத்து வருகிறோம். அதையே நம் குழந்தைகளுக்கு பெருமையோடு புகட்டுகிறோம். என் பையனுக்கு மொபைலில் இருக்கும் அத்தனை
அப்ளிகேஷன்களும் அத்துப்படி, அவனே டவுன்லோடு செய்து கேம்களை விளையாடுகிறான் என பல அம்மாக்களும், அப்பாக்களும் பெருமை பேசுகிறார்கள். பழைய கால விளையாட்டுகளில் கிடைத்த மகிழ்ச்சி, உடல் மற்றும் மன திடத்துக்கு பதிலாக, ஏக்கத்தையும், அகங்காரத்தையுமே இன்றைய செல்போன், கணினி விளையாட்டுகள் விதைக்கின்றன. தான் என்ற அகங்காரம், ஆணவத்தையும், இல்லை என்ற ஏக்கம் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தும்போது விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.
நம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடலாக விளங்குகிறோம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்ற மனோபாவத்தை கடந்து நல்லொழுக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களின் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை விட, சற்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும். மாதந்தோறும், ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் சந்திப்புகள் நடைபெறுவது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளை அரவணைத்து, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.
-கலைச்செல்வி சரவணன்
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு ஆகும். இயற்கை முறையில் அஜீரண பிரச்சனைக்கு தீர்வு காணும் முறைகளை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, ஜீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
4 அல்லது 5 வயதிற்குப் பின்னர் உங்கள் குழந்தைகளின் கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை எவ்வாறு நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவாக அவர்கள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.
ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.
எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.
பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.
எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.
பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் குழந்தைகள் உங்களை தொடர்பு கொள்ளவும், உங்களது கவனத்தை பெறவுமே அழுகிறார்கள். இதனாலேயே குழந்தைகள் சௌகர்யமாக உணரும் போது அழுகையை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் என்ன செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்றால், அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்.
குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
குழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கிரேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.

சில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக அதை வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.
பல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.
குழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
குழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கிரேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.

சில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக அதை வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.
பல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.
குழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுபவர்கள் ஆண்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. இதனை தடுக்க சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்று மனநல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆண், பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை:-
குழந்தைப் பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிக்கும் பட்சத்தில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.
ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் கிரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள்.
மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள். தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள்.

அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும். மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள்.
அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண், பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள். இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.
பெண் குழந்தைகளை திட்டினாலோ அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள். ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.
ஆண் குழந்தை என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தைப் பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாடட்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் நல்ல பலனைத்தரும்.
குழந்தைப் பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிக்கும் பட்சத்தில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.
ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் கிரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள்.
மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள். தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள்.

அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும். மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள்.
அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண், பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள். இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.
பெண் குழந்தைகளை திட்டினாலோ அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள். ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.
ஆண் குழந்தை என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தைப் பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாடட்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் நல்ல பலனைத்தரும்.
உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு ஒரு கலை என்பார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் பெரும்பாலும் அந்த கலையில் வல்லவர்களாக இருப்பதில்லை.
குறிப்பாக குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்க்க வேண்டிய விஷயத்தில் நாகரிக உலகின் பெற்றோர் பலரும் தோற்றும் விடுகிறார்கள். காரணம் நிகழ்கால உலகம் ஆரோக்கியத்தை விட நாவின் கோரிக்கைக்கு அடிபணிந்து ருசிக்குத் தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஆனால் பழையக் காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியம் நிறைந்தவர்களாக பெற்றோர் வளர்த்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுத்தனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவுகளை பார்த்து பார்த்து தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். உடலுக்கு வலிமை தரும் கம்பு, சோளம், கேப்பை மற்றும் பயறு வகைகளை அன்றாட உணவுகளில் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணினர்.
அதிலும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். தாங்கள் பெற்ற ஆரோக்கியத்தை குழந்தைகளும் பெற அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் ஏற்பட்ட தொய்வு, நிகழ்கால தாய்மார்கள் பலருக்கும் ஆரோக்கியத்தை அட்சய பாத்திரமாய் அள்ளித்தரும் நம் பாரம்பரிய உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க தவறிவிட்டது.
நவநாகரிக உலக பெற்றோர் பாக்கெட்டில் அடைத்த ‘ரெடிமேட்’ உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தான் பெரிதும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இல்லையென்றாலும், குழந்தைகள் அடம்பிடித்து கேட்டு நொறுக்குத்தீனிகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு விபரீதமானதாக இருக்கிறது.
குழந்தைகளின் எடை வயதுக்கும், உயரத்துக்கும் தொடர்பற்றதாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பலரும் உடல் பருமனால் பெரிதும் அவதிபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து, நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம்.
அதிலும் குறிப்பாக, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தினமும் உணவு உண்பதில் ஆர்வம் காட்டுவதை விட செயற்கை ரசாயன கலவைகளோடு தயாரித்து சந்தைப்படுத்தப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தம், கற்பதில் குறைபாடு போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கைவிடுக்கிறது.

இன்றைய குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை விரும்புவதற்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சிப்ஸ், பர்க்கர், பீட்சா, ரசாயன வகை குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்கள் வீடுகளில் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளை தூண்டுகிறது.
ஒரு ஆய்வு தரும் தகவல்படி, உலகம் முழுவதும் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்தில் டி.வி., இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் (கிட்டத்தட்ட 2 கோடி முறை) அவற்றை ருசித்து பார்க்கும் ஆவல் அவர்களின் மனதில் உதிக்கிறது.
அதிலும், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மாதத்தில் சுமார் 21 நாட்கள் வரை நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை காண அதிகம் ஆர்வம்காட்டுகிறார்களாம். இதுவும் நொறுக்குத்தீனிகளை அவர்கள் அதிகம் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கிறது.
நொறுக்குத்தீனிகளின் விபரீதம் உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அதுபோன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை தடை செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.
இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை முக்கியம்தான். ஆனால் நாகரிக உலகின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அதை காட்டிலும் முக்கியமானது.
நாம் உணவு விஷயத்தில் முன்னோக்கி செல்வதை காட்டிலும் பின்னோக்கி செல்வது சாலச்சிறந்தது. நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பாரம்பரிய உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க முன்வாருங்கள். அப்போதுதான் நம் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மனிதனின் ஆரோக்கியம் தான் படிப்பு, வேலை, விளையாட்டு என அத்தனை அம்சங்களுக்குமான அடிப்படை.
ஆக, உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் இனி பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
-மாசு
குறிப்பாக குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்க்க வேண்டிய விஷயத்தில் நாகரிக உலகின் பெற்றோர் பலரும் தோற்றும் விடுகிறார்கள். காரணம் நிகழ்கால உலகம் ஆரோக்கியத்தை விட நாவின் கோரிக்கைக்கு அடிபணிந்து ருசிக்குத் தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஆனால் பழையக் காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியம் நிறைந்தவர்களாக பெற்றோர் வளர்த்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுத்தனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவுகளை பார்த்து பார்த்து தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். உடலுக்கு வலிமை தரும் கம்பு, சோளம், கேப்பை மற்றும் பயறு வகைகளை அன்றாட உணவுகளில் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணினர்.
அதிலும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். தாங்கள் பெற்ற ஆரோக்கியத்தை குழந்தைகளும் பெற அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் ஏற்பட்ட தொய்வு, நிகழ்கால தாய்மார்கள் பலருக்கும் ஆரோக்கியத்தை அட்சய பாத்திரமாய் அள்ளித்தரும் நம் பாரம்பரிய உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க தவறிவிட்டது.
நவநாகரிக உலக பெற்றோர் பாக்கெட்டில் அடைத்த ‘ரெடிமேட்’ உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தான் பெரிதும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இல்லையென்றாலும், குழந்தைகள் அடம்பிடித்து கேட்டு நொறுக்குத்தீனிகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு விபரீதமானதாக இருக்கிறது.
குழந்தைகளின் எடை வயதுக்கும், உயரத்துக்கும் தொடர்பற்றதாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பலரும் உடல் பருமனால் பெரிதும் அவதிபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து, நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம்.
அதிலும் குறிப்பாக, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தினமும் உணவு உண்பதில் ஆர்வம் காட்டுவதை விட செயற்கை ரசாயன கலவைகளோடு தயாரித்து சந்தைப்படுத்தப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தம், கற்பதில் குறைபாடு போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கைவிடுக்கிறது.

இன்றைய குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை விரும்புவதற்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சிப்ஸ், பர்க்கர், பீட்சா, ரசாயன வகை குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்கள் வீடுகளில் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளை தூண்டுகிறது.
ஒரு ஆய்வு தரும் தகவல்படி, உலகம் முழுவதும் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்தில் டி.வி., இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் (கிட்டத்தட்ட 2 கோடி முறை) அவற்றை ருசித்து பார்க்கும் ஆவல் அவர்களின் மனதில் உதிக்கிறது.
அதிலும், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மாதத்தில் சுமார் 21 நாட்கள் வரை நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை காண அதிகம் ஆர்வம்காட்டுகிறார்களாம். இதுவும் நொறுக்குத்தீனிகளை அவர்கள் அதிகம் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கிறது.
நொறுக்குத்தீனிகளின் விபரீதம் உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அதுபோன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை தடை செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.
இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை முக்கியம்தான். ஆனால் நாகரிக உலகின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அதை காட்டிலும் முக்கியமானது.
நாம் உணவு விஷயத்தில் முன்னோக்கி செல்வதை காட்டிலும் பின்னோக்கி செல்வது சாலச்சிறந்தது. நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பாரம்பரிய உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க முன்வாருங்கள். அப்போதுதான் நம் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மனிதனின் ஆரோக்கியம் தான் படிப்பு, வேலை, விளையாட்டு என அத்தனை அம்சங்களுக்குமான அடிப்படை.
ஆக, உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் இனி பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
-மாசு
குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாக பெண் குழந்தைகளே தத்தெடுக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் மகாராஷ்டிராதான் குழந்தைகள் தத்தெடுப்பில் முன்னணியில் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு 642 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 35 பெண் குழந்தைகளாகும். கர்நாடகா மாநிலத்தில் தத்து கொடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பெண் குழந்தைகள். 2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 1858 பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் 1418. 2016-2017-ம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட 3210 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 1915.
இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தீபக்குமார் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். பெண்-ஆண் குழந்தைகள் தேர்ந்தெடுப்பு சதவீதம் 55:45 என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் குழந்தையை அதிகமாக தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும், கையாளுவதும் எளிதாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவே பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.
அதிலும் மகாராஷ்டிராதான் குழந்தைகள் தத்தெடுப்பில் முன்னணியில் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு 642 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 35 பெண் குழந்தைகளாகும். கர்நாடகா மாநிலத்தில் தத்து கொடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பெண் குழந்தைகள். 2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 1858 பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் 1418. 2016-2017-ம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட 3210 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 1915.
இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தீபக்குமார் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். பெண்-ஆண் குழந்தைகள் தேர்ந்தெடுப்பு சதவீதம் 55:45 என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் குழந்தையை அதிகமாக தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும், கையாளுவதும் எளிதாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவே பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.
குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தடுப்பூசிகள் பாதுகாப்பானது தானா என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்தால், அதை முதலில் மனதில் இருந்து தூர தூக்கி எறியுங்கள்; ஏனெனில் நோய்களை உண்டாகாமல் தடுக்க போடப்படும் தடுப்பூசிகள் என்றும் நோயை ஏற்படுத்துபவையாக இருக்க முடியாது.
ஆனால், தடுப்பூசி போட்டுவிட்டால் போதும் என் குழந்தை 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்துவிடும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், அது தவறு. குழந்தையை நீங்கள் பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து, பாசம் காட்டி வளர்க்க வேண்டும். தடுப்பூசிகள் குழந்தைகளின் வாழ்வின் முதல் கட்டத்தை நோய் நொடியற்றதாக, ஆரோக்கியமானதாக மாற்றவே உதவும்.
மேலும் ஒருமுறை பயன்படுத்திய தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்துவது அல்லது நோய்கிருமிகள் தாக்கிய தடுப்பூசியை பயன்படுத்துவது போன்றவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி புதிது தானா என்பதை பெற்றோரானா நீங்கள் சோதித்த பிறகே, குழந்தைக்கு போட அனுமதிக்க வேண்டும்.
தடுப்பூசிகள் பாதுகாப்பானது தானா என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்தால், அதை முதலில் மனதில் இருந்து தூர தூக்கி எறியுங்கள்; ஏனெனில் நோய்களை உண்டாகாமல் தடுக்க போடப்படும் தடுப்பூசிகள் என்றும் நோயை ஏற்படுத்துபவையாக இருக்க முடியாது.
ஆனால், தடுப்பூசி போட்டுவிட்டால் போதும் என் குழந்தை 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்துவிடும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், அது தவறு. குழந்தையை நீங்கள் பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து, பாசம் காட்டி வளர்க்க வேண்டும். தடுப்பூசிகள் குழந்தைகளின் வாழ்வின் முதல் கட்டத்தை நோய் நொடியற்றதாக, ஆரோக்கியமானதாக மாற்றவே உதவும்.
மேலும் ஒருமுறை பயன்படுத்திய தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்துவது அல்லது நோய்கிருமிகள் தாக்கிய தடுப்பூசியை பயன்படுத்துவது போன்றவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி புதிது தானா என்பதை பெற்றோரானா நீங்கள் சோதித்த பிறகே, குழந்தைக்கு போட அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிக நேரம் டயப்பர் போடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, கோடைக்காலத்தில் கண்டிப்பாக டயப்பரை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
குழந்தைகளுக்கு டயப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயப்பர் பயன்படுத்துவதே நல்லது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும். இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும் சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயப்பரை மாற்ற வேண்டும்.
கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.
`டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.
* வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.
* இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
* டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.
* இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.
* டயப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை துடைத்து காற்றாட வைத்திருங்கள்.
கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.
`டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.
* வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.
* இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
* டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.
* இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.
* டயப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை துடைத்து காற்றாட வைத்திருங்கள்.
குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்துவிடுவது... இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.
குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகளை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
குழந்தைகளின் உடல் பருமனுக்குப் பின்னால் உணவுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு விளையாட்டுக்குத்தான். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.

உடல் பருமனைக் குறைப்பதாகச் சொல்லி தாங்களே மருத்துவர்களாகிவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அடுத்த வீட்டில் சொன்னார்கள், அனுபவப்பட்டவர்கள் பரிந்துரைத்தார்கள் என்று தினம் தினம் புதுப்புது எடைகுறைப்பு பயிற்சிகளில் இறங்குகிறவர்கள், நிச்சயம் வீட்டுக்கு ஒருவராவது இருக்கிறார்கள். கல்லூரி பெண்களோ ஜீரோ சைஸ் இடையழகுக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு? அனோரெக்ஸியா எனப்படும் உடல் மெலிவுப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப் பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமாக வாழலாம்.
குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகளை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
குழந்தைகளின் உடல் பருமனுக்குப் பின்னால் உணவுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு விளையாட்டுக்குத்தான். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.

உடல் பருமனைக் குறைப்பதாகச் சொல்லி தாங்களே மருத்துவர்களாகிவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அடுத்த வீட்டில் சொன்னார்கள், அனுபவப்பட்டவர்கள் பரிந்துரைத்தார்கள் என்று தினம் தினம் புதுப்புது எடைகுறைப்பு பயிற்சிகளில் இறங்குகிறவர்கள், நிச்சயம் வீட்டுக்கு ஒருவராவது இருக்கிறார்கள். கல்லூரி பெண்களோ ஜீரோ சைஸ் இடையழகுக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு? அனோரெக்ஸியா எனப்படும் உடல் மெலிவுப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப் பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமாக வாழலாம்.






