என் மலர்
குழந்தை பராமரிப்பு
பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் பெயின்பெர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் குக் மில்ஸ் தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்.
பொதுவாக ஒவ்வாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, மரபு வழி ஜீன்கள். மற்றொன்று, உணவு. இறுதியாக, சுற்றுப்புறச்சூழல். பிறந்து சில நாள்களே ஆன ஓர் எலியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு ஒவ்வாமைக்கான ஜீன்களைச் செலுத்துகின்றனர். அடுத்து, தூசுப் படலத்தை நுகரவைக்கின்றனர். பின்னர், நிலக்கடலைப் போன்ற ஒவ்வாமை உணவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயங்கள் அந்த எலிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.
அந்த நேரம் ஜோன் குக்குக்கு பழைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் சருமத்தின் மேற்பரப்பு லிபிட்ஸ்‘ எனும் ஒருவகை கொழுப்பினால் ஆனது. அதுவே நம் சருமத்தின் தடுப்பு அரணாகச் செயல்படுகிறது. சோப்புகளில் இருக்கும் ரசாயனங்கள் அந்த அரண்களை உடைக்கும் தன்மை வாய்ந்தவை என்பது அந்தக் கட்டுரை சொல்லும் செய்தி. ஜோனுக்குச் சட்டென ஒரு பொறி தட்டியது. அது, அவரை அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது.
தன் சோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். முதலில் எலியின் தோலின் மீது சோடியம் லாரைல் சல்பேட்’ எனும் வேதிப்பொருளைத் தடவினார் (இது பொதுவாக சோப்புகளில் காணப்படும் ரசாயனம்தான்). இரண்டு வாரக் காலத்தில் நான்கு முறை இப்படிச் செய்யப்பட்டது. பின்னர், சில ஒவ்வாமை உணவுகள் அதற்குக் கொடுக்கப்பட்டன. இப்படிச் செய்ததும், மிக விரைவாக எலியின் தோல் பல இடங்களில் தடிக்கத் தொடங்கியது. உடல் முழுக்க ஒவ்வாமை ஏற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மிக முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறார் ஜோன்.
“குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் ‘வெட் வைப்ஸ்’ ஒவ்வாமைக்கான மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இனி வெட் வைப்கள் உபயோகிப்பதைக் குறைத்துக் கொண்டு, முன்னர் செய்தது போலத் தண்ணீரை உபயோகித்துக் குழந்தைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.“ மேலைநாடுகளில் வெட் வைப்ஸ்’ அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலும், சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. இப்படி ஒருபக்கம் ஒவ்வாமை, ஒவ்வொரு நாட்டிலும் அதிகமாகிக்கொண்டே இருக்க, மறுபக்கம்‘வெட் வைப்ஸ்’களின் உபயோகமும் பரவலாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருக்கவே செய்கின்றன.
எனினும், ‘வெட் வைப்’, சோப்புகள் உபயோகத்தைக் கூடுமானவரைக் குறைத்துக்கொண்டு, தண்ணீரால் குழந்தைகளின் உடலைச் சுத்தப்படுத்துவதே அவர்களின் உடலைப் பாதுகாக்கும். அதுவே ஆரோக்கியமும்கூட!
பொதுவாக ஒவ்வாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, மரபு வழி ஜீன்கள். மற்றொன்று, உணவு. இறுதியாக, சுற்றுப்புறச்சூழல். பிறந்து சில நாள்களே ஆன ஓர் எலியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு ஒவ்வாமைக்கான ஜீன்களைச் செலுத்துகின்றனர். அடுத்து, தூசுப் படலத்தை நுகரவைக்கின்றனர். பின்னர், நிலக்கடலைப் போன்ற ஒவ்வாமை உணவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயங்கள் அந்த எலிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.
அந்த நேரம் ஜோன் குக்குக்கு பழைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் சருமத்தின் மேற்பரப்பு லிபிட்ஸ்‘ எனும் ஒருவகை கொழுப்பினால் ஆனது. அதுவே நம் சருமத்தின் தடுப்பு அரணாகச் செயல்படுகிறது. சோப்புகளில் இருக்கும் ரசாயனங்கள் அந்த அரண்களை உடைக்கும் தன்மை வாய்ந்தவை என்பது அந்தக் கட்டுரை சொல்லும் செய்தி. ஜோனுக்குச் சட்டென ஒரு பொறி தட்டியது. அது, அவரை அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது.
தன் சோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். முதலில் எலியின் தோலின் மீது சோடியம் லாரைல் சல்பேட்’ எனும் வேதிப்பொருளைத் தடவினார் (இது பொதுவாக சோப்புகளில் காணப்படும் ரசாயனம்தான்). இரண்டு வாரக் காலத்தில் நான்கு முறை இப்படிச் செய்யப்பட்டது. பின்னர், சில ஒவ்வாமை உணவுகள் அதற்குக் கொடுக்கப்பட்டன. இப்படிச் செய்ததும், மிக விரைவாக எலியின் தோல் பல இடங்களில் தடிக்கத் தொடங்கியது. உடல் முழுக்க ஒவ்வாமை ஏற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மிக முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறார் ஜோன்.
“குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் ‘வெட் வைப்ஸ்’ ஒவ்வாமைக்கான மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இனி வெட் வைப்கள் உபயோகிப்பதைக் குறைத்துக் கொண்டு, முன்னர் செய்தது போலத் தண்ணீரை உபயோகித்துக் குழந்தைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.“ மேலைநாடுகளில் வெட் வைப்ஸ்’ அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலும், சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. இப்படி ஒருபக்கம் ஒவ்வாமை, ஒவ்வொரு நாட்டிலும் அதிகமாகிக்கொண்டே இருக்க, மறுபக்கம்‘வெட் வைப்ஸ்’களின் உபயோகமும் பரவலாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருக்கவே செய்கின்றன.
எனினும், ‘வெட் வைப்’, சோப்புகள் உபயோகத்தைக் கூடுமானவரைக் குறைத்துக்கொண்டு, தண்ணீரால் குழந்தைகளின் உடலைச் சுத்தப்படுத்துவதே அவர்களின் உடலைப் பாதுகாக்கும். அதுவே ஆரோக்கியமும்கூட!
படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நம் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே கல்லூரி வாழ்க்கையை பற்றிய பல கனவுகள் இருந்திருக்கும். முக்கியமாக கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களின் தாக்கம் மட்டுமே கல்லூரி மாணவர்களிடம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு கல்லூரி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் முன்னூறு முறைக்கும் மேல் செல்போனால் கல்லூரி மாணவனின் கவனம் சிதறுகிறது.
அதேபோல செல்போனால் சராசரியாக நானூறு முறைக்கு மேல் மாணவிகளின் கவனம் சிதறுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு கல்லூரி மாணவர்களிடம் கவனச்சிதறல் பெருமளவு அதிகரித்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் கட்டாயம் ஏற்படுவதால் மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனும் பாதிக்கப்படுவதாக அண்மையில் நடந்த பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்போதும் தங்களை ஒருவித உற்சாக மனநிலையில் வைத்துக்கொள்ள கல்லூரி மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அதிகமாக பொழுதுபோக்கு சாதனங்களை நாடுகின்றனர். அதன் காரணமாக நேர பற்றாக்குறை ஏற்பட்டு அன்றாட வேலைகளை சரிவர செய்ய இயலாமல் பின்னடைவு ஏற்பட்டு தாழ்வுமனப்பான்மை மற்றும் குற்ற உணர்ச்சியால் தவிக்கின்றனர்.
கணினி மற்றும் செல்போன் விளையாட்டுகளை தொடர்ந்து பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதனால் பல்வேறு நோய்களுடன் இதயக் கோளாறுகளும் இளம் வயதிலேயே வந்துவிடுகின்றன. எந்த நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதால் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கம் கல்லூரி மாணவர்களிடையே வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் பாட புத்தகங்கள் படிப்பதிலும் நாட்டமின்றி வெறும் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் அவர்கள் நேர்முக தேர்வுகளில் கேட்கப்படும் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர்.
டீன்ஏஜ் என்னும் இந்த விடலை பருவத்தில் தொடங்கும் கல்லூரி வாழ்க்கை பேராசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை தாண்டி பல அனுபவ பாடங்களையும், படிப்பினைகளையும் சேர்த்தே சொல்லி தருகின்றன. கல்லூரி பருவமும், மாணவப்பருவம் தான் என்பதை சரிவர உணராமல் வயதிற்கு மீறிய செயல்களான படிப்பின் போதே திருமணம், போதை மருந்து பழக்கம், பகைமை உணர்வு போன்றவற்றால் உடல்நலத்துடன் உள்ளநலத்தையும் வீணாக்கி கல்லூரி படிப்பில் பலர் தோல்வி அடைகின்றனர். இத்தகைய நிலைக்கு திரைப்படங்களும், சமூக ஊடகங்களும் ஒரு பெரிய உந்துசக்தியாக செயல்படுகிறது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.
செய்துதான் பார்க்கலாமே வீட்டுக்கா தெரியப்போகிறது யார் பார்க்க போகிறார்கள் என சில கூடா நட்பின் தவறான ஊக்கத்தினால் பல தீயப்பழக்கங்கள் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களிடம் வந்து சேர்ந்துகொள்கிறது. கல்லூரி வாழ்க்கையில் எந்தெந்த பழக்கங்கள் தொற்றிக்கொள்கிறதோ, அதுவே வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கும் பின் தொடரும். ஆகவே கவனச்சிதறலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பின்வரும் முறைகளை பின்பற்றினால் உதவியாக இருக்கும்.
வகுப்பறையில் செல்போனின் இணைய சேவையை அணைத்து வைப்பது நல்லது. இதனால் “நோட்டிபிகேசனால்” உண்டாகும் கவனச்சிதறலை பெருமளவு தவிர்க்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக இணைய பயன்பாட்டை தவிர்த்து நல்ல புத்தகங்களை படிக்க முயற்சிக்கலாம். இதை ஜப்பான் நாட்டில் தற்போது “இன்டர்நெட் பாஸ்டிங்” என்ற முறையில் பின்பற்ற தொடங்கி உள்ளனர். தேர்வுக்கு பத்து நாட்கள் முன்பிலிருந்து இணைய வசதி இல்லாத சாதாரண தொலைபேசியை உபயோகிப்பதால் தேவையற்ற கவனச்சிதறலை தவிர்த்து தேர்விற்கு முழுமையாக தயாராகலாம். வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் சில வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியே வருவதால் தேவையற்ற எண்ணங்களின் பாதிப்பிலிருந்து மனது தப்பிக்கும். அதுமட்டுமின்றி நேரடியாக அறிமுகம் இல்லாத நபர்களை சமூக வலைத்தளங்களின் நட்பு வட்டாரத்தில் சேர்ப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
நேரம் கிடைக்கும் போது குழுவாக வெளியில் சென்று விளையாடுவதினால் மன ஆரோக்கியத்துடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுவதின் மூலம் செயல்திறனையும் அதிகரிக்கலாம். அனைத்திற்கும் மேலாக பெற்றோர் மற்றும் சகோதரர்களை தினசரி சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி வாயிலாக அவர்களிடம் பேசி நேரத்தை செலவழித்தால் கல்லூரி நேரத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள் வெகுவாக குறையும்.
கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல அதையும் தாண்டி கவலையற்ற முழுமையான வாழ்க்கை வாழ புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் ஆர்வமும், வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடும், எதையும் சவாலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் தேவை.
ஆக மொத்தத்தில் இன்றைய நவீன உலகின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்லூரி வாழ்க்கையில் சக மாணவர்களிடம் நட்பு பாராட்டி ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொடுக்கும் ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றினால் இன்றைய இளைய தலைமுறை கவனச்சிதறல்களை உடைத்தெறிந்து உயர்ந்த குறிக்கோள்களை சுலபமாக அடையலாம்.
இரா.ராஜ்குமார், உதவி பேராசிரியர்,
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.
சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களின் தாக்கம் மட்டுமே கல்லூரி மாணவர்களிடம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு கல்லூரி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் முன்னூறு முறைக்கும் மேல் செல்போனால் கல்லூரி மாணவனின் கவனம் சிதறுகிறது.
அதேபோல செல்போனால் சராசரியாக நானூறு முறைக்கு மேல் மாணவிகளின் கவனம் சிதறுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு கல்லூரி மாணவர்களிடம் கவனச்சிதறல் பெருமளவு அதிகரித்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் கட்டாயம் ஏற்படுவதால் மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனும் பாதிக்கப்படுவதாக அண்மையில் நடந்த பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்போதும் தங்களை ஒருவித உற்சாக மனநிலையில் வைத்துக்கொள்ள கல்லூரி மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அதிகமாக பொழுதுபோக்கு சாதனங்களை நாடுகின்றனர். அதன் காரணமாக நேர பற்றாக்குறை ஏற்பட்டு அன்றாட வேலைகளை சரிவர செய்ய இயலாமல் பின்னடைவு ஏற்பட்டு தாழ்வுமனப்பான்மை மற்றும் குற்ற உணர்ச்சியால் தவிக்கின்றனர்.
கணினி மற்றும் செல்போன் விளையாட்டுகளை தொடர்ந்து பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதனால் பல்வேறு நோய்களுடன் இதயக் கோளாறுகளும் இளம் வயதிலேயே வந்துவிடுகின்றன. எந்த நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதால் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கம் கல்லூரி மாணவர்களிடையே வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் பாட புத்தகங்கள் படிப்பதிலும் நாட்டமின்றி வெறும் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் அவர்கள் நேர்முக தேர்வுகளில் கேட்கப்படும் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர்.
டீன்ஏஜ் என்னும் இந்த விடலை பருவத்தில் தொடங்கும் கல்லூரி வாழ்க்கை பேராசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை தாண்டி பல அனுபவ பாடங்களையும், படிப்பினைகளையும் சேர்த்தே சொல்லி தருகின்றன. கல்லூரி பருவமும், மாணவப்பருவம் தான் என்பதை சரிவர உணராமல் வயதிற்கு மீறிய செயல்களான படிப்பின் போதே திருமணம், போதை மருந்து பழக்கம், பகைமை உணர்வு போன்றவற்றால் உடல்நலத்துடன் உள்ளநலத்தையும் வீணாக்கி கல்லூரி படிப்பில் பலர் தோல்வி அடைகின்றனர். இத்தகைய நிலைக்கு திரைப்படங்களும், சமூக ஊடகங்களும் ஒரு பெரிய உந்துசக்தியாக செயல்படுகிறது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.
செய்துதான் பார்க்கலாமே வீட்டுக்கா தெரியப்போகிறது யார் பார்க்க போகிறார்கள் என சில கூடா நட்பின் தவறான ஊக்கத்தினால் பல தீயப்பழக்கங்கள் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களிடம் வந்து சேர்ந்துகொள்கிறது. கல்லூரி வாழ்க்கையில் எந்தெந்த பழக்கங்கள் தொற்றிக்கொள்கிறதோ, அதுவே வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கும் பின் தொடரும். ஆகவே கவனச்சிதறலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பின்வரும் முறைகளை பின்பற்றினால் உதவியாக இருக்கும்.
வகுப்பறையில் செல்போனின் இணைய சேவையை அணைத்து வைப்பது நல்லது. இதனால் “நோட்டிபிகேசனால்” உண்டாகும் கவனச்சிதறலை பெருமளவு தவிர்க்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக இணைய பயன்பாட்டை தவிர்த்து நல்ல புத்தகங்களை படிக்க முயற்சிக்கலாம். இதை ஜப்பான் நாட்டில் தற்போது “இன்டர்நெட் பாஸ்டிங்” என்ற முறையில் பின்பற்ற தொடங்கி உள்ளனர். தேர்வுக்கு பத்து நாட்கள் முன்பிலிருந்து இணைய வசதி இல்லாத சாதாரண தொலைபேசியை உபயோகிப்பதால் தேவையற்ற கவனச்சிதறலை தவிர்த்து தேர்விற்கு முழுமையாக தயாராகலாம். வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் சில வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியே வருவதால் தேவையற்ற எண்ணங்களின் பாதிப்பிலிருந்து மனது தப்பிக்கும். அதுமட்டுமின்றி நேரடியாக அறிமுகம் இல்லாத நபர்களை சமூக வலைத்தளங்களின் நட்பு வட்டாரத்தில் சேர்ப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
நேரம் கிடைக்கும் போது குழுவாக வெளியில் சென்று விளையாடுவதினால் மன ஆரோக்கியத்துடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுவதின் மூலம் செயல்திறனையும் அதிகரிக்கலாம். அனைத்திற்கும் மேலாக பெற்றோர் மற்றும் சகோதரர்களை தினசரி சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி வாயிலாக அவர்களிடம் பேசி நேரத்தை செலவழித்தால் கல்லூரி நேரத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள் வெகுவாக குறையும்.
கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல அதையும் தாண்டி கவலையற்ற முழுமையான வாழ்க்கை வாழ புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் ஆர்வமும், வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடும், எதையும் சவாலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் தேவை.
ஆக மொத்தத்தில் இன்றைய நவீன உலகின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்லூரி வாழ்க்கையில் சக மாணவர்களிடம் நட்பு பாராட்டி ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொடுக்கும் ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றினால் இன்றைய இளைய தலைமுறை கவனச்சிதறல்களை உடைத்தெறிந்து உயர்ந்த குறிக்கோள்களை சுலபமாக அடையலாம்.
இரா.ராஜ்குமார், உதவி பேராசிரியர்,
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.
தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம்.
இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு முடிவு, மூன்று இளம் சாதனையாளர்களை, தம் வாழ்க்கையின் முடிவுக்குத் தள்ளி இருக்கிறது. மிகுந்த மன அதிர்ச்சி, மன வலியைத் தந்துள்ள, இந்தச் சோக நிகழ்வுகளுக்கு, ‘நீட்’ தேர்வு மட்டும்தான் காரணமா...?
மன்னிக்கவும் ஏதோ ஒரு வகையில் நம் எல்லாருக்குமே இதில் பங்கு இருக்கிறது. பொதுத்தேர்வு அல்லது போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதை, உலக மகா சாதனையாக உருவகப்படுத்தியது.. இதுவன்றி வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்கிற மாயத் தோற்றத்தைப் பதிவு செய்தது... ‘உலகம் உந்தன் கையிலே; வானம் உந்தன் பையிலே’ என்று சினிமா வசனம் பேசி, பொய்யான நம்பிக்கையை விதைத்தது...
வழிமுறைகளைச் சொல்லித் தயாரிப்பதை விடுத்து, வெறுமனே அறிவுரைகளை மட்டுமே வழங்கி, இளைய மனங்களைத் தனியே தவிக்கவிட்டது... யார் செய்த தவறு..?
தேர்வு நோக்கிய, நம்முடைய பொதுவான அணுகுமுறை அத்தனை சரியானதாக இல்லை. போருக்குப் போகிற வீரனைப் போல, அபாயகரமான அறுவை சிகிச்சைக்குச் செல்கிற நோயாளியைப் போல, சிறுவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்கிற போக்கு உடனடியாக மாறியாக வேண்டும். மணமேடைக்கு வருவதற்கு முன்னால், மணமகன், மணமகளைத் தயார் செய்கிறபோது, சுற்றிலும் எத்தனை மகிழ்ச்சியான சூழல் நிலவும்..? இதே போன்றுதான், எந்தத் தேர்வுக்கான தயாரிப்பும் இருத்தல் வேண்டும். மாறாக, அடிப்படையற்ற அச்சம், தேவையற்ற பதற்றம் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்.
அளவுக்கு அதிகமான மிகப் பெரிய முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு தேர்வையும், வாழ்க்கையின் அதி முக்கியமான சவாலாக மாற்றி வைத்துவிட்டோம். இதன் விளைவாய், தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம். தேர்வு ஒரு படிக்கட்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் வேறு ஒன்றும் இல்லை. ஓர் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக மாறுகிறபோது, அதனை இயல்பாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் அத்தனை எளிதில் எல்லாருக்கும் வந்துவிடாது. வயதில் மூத்த, பெற்றோருக்கே அது மிகவும் கடினமான சவால்தான்.
எனில், இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்...? அதிலும், அடிமட்டத்தில், இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலையில் இருந்து, போராடி வெற்றி பெறத் துடிக்கிற பிஞ்சு மனங்களில், ஏமாற்றம் எத்தனை பெரிய சுமையாக, பேரிடியாக இறங்கும்..? இது ஏதோ ஒரு நாள், ஒரு கணத்தில் ஏற்பட்ட வலி, வேதனை அல்ல. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சந்தித்த, எண்ணற்ற வேதனைகளை விட்டு வெளியே வர ஏங்குகிற அப்பாவி உயிர்களின் இதயத் துடிப்பு. வாழ்க்கையின் யதார்த்தம், உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கான மன வலிமை, வேறு யாரையும் விட மிக அதிகமாக, இவர்களுக்குத் தேவை. ஆனால், நாம் என்ன தந்து வருகிறோம்...?
ஒவ்வொரு முறை ‘பயிலரங்கம்’ சென்று வருகிறபோதும், இளைஞர்கள் கூட்டமாக வந்து கூறுவது இதுதான். எங்களுக்கு தன்னம்பிக்கை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் நிறையவே இருக்கு. நாங்க என்ன படிக்கணும்..? எப்படித் தயார் ஆவணும்..? இப்போ என்ன நடந்துக்கிட்டு இருக்கு...? உண்மையான நிலவரம் என்ன..? எங்களுக்கு இது கிடைக்கிறதுக்கு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கு....?’
ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான வழிமுறைகள், செய்முறைகளை விளக்குவோம். அப்படி எதுவும், சொல்ல முடியவில்லையா...? தயவு செய்து விலகி இருப்போம். உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லை என்று சொல்லி, உசுப்பேற்றி விடுகிற நற்பணியை மட்டும் யாரும் செய்யாமல் இருப்போம். வெற்றி பெறுவதற்கு, கட்டாயம் எல்லாரும் உழைக்க வேண்டி இருக்கிறது. சிலர், இன்னும் அதிகமாகவே பாடுபட வேண்டி உள்ளது. அதற்கான உடல், மன வலிமையை அவர்களுக்குத் தருவது எது...? வெற்று வார்த்தைகள் அல்ல.
களத்தில் அவர்களோடு நின்று நாம் அளிக்கும் ஒத்துழைப்பு; அவர்களின் முயற்சிக்கு நாம் தரும் பங்களிப்பு. பத்து பேர், நூறு பேர் சேர்ந்து ஒரே ஒரு தேர்வருக்கு நேர்மையாக உதவி செய்தால் கூடப் போதும். அதை விடுத்து, ஆயிரம் பேர் நடுவே நின்றுகொண்டு, எழுச்சியுரை ஆற்றி, கைத்தட்டல் வாங்குவதால், இளைஞர்களுக்கு என்ன பயன்...?
வைஸ்யா, ரிதுஸ்ரீ, மோனிஷா ஆகியோர் எடுத்த விபரீத முடிவுகளின் பின்னால், இந்தச் சமுதாயம் அவர்கள் மீது ஏற்றி வைத்த, ‘அபார வெற்றி, அல்லது அவமானகரமான தோல்வி’ தந்த அழுத்தம் மிக முக்கிய காரணம். ஒரு தேர்வு, அதன் முடிவு ஆகியன கல்வித்துறையை தாண்டி, பெற்றோர், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், அரசியல் வடிவம் பெறுவது நல்லதற்கு அல்ல. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது மிக அவசரம், அவசியம். தவறான கற்பித்தல்கள், தரமற்ற வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை எனும் பெயரில் புகட்டப்படும் செயற்கை இலக்குகள்... இளைய தலைமுறையை, கண நேர வெளிச்சத்தைக் காட்டி, நிரந்தரமாய் இருட்டுக்குள் தள்ளி விடும்.எச்சரிக்கை.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்; யாரைக் கண்டும் வியக்கவும் வேண்டாம்; யாரையும் ஏளனமாய் நினைக்கவும் வேண்டாம்.
பழந்தமிழ்ப் பாடல் அழகாய்ச் சொல்கிறது: “பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.
வெற்றியும் அது தரும் புகழும் இருக்கட்டும்.
அதனினும் பெரிது, அதனினும் இனிது வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். இந்தச் செய்தி, இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறதா...?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரி அலுவலர்.
மன்னிக்கவும் ஏதோ ஒரு வகையில் நம் எல்லாருக்குமே இதில் பங்கு இருக்கிறது. பொதுத்தேர்வு அல்லது போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதை, உலக மகா சாதனையாக உருவகப்படுத்தியது.. இதுவன்றி வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்கிற மாயத் தோற்றத்தைப் பதிவு செய்தது... ‘உலகம் உந்தன் கையிலே; வானம் உந்தன் பையிலே’ என்று சினிமா வசனம் பேசி, பொய்யான நம்பிக்கையை விதைத்தது...
வழிமுறைகளைச் சொல்லித் தயாரிப்பதை விடுத்து, வெறுமனே அறிவுரைகளை மட்டுமே வழங்கி, இளைய மனங்களைத் தனியே தவிக்கவிட்டது... யார் செய்த தவறு..?
தேர்வு நோக்கிய, நம்முடைய பொதுவான அணுகுமுறை அத்தனை சரியானதாக இல்லை. போருக்குப் போகிற வீரனைப் போல, அபாயகரமான அறுவை சிகிச்சைக்குச் செல்கிற நோயாளியைப் போல, சிறுவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்கிற போக்கு உடனடியாக மாறியாக வேண்டும். மணமேடைக்கு வருவதற்கு முன்னால், மணமகன், மணமகளைத் தயார் செய்கிறபோது, சுற்றிலும் எத்தனை மகிழ்ச்சியான சூழல் நிலவும்..? இதே போன்றுதான், எந்தத் தேர்வுக்கான தயாரிப்பும் இருத்தல் வேண்டும். மாறாக, அடிப்படையற்ற அச்சம், தேவையற்ற பதற்றம் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்.
அளவுக்கு அதிகமான மிகப் பெரிய முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு தேர்வையும், வாழ்க்கையின் அதி முக்கியமான சவாலாக மாற்றி வைத்துவிட்டோம். இதன் விளைவாய், தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம். தேர்வு ஒரு படிக்கட்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் வேறு ஒன்றும் இல்லை. ஓர் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக மாறுகிறபோது, அதனை இயல்பாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் அத்தனை எளிதில் எல்லாருக்கும் வந்துவிடாது. வயதில் மூத்த, பெற்றோருக்கே அது மிகவும் கடினமான சவால்தான்.
எனில், இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்...? அதிலும், அடிமட்டத்தில், இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலையில் இருந்து, போராடி வெற்றி பெறத் துடிக்கிற பிஞ்சு மனங்களில், ஏமாற்றம் எத்தனை பெரிய சுமையாக, பேரிடியாக இறங்கும்..? இது ஏதோ ஒரு நாள், ஒரு கணத்தில் ஏற்பட்ட வலி, வேதனை அல்ல. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சந்தித்த, எண்ணற்ற வேதனைகளை விட்டு வெளியே வர ஏங்குகிற அப்பாவி உயிர்களின் இதயத் துடிப்பு. வாழ்க்கையின் யதார்த்தம், உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கான மன வலிமை, வேறு யாரையும் விட மிக அதிகமாக, இவர்களுக்குத் தேவை. ஆனால், நாம் என்ன தந்து வருகிறோம்...?
ஒவ்வொரு முறை ‘பயிலரங்கம்’ சென்று வருகிறபோதும், இளைஞர்கள் கூட்டமாக வந்து கூறுவது இதுதான். எங்களுக்கு தன்னம்பிக்கை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் நிறையவே இருக்கு. நாங்க என்ன படிக்கணும்..? எப்படித் தயார் ஆவணும்..? இப்போ என்ன நடந்துக்கிட்டு இருக்கு...? உண்மையான நிலவரம் என்ன..? எங்களுக்கு இது கிடைக்கிறதுக்கு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கு....?’
ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான வழிமுறைகள், செய்முறைகளை விளக்குவோம். அப்படி எதுவும், சொல்ல முடியவில்லையா...? தயவு செய்து விலகி இருப்போம். உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லை என்று சொல்லி, உசுப்பேற்றி விடுகிற நற்பணியை மட்டும் யாரும் செய்யாமல் இருப்போம். வெற்றி பெறுவதற்கு, கட்டாயம் எல்லாரும் உழைக்க வேண்டி இருக்கிறது. சிலர், இன்னும் அதிகமாகவே பாடுபட வேண்டி உள்ளது. அதற்கான உடல், மன வலிமையை அவர்களுக்குத் தருவது எது...? வெற்று வார்த்தைகள் அல்ல.
களத்தில் அவர்களோடு நின்று நாம் அளிக்கும் ஒத்துழைப்பு; அவர்களின் முயற்சிக்கு நாம் தரும் பங்களிப்பு. பத்து பேர், நூறு பேர் சேர்ந்து ஒரே ஒரு தேர்வருக்கு நேர்மையாக உதவி செய்தால் கூடப் போதும். அதை விடுத்து, ஆயிரம் பேர் நடுவே நின்றுகொண்டு, எழுச்சியுரை ஆற்றி, கைத்தட்டல் வாங்குவதால், இளைஞர்களுக்கு என்ன பயன்...?
வைஸ்யா, ரிதுஸ்ரீ, மோனிஷா ஆகியோர் எடுத்த விபரீத முடிவுகளின் பின்னால், இந்தச் சமுதாயம் அவர்கள் மீது ஏற்றி வைத்த, ‘அபார வெற்றி, அல்லது அவமானகரமான தோல்வி’ தந்த அழுத்தம் மிக முக்கிய காரணம். ஒரு தேர்வு, அதன் முடிவு ஆகியன கல்வித்துறையை தாண்டி, பெற்றோர், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், அரசியல் வடிவம் பெறுவது நல்லதற்கு அல்ல. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது மிக அவசரம், அவசியம். தவறான கற்பித்தல்கள், தரமற்ற வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை எனும் பெயரில் புகட்டப்படும் செயற்கை இலக்குகள்... இளைய தலைமுறையை, கண நேர வெளிச்சத்தைக் காட்டி, நிரந்தரமாய் இருட்டுக்குள் தள்ளி விடும்.எச்சரிக்கை.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்; யாரைக் கண்டும் வியக்கவும் வேண்டாம்; யாரையும் ஏளனமாய் நினைக்கவும் வேண்டாம்.
பழந்தமிழ்ப் பாடல் அழகாய்ச் சொல்கிறது: “பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.
வெற்றியும் அது தரும் புகழும் இருக்கட்டும்.
அதனினும் பெரிது, அதனினும் இனிது வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். இந்தச் செய்தி, இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறதா...?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரி அலுவலர்.
மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. விடுமுறையில் பொழுதுபோக்கிய மாணவ- மாணவிகள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இதையொட்டி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதுமான அளவில் செய்ய வேண்டும். அதே போல் பள்ளியின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வெயில் மற்றும் மழை பெய்யும் போது மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ- மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ- மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் தவறுகளில் ஈடுபடாமலும், நல்வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும்.
அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.
செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டதால் எந்த வேலையையும் எளிதாக செய்து விட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ- மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ- மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் தவறுகளில் ஈடுபடாமலும், நல்வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும்.
அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.
செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டதால் எந்த வேலையையும் எளிதாக செய்து விட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரியை தேர்வு செய்து குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரை உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து உள்ளது. இதையொட்டி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களும் அதிகரித்து வருகிறது.
ஆனால் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு என்பது போதுமானதாக இல்லை. இதனால் படித்த மாணவ-மாணவிகள் வேலைக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலை என்பது அதிகரித்து விட்டது. ஏதோ ஒரு துறையில் படித்து விட்டு ஏதோ ஒரு வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் படித்தவர்களின் திறன் பயன்படாமல் போகும் நிலை உள்ளது.
எனவே பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் படிப்பு என்பது வெறும் சான்றிதழ் என்ற அளவில் மதிப்பிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே ஒவ்வொரு மாணவரும் ஈடுபட விரும்பும் தொழில்களை பாடத்திட்டங்களாக வடிவமைக்க வேண்டும்.
வகுப்பறை, மேஜை, நாற்காலி என்ற அளவில் இருக்கும் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு தொழில் சார்ந்தும் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த தொழில் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண் டாவது செயல்முறையாக செய்ய வேண்டும். அவர் எந்த தொழில் சார்ந்து பயிற்சி பெறுகிறாரே அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
மேலும் படிக்கிற காலத்தில் மாணவர்கள் செய் யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தைரியமாக தொழில்களில் ஈடுபடக்கூடிய நிலை வரும். இல்லை என்றால் வேலைக்கு செல்வதற்கான கருவியாகத் தான் படிப்புசான்றிதழ் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தொழிலாளர்களை உற்பத்தி செய்வதாகத் தான் கல்வி பாடத்திட்டம் இருக்கும். தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு என்பது இல்லாமல் போய் விடும்.
மேலும் அரசின் கொள்கைகள், நிதி உதவி, மானியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக வேலை வாய்ப்பும், தினசரி தேவைகள் உள்ளது மான விவசாய தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அப்போது தான் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் தான் நகரங்களை நோக்கி மக்கள் குவிவதையும் தடுக்க முடியும். தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஊருக்கு ஊர் வேறுபடும். அதை கண்டறிந்து புதிய புதிய தொழில்கள் தொடங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.
உலகமயமாகிய பொருளாதார சூழலில் தொழில் நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலாக மாறி இருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போட்டி இருந்தால் தான் வெற்றிக்கான வழி கண்டறிந்து அடைய முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கல்வியின் பாடத் திட்டமும், தொழில்துறையின் கொள்கைகளும் இணைய வேண்டிய காலத்தின் கட்டாயம். அதை சாத்தியமாக்கி விட்டால் படித்த மாணவர்கள் வேலை கேட்பவர் என்ற நிலையில் இருந்து வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார் கள். இதன்மூலம் வேலைஇல்லாத திண்டாட்டம் நீங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, வறுமை ஒழிய வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு என்பது போதுமானதாக இல்லை. இதனால் படித்த மாணவ-மாணவிகள் வேலைக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலை என்பது அதிகரித்து விட்டது. ஏதோ ஒரு துறையில் படித்து விட்டு ஏதோ ஒரு வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் படித்தவர்களின் திறன் பயன்படாமல் போகும் நிலை உள்ளது.
எனவே பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் படிப்பு என்பது வெறும் சான்றிதழ் என்ற அளவில் மதிப்பிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே ஒவ்வொரு மாணவரும் ஈடுபட விரும்பும் தொழில்களை பாடத்திட்டங்களாக வடிவமைக்க வேண்டும்.
வகுப்பறை, மேஜை, நாற்காலி என்ற அளவில் இருக்கும் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு தொழில் சார்ந்தும் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த தொழில் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண் டாவது செயல்முறையாக செய்ய வேண்டும். அவர் எந்த தொழில் சார்ந்து பயிற்சி பெறுகிறாரே அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
மேலும் படிக்கிற காலத்தில் மாணவர்கள் செய் யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தைரியமாக தொழில்களில் ஈடுபடக்கூடிய நிலை வரும். இல்லை என்றால் வேலைக்கு செல்வதற்கான கருவியாகத் தான் படிப்புசான்றிதழ் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தொழிலாளர்களை உற்பத்தி செய்வதாகத் தான் கல்வி பாடத்திட்டம் இருக்கும். தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு என்பது இல்லாமல் போய் விடும்.
மேலும் அரசின் கொள்கைகள், நிதி உதவி, மானியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக வேலை வாய்ப்பும், தினசரி தேவைகள் உள்ளது மான விவசாய தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அப்போது தான் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் தான் நகரங்களை நோக்கி மக்கள் குவிவதையும் தடுக்க முடியும். தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஊருக்கு ஊர் வேறுபடும். அதை கண்டறிந்து புதிய புதிய தொழில்கள் தொடங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.
உலகமயமாகிய பொருளாதார சூழலில் தொழில் நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலாக மாறி இருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போட்டி இருந்தால் தான் வெற்றிக்கான வழி கண்டறிந்து அடைய முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கல்வியின் பாடத் திட்டமும், தொழில்துறையின் கொள்கைகளும் இணைய வேண்டிய காலத்தின் கட்டாயம். அதை சாத்தியமாக்கி விட்டால் படித்த மாணவர்கள் வேலை கேட்பவர் என்ற நிலையில் இருந்து வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார் கள். இதன்மூலம் வேலைஇல்லாத திண்டாட்டம் நீங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, வறுமை ஒழிய வாய்ப்பு ஏற்படும்.
இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.
கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமென்ற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அந்தவகையில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தேசிய கல்வி கொள்கையை வகுக்க பா.ஜ.க. தேசிய கல்வி ஆணையத்தை அமைக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சொன்னதுபோல, 2 ஆண்டுகளில் இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அரசு மீண்டும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை 2017-ல் அமைத்தது. இந்த குழு தேசிய கல்வி கொள்கைக்காக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து, புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் முழு விவரம் மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mhrd.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
484 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கையில் பல வரவேற்கத்தக்க சீர்த்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தாலும், மொழிகளை பொறுத்தமட்டில், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித்திட்டத்தை கொண்டுவரவேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தி தவிர, ஆங்கிலமும், மேலும் ஒரு இந்திய மொழியும் கற்றுக்கொடுக்கவேண்டும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியோடு, ஆங்கிலம் மற்றும் இந்தியை கட்டாயம் பயிலவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்காளம் போன்ற பல மாநிலங்களில் இது இந்தி திணிப்பு என்று அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பின. தமிழக அரசின் சார்பில் இருமொழி கொள்கைதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு என்று கூறப்பட்டது. இந்தநிலையில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர், ‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்விக்குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்’ என்று தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் எதிர்ப்புகள் குறையவில்லை.
இந்தநிலையில், வரைவு திட்டத்தில் நேற்று இணையதளத்தில் மாற்றம் வெளியிடப்பட்டன. இதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது. ஆக, இப்போது இந்தி திணிப்பு இல்லை, ஆனால் மும்மொழி கல்வித்திட்டம் வேண்டுமா?, வேண்டாமா? என்பதுதான் தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும்.
இதில், அரசோ, அரசியல் கட்சிகளோ என்ன நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டாலும், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என்ன கருதுகிறார்கள்? என்று அறிந்து முடிவெடுப்பது சாலச்சிறந்ததாகும். தான் என்ன படிக்கவேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களுமே முடிவு செய்யட்டும். மொழிகளை கற்கும் விஷயத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் nep.edu@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இருமொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா,? மும்மொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா? என்பதையெல்லாம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் கருத்துகள் பதிவிடப்படவேண்டும் என்பதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அரசு மீண்டும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை 2017-ல் அமைத்தது. இந்த குழு தேசிய கல்வி கொள்கைக்காக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து, புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் முழு விவரம் மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mhrd.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
484 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கையில் பல வரவேற்கத்தக்க சீர்த்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தாலும், மொழிகளை பொறுத்தமட்டில், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித்திட்டத்தை கொண்டுவரவேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தி தவிர, ஆங்கிலமும், மேலும் ஒரு இந்திய மொழியும் கற்றுக்கொடுக்கவேண்டும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியோடு, ஆங்கிலம் மற்றும் இந்தியை கட்டாயம் பயிலவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்காளம் போன்ற பல மாநிலங்களில் இது இந்தி திணிப்பு என்று அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பின. தமிழக அரசின் சார்பில் இருமொழி கொள்கைதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு என்று கூறப்பட்டது. இந்தநிலையில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர், ‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்விக்குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்’ என்று தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் எதிர்ப்புகள் குறையவில்லை.
இந்தநிலையில், வரைவு திட்டத்தில் நேற்று இணையதளத்தில் மாற்றம் வெளியிடப்பட்டன. இதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது. ஆக, இப்போது இந்தி திணிப்பு இல்லை, ஆனால் மும்மொழி கல்வித்திட்டம் வேண்டுமா?, வேண்டாமா? என்பதுதான் தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும்.
இதில், அரசோ, அரசியல் கட்சிகளோ என்ன நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டாலும், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என்ன கருதுகிறார்கள்? என்று அறிந்து முடிவெடுப்பது சாலச்சிறந்ததாகும். தான் என்ன படிக்கவேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களுமே முடிவு செய்யட்டும். மொழிகளை கற்கும் விஷயத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் nep.edu@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இருமொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா,? மும்மொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா? என்பதையெல்லாம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் கருத்துகள் பதிவிடப்படவேண்டும் என்பதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினசரி கடைப்பிடிக்கவேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்...
ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினசரி கடைப்பிடிக்கவேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்...
பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல் வேண்டும்.
பள்ளிக்கு நாள்தோறும் தவறாமல் சீருடையில் வர வேண்டும்.
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மாணவர்கள் வகுப்பு அறை மற்றும் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் புத்தகங்களை நாள்தோறும் தவறாமல் பள்ளிக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை மாணவர்கள் கையேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
அமைதியாகவும், பணிவாகவும், ஒழுக்கத் துடன் நடந்துகொள்ள வேண்டும்.
பேச்சு, செயல், எண்ணம் இவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளியில் பாடம் நடத்தத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே நாம் கவனத்துடன் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வது மட்டுமே படிக்கும் முறை என்று நினைக்க வேண்டாம்.
உங்கள் கவனம் முழுவதும் தினந்தோறும் வகுப்பில் நடத்தும் பாடங்களை நன்கு புரிந்துகொண்டு மீண்டும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் பள்ளித்தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அன்றைய நாளே, அன்றைய இரவே, புரிந்து, எழுதி படித்தால் ஆழ்மனதில் பதிந்து விடும்.
அறிவுப் பெட்டகமாக திகழும் ஆசிரியர்கள் சொல்வதை கடைப்பிடித்து, அவர்களை மதித்து அதன்படி நடந்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
பள்ளிக் கல்வித்துறையினர் இந்த விதிமுறைகளை பின்பற்ற மாணவர்களை அறிவுறுத்தி உள்ளனர். அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல் வேண்டும்.
பள்ளிக்கு நாள்தோறும் தவறாமல் சீருடையில் வர வேண்டும்.
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மாணவர்கள் வகுப்பு அறை மற்றும் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் புத்தகங்களை நாள்தோறும் தவறாமல் பள்ளிக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை மாணவர்கள் கையேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
அமைதியாகவும், பணிவாகவும், ஒழுக்கத் துடன் நடந்துகொள்ள வேண்டும்.
பேச்சு, செயல், எண்ணம் இவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளியில் பாடம் நடத்தத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே நாம் கவனத்துடன் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வது மட்டுமே படிக்கும் முறை என்று நினைக்க வேண்டாம்.
உங்கள் கவனம் முழுவதும் தினந்தோறும் வகுப்பில் நடத்தும் பாடங்களை நன்கு புரிந்துகொண்டு மீண்டும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் பள்ளித்தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அன்றைய நாளே, அன்றைய இரவே, புரிந்து, எழுதி படித்தால் ஆழ்மனதில் பதிந்து விடும்.
அறிவுப் பெட்டகமாக திகழும் ஆசிரியர்கள் சொல்வதை கடைப்பிடித்து, அவர்களை மதித்து அதன்படி நடந்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
பள்ளிக் கல்வித்துறையினர் இந்த விதிமுறைகளை பின்பற்ற மாணவர்களை அறிவுறுத்தி உள்ளனர். அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.
சென்னையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி லோகிதா 5 கி.மீட்டர் தூரம் மெரினா கடலில் நீந்தி சாதனை படைத்தார். கடலில் நீந்திய சிறுமியையும், நீந்த வைத்த தந்தையையும், தாயையும், பயிற்சியாளரையும் பாராட்ட வேண்டும். இவரது தந்தை மகிமைதாஸ் சென்னை நகர போலீஸ் காவலர், தேசிய நீச்சல் வீரர் சென்ற ஆண்டு என்னுடன் இலங்கையிலிருந்து ராமேசுவரத்திற்கு கடலில் நீந்தியவர்.
பயமறியாத லோகிதா இன்று சிறுவர்களின் கதாநாயகி. ஆனால் இந்த சாதனை பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி கவலையும் நமக்கு இல்லை. இது ஒரு உண்மையான சாகசம். ஆனால் சாகசத்திற்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. கிரிக்கெட் வீரர்களின் சாதனை மட்டும் தெரிந்தால் போதும் என்ற நிலைதான் இன்று.
விளையாட்டில் சாதித்தவர்கள் கூட அவர்களது பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. அந்த அளவுக்கு விளையாட்டு மீது அக்கறையில்லாமல் போய்விட்டது. எனவே இன்று பிள்ளைகளிடம் சாதனை உணர்வு வளர்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அது நமது கடமையாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் நீச்சல் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் நீந்தினார்கள். ஆறுகளும், குளங்களும் வற்றிய பிறகு அதிலும் சில ஆறுகள் சாக்கடையான பிறகு நீந்த முடியவில்லை. இளைஞர்களுக்கு நீந்தத் தெரியாத நிலை இன்று உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டும் நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றுக்கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 1,000 கி.மீட்டர் தூரம் கடற்கரை இருக்கிறது. கடற்கரை மாவட்டத்து மக்கள் கூட கடலில் நீந்துவதில்லை. நீந்திப் பழக்கமில்லை. பெற்றோரும் அனுமதிப்பது இல்லை. அவ்வளவு பயம். கடலில் கால் நனைக்க போகிறவர்கள் கூட நீச்சல் தெரியாததால் கடல் நீரில் மூழ்கி இறக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் நமது ஊரில் வேலை செய்யும் வெளிநாட்டினர் இங்கே தினமும் கடலில் நீந்துகிறார்கள். அவர்களுக்கு பயமில்லையா? உயிர் மீது அக்கறை இல்லையா? இருக்கும். ஆனால் அவர்களுக்கு உயிரைவிட சாகசம் செய்வது பெரியதாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உயர் தொழில்நுட்ப வேலை செய்ய சாதனை படைத்த அவர்களை நாம் இங்கு அழைத்து வந்திருக்கிறோம்.
இப்படி வெளிநாட்டவர்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு சாகச பயிற்சி தரும்போது நாம் மட்டும் பிள்ளைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பது நல்லதா? இமயமலையின் எவரெஸ்டு சிகரம் 8,848 மீட்டர். இன்று இதில் ஏற வரிசையில் மலையேறும் வீரர்கள் காத்து நிற்பதாக ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். கடந்த சில நாட்களில் ஏறச் சென்ற ஏழு பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. அந்த அளவுக்கு உயிரை துச்சமாக மதித்து உலக மக்கள் சாகச செயல்கள் புரிய விழையும் போது நாம் மட்டும் பாதுகாப்பாக இருக்க நினைத்தால் என்னவாகும்.
சாகசம் புரிபவர்கள் ஆபத்தை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஆராய்ச்சியிலும், தொழிலிலும், வணிகத்திலும், விளையாட்டிலும், போரிலும் துணிந்து இறங்குவார்கள். எனவேதான் ஆப்பிள் ஐ போன், மைக்ரோசாப்ட், அமேசான் என்று உலக நிறுவனங்களை சாகசக்காரர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சோம்பியிருக்கும் மக்களால் அதெல்லாம் முடியாது. அவர்கள் முற்கால பெருமைகளை பேசிக்கொண்டிருப்பார்கள்.
சாகச விளையாட்டுகளுக்கும், சாதனை விளையாட்டுகளுக்கும் ஏன் இன்னும் நம்மிடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது என்று புரியவில்லை. ஓட்டப்பந்தயம், கையுந்து பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் நம் நாட்டில் மிகவும் சிறப்பாக இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பின்னர் யுகோஸ்லாவாகியா அணியுடன் மோதி தோல்வி கண்டது. அது போல 1951-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு கையுந்து பந்து போட்டியில் நாம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளோம். ஆனால் இன்று நாம் உலககோப்பை போட்டியிலும் விளையாடக்கூட தகுதி இல்லாமல் போய்விட்டோம்.
ஒலிம்பிக் போட்டிகள் உலக விளையாட்டுத் திருவிழா அதில் விளையாடி பதக்கம் பெறுவது ஒரு நாட்டிற்கு பெருமை சேர்க்கும். ஆனால் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடான இந்தியாவிற்கு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்கவில்லை.
கையுந்து பந்து, கால்பந்து, ஓடுவது போன்றவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். ஆனால் சில பெற்றோர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டில் தங்களது பிள்ளைகளை உற்சாகமாக ஈடுபடுத்துகிறார்கள். இது கூட ஒரு வீண்வேலை என்றே தோன்றுகிறது. அதற்கு பதில் ஒலிம்பிக்கில் விளையாடும் விளையாட்டில் ஈடுபட வைத்தால் அந்த குழந்தைக்கும் உலக அரங்கில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும், இந்தியாவிற்கும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கும்.
காவல்துறையில் இப்போது சேரும் காவலர்களிடம் விளையாடுவீர்களா என்று கேட்டால் விளையாடுகிறோம் என்கிறார்கள். என்ன விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்கிறார்கள். கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இல்லவே இல்லை. அந்த விளையாட்டு விளையாடி என்ன பயன்? ஆனால் இதே காவல் துறையில் ஹாக்கி விளையாடிய வீரர்கள் பிரான்சிஸ், லட்சுமணன் ஆகியோர் 1956-ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய தேசிய அணியில் விளையாடியவர்கள். இதில் லட்சுமணன் இந்திய அணியின் கோல் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஓடிய சுப்பிரமணியன் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றியவர். அவருக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் காவல்துறையிலிருந்து விலகி ரெயில்வே துறைக்கு சென்றுவிட்டார் என்பது வேறுகதை.
சாகச தன்மையுள்ள விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் நமக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா என்பது மட்டுமல்ல, சாகச குணம் கொண்ட உலக மக்களுடன் நமது பிள்ளைகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வர்த்தகத்திலும் எப்படி போட்டியிட முடியும் என்பதுதான் முதல் கேள்வி. உலக மக்கள் ஓடி, சைக்கிள் ஓட்டி, நீச்சலடித்து, உடல்நலம் காத்து ஆரோக்கியமாக இருக்கும்போது அவர்களுடன் உடல் நலம் குறைந்த நமது பிள்ளைகள் எப்படி விளையாட்டில் போட்டியிட முடியும் என்பது இரண்டாவது கேள்வி. இப்படி விளையாடாத பிள்ளைகள் நோய்கள் பல வந்த பிறகு அவற்றை குணமாக்க நம்மிடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது மூன்றாவது கேள்வி.
நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் மேலானவை. குறிப்பாக நீச்சல் பழக்கிவிடுங்கள். வேடிக்கை விளையாட்டுகளையும், சோம்பேறி விளையாட்டுகளையும், சூதாட்ட விளையாட்டுகளையும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளையும் புறந்தள்ளுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் தருவாயில் உலக மக்கள் விளையாடும் உண்மையான விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடட்டும். விளையாடிக்கொண்டே படிக்கட்டும். படித்துக்கொண்டே விளையாடட்டும். இன்றைய சூழ்நிலையில் உண்மையான கல்வி என்பதும் அதுதான்.
முனைவர் செ.சைலேந்திரபாபு,
ஐ.பி.எஸ். காவல்துறை இயக்குனர்.
பயமறியாத லோகிதா இன்று சிறுவர்களின் கதாநாயகி. ஆனால் இந்த சாதனை பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி கவலையும் நமக்கு இல்லை. இது ஒரு உண்மையான சாகசம். ஆனால் சாகசத்திற்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. கிரிக்கெட் வீரர்களின் சாதனை மட்டும் தெரிந்தால் போதும் என்ற நிலைதான் இன்று.
விளையாட்டில் சாதித்தவர்கள் கூட அவர்களது பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. அந்த அளவுக்கு விளையாட்டு மீது அக்கறையில்லாமல் போய்விட்டது. எனவே இன்று பிள்ளைகளிடம் சாதனை உணர்வு வளர்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அது நமது கடமையாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் நீச்சல் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் நீந்தினார்கள். ஆறுகளும், குளங்களும் வற்றிய பிறகு அதிலும் சில ஆறுகள் சாக்கடையான பிறகு நீந்த முடியவில்லை. இளைஞர்களுக்கு நீந்தத் தெரியாத நிலை இன்று உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டும் நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றுக்கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 1,000 கி.மீட்டர் தூரம் கடற்கரை இருக்கிறது. கடற்கரை மாவட்டத்து மக்கள் கூட கடலில் நீந்துவதில்லை. நீந்திப் பழக்கமில்லை. பெற்றோரும் அனுமதிப்பது இல்லை. அவ்வளவு பயம். கடலில் கால் நனைக்க போகிறவர்கள் கூட நீச்சல் தெரியாததால் கடல் நீரில் மூழ்கி இறக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் நமது ஊரில் வேலை செய்யும் வெளிநாட்டினர் இங்கே தினமும் கடலில் நீந்துகிறார்கள். அவர்களுக்கு பயமில்லையா? உயிர் மீது அக்கறை இல்லையா? இருக்கும். ஆனால் அவர்களுக்கு உயிரைவிட சாகசம் செய்வது பெரியதாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உயர் தொழில்நுட்ப வேலை செய்ய சாதனை படைத்த அவர்களை நாம் இங்கு அழைத்து வந்திருக்கிறோம்.
இப்படி வெளிநாட்டவர்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு சாகச பயிற்சி தரும்போது நாம் மட்டும் பிள்ளைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பது நல்லதா? இமயமலையின் எவரெஸ்டு சிகரம் 8,848 மீட்டர். இன்று இதில் ஏற வரிசையில் மலையேறும் வீரர்கள் காத்து நிற்பதாக ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். கடந்த சில நாட்களில் ஏறச் சென்ற ஏழு பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. அந்த அளவுக்கு உயிரை துச்சமாக மதித்து உலக மக்கள் சாகச செயல்கள் புரிய விழையும் போது நாம் மட்டும் பாதுகாப்பாக இருக்க நினைத்தால் என்னவாகும்.
சாகசம் புரிபவர்கள் ஆபத்தை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஆராய்ச்சியிலும், தொழிலிலும், வணிகத்திலும், விளையாட்டிலும், போரிலும் துணிந்து இறங்குவார்கள். எனவேதான் ஆப்பிள் ஐ போன், மைக்ரோசாப்ட், அமேசான் என்று உலக நிறுவனங்களை சாகசக்காரர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சோம்பியிருக்கும் மக்களால் அதெல்லாம் முடியாது. அவர்கள் முற்கால பெருமைகளை பேசிக்கொண்டிருப்பார்கள்.
சாகச விளையாட்டுகளுக்கும், சாதனை விளையாட்டுகளுக்கும் ஏன் இன்னும் நம்மிடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது என்று புரியவில்லை. ஓட்டப்பந்தயம், கையுந்து பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் நம் நாட்டில் மிகவும் சிறப்பாக இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பின்னர் யுகோஸ்லாவாகியா அணியுடன் மோதி தோல்வி கண்டது. அது போல 1951-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு கையுந்து பந்து போட்டியில் நாம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளோம். ஆனால் இன்று நாம் உலககோப்பை போட்டியிலும் விளையாடக்கூட தகுதி இல்லாமல் போய்விட்டோம்.
ஒலிம்பிக் போட்டிகள் உலக விளையாட்டுத் திருவிழா அதில் விளையாடி பதக்கம் பெறுவது ஒரு நாட்டிற்கு பெருமை சேர்க்கும். ஆனால் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடான இந்தியாவிற்கு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்கவில்லை.
கையுந்து பந்து, கால்பந்து, ஓடுவது போன்றவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். ஆனால் சில பெற்றோர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டில் தங்களது பிள்ளைகளை உற்சாகமாக ஈடுபடுத்துகிறார்கள். இது கூட ஒரு வீண்வேலை என்றே தோன்றுகிறது. அதற்கு பதில் ஒலிம்பிக்கில் விளையாடும் விளையாட்டில் ஈடுபட வைத்தால் அந்த குழந்தைக்கும் உலக அரங்கில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும், இந்தியாவிற்கும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கும்.
காவல்துறையில் இப்போது சேரும் காவலர்களிடம் விளையாடுவீர்களா என்று கேட்டால் விளையாடுகிறோம் என்கிறார்கள். என்ன விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்கிறார்கள். கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இல்லவே இல்லை. அந்த விளையாட்டு விளையாடி என்ன பயன்? ஆனால் இதே காவல் துறையில் ஹாக்கி விளையாடிய வீரர்கள் பிரான்சிஸ், லட்சுமணன் ஆகியோர் 1956-ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய தேசிய அணியில் விளையாடியவர்கள். இதில் லட்சுமணன் இந்திய அணியின் கோல் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஓடிய சுப்பிரமணியன் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றியவர். அவருக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் காவல்துறையிலிருந்து விலகி ரெயில்வே துறைக்கு சென்றுவிட்டார் என்பது வேறுகதை.
சாகச தன்மையுள்ள விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் நமக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா என்பது மட்டுமல்ல, சாகச குணம் கொண்ட உலக மக்களுடன் நமது பிள்ளைகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வர்த்தகத்திலும் எப்படி போட்டியிட முடியும் என்பதுதான் முதல் கேள்வி. உலக மக்கள் ஓடி, சைக்கிள் ஓட்டி, நீச்சலடித்து, உடல்நலம் காத்து ஆரோக்கியமாக இருக்கும்போது அவர்களுடன் உடல் நலம் குறைந்த நமது பிள்ளைகள் எப்படி விளையாட்டில் போட்டியிட முடியும் என்பது இரண்டாவது கேள்வி. இப்படி விளையாடாத பிள்ளைகள் நோய்கள் பல வந்த பிறகு அவற்றை குணமாக்க நம்மிடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது மூன்றாவது கேள்வி.
நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் மேலானவை. குறிப்பாக நீச்சல் பழக்கிவிடுங்கள். வேடிக்கை விளையாட்டுகளையும், சோம்பேறி விளையாட்டுகளையும், சூதாட்ட விளையாட்டுகளையும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளையும் புறந்தள்ளுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் தருவாயில் உலக மக்கள் விளையாடும் உண்மையான விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடட்டும். விளையாடிக்கொண்டே படிக்கட்டும். படித்துக்கொண்டே விளையாடட்டும். இன்றைய சூழ்நிலையில் உண்மையான கல்வி என்பதும் அதுதான்.
முனைவர் செ.சைலேந்திரபாபு,
ஐ.பி.எஸ். காவல்துறை இயக்குனர்.
உங்கள் குழந்தைகளை சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.
வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.
குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.
ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.
அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.
சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.
மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.
அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.
குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.
ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.
அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.
சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.
மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.
அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.
குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது.
2019-ம் ஆண்டின் சுட்டெரிக்கும் கோடை மெதுவாக விலக ஆரம்பிக்க, புதுக் கல்வியாண்டும் நெருங்கிவிட்டது. பல ஆயிரம் பெற்றோர்கள் தம் அரும்புக் குழந்தைகளின் கைப்பிடித்து கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் மிரட்சி கலந்து அவரவர்கள் வசதிக்கேற்ப கூட்டிச் செல்வதும் நம் கண்ணில் விரிகிறது. அந்தக் காட்சிகளில் தம் குழந்தைகள் மேல் அவர்கள் ஏற்றிய கனவுகளும் தெரிகின்றன. அந்தக் கனவுகளின் பாதை அவர்களை இட்டுச் செல்வது அவர்களின் இன்றைய கனவுப் பள்ளிகள்.
உலகில் எந்த நாட்டையும் விட தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தும் மிக அதிகமான பெற்றோர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு. தனது பிள்ளைகளைத் தாண்டி, பேரன் பேத்திகளையும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் தாத்தா பாட்டிகளும் நம்மிடையே உண்டு.
குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏராளமான விற்பன்னர்களை விவசாயம் முதல் விண்வெளி வரையிலான எல்லாத்துறைகளிலும் நமது கல்விக்கூடங்கள் உருவாக்கியுள்ளன.
சுருங்கச் சொன்னால், பள்ளிக்கூட அறையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, அணுவிலிருந்து சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கிரகம் வரை தமிழகத்தில் படித்தவர்களின் உயரங்கள் சிறப்பாகவே உள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்றுணர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில், கல்வி நிலையங்களை உருவாக்க முடியாத நிலை அரசுக்கும் உருவானது. அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் நிலை முதலில் உருவானது.
அதன்பின் அரசு அனுமதியுடன் சில ஆர்வலர்கள் பொருளாதார லாப நோக்கின்றி ஒரு சமுதாயத் தொண்டாய் மட்டுமே கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்த ஆரம்பித்தனர். இப்படி மூன்று வகையான கல்வி நிலையங்கள் இருந்தாலும் சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் கல்வி நிலையங்கள் ஒரு தனி மனிதனிடம் உருவாக்கவில்லை.
நாம் பார்க்கும் அந்தச் சிறப்பான இடத்தில் தமிழகமும், தமிழர்களும் இன்று வரை இருக்கக் காரணம், தேவையான அளவில், சம வாய்ப்புடன் நமக்குக் கிடைத்த பள்ளிகளும், கல்லூரிகளும், நன்கு படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும். பல ஆயிரம் குடும்பங்களில் முந்தைய தலைமுறைகளை விட அடுத்த தலை முறை தலை நிமிர்ந்து நடக்கும் ஒரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமான கோவில்களாகவும், கடவுள்களாகவும் எனக்கு அந்தக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தெரிவது ஒரு மிகையான கற்பனை அல்ல.
இப்படிப் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து கொள்ளும் நமக்கு, இன்றைய சில செய்திகளைப் பார்க்கும்போது எதிர்காலம் பற்றி ஒரு பெரிய கேள்விக்குறியும் எழுகிறது.
நான் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற கோவையில் ஒரு தாய் தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பணத்தை குறித்த காலத்திற்குள் கட்ட முடியாததால் மனம் வாடி தனக்குத்தானே தீயிட்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு நான் எழுதியது,
இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை. இன்று சமுதாயத்தில் மெதுவாகப் பரவி வரும் ஒரு பதைபதைக்கக் கூடிய எதிர் மறைச் சமுதாய மாற்றமாக நான் உணர்கிறேன்.
‘நோய்நாடி நோய்முதல் நாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’
என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இதற்கு காரணம் தெரிந்தால் பின் அதைத் தடுக்கும் வழிகளும் புலப்படலாம்.
அனைவருக்கும் கார் என்ற குறிக்கோளுடன் டாடா குழுவின் கண்டுபிடிப்புத்தான் இந்தியாவில் நானோ கார், “ஏழைகளின் கார்” என்ற விளம்பரத்துடன் வெளியிட்டதைப் பார்த்து மற்ற கார் உற்பத்தியாளர்கள் பயந்தனர். ஆனால் வர்த்தக ரீதியில் தோற்று, நானோ உற்பத்தியே மூடப்பட்டுவிட்டது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, காரில் ஏதும் குறையில்லை, இருப்பினும் “ஏழைகளின் கார்” என்று விளம்பரப்படுத்தியதால் தோற்றதாம்!.

பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.
அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.
இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.
எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.
உலகில் எந்த நாட்டையும் விட தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தும் மிக அதிகமான பெற்றோர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு. தனது பிள்ளைகளைத் தாண்டி, பேரன் பேத்திகளையும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் தாத்தா பாட்டிகளும் நம்மிடையே உண்டு.
குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏராளமான விற்பன்னர்களை விவசாயம் முதல் விண்வெளி வரையிலான எல்லாத்துறைகளிலும் நமது கல்விக்கூடங்கள் உருவாக்கியுள்ளன.
சுருங்கச் சொன்னால், பள்ளிக்கூட அறையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, அணுவிலிருந்து சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கிரகம் வரை தமிழகத்தில் படித்தவர்களின் உயரங்கள் சிறப்பாகவே உள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்றுணர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில், கல்வி நிலையங்களை உருவாக்க முடியாத நிலை அரசுக்கும் உருவானது. அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் நிலை முதலில் உருவானது.
அதன்பின் அரசு அனுமதியுடன் சில ஆர்வலர்கள் பொருளாதார லாப நோக்கின்றி ஒரு சமுதாயத் தொண்டாய் மட்டுமே கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்த ஆரம்பித்தனர். இப்படி மூன்று வகையான கல்வி நிலையங்கள் இருந்தாலும் சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் கல்வி நிலையங்கள் ஒரு தனி மனிதனிடம் உருவாக்கவில்லை.
நாம் பார்க்கும் அந்தச் சிறப்பான இடத்தில் தமிழகமும், தமிழர்களும் இன்று வரை இருக்கக் காரணம், தேவையான அளவில், சம வாய்ப்புடன் நமக்குக் கிடைத்த பள்ளிகளும், கல்லூரிகளும், நன்கு படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும். பல ஆயிரம் குடும்பங்களில் முந்தைய தலைமுறைகளை விட அடுத்த தலை முறை தலை நிமிர்ந்து நடக்கும் ஒரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமான கோவில்களாகவும், கடவுள்களாகவும் எனக்கு அந்தக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தெரிவது ஒரு மிகையான கற்பனை அல்ல.
இப்படிப் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து கொள்ளும் நமக்கு, இன்றைய சில செய்திகளைப் பார்க்கும்போது எதிர்காலம் பற்றி ஒரு பெரிய கேள்விக்குறியும் எழுகிறது.
நான் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற கோவையில் ஒரு தாய் தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பணத்தை குறித்த காலத்திற்குள் கட்ட முடியாததால் மனம் வாடி தனக்குத்தானே தீயிட்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு நான் எழுதியது,
இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை. இன்று சமுதாயத்தில் மெதுவாகப் பரவி வரும் ஒரு பதைபதைக்கக் கூடிய எதிர் மறைச் சமுதாய மாற்றமாக நான் உணர்கிறேன்.
‘நோய்நாடி நோய்முதல் நாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’
என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இதற்கு காரணம் தெரிந்தால் பின் அதைத் தடுக்கும் வழிகளும் புலப்படலாம்.
அனைவருக்கும் கார் என்ற குறிக்கோளுடன் டாடா குழுவின் கண்டுபிடிப்புத்தான் இந்தியாவில் நானோ கார், “ஏழைகளின் கார்” என்ற விளம்பரத்துடன் வெளியிட்டதைப் பார்த்து மற்ற கார் உற்பத்தியாளர்கள் பயந்தனர். ஆனால் வர்த்தக ரீதியில் தோற்று, நானோ உற்பத்தியே மூடப்பட்டுவிட்டது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, காரில் ஏதும் குறையில்லை, இருப்பினும் “ஏழைகளின் கார்” என்று விளம்பரப்படுத்தியதால் தோற்றதாம்!.
“நானோவை” சாலையில் ஓட்டும்போது தன்னைத்தானே ஏழை என்று பறைசாற்றுவதாய் இருக்கும் எனவே அந்தக் காரை ஒதுக்கினார்களாம். இதை மனதில் வைத்து மேலே படியுங்கள், போன தலைமுறைப் பெற்றோர்களுக்கு, அதிகமான குழந்தைகள் இருந்தன. அப்போதைய கல்வி வளாகங்களுக்கிடையே பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கவில்லை. எனவே தமது குழந்தைகளை வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பினால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் இப்போது, வர்த்தக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வளாகங்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட போட்டிகள் விளையாட்டு மைதானங்களைத் தாண்டி வகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்தன.

பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.
அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.
இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.
எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.
உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.
எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.

உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.
தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.
உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.
குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.
எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.
இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக்கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.

உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.
தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.
உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.
குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.
குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும்.
நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.
குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.
அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.
நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.
குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.
அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.






