என் மலர்
குழந்தை பராமரிப்பு
தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது போல கிராமிய விளையாட்டுகளில் ஆட்டத்தை தொடங்க ஆளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள். தப்பா ஒண்ணு, தவளை ரெண்டு என்று ஆரம்பித்து சுருங்கி விழு என்று முடியும் சிறுபாடலை பாடுவார்கள். சாப்பூட் திரி, காயா-பழமா?, ஒத்தையா-ரெட்டையா? என்று வாய்மொழிகளை கூறும் வழக்கமும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை பாடி இறுதி வரி யார் மீது முடிகிறதோ அவர் ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பது விதி.
விளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டு களங்கள்.
குழந்தைகளின் ஆட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.
சிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரம் கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.

பூப்பறிக்க வருகிறோம் ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.
இளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர்.
வெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழா காலங்களில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் மேம்படுத்துகின்றன.
தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
விளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டு களங்கள்.
குழந்தைகளின் ஆட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.
சிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரம் கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.

பூப்பறிக்க வருகிறோம் ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.
இளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர்.
வெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழா காலங்களில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் மேம்படுத்துகின்றன.
தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது பெற்றோர் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வகுப்பு ஆசிரியர் ரேங்க் கார்டைக் கொடுத்துப் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும் எனச் சொன்னதும் வகுப்பின் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்துவிட்ட மதிப்பெண்களுக்கு அப்பா/அம்மாவிடம் என்ன பதில் சொல்வது எனப் பதற்றமாகிவிடுவர். அந்தப் பதற்றமே சிலரை அப்பாவின் / அம்மாவின் கையெழுத்தைத் தானே போட வைத்துவிடுகிறது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது நீங்கள் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
1. முதலில், ரேங்க் கார்ட்டை உங்களிடம் காட்டுவதற்குப் பிள்ளைகளிடமிருக்கும் அச்சத்தை உதறச் செய்ய வேண்டும். துணிவோடு வந்து, ரேங்க் கார்டில் உள்ள மதிப்பெண்கள் குறித்துப் பேசுமளவுக்கான உறவை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
2. ஒப்பீடு என்பது உங்கள் பிள்ளை இதற்கு முந்தைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் இப்போதைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும்தான் தவிர, மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களோடு அல்ல. இதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
3. ஐந்து பாடங்களில் எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருந்திருப்பது எது எனப் பாருங்கள். அதற்கான காரணங்களைப் பிள்ளையுடன் உரையாடுங்கள். பிரச்னை என்னவென்று தெரிந்துகொள்வதுடன் அதைச் சரிசெய்வது குறித்துத் திட்டமிடுங்கள்.
4. மதிப்பெண்கள் பெறுவதில் வகுப்பில் முதல் இடம் என்பது ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதனால், உங்கள் பிள்ளை ஒருமுறை முதல் இடம் பெற்றால், தொடர்ந்து அதேபோல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அதைப் பாராட்டி, அடுத்து இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவியுங்கள்.
5. 'மதிப்பெண்கள் குறைவாக இருக்கின்றன' என்பதைக் கூறி கையெழுத்து போடுவதற்கு மறுக்காதீர்கள். இப்படிச் சொல்வதே பிள்ளையிடம் அச்சத்தை விதைப்பதாகும். அடிப்பது, திட்டுவது போன்றவற்றைச் செய்யும்போது அடுத்த முறை ரேங்க் கார்டு தந்தால் பிள்ளைகளே பெற்றோரின் கையெழுத்தைப் போட்டுவிடுவர். அதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள்.
6. உங்களிடம் தரப்படும் ரேங்க் கார்டு கிழிந்தோ, மடிந்தோ, கறைபட்டோ இருந்தால் அதைப் பிள்ளைகள்தான் செய்திருப்பார்கள் எனும் முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பள்ளியில் தரும்போதோ, வாகனத்தில் வரும்போதோ அவ்வாறு ஆகியிருக்கலாம். ஒருவேளை பிள்ளைகளே அப்படிச் செய்திருந்தால் பேசி, அடுத்த முறை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.
7. ரேங்க் கார்டில் Feedback பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுபவற்றை மறக்காமல் படித்து, அந்தக் குறைகளைச் சரி செய்ய முயலுங்கள்.
8. ரேங்க் கார்டில் மதிப்பெண்களத் தவிர, பிள்ளைகளின் வருகை நாள்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாத நாள்களின் எண்ணிக்கை எத்தனை என உங்களுக்குத் தெரியும். அதுவும் ரேங்க் கார்ட்டில் உள்ள விடுப்பு நாள்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பாருங்கள். வித்தியாசம் இருந்தால், பிள்ளைகள் மற்றும் ஆசிரியரிடம் பேசி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
9. ரேங்க் கார்டைத் திருப்பித் தரும்போது ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையைத் தயார் செய்யுங்கள். தயங்கியோ, பயந்தோ வகுப்பில் நிற்கும் சூழலிலிருந்து காப்பாற்றுங்கள். முடிந்தவரை ரேங்க் கார்டை நீங்களே பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுத்து, ஆசிரியரிடம் பேசுங்கள்.
10. மதிப்பெண்கள் குறைவதற்கு, உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காதது மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருந்து அவரை வகுப்பின் இறுதியில் அமரச் செய்திருந்தாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ பாடங்களை உள்வாங்குவதில் பிள்ளைகள் சிரமப்படுவர். அதனால், அதுபோல ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்.
1. முதலில், ரேங்க் கார்ட்டை உங்களிடம் காட்டுவதற்குப் பிள்ளைகளிடமிருக்கும் அச்சத்தை உதறச் செய்ய வேண்டும். துணிவோடு வந்து, ரேங்க் கார்டில் உள்ள மதிப்பெண்கள் குறித்துப் பேசுமளவுக்கான உறவை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
2. ஒப்பீடு என்பது உங்கள் பிள்ளை இதற்கு முந்தைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் இப்போதைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும்தான் தவிர, மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களோடு அல்ல. இதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
3. ஐந்து பாடங்களில் எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருந்திருப்பது எது எனப் பாருங்கள். அதற்கான காரணங்களைப் பிள்ளையுடன் உரையாடுங்கள். பிரச்னை என்னவென்று தெரிந்துகொள்வதுடன் அதைச் சரிசெய்வது குறித்துத் திட்டமிடுங்கள்.
4. மதிப்பெண்கள் பெறுவதில் வகுப்பில் முதல் இடம் என்பது ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதனால், உங்கள் பிள்ளை ஒருமுறை முதல் இடம் பெற்றால், தொடர்ந்து அதேபோல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அதைப் பாராட்டி, அடுத்து இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவியுங்கள்.
5. 'மதிப்பெண்கள் குறைவாக இருக்கின்றன' என்பதைக் கூறி கையெழுத்து போடுவதற்கு மறுக்காதீர்கள். இப்படிச் சொல்வதே பிள்ளையிடம் அச்சத்தை விதைப்பதாகும். அடிப்பது, திட்டுவது போன்றவற்றைச் செய்யும்போது அடுத்த முறை ரேங்க் கார்டு தந்தால் பிள்ளைகளே பெற்றோரின் கையெழுத்தைப் போட்டுவிடுவர். அதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள்.
6. உங்களிடம் தரப்படும் ரேங்க் கார்டு கிழிந்தோ, மடிந்தோ, கறைபட்டோ இருந்தால் அதைப் பிள்ளைகள்தான் செய்திருப்பார்கள் எனும் முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பள்ளியில் தரும்போதோ, வாகனத்தில் வரும்போதோ அவ்வாறு ஆகியிருக்கலாம். ஒருவேளை பிள்ளைகளே அப்படிச் செய்திருந்தால் பேசி, அடுத்த முறை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.
7. ரேங்க் கார்டில் Feedback பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுபவற்றை மறக்காமல் படித்து, அந்தக் குறைகளைச் சரி செய்ய முயலுங்கள்.
8. ரேங்க் கார்டில் மதிப்பெண்களத் தவிர, பிள்ளைகளின் வருகை நாள்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாத நாள்களின் எண்ணிக்கை எத்தனை என உங்களுக்குத் தெரியும். அதுவும் ரேங்க் கார்ட்டில் உள்ள விடுப்பு நாள்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பாருங்கள். வித்தியாசம் இருந்தால், பிள்ளைகள் மற்றும் ஆசிரியரிடம் பேசி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
9. ரேங்க் கார்டைத் திருப்பித் தரும்போது ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையைத் தயார் செய்யுங்கள். தயங்கியோ, பயந்தோ வகுப்பில் நிற்கும் சூழலிலிருந்து காப்பாற்றுங்கள். முடிந்தவரை ரேங்க் கார்டை நீங்களே பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுத்து, ஆசிரியரிடம் பேசுங்கள்.
10. மதிப்பெண்கள் குறைவதற்கு, உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காதது மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருந்து அவரை வகுப்பின் இறுதியில் அமரச் செய்திருந்தாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ பாடங்களை உள்வாங்குவதில் பிள்ளைகள் சிரமப்படுவர். அதனால், அதுபோல ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்.
குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப் போய் விடுவார்கள்.
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.
குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.
குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.
குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!
1. சீட்டோஸ் எனப்படும் சில்லுகள் பார்க்க அழகாக, கண்ணைக் கவரும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால், நாம் எதைப்பற்றியும் எண்ணாமல், ஏமாந்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்..! ஆனால், இந்த சில்லுகளில் அதிகப்படியான சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன; இந்த சில்லுகள் அடர்ந்த ஆரஞ்சு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்க பெட்ரோலியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை உண்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய், ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி எனும் அதிகப்படியான செயல்பாடு, ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன..!
2. PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.
3. உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
4. பல குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
6. பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் குழைத்து, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
7. கெலாக்ஸ், சாக்கோஸ் என குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!
1. சீட்டோஸ் எனப்படும் சில்லுகள் பார்க்க அழகாக, கண்ணைக் கவரும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால், நாம் எதைப்பற்றியும் எண்ணாமல், ஏமாந்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்..! ஆனால், இந்த சில்லுகளில் அதிகப்படியான சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன; இந்த சில்லுகள் அடர்ந்த ஆரஞ்சு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்க பெட்ரோலியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை உண்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய், ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி எனும் அதிகப்படியான செயல்பாடு, ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன..!
2. PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.
3. உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
4. பல குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
6. பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் குழைத்து, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
7. கெலாக்ஸ், சாக்கோஸ் என குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கையில் அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
2016-17-ல் இந்திய அளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் மிக அதிக அளவில் 22.13 சதவீதமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 5.67 சதவீதமாகவும், ஆரம்பப்பள்ளிகளில் 6.35 சதவீதமாகவும் உள்ளது என்று இந்தியா ஸ்டாட் என்ற தகவல் திரட்டு நிறுவனம் தெரிவிக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் இது 13.9 சதவீதமாக இருந்தாலும் இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான டாக்டர்.கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2019-ல் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி அதை குறைக்க பல பரிந்துரைகளை செய்துள்ளது.
அருகமை பள்ளிகள் இல்லாத நிலை, பள்ளிகள் மீது நாட்டமின்மை, பாதுகாப்பற்ற சூழல், முக்கியமாக மாணவிகளுக்கு மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றை இடைநிற்றலுக்கான காரணங்களாக இந்த அறிக்கை சொல்கிறது.
2016-17-ல் ஆரம்பக்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிக அளவில் 95.1 சதவீதமாக இருந்தது. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் இது 90.7 சதவீதமாக குறைந்தது. 9, 10-ம் வகுப்புகளில் 79.3 சதவீதமாகவும், 11, 12-ம் வகுப்புகளில் 51.3 சதவீதமாகவும் உள்ளதாக பு.க.கொ வரைவு அறிக்கை கூறுகிறது.
அஸ்திவாரத்தை பலப்படுத்துதல்
பள்ளிகள் சுவாரசியம் மிகுந்த இடங்களாகவும் கற்றல் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகவும் மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கூறுகிறது.
மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் ஆலோசகர்களும், சிறப்பு பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். தரமான உள்ளூடுகள் கிடைக்காமல் பாடங்களில் பின் தங்குவதால் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களுக்கு மனோரீதியான ஆதரவையும், ஆலோசனைகளையும், தீர்வுகளையும் அளிப்பார்கள்.
அதிக அளவில் இடைநிற்றல் நடைபெறும் பகுதிகளில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினரிடம் சமூக ஊழியர்கள் தொடர்பு கொண்டு கல்வியில் அம்மாணவர்கள் பின் தங்குவதற்கான காரணங்களை கண்டறிவார்கள்.
காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படுவதன் மூலம் வருகைப்பதிவை அதிகரிக்க வேண்டும். அதிக வருகைப்பதிவு உடைய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.
அணுகக்கூடிய தூரத்தில் பள்ளிகள்
2016-17-ல், 100 ஆரம்பபள்ளிகளுக்கு 50 நடுநிலைப்பள்ளிகளும், 20 உயர்நிலைப்பள்ளிகளும், 9 மேல்நிலைப்பள்ளிகளும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதை சீர்செய்யும் வகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.
ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளிகளையும் தேவைப்படும் பகுதிகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
பாதுகாப்பு அம்சம்
மாணவிகளின் பாதுகாப்பு ஒரு முக்கிய விஷயமாக உள்ளதால் நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அனுப்ப குடும்பத்தினர் தயங்குகின்றனர். இதனால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்க செய்வது அதிகரிக்கிறது.
இந்த பிரச்சினையை சரி செய்ய பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், தொலைதூரப் பகுதி மாணவிகளுக்காக பாதுகாப்பான விடுதிகள், சிறப்பு பேருந்துகள், நடந்து செல்ல குழுக்கள், மேல் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்கள், போக்குவரத்து உதவித்தொகை ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான விடுதிகள்
நவோதையா பள்ளிகளில் உள்ளது போல் இலவச தங்கும் விடுதிகளை தேவைப்படும் பகுதிகளில் அரசு உருவாக்க வேண்டும். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களை மேம்படுத்த வேண்டும்.
இதன் மூலம் வெளியே தங்கி படிக்க வசதியில்லாத குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் கல்வி பெற முடியும்.
சுகாதார திட்டங்கள்
சுகாதாரம், துப்புரவு வசதிகள், ஊட்டச்சத்து இல்லாததால் உருவாகும் நோய்களின் காரணமாக இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சமூக சேவகர்கள், ஆலோசகர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மூலம் பெற்றோர்கள், சமுதாய மக்களிடம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், துப்புரவு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தப்பட வேண்டும்.
இந்த பள்ளிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிபுரிவார்கள்.
மிக இளம் வயதில் திருமணம், பாலியல் ரீதியான பாகுபாடுகள், தம்பி, தங்கைகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம், வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் போன்ற சமூக, கலாசார காரணங்களும் மாணவிகளின் கல்வியை பாதிக்கின்றன.
மறு வாய்ப்பு அளிப்பு திட்டங்கள்
பள்ளியில் இருந்து இடைநின்றவர்கள், பிற்காலத்தில் கல்வியை தொடர விரும்பினால், அவர்களுக்காக ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
இதன் மூலம் படிப்பை நிறுத்திய வகுப்பில் இருந்து மீண்டும் தொடர மறு வாய்ப்பு அளிக்கப்படும். வேலைக்கு செல்ல தொழில்முறை பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளிலும் சேரலாம்.
இடைநின்றவர்களில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத நிலையில் வயது வந்தோருக்கான கல்வியில் சேரலாம்.
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி தொலைதூரக் கல்வி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இது பயன்படும்.
அடிப்படை கற்றல் படிப்புகளுடன் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இணையான, ஏ, பி, சி என்ற மூன்று நிலை படிப்புகளை இது அளிக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான மேல்நிலை படிப்புகளையும் அளிக்கும். மாநில திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவங்களை துவக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்துதல்
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வியை கொண்டு வருவதன் மூலம் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து சிறார்களும் பள்ளிகளில் சேர்ந்து, 12-ம் வகுப்பு வரை கல்வி கற்க உறுதி செய்யப்படும்.
குருக்குலங்கள், பாடசாலைகள், மதராசாக்கள், வீட்டுக்கல்வி போன்ற பல்வகையான பள்ளிகளை அனுமதிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
மாணவர்களின் மனோரீதியான, உடல்ரீதியான பாதுகாப்பு அம்சங்கள், பாரபட்சமில்லாத சேர்க்கை, லாப நோக்கமற்ற கல்வி முறை, குறைந்தபட்ச கல்வித்தரம் ஆகியவற்றை ஒழுங்கு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான டாக்டர்.கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2019-ல் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி அதை குறைக்க பல பரிந்துரைகளை செய்துள்ளது.
அருகமை பள்ளிகள் இல்லாத நிலை, பள்ளிகள் மீது நாட்டமின்மை, பாதுகாப்பற்ற சூழல், முக்கியமாக மாணவிகளுக்கு மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றை இடைநிற்றலுக்கான காரணங்களாக இந்த அறிக்கை சொல்கிறது.
2016-17-ல் ஆரம்பக்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிக அளவில் 95.1 சதவீதமாக இருந்தது. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் இது 90.7 சதவீதமாக குறைந்தது. 9, 10-ம் வகுப்புகளில் 79.3 சதவீதமாகவும், 11, 12-ம் வகுப்புகளில் 51.3 சதவீதமாகவும் உள்ளதாக பு.க.கொ வரைவு அறிக்கை கூறுகிறது.
அஸ்திவாரத்தை பலப்படுத்துதல்
பள்ளிகள் சுவாரசியம் மிகுந்த இடங்களாகவும் கற்றல் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகவும் மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கூறுகிறது.
மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் ஆலோசகர்களும், சிறப்பு பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். தரமான உள்ளூடுகள் கிடைக்காமல் பாடங்களில் பின் தங்குவதால் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களுக்கு மனோரீதியான ஆதரவையும், ஆலோசனைகளையும், தீர்வுகளையும் அளிப்பார்கள்.
அதிக அளவில் இடைநிற்றல் நடைபெறும் பகுதிகளில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினரிடம் சமூக ஊழியர்கள் தொடர்பு கொண்டு கல்வியில் அம்மாணவர்கள் பின் தங்குவதற்கான காரணங்களை கண்டறிவார்கள்.
காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படுவதன் மூலம் வருகைப்பதிவை அதிகரிக்க வேண்டும். அதிக வருகைப்பதிவு உடைய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.
அணுகக்கூடிய தூரத்தில் பள்ளிகள்
2016-17-ல், 100 ஆரம்பபள்ளிகளுக்கு 50 நடுநிலைப்பள்ளிகளும், 20 உயர்நிலைப்பள்ளிகளும், 9 மேல்நிலைப்பள்ளிகளும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதை சீர்செய்யும் வகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.
ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளிகளையும் தேவைப்படும் பகுதிகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
பாதுகாப்பு அம்சம்
மாணவிகளின் பாதுகாப்பு ஒரு முக்கிய விஷயமாக உள்ளதால் நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அனுப்ப குடும்பத்தினர் தயங்குகின்றனர். இதனால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்க செய்வது அதிகரிக்கிறது.
இந்த பிரச்சினையை சரி செய்ய பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், தொலைதூரப் பகுதி மாணவிகளுக்காக பாதுகாப்பான விடுதிகள், சிறப்பு பேருந்துகள், நடந்து செல்ல குழுக்கள், மேல் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்கள், போக்குவரத்து உதவித்தொகை ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான விடுதிகள்
நவோதையா பள்ளிகளில் உள்ளது போல் இலவச தங்கும் விடுதிகளை தேவைப்படும் பகுதிகளில் அரசு உருவாக்க வேண்டும். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களை மேம்படுத்த வேண்டும்.
இதன் மூலம் வெளியே தங்கி படிக்க வசதியில்லாத குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் கல்வி பெற முடியும்.
சுகாதார திட்டங்கள்
சுகாதாரம், துப்புரவு வசதிகள், ஊட்டச்சத்து இல்லாததால் உருவாகும் நோய்களின் காரணமாக இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சமூக சேவகர்கள், ஆலோசகர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மூலம் பெற்றோர்கள், சமுதாய மக்களிடம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், துப்புரவு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தப்பட வேண்டும்.
இந்த பள்ளிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிபுரிவார்கள்.
மிக இளம் வயதில் திருமணம், பாலியல் ரீதியான பாகுபாடுகள், தம்பி, தங்கைகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம், வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் போன்ற சமூக, கலாசார காரணங்களும் மாணவிகளின் கல்வியை பாதிக்கின்றன.
மறு வாய்ப்பு அளிப்பு திட்டங்கள்
பள்ளியில் இருந்து இடைநின்றவர்கள், பிற்காலத்தில் கல்வியை தொடர விரும்பினால், அவர்களுக்காக ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
இதன் மூலம் படிப்பை நிறுத்திய வகுப்பில் இருந்து மீண்டும் தொடர மறு வாய்ப்பு அளிக்கப்படும். வேலைக்கு செல்ல தொழில்முறை பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளிலும் சேரலாம்.
இடைநின்றவர்களில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத நிலையில் வயது வந்தோருக்கான கல்வியில் சேரலாம்.
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி தொலைதூரக் கல்வி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இது பயன்படும்.
அடிப்படை கற்றல் படிப்புகளுடன் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இணையான, ஏ, பி, சி என்ற மூன்று நிலை படிப்புகளை இது அளிக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான மேல்நிலை படிப்புகளையும் அளிக்கும். மாநில திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவங்களை துவக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்துதல்
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வியை கொண்டு வருவதன் மூலம் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து சிறார்களும் பள்ளிகளில் சேர்ந்து, 12-ம் வகுப்பு வரை கல்வி கற்க உறுதி செய்யப்படும்.
குருக்குலங்கள், பாடசாலைகள், மதராசாக்கள், வீட்டுக்கல்வி போன்ற பல்வகையான பள்ளிகளை அனுமதிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
மாணவர்களின் மனோரீதியான, உடல்ரீதியான பாதுகாப்பு அம்சங்கள், பாரபட்சமில்லாத சேர்க்கை, லாப நோக்கமற்ற கல்வி முறை, குறைந்தபட்ச கல்வித்தரம் ஆகியவற்றை ஒழுங்கு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான் மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தை களின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான் மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தை களின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.
பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கிரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
குழந்தைகள் தூங்கும் நேரத்திலேயே பெற்றோர்களும் அதற்கேற்றார்போல் தூங்கி, அவர்கள் எழும் நேரத்துக்கே எழுந்தால் தூக்கமின்மை பிரச்சனையை ஓரளவு சமாளிக்கலாம்.
இரவில் தூக்கம் வராமல் இருக்கும் குழந்தைகள் எனில் அவர்களை பெற்றோரில் ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக் கொள்வது நல்லது. ஒருவர் விழித்திருக்கும்போது இன்னொருவர் உறங்கலாம் அல்லது வீட்டில் பெரியவர்கள் இருப்பின் அவர்கள் சிறிது நேரம் குழந்தைகளை வைத்திருக்கச் செய்யலாம்.
இதனால், குழந்தைகள் விழித்திருக்கும்போது பெற்றோர் இருவரும் விழித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இருவரின் தூக்கமும் கெடாமலும் இருக்கும். நாளடைவில் குழந்தைகளும் பெரியவர்கள் போல் இரவில் தூங்கி காலை விழித்தெழும் பழக்கத்துக்கு வந்துவிடுவார்கள் என்பதால் இந்த தூக்கமின்மை பிரச்னையை நிரந்தரமானது என்று கவலைப்படவும் வேண்டியதில்லை.
’’குழந்தைகளைத் தனியே தூங்க வைப்பதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யலாமா?‘‘மேலை நாடுகளைப் பொறுத்தவரை பிறந்த குழந்தை முதலே அவர்களை தனியே தூங்க வைக்கின்றனர். பெற்றோருடன் தூங்க வைப்பதில்லை. கைக்குழந்தையாக இருந்தாலும்கூட அவர்களை தனி கட்டிலில் படுக்க வைத்தே பழக்கப்படுத்துகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.
குழந்தைகள் பெற்றோருடன் தூங்கும்போது அதன் பாதிப்பு பல வழிகளில் இருக்கும். தூக்கமின்மை மட்டும் அல்லாமல் பெற்றோரின் தாம்பத்திய வாழ்க்கை, இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், தனிப்பட்ட பேச்சுவார்த்தை போன்றவை குழந்தைகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. தூக்கம் வராமல் குழந்தைகள் விழித்துக் கொண்டிருந்தால் அவர்களுடன் பெற்றோரும் விழித்திருக்கவும் வேண்டியிருக்கும். அதேநேரத்தில், குழந்தைகளை தனியே தூங்க வைக்கப் பழக்கும்போது, அவர்கள் விழித்திருந்தாலும் பெற்றோரின் தூக்கமோ, தனிப்பட்ட விஷயங்களோ பாதிக்காமல்சமாளித்துக் கொள்ளலாம்.
இதனால், குழந்தைகள் விழித்திருக்கும்போது பெற்றோர் இருவரும் விழித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இருவரின் தூக்கமும் கெடாமலும் இருக்கும். நாளடைவில் குழந்தைகளும் பெரியவர்கள் போல் இரவில் தூங்கி காலை விழித்தெழும் பழக்கத்துக்கு வந்துவிடுவார்கள் என்பதால் இந்த தூக்கமின்மை பிரச்னையை நிரந்தரமானது என்று கவலைப்படவும் வேண்டியதில்லை.
’’குழந்தைகளைத் தனியே தூங்க வைப்பதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யலாமா?‘‘மேலை நாடுகளைப் பொறுத்தவரை பிறந்த குழந்தை முதலே அவர்களை தனியே தூங்க வைக்கின்றனர். பெற்றோருடன் தூங்க வைப்பதில்லை. கைக்குழந்தையாக இருந்தாலும்கூட அவர்களை தனி கட்டிலில் படுக்க வைத்தே பழக்கப்படுத்துகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.
குழந்தைகள் பெற்றோருடன் தூங்கும்போது அதன் பாதிப்பு பல வழிகளில் இருக்கும். தூக்கமின்மை மட்டும் அல்லாமல் பெற்றோரின் தாம்பத்திய வாழ்க்கை, இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், தனிப்பட்ட பேச்சுவார்த்தை போன்றவை குழந்தைகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. தூக்கம் வராமல் குழந்தைகள் விழித்துக் கொண்டிருந்தால் அவர்களுடன் பெற்றோரும் விழித்திருக்கவும் வேண்டியிருக்கும். அதேநேரத்தில், குழந்தைகளை தனியே தூங்க வைக்கப் பழக்கும்போது, அவர்கள் விழித்திருந்தாலும் பெற்றோரின் தூக்கமோ, தனிப்பட்ட விஷயங்களோ பாதிக்காமல்சமாளித்துக் கொள்ளலாம்.
சத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது.
‘‘குழந்தை வளர்ச்சியில் வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த ஆரம்பகட்டத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வளர்ச்சியடைகிறது. அதனால் வீட்டு சூழலிலும் கவனம் செலுத்துவதும் அவசியமான ஒன்று. முதலில் குழந்தைகள் வளரக்கூடிய வீடு இரைச்சல்கள் இன்றி அமைதியாக இருக்கவேண்டும்.
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி பொருட்களோ, மின்சார வயர் போன்றவையோ, தண்ணீர் தொட்டியோ இருக்கக்கூடாது. மாத்திரை, மருந்துகளை குழந்தைகள் கண்ணில் படும்படி வைக்காமல் இருப்பதும் அவசியம்.
குழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். செல்போன், லேப்டாப், தொலைக்காட்சி போன்ற எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருட்களைக் கொடுத்து குந்தைகளைப் பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தையுடைய மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த எலெக்ட்ரானிக் பொருட்களால் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவ் பாதிப்புகள் வருவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டு பாடும் பழக்கம் நம் கலாசாரத்தில் உண்டு. இதன் பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளது. தாலாட்டால் குழந்தையின் செவித்திறனும், மன வளர்ச்சியும் மேம்படும் வாய்ப்பு அதிகம். தாயுடன் உணர்வுப்பூர்வமான அன்பும் இதனால் உருவாகும்.
அதேபோல், குழந்தைக்கு முன்பு புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். இதன்மூலம் நம்முடைய நல்ல பழக்கங்கள் குழந்தைகளின் மனதிலும் ஆழப்பதியும்.
இவற்றுடன் வீட்டின் உள்புற வடிவமைப்பிலும் முடிந்தால் கவனம் செலுத்தலாம். கண்ணுக்கு இதம் தரும் வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, பொம்மை படங்கள் வரைந்து வைப்பது, பூக்களால் அலங்கரிப்பது, பூந்தொட்டிகள் வைப்பது போன்றவை குழந்தையின் மனதை குதூகலப்படுத்தும். வீட்டின் செல்லப்பிராணிகளான நாய், பூனை, ஆடு போன்ற பிராணிகளோடு விளையாட விடும்போது வேறு உயிர்களின் அறிமுகமும் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு உதவும்.
ஆனால், அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் கண்காணிப்பதற்கும் மறக்க வேண்டாம். மேலும், குழந்தைகளுக்காக பாடுவது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, விளையாடுவது, குழந்தைகளோடு பேசுவது, குழந்தையை வீட்டுக்குள்ளே பொத்தி வைக்காமல் அவர்களுக்கு வெளி உலகத்தை அறிமுகப்படுத்துவது, சக குழந்தைகளோடு அவர்களை விளையாடும் சூழலை உருவாக்குவதும் அவசியம்.
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி பொருட்களோ, மின்சார வயர் போன்றவையோ, தண்ணீர் தொட்டியோ இருக்கக்கூடாது. மாத்திரை, மருந்துகளை குழந்தைகள் கண்ணில் படும்படி வைக்காமல் இருப்பதும் அவசியம்.
குழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். செல்போன், லேப்டாப், தொலைக்காட்சி போன்ற எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருட்களைக் கொடுத்து குந்தைகளைப் பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தையுடைய மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த எலெக்ட்ரானிக் பொருட்களால் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவ் பாதிப்புகள் வருவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டு பாடும் பழக்கம் நம் கலாசாரத்தில் உண்டு. இதன் பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளது. தாலாட்டால் குழந்தையின் செவித்திறனும், மன வளர்ச்சியும் மேம்படும் வாய்ப்பு அதிகம். தாயுடன் உணர்வுப்பூர்வமான அன்பும் இதனால் உருவாகும்.
அதேபோல், குழந்தைக்கு முன்பு புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். இதன்மூலம் நம்முடைய நல்ல பழக்கங்கள் குழந்தைகளின் மனதிலும் ஆழப்பதியும்.
இவற்றுடன் வீட்டின் உள்புற வடிவமைப்பிலும் முடிந்தால் கவனம் செலுத்தலாம். கண்ணுக்கு இதம் தரும் வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, பொம்மை படங்கள் வரைந்து வைப்பது, பூக்களால் அலங்கரிப்பது, பூந்தொட்டிகள் வைப்பது போன்றவை குழந்தையின் மனதை குதூகலப்படுத்தும். வீட்டின் செல்லப்பிராணிகளான நாய், பூனை, ஆடு போன்ற பிராணிகளோடு விளையாட விடும்போது வேறு உயிர்களின் அறிமுகமும் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு உதவும்.
ஆனால், அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் கண்காணிப்பதற்கும் மறக்க வேண்டாம். மேலும், குழந்தைகளுக்காக பாடுவது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, விளையாடுவது, குழந்தைகளோடு பேசுவது, குழந்தையை வீட்டுக்குள்ளே பொத்தி வைக்காமல் அவர்களுக்கு வெளி உலகத்தை அறிமுகப்படுத்துவது, சக குழந்தைகளோடு அவர்களை விளையாடும் சூழலை உருவாக்குவதும் அவசியம்.
விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டாகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும்.
புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் ஆரம்ப கல்விக்கு முன்பு 3 வருட கல்வி பரிந்துரை
பேராசிரியர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியுள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி பருவத்தை பற்றி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிறப்பு முதல் ஆறு வயது வரையிலான பருவத்தை பற்றி கவனப்படுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் கற்கத் தொடங்குவதாக நரம்பியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆறு வயதிற்குள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 85 சதவீததை எட்டிவிடும் என்பதால், இந்த பருவத்தில், குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.
எனவே ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை (இ.சி.சி.இ), பள்ளிக் கல்விக்கான ஆதாரமாக இந்த அறிக்கை முன்வைக்கிறது. இதற்கு, ஆரம்பக் கல்விக்கு முன்பாக, மூன்று வருட கல்வியை பரிந்துரைக்கிறது. 3 முதல் 8 வயது வரை ‘விளையாட்டு மூலம் கண்டறிந்து கற்றல்’ முறையின் அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை முன்மொழிகிறது. ஆரம்ப வயதுகளில் சரியாக பேணப்படாததால் பின் தங்கும் குழந்தைகள், கடைசி வரை, கல்வியில் பின்தங்குகிறார்கள் என்று மாணவர்களின் கற்றல் திறன் பற்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இந்தியாவில் கல்வி கற்றலில் ஒரு நெருக்கடி உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை கணித திறன் மற்றும் கற்றல் திறன் இல்லை. முதல் வகுப்பில் நுழைவதற்கு முன்பே இந்த பிரச்சினை உருவாகிறது. ஆறு வயதில், முதல் வகுப்பில் சேருவதற்கு முன்பு போதுமான கவனிப்பும், அடிப்படை கல்வியும் கிடைக்காததால், இது ஏற்படுகிறது. ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை கல்வி கற்க வாய்ப்பு கிடைக்காத பல சிறார்கள், ஆறு வயதாகும் முன்பே ஒன்றாம் வகுப்பில் சேருவதும் அதிகம் நடக்கிறது.
இந்த குறைபாடு, சமூகத்தில் பெரும் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான முன் கல்வியும், ஆரோக்கியமான குடும்ப சூழலும், ஊட்டசத்து மிகுந்த உணவுகளும், மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
இந்த மாற்றம் எப்படி நடக்கும்?
உயர்தரமான பராமரிப்பு, சீரான உணவு, சரியான விளையாட்டுகள், மகிழ்ச்சியான குடும்பச் சூழல், மன ரீதியான ஆதரவு ஆகியவை ஒரு குழந்தையின் முதல் ஆறு வருடங்களுக்கு மிக முக்கியமானவை என்று இந்த வரைவு அறிக்கை கருதுகிறது. இதன் மூலம் மூளை வளர்ச்சி சீராக நடந்து, கற்றல் திறன் தேவையான அளவுக்கு வளரும்.
சிறு வயதில் பல வகையான புறக்கணிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மூளை ஸ்கேன்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில், இந்த கருத்துகளை வரைவு அறிக்கை முன்வைக்கிறது. இவர்களின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் உருவாகி, அதனால் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சிறந்த இ.சி.சி.இ திட்டத்தை செயல்படுத்த அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், பத்து ரூபாய் அளவுக்கு பலன் கிடைக்கும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது.
இ.சி.சி.இ எப்படி வேலை செய்கிறது?
பிறந்தது முதல் மூன்று வயது வரை தாயாருக்கும், குழந்தைக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை பேண, தொடர்ந்து அவர்களுடன் பேசுதல், விளையாடுதல், நகர்த்துதல், இசை கேட்க வைத்தல், தொடுதல் போன்றவறை செய்ய வேண்டும். பல மொழிகளின் மற்றும் எண்களை அறிமுகம் செய்து, எளிய புதிர்களுக்கு விடை தேட பழக்குதல் ஆகியவையும் இந்த வயதுகளில் மிகவும் தேவையானவை ஆகும். 3 முதல் 6 வயது வரையிலான இரண்டாவது கட்டத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். சுயஉதவி திறன்கள், சுகாதாரம், நகரும் திறன்கள், பிரிவு, பதற்றம் போன்ற உணர்ச்சிகளை கையாளுதல், சக வயதுடைய குழந்தைகளுடன் சகஜமாக பழகுதல், சரி, தவறுகள் பற்றிய தார்மீக அறிவு, உடற்பயிற்சி ஆகியவை இதில் கற்பிக்கப்படும்.
எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பெற்றவர்களிடமும், பிறரிடமும் வெளிப்படுத்த, பிறருடன் தொடர்பு கொள்ள, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு செயலை செய்ய, பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டாகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும். கூட்டு முயற்சி, குழுவாக செயல்படுதல், சமூக ஊடாடல்கள், கருணை காட்டுதல், சமமாக நடத்துதல், சேர்த்துக்கொள்ளுதல், கலாசாரத்தை மதித்தல், ஆர்வம் காட்டல், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் சகஜமாகவும், மரியாதையுடனும் பழகுதல் ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.
பல துறை திறன்களை வளர்க்கும் நோக்கத்தை கொண்ட இ.சி.சி.இ திட்டத்தில் எழுத்துகள், மொழிகள், எண்ணுதல், வரைதல், வண்ணங்கள், வடிவங்கள், வண்ணம் பூசுதல், உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்,
புதிர்கள், தர்க்கரீதியாக சிந்தித்தல், காட்சிக் கலை, கைவினை, பொம்மலாட்டம், இசை, நடனம் ஆகியவை அடங்கும்.
பேராசிரியர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியுள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி பருவத்தை பற்றி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிறப்பு முதல் ஆறு வயது வரையிலான பருவத்தை பற்றி கவனப்படுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் கற்கத் தொடங்குவதாக நரம்பியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆறு வயதிற்குள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 85 சதவீததை எட்டிவிடும் என்பதால், இந்த பருவத்தில், குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.
எனவே ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை (இ.சி.சி.இ), பள்ளிக் கல்விக்கான ஆதாரமாக இந்த அறிக்கை முன்வைக்கிறது. இதற்கு, ஆரம்பக் கல்விக்கு முன்பாக, மூன்று வருட கல்வியை பரிந்துரைக்கிறது. 3 முதல் 8 வயது வரை ‘விளையாட்டு மூலம் கண்டறிந்து கற்றல்’ முறையின் அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை முன்மொழிகிறது. ஆரம்ப வயதுகளில் சரியாக பேணப்படாததால் பின் தங்கும் குழந்தைகள், கடைசி வரை, கல்வியில் பின்தங்குகிறார்கள் என்று மாணவர்களின் கற்றல் திறன் பற்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இந்தியாவில் கல்வி கற்றலில் ஒரு நெருக்கடி உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை கணித திறன் மற்றும் கற்றல் திறன் இல்லை. முதல் வகுப்பில் நுழைவதற்கு முன்பே இந்த பிரச்சினை உருவாகிறது. ஆறு வயதில், முதல் வகுப்பில் சேருவதற்கு முன்பு போதுமான கவனிப்பும், அடிப்படை கல்வியும் கிடைக்காததால், இது ஏற்படுகிறது. ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை கல்வி கற்க வாய்ப்பு கிடைக்காத பல சிறார்கள், ஆறு வயதாகும் முன்பே ஒன்றாம் வகுப்பில் சேருவதும் அதிகம் நடக்கிறது.
இந்த குறைபாடு, சமூகத்தில் பெரும் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான முன் கல்வியும், ஆரோக்கியமான குடும்ப சூழலும், ஊட்டசத்து மிகுந்த உணவுகளும், மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
இந்த மாற்றம் எப்படி நடக்கும்?
உயர்தரமான பராமரிப்பு, சீரான உணவு, சரியான விளையாட்டுகள், மகிழ்ச்சியான குடும்பச் சூழல், மன ரீதியான ஆதரவு ஆகியவை ஒரு குழந்தையின் முதல் ஆறு வருடங்களுக்கு மிக முக்கியமானவை என்று இந்த வரைவு அறிக்கை கருதுகிறது. இதன் மூலம் மூளை வளர்ச்சி சீராக நடந்து, கற்றல் திறன் தேவையான அளவுக்கு வளரும்.
சிறு வயதில் பல வகையான புறக்கணிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மூளை ஸ்கேன்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில், இந்த கருத்துகளை வரைவு அறிக்கை முன்வைக்கிறது. இவர்களின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் உருவாகி, அதனால் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சிறந்த இ.சி.சி.இ திட்டத்தை செயல்படுத்த அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், பத்து ரூபாய் அளவுக்கு பலன் கிடைக்கும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது.
இ.சி.சி.இ எப்படி வேலை செய்கிறது?
பிறந்தது முதல் மூன்று வயது வரை தாயாருக்கும், குழந்தைக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை பேண, தொடர்ந்து அவர்களுடன் பேசுதல், விளையாடுதல், நகர்த்துதல், இசை கேட்க வைத்தல், தொடுதல் போன்றவறை செய்ய வேண்டும். பல மொழிகளின் மற்றும் எண்களை அறிமுகம் செய்து, எளிய புதிர்களுக்கு விடை தேட பழக்குதல் ஆகியவையும் இந்த வயதுகளில் மிகவும் தேவையானவை ஆகும். 3 முதல் 6 வயது வரையிலான இரண்டாவது கட்டத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். சுயஉதவி திறன்கள், சுகாதாரம், நகரும் திறன்கள், பிரிவு, பதற்றம் போன்ற உணர்ச்சிகளை கையாளுதல், சக வயதுடைய குழந்தைகளுடன் சகஜமாக பழகுதல், சரி, தவறுகள் பற்றிய தார்மீக அறிவு, உடற்பயிற்சி ஆகியவை இதில் கற்பிக்கப்படும்.
எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பெற்றவர்களிடமும், பிறரிடமும் வெளிப்படுத்த, பிறருடன் தொடர்பு கொள்ள, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு செயலை செய்ய, பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டாகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும். கூட்டு முயற்சி, குழுவாக செயல்படுதல், சமூக ஊடாடல்கள், கருணை காட்டுதல், சமமாக நடத்துதல், சேர்த்துக்கொள்ளுதல், கலாசாரத்தை மதித்தல், ஆர்வம் காட்டல், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் சகஜமாகவும், மரியாதையுடனும் பழகுதல் ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.
பல துறை திறன்களை வளர்க்கும் நோக்கத்தை கொண்ட இ.சி.சி.இ திட்டத்தில் எழுத்துகள், மொழிகள், எண்ணுதல், வரைதல், வண்ணங்கள், வடிவங்கள், வண்ணம் பூசுதல், உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்,
புதிர்கள், தர்க்கரீதியாக சிந்தித்தல், காட்சிக் கலை, கைவினை, பொம்மலாட்டம், இசை, நடனம் ஆகியவை அடங்கும்.
குட்டீஸ் உங்களுக்கு சிலேட்டு என்றால் தெரியுமா? கடந்த தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும், சிலேட்டும் பிரிக்க முடியாதவை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குட்டீஸ் உங்களுக்கு சிலேட்டு என்றால் தெரியுமா? கடந்த தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும், சிலேட்டும் பிரிக்க முடியாதவை. அவர்கள் எழுதக் கற்கும் இடம் சிலேட்டுதான். நீங்கள் சிலேட்டில் எழுதியிருக்கிறீர்களா? முன்பெல்லாம் சிலேட்டில் நன்கு எழுதிப்பழகிய பின்புதான் நோட்டில் எழுதப் பழக்குவார்கள். பின்னர் பென்சிலில் எழுதிப் பழகிய பின்புதான், பேனாவால் எழுதத் தொடங்குவார்கள். இப்போது சிலேட்டுகள் பள்ளிகளில் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. எல்.கே.ஜி. முதலே நோட்டு பென்சில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பாரம்பரியம் மிக்க சிலேட்டுகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
எழுதும் சிலேட்டுகள் ஒரு வகை பாறையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அந்த பாறையின் பெயர்தான் சிலேட்டு. அதில் இருந்து தயாரிக்கப்படுவதால் அந்தப் பெயரையே இதற்கும் வைத்திருக்கிறார்கள். சிலேட்டு பாறைகள், உருமாறிய மென்பாறைகளாகும். களிமண் மற்றும் வண்டல் மண் அல்லது எரிமலை சாம்பல்கள் படிவுகளாகி சிலேட்டுப் பாறைகளாகின்றன.
சிலேட்டு பாறைகள் தனித்துவமானவை. பளபளப்புத் தன்மையும், மென்மையும் கொண்டவை.
களிமண்ணானது அதிக வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும்போது மைக்கா மற்றும் சிலேட்டு பாறைகள் உருவாகின்றன.
சிலேட்டுப் பாறையின் வண்ணமானது அதில் கலந்திருக்கும் இரும்புத் தாதுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. பெரும்பாலும் இவை சாம்பல் (பழுப்பு) வண்ணத்தில் காணப்படுகிறது.
சிலேட்டுப் பாறைகள் கூரைக் கற்களாவும், தரைக் கற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சிலேட்டு பாறைத் துண்டுகளே பாலிஷ் செய்யப்பட்டு எழுது பலகையாக மாணவர்களின் கைகளில் தவழ்கிறது.
1800-களில் இருந்து சிலேட்டுகளை எழுது பலகையாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

எத்தனை அடுக்குகள் கொண்ட தகட்டினால் சிலேட்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்பதைப் பொறுத்து எழுது பலகைகள் உறுதியாக இருக்கும். மென்மையான சிலேட்டுகள் எளிதில் உடைந்துவிடும்.
சிலேட்டு பாறைகள் தண்ணீர் உறிஞ்சுவதில்லை, மேலும் குளிர்ச்சியை தாங்கும் தன்மை கொண்டது என்பதால் இவை பெரும்பாலும் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிலேட்டு பாறைகள் விலை மதிப்புமிக்கவை. அதை கடினமான அடுக்காக உருவாக்கவும், பொருத்தி பயன்படுத்தவும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
சிலேட்டுகள் உலகெங்கும் தயாராகிறது. ஆனால் பிரேசில் மற்றும் இங்கிலாந்து சிலேட்டுகள் தரம்மிக்கவையாக பெயர் பெற்றுள்ளன.
கல் சிலேட்டுகளாக அறிமுகமான சிலேட்டுகள், மரச்சட்ட சிலேட்டுகள், பிளாஸ்டிக் சட்ட சிலேட்டுகள், கோடு போட்ட சிலேட்டுகள், எழுத்துகள் பதித்த சிலேட்டுகள், ஆணிமணிச் சட்ட சிலேட்டுகள், காந்தத்தன்மை கொண்ட சிலேட்டுகள் என பல நவீன அவதாரங்கள் கண்டுவிட்டன.
இன்றைய காலத்தில் கல் சிலேட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் சிலேட்டுகள் மற்றும் எழுது பலகைகள் வந்துவிட்டன. உடைந்துவிடும் சிலேட்டுகளை பலரும் விரும்புவதில்லை. இருந்தாலும் சிலேட்டுகளும் காலத்திற்கேற்ப நவீனத்துவம் பெற்று வழக்கத்திற்கு வருகின்றன. அவை என்றும் மழலைகள் விரும்பும் பொருளாக இருந்து பாடங்களை (எழுதிக்) கற்பிக்கின்றன. அழித்து அழித்து எழுதிப் பழக, சிலேட்டைவிட சிறந்த சாதனம் வேறு எதுவும் இருக்க முடியாது. உங்கள் கல்வியை சிலேட்டில் இருந்து தொடங்குங்கள்... நாளைய தலைமுறையும் சிலேட்டில் இருந்து கற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எழுதும் சிலேட்டுகள் ஒரு வகை பாறையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அந்த பாறையின் பெயர்தான் சிலேட்டு. அதில் இருந்து தயாரிக்கப்படுவதால் அந்தப் பெயரையே இதற்கும் வைத்திருக்கிறார்கள். சிலேட்டு பாறைகள், உருமாறிய மென்பாறைகளாகும். களிமண் மற்றும் வண்டல் மண் அல்லது எரிமலை சாம்பல்கள் படிவுகளாகி சிலேட்டுப் பாறைகளாகின்றன.
சிலேட்டு பாறைகள் தனித்துவமானவை. பளபளப்புத் தன்மையும், மென்மையும் கொண்டவை.
களிமண்ணானது அதிக வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும்போது மைக்கா மற்றும் சிலேட்டு பாறைகள் உருவாகின்றன.
சிலேட்டுப் பாறையின் வண்ணமானது அதில் கலந்திருக்கும் இரும்புத் தாதுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. பெரும்பாலும் இவை சாம்பல் (பழுப்பு) வண்ணத்தில் காணப்படுகிறது.
சிலேட்டுப் பாறைகள் கூரைக் கற்களாவும், தரைக் கற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சிலேட்டு பாறைத் துண்டுகளே பாலிஷ் செய்யப்பட்டு எழுது பலகையாக மாணவர்களின் கைகளில் தவழ்கிறது.
1800-களில் இருந்து சிலேட்டுகளை எழுது பலகையாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

எத்தனை அடுக்குகள் கொண்ட தகட்டினால் சிலேட்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்பதைப் பொறுத்து எழுது பலகைகள் உறுதியாக இருக்கும். மென்மையான சிலேட்டுகள் எளிதில் உடைந்துவிடும்.
சிலேட்டு பாறைகள் தண்ணீர் உறிஞ்சுவதில்லை, மேலும் குளிர்ச்சியை தாங்கும் தன்மை கொண்டது என்பதால் இவை பெரும்பாலும் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிலேட்டு பாறைகள் விலை மதிப்புமிக்கவை. அதை கடினமான அடுக்காக உருவாக்கவும், பொருத்தி பயன்படுத்தவும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
சிலேட்டுகள் உலகெங்கும் தயாராகிறது. ஆனால் பிரேசில் மற்றும் இங்கிலாந்து சிலேட்டுகள் தரம்மிக்கவையாக பெயர் பெற்றுள்ளன.
கல் சிலேட்டுகளாக அறிமுகமான சிலேட்டுகள், மரச்சட்ட சிலேட்டுகள், பிளாஸ்டிக் சட்ட சிலேட்டுகள், கோடு போட்ட சிலேட்டுகள், எழுத்துகள் பதித்த சிலேட்டுகள், ஆணிமணிச் சட்ட சிலேட்டுகள், காந்தத்தன்மை கொண்ட சிலேட்டுகள் என பல நவீன அவதாரங்கள் கண்டுவிட்டன.
இன்றைய காலத்தில் கல் சிலேட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் சிலேட்டுகள் மற்றும் எழுது பலகைகள் வந்துவிட்டன. உடைந்துவிடும் சிலேட்டுகளை பலரும் விரும்புவதில்லை. இருந்தாலும் சிலேட்டுகளும் காலத்திற்கேற்ப நவீனத்துவம் பெற்று வழக்கத்திற்கு வருகின்றன. அவை என்றும் மழலைகள் விரும்பும் பொருளாக இருந்து பாடங்களை (எழுதிக்) கற்பிக்கின்றன. அழித்து அழித்து எழுதிப் பழக, சிலேட்டைவிட சிறந்த சாதனம் வேறு எதுவும் இருக்க முடியாது. உங்கள் கல்வியை சிலேட்டில் இருந்து தொடங்குங்கள்... நாளைய தலைமுறையும் சிலேட்டில் இருந்து கற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.






