என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தேவையான பொருட்கள் :
சின்னவெங்காயம் - தேவைக்கு
பீட்ரூட் - தேவைக்கு
தக்காளி - தேவைக்கு
முள்ளங்கி - தேவைக்கு
முளை கட்டிய பச்சை பயறு - கால் கப்
வெள்ளரிக்காய் - கால் கப்
எலுமிச்சைபழம் - 1
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய கொத்தமல்லி தழை - கால் கப்
இந்துப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:
வெங்காயம், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி போன்றவைகளை சிறிதாக நறுக்கி தலா கால் கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லி, மிளகாய், முட்டை கோஸ் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதனுடன் முளைகட்டிய பச்சை பயறு, கொத்தமல்லி தழை, இந்துப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
சூப்பரான சத்தான சாலட் ரெடி.
இந்த சாலட்டை மதிய உணவுக்கு முன்பு ருசிக்கலாம்.
ஆரோக்கிய பலன்: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது. எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
சின்னவெங்காயம் - தேவைக்கு
பீட்ரூட் - தேவைக்கு
தக்காளி - தேவைக்கு
முள்ளங்கி - தேவைக்கு
முளை கட்டிய பச்சை பயறு - கால் கப்
வெள்ளரிக்காய் - கால் கப்
எலுமிச்சைபழம் - 1
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய கொத்தமல்லி தழை - கால் கப்
இந்துப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
முட்டைகோஸ் - அரை கப்

செய்முறை:
வெங்காயம், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி போன்றவைகளை சிறிதாக நறுக்கி தலா கால் கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லி, மிளகாய், முட்டை கோஸ் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதனுடன் முளைகட்டிய பச்சை பயறு, கொத்தமல்லி தழை, இந்துப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
சூப்பரான சத்தான சாலட் ரெடி.
இந்த சாலட்டை மதிய உணவுக்கு முன்பு ருசிக்கலாம்.
ஆரோக்கிய பலன்: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது. எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
-ஜஸ்வந்த் சிங், மூலிகை சமையல் கலைஞர், சென்னை.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்த ஒன்றுதான். ஆனால் அன்று அவற்றை முறியடித்த மனிதன் இன்று துவண்டு போகிறான். வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், மன அழுத்தம் காரணமாக, அதில் இருந்து முடிவு எடுக்க வாய்ப்பின்றி சூழ்நிலை பிடிக்காமல் போகும் பட்சத்தில் தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள்.
தற்கொலை முயற்சியில் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.
பொதுவாக திருமணமாகாதவர்கள், மனைவி அல்லது கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்து கொள்பவர்கள், வாழ்க்கையில் மன அழுத்தத்தில் விரக்தி அடைந்து யாரிடமும் பேச பிடிக்காமல் குழப்பத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஒருவரது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்து இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பெற்றோர் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவர்கள் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
பெற்றோர் குழந்தைகளை திட்டுவது, திருமண வாழ்க்கையில் பிரச்சினை, வரதட்சணை பிரச்சினை, கள்ளத்தொடர்பு, உடல் நோய் உபாதை, குடும்ப பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன. இதில் பெற்றோர் திட்டுவதால் தற்கொலை செய்வது முதல் காரணமாக உள்ளது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது அடுத்த இடத்தில் உள்ளது.
தற்கொலையை 2 விதமாக பார்க்கலாம். வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்கள் வீட்டில் தனிமையாக இருப்பார்கள். சரிவர சாப்பிடமாட்டார்கள். தங்களுக்கு பிடித்தமான பொருட்களை பிறருக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும் என்ற தனது மனதின் கூக்குரலை வெளிப்படுத்துவர். இதை குடும்பத்தார் கவனிப்பதில்லை.
திடீரென்று இவர்கள் தூக்குப்போட்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வார்கள். இதுமாதிரியான சூழ்நிலையில் பெற்றோர் ஜாக்கிரதையாக இருந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். இவர்கள் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள். இன்னொரு வகையினர் திட்டமிடாமல் ரெயில்முன் பாய்ந்தோ, கிணற்றில் குதித்தோ உயிரை மாய்த்துக் கொள்வார்கள். மன அழுத்தம் போன்று மன சிதைவு நோய் உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காதில் யாரோ ஒருவர் நீ உயிரோடு இருக்காதே; செத்து போயிடு என்று கூறுவதை போல உணருகிறார்கள். எதிலும் தாமதிக்காமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறவர்கள்.
திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் முன்னதாகவே ஒரு நோட்டில் கொடுக்கல் - வாங்கல் விவரத்தை எழுதி வைப்பார்கள். சிலர் உயில் கூட எழுதி வைத்து இருப்பார்கள்.
இந்தியாவில் 2016-ம் வருடம் 36.6 சதவீதம் பெண்களும், 24.3 சதவீதம் ஆண்களும் தற்கொலை செய்து கொண்டனர். இது வருடத்துக்கு வருடம் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் ஆண் - பெண் இருபாலரில் 25 சதவீதம் பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவமானமாக நினைக்கிறார்கள். தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் நாம் தப்பு பண்ணிவிட்டோம் என்று அப்பா, அம்மா நினைப்பார்களோ என்று நினைக்கிறார்கள். பெற்றோரும் பக்கத்து வீட்டு பையன் அதிக மதிப்பெண் பெற்று தங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் வாங்கினால் அதை கூறி திட்டுவார்கள். இதனால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
தந்தை டாக்டராக இருந்தால் மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மகனுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் பெற்றோர் அவர் விருப்பத்தில் விட்டுவிட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அவர் டாக்டர் தொழிலை தாண்டியும் பரிமளிக்க முடியும். இந்த எண்ணம் பெற்றோருக்கும் இல்லை, பிள்ளைக்கும் இல்லை. பிரச்சினையை எதிர்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை.

ஒரு தற்கொலை முயற்சி நடந்தால் அதை மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். தற்கொலை முயற்சி மேற்கொள்பவர்கள் அடுத்து வரும் பின்விளைவுகளையும் பார்க்கவேண்டும். தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். விளையாட்டுத்தனமாக கூட தற்கொலை முடிவில் ஈடுபடக்கூடாது. ஒருவர் விளையாட்டாக செல்போனில் தற்கொலையை படம் பிடிக்க நினைத்து, கழுத்தில் கயிறு இறுகி இறந்துபோன சம்பவம் சமீபத்தில் நடந்து உள்ளது.
ஒருமுறை தற்கொலை செய்து அதில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தற்கொலை செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு என்பதால் அவரை உளவியல் வல்லுனரிடம் ஆற்றுப்படுத்துதலுக்கும், வழிகாட்டுதலுக்கும் அழைத்துச்செல்வது சாலச்சிறந்தது.
பெற்றோர், தங்களது விருப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக அச்சுறுத்தலாக விளையாட்டாக செய்யும் முயற்சி பின்னர் விபரீதமாக முடியும் என்பதில் ஐயம் இல்லை.
மன அழுத்தம் உள்ளவர்கள் வாழ்க்கையை வெறுத்து விரக்தியான நிலையில் தற்கொலை ஒன்றே தங்கள் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி என கையாண்டு வருகிறார்கள். ஆகையால் நம்மில் யாரேனும் மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் அல்லது மன அழுத்தம் உள்ளவரை சந்தித்தால் அவரை மன நிலை மருத்துவரிடமோ அல்லது உளவியல் வல்லுனரிடமோ அழைத்துச் செல்வது நம் தலையாயக் கடமையாகும்.
இன்றைய நாகரிக காலத்தில் திருமணம் இருமனம் இணையும் ஒரு விழாவாக அல்லாமல் யார் பெரியவர் என்று போட்டியாக இல்லற வாழ்க்கை அமைந்து விடுகிறது. இதனால்தான் தனது மதிப்பை இழந்து விட்டதாக எண்ணி தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும் உண்டு.
இருவரும் மனம் விட்டு பேசி பழகினால் பிரச்சினைகளை சரிவர கையாள முடியும். பின்னர் அவர்கள் திருமண வாழ்க்கை பூத்துக் குலுங்கும் சோலையாக மாறும்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியவில்லையென்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வராமல் எந்தப்பிரிவாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் அதில் தங்கள் திறமையை வெளிக்காட்ட முயற்சி செய்வது அவசியம். அதற்கு அவர்கள் மீது அவர்களுக்கும் நம்பிக்கை இருக்கவேண்டும். தோல்வி என்பது தவறவிட்ட வெந்நி அல்ல. சற்றே தள்ளிபோன வெற்றி. ஆகையால் ராபர்ட் புரூஷும், கஜினி முகமதும் முயன்றதுபோல் நாம் ஒவ்வொருவரும் முயன்றால் தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி நடைபோடமுடியும்.
ரோஜா செடியில் முள் இருப்பதை பார்க்காமல் பூத்துக்குலுங்கும் அழகிய பூவை பார்க்க கற்றுக்கொண்டால் பிரச்சினை என்னும் செடியில் தீர்வு என்ற மலர் இருப்பதை காணலாம். இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதிக்க முடியுமா?
ஆகையால் பிரச்சினைகளுக்கு ஒதுங்காமல் மன தைரியத்தோடு எதிர்த்து போராடுங்கள். பிரச்சினைகள் தூள் தூளாகிவிடும். நாம் ஜெயிப்பது திண்ணம்.
டாக்டர் நப்பின்னை சேரன், உளவியல் வல்லுனர்,
தனியார் மருத்துவ கல்லூரி, காஞ்சீபுரம்.
கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்த ஒன்றுதான். ஆனால் அன்று அவற்றை முறியடித்த மனிதன் இன்று துவண்டு போகிறான். வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், மன அழுத்தம் காரணமாக, அதில் இருந்து முடிவு எடுக்க வாய்ப்பின்றி சூழ்நிலை பிடிக்காமல் போகும் பட்சத்தில் தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள்.
தற்கொலை முயற்சியில் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.
பொதுவாக திருமணமாகாதவர்கள், மனைவி அல்லது கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்து கொள்பவர்கள், வாழ்க்கையில் மன அழுத்தத்தில் விரக்தி அடைந்து யாரிடமும் பேச பிடிக்காமல் குழப்பத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஒருவரது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்து இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பெற்றோர் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவர்கள் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
பெற்றோர் குழந்தைகளை திட்டுவது, திருமண வாழ்க்கையில் பிரச்சினை, வரதட்சணை பிரச்சினை, கள்ளத்தொடர்பு, உடல் நோய் உபாதை, குடும்ப பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன. இதில் பெற்றோர் திட்டுவதால் தற்கொலை செய்வது முதல் காரணமாக உள்ளது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது அடுத்த இடத்தில் உள்ளது.
தற்கொலையை 2 விதமாக பார்க்கலாம். வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்கள் வீட்டில் தனிமையாக இருப்பார்கள். சரிவர சாப்பிடமாட்டார்கள். தங்களுக்கு பிடித்தமான பொருட்களை பிறருக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும் என்ற தனது மனதின் கூக்குரலை வெளிப்படுத்துவர். இதை குடும்பத்தார் கவனிப்பதில்லை.
திடீரென்று இவர்கள் தூக்குப்போட்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வார்கள். இதுமாதிரியான சூழ்நிலையில் பெற்றோர் ஜாக்கிரதையாக இருந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். இவர்கள் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள். இன்னொரு வகையினர் திட்டமிடாமல் ரெயில்முன் பாய்ந்தோ, கிணற்றில் குதித்தோ உயிரை மாய்த்துக் கொள்வார்கள். மன அழுத்தம் போன்று மன சிதைவு நோய் உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காதில் யாரோ ஒருவர் நீ உயிரோடு இருக்காதே; செத்து போயிடு என்று கூறுவதை போல உணருகிறார்கள். எதிலும் தாமதிக்காமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறவர்கள்.
திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் முன்னதாகவே ஒரு நோட்டில் கொடுக்கல் - வாங்கல் விவரத்தை எழுதி வைப்பார்கள். சிலர் உயில் கூட எழுதி வைத்து இருப்பார்கள்.
இந்தியாவில் 2016-ம் வருடம் 36.6 சதவீதம் பெண்களும், 24.3 சதவீதம் ஆண்களும் தற்கொலை செய்து கொண்டனர். இது வருடத்துக்கு வருடம் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் ஆண் - பெண் இருபாலரில் 25 சதவீதம் பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவமானமாக நினைக்கிறார்கள். தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் நாம் தப்பு பண்ணிவிட்டோம் என்று அப்பா, அம்மா நினைப்பார்களோ என்று நினைக்கிறார்கள். பெற்றோரும் பக்கத்து வீட்டு பையன் அதிக மதிப்பெண் பெற்று தங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் வாங்கினால் அதை கூறி திட்டுவார்கள். இதனால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
தந்தை டாக்டராக இருந்தால் மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மகனுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் பெற்றோர் அவர் விருப்பத்தில் விட்டுவிட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அவர் டாக்டர் தொழிலை தாண்டியும் பரிமளிக்க முடியும். இந்த எண்ணம் பெற்றோருக்கும் இல்லை, பிள்ளைக்கும் இல்லை. பிரச்சினையை எதிர்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை.

ஒரு தற்கொலை முயற்சி நடந்தால் அதை மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். தற்கொலை முயற்சி மேற்கொள்பவர்கள் அடுத்து வரும் பின்விளைவுகளையும் பார்க்கவேண்டும். தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். விளையாட்டுத்தனமாக கூட தற்கொலை முடிவில் ஈடுபடக்கூடாது. ஒருவர் விளையாட்டாக செல்போனில் தற்கொலையை படம் பிடிக்க நினைத்து, கழுத்தில் கயிறு இறுகி இறந்துபோன சம்பவம் சமீபத்தில் நடந்து உள்ளது.
ஒருமுறை தற்கொலை செய்து அதில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தற்கொலை செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு என்பதால் அவரை உளவியல் வல்லுனரிடம் ஆற்றுப்படுத்துதலுக்கும், வழிகாட்டுதலுக்கும் அழைத்துச்செல்வது சாலச்சிறந்தது.
பெற்றோர், தங்களது விருப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக அச்சுறுத்தலாக விளையாட்டாக செய்யும் முயற்சி பின்னர் விபரீதமாக முடியும் என்பதில் ஐயம் இல்லை.
மன அழுத்தம் உள்ளவர்கள் வாழ்க்கையை வெறுத்து விரக்தியான நிலையில் தற்கொலை ஒன்றே தங்கள் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி என கையாண்டு வருகிறார்கள். ஆகையால் நம்மில் யாரேனும் மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் அல்லது மன அழுத்தம் உள்ளவரை சந்தித்தால் அவரை மன நிலை மருத்துவரிடமோ அல்லது உளவியல் வல்லுனரிடமோ அழைத்துச் செல்வது நம் தலையாயக் கடமையாகும்.
இன்றைய நாகரிக காலத்தில் திருமணம் இருமனம் இணையும் ஒரு விழாவாக அல்லாமல் யார் பெரியவர் என்று போட்டியாக இல்லற வாழ்க்கை அமைந்து விடுகிறது. இதனால்தான் தனது மதிப்பை இழந்து விட்டதாக எண்ணி தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும் உண்டு.
இருவரும் மனம் விட்டு பேசி பழகினால் பிரச்சினைகளை சரிவர கையாள முடியும். பின்னர் அவர்கள் திருமண வாழ்க்கை பூத்துக் குலுங்கும் சோலையாக மாறும்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியவில்லையென்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வராமல் எந்தப்பிரிவாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் அதில் தங்கள் திறமையை வெளிக்காட்ட முயற்சி செய்வது அவசியம். அதற்கு அவர்கள் மீது அவர்களுக்கும் நம்பிக்கை இருக்கவேண்டும். தோல்வி என்பது தவறவிட்ட வெந்நி அல்ல. சற்றே தள்ளிபோன வெற்றி. ஆகையால் ராபர்ட் புரூஷும், கஜினி முகமதும் முயன்றதுபோல் நாம் ஒவ்வொருவரும் முயன்றால் தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி நடைபோடமுடியும்.
ரோஜா செடியில் முள் இருப்பதை பார்க்காமல் பூத்துக்குலுங்கும் அழகிய பூவை பார்க்க கற்றுக்கொண்டால் பிரச்சினை என்னும் செடியில் தீர்வு என்ற மலர் இருப்பதை காணலாம். இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதிக்க முடியுமா?
ஆகையால் பிரச்சினைகளுக்கு ஒதுங்காமல் மன தைரியத்தோடு எதிர்த்து போராடுங்கள். பிரச்சினைகள் தூள் தூளாகிவிடும். நாம் ஜெயிப்பது திண்ணம்.
டாக்டர் நப்பின்னை சேரன், உளவியல் வல்லுனர்,
தனியார் மருத்துவ கல்லூரி, காஞ்சீபுரம்.
உணவை நாம் ஏன் சமைத்து சாப்பிடுகிறோம் தெரியுமா? சமைத்து சாப்பிடும்போது, உணவில் உள்ள பல்வேறு சுவைகள் மற்றும் உணவு பொருள்களில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து நமது உடலுக்குள் செல்லும்.
உணவை நாம் ஏன் சமைத்து சாப்பிடுகிறோம் தெரியுமா? சமைத்து சாப்பிடும்போது, உணவில் உள்ள பல்வேறு சுவைகள் மற்றும் உணவு பொருள்களில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து நமது உடலுக்குள் செல்லும். அப்படி கலந்து செல்வதால் உணவில் ஏற்படும் மாறுபாடுகளால் அஜீரணம் தோன்றலாம். முரண்பாடான உணவுச் சேர்க்கையால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் போகலாம்.
அப்படி ஆகக்கூடாது என்பதற்காகத்தான், உணவை சமைக்கும்போது உணவின் சுவைக்கு ஏற்பவும் அதன் குணத்திற்கு ஏற்பவும் சில நறுமணப்பொருள்களை அதில் சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. அந்த நறுமண பொருட்கள் உணவிற்கு சுவையை அளிப்பதுடன் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. சத்துக்களை உடலில் எளிதில் கொண்டுபோய் சேர்க்கிறது, ஒவ்வாமை ஏற்படாமல் காக்கின்றது.
அதற்காக ஏலக்காய், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு ஆகிய எட்டு பொருட்களை குறிப்பிடத்தக்கவிதத்தில் சேர்க்கிறோம். இவைகளை உணவின் குணத்திற்கும், சுவைக்கும் ஏற்ப சேர்த்து சமைத்து உண்டால், உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மையும் சமச்சீராகும். அதனால் அவை திரிதோட சமநிலை பொருள்கள் என்று அழைக்கப்படுகிறது.
அதனை விளக்கும் விதத்தில்...
ஒன்றிய வாத பித்த கபமியையுராவண்ணம்
நன்று கறிகனெல்லா நாளுமே சமைப்பராய்தோர்
தின்று மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம்
வெற்றிகொள்ள சுக்கோடேலம் வெந்தயம் முள்ளி சேர்த்தே!
- என்ற பாடல் பதார்த்த குணசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட நறுமண பொருள்கள் அனைத்தும் சிறிது கார சுவை உடையவை. ஜீரணத்தை எளிதாக்குவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண் கொல்லிகளையும் அழிக்கும். உணவில் உள்ள நஞ்சுத்தன்மையை நீக்கும்.
இனிப்பு உணவுகளை சமைக்கும்போது நெய் சேர்க்கிறோம். அது சிலருக்கு அஜீரணக் கோளாறை உண்டாகும். மேலும் இனிப்பு சுவை கப தன்மையை அதிகப்படுத்தும். ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, குங்குமப்பூ போன்ற ஏதாவது ஒருசில நறு மணப்பொருட்களை அந்த உணவில் அதன் சுவைக்கு ஏற்ப சேர்த்தால், கப தன்மை குறையும். முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரையை சற்று தாமதமாக கலக்க செய்யும். ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயில் உள்ள நறுமண வேதிப்பொருட்கள் குடல் புண்களை ஆற்றும் சக்தி வாய்ந்தவை. குடல் புழுக்களையும் அழிக்கும் ஆற்றல்கொண்டது.
அசைவ உணவு சமைக்கும்போது பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் இவற்றை கலந்து சமைப்பது மிகச்சிறந்த முறை. மிளகு சிறந்த கிருமி நாசினி. உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் சக்தி மிளகிற்கு உண்டு. பூண்டு, இதயத்திற்கு மிக சிறந்த உணவு. ரத்தத்தில் கொழுப்பை சேரவிடாமல் காக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் பூண்டிற்கு உண்டு.
பருப்பு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சுண்டல் போன்றவற்றை தயார்செய்யும்போது மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவை உணவிற்கு தனி ருசியை அளிப்பதுடன், வாதம் அதி கரிப்பதால் உடலில் ஏற்படும் வலியையும் நீக்கும்.
நாம் சாப்பிடும் உணவில் ரசம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மிளகு, சீரகம், பூண்டு, தனியா, மஞ்சள், பெருங்காயம், கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை போன்றவை ரசத்தில் சேரும் பொருட்கள். உணவின் இடையில் நாம் ரசம் சாப்பிடு கிறோம். இது இரைப்பையில் உள்ள ஜீரண நீரினை சுரக்கச்செய்து ஜீரணத்தை எளிதாக்கி வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்துகிறது. சீரகம், காரம் மற்றும் இனிப்பு சுவையையும், குளிர்ச்சித்தன்மையையும் கொண்டது. உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கும். பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தீர்க்கவல்லது.
குழம்பு மற்றும் சாம்பார் வகைகளை தயார் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்க்கவேண்டும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. புளிப்பால் உண்டாகும் வாதத்தை குறைக்கும். பித்தத்தை தணிக்கும். நார்ச்சத்து நிறைந்த மருத்துவ உணவு இது.
காய்கறி மற்றும் கீரைகள் சமைக்கும்போது அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு. வலி, வீக்கங்களை குறைக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். உடல் மற்றும் மூளை செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.
தொண்டைக்கட்டு, குரல்பிடித்தம் ஏற்படுதல், தலைவலி, அஜீரணம், பசியின்மை, வயிற்றுப் பொருமல், வாயு தொல்லைகளுக்கு, காரச்சுவை உடைய சுக்கு மற்றும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெருங்காயம் கசப்பு, காரச்சுவையையும், வெப்பத்தன்மையையும் கொண்டது.
உப்பு, காரம், புளிப்புச்சுவை கொண்ட உணவுகளை சமைக்கும்போதும், கிழங்கு வகை உணவுகளை சமைக்கும்போதும் கட்டாயம் பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணம் காரணமாகத் தோன்றும் நெஞ்சுவலி, சாப்பிட உடன் மலம் வரும் உணர்வு, குடல் அழற்சி நோய்களுக்கு பெருங்காயம் மிகச் சிறந்த மருந்து. தொற்று நோய்களை தடுக்கும். பெருங்காயத்தை சிறிது எண்ணெய்யில் பொரித்து உணவில் சேர்க்க வேண்டும்.
உணவில் காரச் சுவைக்காக மிளகாயை பயன் படுத்துகிறோம். இது வெப்ப வகை உணவு. அதனால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்புண், மூலம் முதலிய நோய்கள் உண்டாகலாம். மிளகாயின் வெப்பத்தை குறைக்க அதற்கு சம அளவு கொத்தமல்லி விதையை( தனியா) கலந்து பயன்படுத்தவேண்டும். பச்சைமிளகாயை பயன்படுத்தும்போது, கொத்தமல்லி கீரையை சம அளவு சேர்த்துக் கொள்வது நல்லது.
உணவுப் பொருட்களை நாம் ஏன் தாளிக்கிறோம் தெரியுமா?
உணவு பொருட்களில் உள்ள சில வைட்டமின்கள் நீரில் கரையும் தன்மை உள்ளவை. சில கொழுப்பில் கரையும் தன்மை வாய்ந்தவை. உதாரணமாக கேரட், கீரைகளில் உள்ள வைட்டமின்கள் கொழுப்பில் கரையும். இவ்வகை உணவுகளை தாளிக்கும்போது, சிறிது எண்ணெய்யுடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காயம் போன்ற பொருட்களை சேர்க்கவேண்டும். அவைகளை சேர்த்து தாளிக்கும்போது, அதில் உள்ள நறுமண பொருட்கள் வெளிப்பட்டு எண்ணெய்யுடன் கலக்கும். அதை நாம் சாப்பிட்டால், உணவில் உள்ள வைட்டமின்கள் எளிதாக உடலில் சேரும். குழம்பு மற்றும் சாம்பாருக்கு கடுகுடன் வெந்தயம், பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதுபோல ரசத்திற்கு கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால், அந்த உணவுகளை உண்ணும்போது அதிக ருசி கிடைக்கும். சத்துக்களும் உடலில் சேரும்.
தொடரும்.
கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.
அப்படி ஆகக்கூடாது என்பதற்காகத்தான், உணவை சமைக்கும்போது உணவின் சுவைக்கு ஏற்பவும் அதன் குணத்திற்கு ஏற்பவும் சில நறுமணப்பொருள்களை அதில் சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. அந்த நறுமண பொருட்கள் உணவிற்கு சுவையை அளிப்பதுடன் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. சத்துக்களை உடலில் எளிதில் கொண்டுபோய் சேர்க்கிறது, ஒவ்வாமை ஏற்படாமல் காக்கின்றது.
அதற்காக ஏலக்காய், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு ஆகிய எட்டு பொருட்களை குறிப்பிடத்தக்கவிதத்தில் சேர்க்கிறோம். இவைகளை உணவின் குணத்திற்கும், சுவைக்கும் ஏற்ப சேர்த்து சமைத்து உண்டால், உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மையும் சமச்சீராகும். அதனால் அவை திரிதோட சமநிலை பொருள்கள் என்று அழைக்கப்படுகிறது.
அதனை விளக்கும் விதத்தில்...
ஒன்றிய வாத பித்த கபமியையுராவண்ணம்
நன்று கறிகனெல்லா நாளுமே சமைப்பராய்தோர்
தின்று மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம்
வெற்றிகொள்ள சுக்கோடேலம் வெந்தயம் முள்ளி சேர்த்தே!
- என்ற பாடல் பதார்த்த குணசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட நறுமண பொருள்கள் அனைத்தும் சிறிது கார சுவை உடையவை. ஜீரணத்தை எளிதாக்குவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண் கொல்லிகளையும் அழிக்கும். உணவில் உள்ள நஞ்சுத்தன்மையை நீக்கும்.
இனிப்பு உணவுகளை சமைக்கும்போது நெய் சேர்க்கிறோம். அது சிலருக்கு அஜீரணக் கோளாறை உண்டாகும். மேலும் இனிப்பு சுவை கப தன்மையை அதிகப்படுத்தும். ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, குங்குமப்பூ போன்ற ஏதாவது ஒருசில நறு மணப்பொருட்களை அந்த உணவில் அதன் சுவைக்கு ஏற்ப சேர்த்தால், கப தன்மை குறையும். முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரையை சற்று தாமதமாக கலக்க செய்யும். ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயில் உள்ள நறுமண வேதிப்பொருட்கள் குடல் புண்களை ஆற்றும் சக்தி வாய்ந்தவை. குடல் புழுக்களையும் அழிக்கும் ஆற்றல்கொண்டது.
அசைவ உணவு சமைக்கும்போது பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் இவற்றை கலந்து சமைப்பது மிகச்சிறந்த முறை. மிளகு சிறந்த கிருமி நாசினி. உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் சக்தி மிளகிற்கு உண்டு. பூண்டு, இதயத்திற்கு மிக சிறந்த உணவு. ரத்தத்தில் கொழுப்பை சேரவிடாமல் காக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் பூண்டிற்கு உண்டு.
பருப்பு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சுண்டல் போன்றவற்றை தயார்செய்யும்போது மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவை உணவிற்கு தனி ருசியை அளிப்பதுடன், வாதம் அதி கரிப்பதால் உடலில் ஏற்படும் வலியையும் நீக்கும்.
நாம் சாப்பிடும் உணவில் ரசம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மிளகு, சீரகம், பூண்டு, தனியா, மஞ்சள், பெருங்காயம், கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை போன்றவை ரசத்தில் சேரும் பொருட்கள். உணவின் இடையில் நாம் ரசம் சாப்பிடு கிறோம். இது இரைப்பையில் உள்ள ஜீரண நீரினை சுரக்கச்செய்து ஜீரணத்தை எளிதாக்கி வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்துகிறது. சீரகம், காரம் மற்றும் இனிப்பு சுவையையும், குளிர்ச்சித்தன்மையையும் கொண்டது. உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கும். பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தீர்க்கவல்லது.
குழம்பு மற்றும் சாம்பார் வகைகளை தயார் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்க்கவேண்டும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. புளிப்பால் உண்டாகும் வாதத்தை குறைக்கும். பித்தத்தை தணிக்கும். நார்ச்சத்து நிறைந்த மருத்துவ உணவு இது.
காய்கறி மற்றும் கீரைகள் சமைக்கும்போது அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு. வலி, வீக்கங்களை குறைக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். உடல் மற்றும் மூளை செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.
தொண்டைக்கட்டு, குரல்பிடித்தம் ஏற்படுதல், தலைவலி, அஜீரணம், பசியின்மை, வயிற்றுப் பொருமல், வாயு தொல்லைகளுக்கு, காரச்சுவை உடைய சுக்கு மற்றும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெருங்காயம் கசப்பு, காரச்சுவையையும், வெப்பத்தன்மையையும் கொண்டது.
உப்பு, காரம், புளிப்புச்சுவை கொண்ட உணவுகளை சமைக்கும்போதும், கிழங்கு வகை உணவுகளை சமைக்கும்போதும் கட்டாயம் பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணம் காரணமாகத் தோன்றும் நெஞ்சுவலி, சாப்பிட உடன் மலம் வரும் உணர்வு, குடல் அழற்சி நோய்களுக்கு பெருங்காயம் மிகச் சிறந்த மருந்து. தொற்று நோய்களை தடுக்கும். பெருங்காயத்தை சிறிது எண்ணெய்யில் பொரித்து உணவில் சேர்க்க வேண்டும்.
உணவில் காரச் சுவைக்காக மிளகாயை பயன் படுத்துகிறோம். இது வெப்ப வகை உணவு. அதனால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்புண், மூலம் முதலிய நோய்கள் உண்டாகலாம். மிளகாயின் வெப்பத்தை குறைக்க அதற்கு சம அளவு கொத்தமல்லி விதையை( தனியா) கலந்து பயன்படுத்தவேண்டும். பச்சைமிளகாயை பயன்படுத்தும்போது, கொத்தமல்லி கீரையை சம அளவு சேர்த்துக் கொள்வது நல்லது.
உணவுப் பொருட்களை நாம் ஏன் தாளிக்கிறோம் தெரியுமா?
உணவு பொருட்களில் உள்ள சில வைட்டமின்கள் நீரில் கரையும் தன்மை உள்ளவை. சில கொழுப்பில் கரையும் தன்மை வாய்ந்தவை. உதாரணமாக கேரட், கீரைகளில் உள்ள வைட்டமின்கள் கொழுப்பில் கரையும். இவ்வகை உணவுகளை தாளிக்கும்போது, சிறிது எண்ணெய்யுடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காயம் போன்ற பொருட்களை சேர்க்கவேண்டும். அவைகளை சேர்த்து தாளிக்கும்போது, அதில் உள்ள நறுமண பொருட்கள் வெளிப்பட்டு எண்ணெய்யுடன் கலக்கும். அதை நாம் சாப்பிட்டால், உணவில் உள்ள வைட்டமின்கள் எளிதாக உடலில் சேரும். குழம்பு மற்றும் சாம்பாருக்கு கடுகுடன் வெந்தயம், பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதுபோல ரசத்திற்கு கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால், அந்த உணவுகளை உண்ணும்போது அதிக ருசி கிடைக்கும். சத்துக்களும் உடலில் சேரும்.
தொடரும்.
கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.
தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.
படிப்பு, இதுவும் ஒருவகை உழைப்பு போன்றது தான். ஒரு விவசாயி, விதைத்த விதைக்கு, உழைப்புக்கு ஒரு வருடம் கழித்து நல்ல பலன் கிடைப்பது போல, தாங்கள் பள்ளி வகுப்பறையில் ஒரு வருடம் படித்த படிப்புக்கு பலன் கிடைக்கப்போகிறது. ஆம். ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு செல்ல போகிறீர்கள். தேர்வும் எழுதி முடித்து விட்டோம். தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-டூ போன்ற அரசு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு அல்லாத வகுப்பு மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேலாக விடுமுறை இருக்கிறது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம். தங்களது உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களோடு நலம் விசாரித்து கொண்டாடலாம்.
தங்களது பெற்றோரோடு, அண்ணன்-தங்கையோடு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு சென்று கொண்டாடலாம். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சி தரும் இடங்களுக்கு சென்று அங்குள்ள முக்கியமான இடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். தலைநகர் சென்னைக்கு சென்று அங்குள்ள மறைந்த தலைவர்களின் நினைவிடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள மியூசியம், முக்கியமான நூலகங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரியன் உதிக்கும், மறையும் நேரம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள முக்கியமான ஆன்மிக தலங்களுக்கும், முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை போன்ற பூங்காக்களுக்கும் குடும்பத்தினரோடு சென்று மகிழலாம். அப்போது முக்கொம்பு, கல்லணை போன்றவற்றின் கட்டிட அமைப்புகள், விவசாயத்துக்கு எவ்வாறு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது என்று அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
நாம், இன்று நகரத்தில் வசிக்கலாம். ஆனால், நம் பெற்றோர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களாக, கிராமத்தில் வசித்தவர்களாக இருக்கலாம். அப்படி உள்ள மாணவர்கள் நம் பெற்றோர் வசித்த கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சூழ்நிலையை அறிந்து கொள்ளலாம். கிராம மக்களுடன் சகஜமாக பேசி பழகலாம். கிராம மக்களுக்கு உதவிகள் செய்யலாம். அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆகவே, இந்த கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுங்கள் மாணவ செல்வங்களே...
பொதுத்தேர்வு அல்லாத வகுப்பு மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேலாக விடுமுறை இருக்கிறது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம். தங்களது உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களோடு நலம் விசாரித்து கொண்டாடலாம்.
தங்களது பெற்றோரோடு, அண்ணன்-தங்கையோடு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு சென்று கொண்டாடலாம். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சி தரும் இடங்களுக்கு சென்று அங்குள்ள முக்கியமான இடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். தலைநகர் சென்னைக்கு சென்று அங்குள்ள மறைந்த தலைவர்களின் நினைவிடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள மியூசியம், முக்கியமான நூலகங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரியன் உதிக்கும், மறையும் நேரம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள முக்கியமான ஆன்மிக தலங்களுக்கும், முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை போன்ற பூங்காக்களுக்கும் குடும்பத்தினரோடு சென்று மகிழலாம். அப்போது முக்கொம்பு, கல்லணை போன்றவற்றின் கட்டிட அமைப்புகள், விவசாயத்துக்கு எவ்வாறு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது என்று அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
நாம், இன்று நகரத்தில் வசிக்கலாம். ஆனால், நம் பெற்றோர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களாக, கிராமத்தில் வசித்தவர்களாக இருக்கலாம். அப்படி உள்ள மாணவர்கள் நம் பெற்றோர் வசித்த கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சூழ்நிலையை அறிந்து கொள்ளலாம். கிராம மக்களுடன் சகஜமாக பேசி பழகலாம். கிராம மக்களுக்கு உதவிகள் செய்யலாம். அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆகவே, இந்த கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுங்கள் மாணவ செல்வங்களே...
மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
நீரிழிவு நோயால் உலகில் உள்ள பெரும்பாலானோர்கள் அவதிப்படுகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எவ்வளவு மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் வந்துவிட்ட போதிலும் வீட்டிலேயே மிகவும் எளிமையாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் முறையை தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு ஆகியவை நிறைந்திருக்கிறது. இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை இருப்பதால் உடல் இன்சுலின் சுரப்பிற்கு சரியாக எதிர்வினையாற்றும். தொடர்ச்சியாக பூண்டு உட்கொண்டு வந்தால் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும் ஹோமோசிஸ்டின் என்னும் அமினோ அமிலத்தை குறைக்கும்.
மேலும் பூண்டில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. பூண்டில் வைட்டமின் பி6 மற்றும் சி நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.
தினமும் காலையில் பூண்டை சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தி வரலாம். சில சமயங்களில் பூண்டை இப்படி சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படும். அதனால் பூண்டின் தோல் உறித்து தான் சாப்பிட வேண்டும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூப், சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
1. வாயுத்தொல்லைகளை நீக்குவதில், பூண்டு மிகவும் சிறந்தது. தினசரி ஒரு பூண்டை, தீயில் சுட்டு, மென்று வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
2. ரத்தத்தை சுத்தப்படுத்தி, புற்று நோய் மாதிரியான கொடிய நோய்களை, நம்மிடம் அண்ட விடாமல் தடுக்க செய்கிறது.
3. இதயத்தில் சேரும் கொழுப்புகளை, பூண்டு கரைக்க செய்கிறது.
4. முகப்பரு இருக்கும் இடத்தில பூண்டு சாறை தடவி வந்தால் பருக்கள் உடனே மறைந்துவிடும்.
5. நல்லெண்ணையில் 10 பல் பூண்டை சேர்த்து, சுண்ட காய்ச்சி ஆற வாய்த்த பின்பு, அந்த எண்ணெயை சிறிதளவு காதுகளில் விட்டால், காது வலி குணமடையும்.
கோடை காலத்தில் மட்டுமே அதிகளவில் கிடைக்கும் நுங்குவை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று நுங்கு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நுங்கு - 10
பால் - 3 கப்
ஏலக்காய் - 3

செய்முறை :
6 நுங்கின் தோலை நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 4 நுங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும்.
பாலை நன்றாக சுண்ட காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும்
நன்கு ஆறிய பாலில் அரைத்த, பொடியாக நறுக்கிய நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாக பாயசம் பதத்திற்கு கலக்கவும்.
இப்போது சுவையான நுங்கு பாயாசம் ரெடி.
நுங்கு - 10
பால் - 3 கப்
ஏலக்காய் - 3
சர்க்கரை - சுவைக்கு

செய்முறை :
6 நுங்கின் தோலை நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 4 நுங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும்.
பாலை நன்றாக சுண்ட காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும்
நன்கு ஆறிய பாலில் அரைத்த, பொடியாக நறுக்கிய நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாக பாயசம் பதத்திற்கு கலக்கவும்.
இப்போது சுவையான நுங்கு பாயாசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்ற பார்க்கலாம்.
உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒரு மாதம் வரை 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
நாம் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆக ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. எலும்பு பலவீனம் அடைய கால்சியம் சத்து அவசியம். அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளது. எனவே, இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மார்பக புற்று நோய் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளை அழிக்கும்.
உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும்.
அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தொண்டைப்புண் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
இருமல் மற்றம் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும். முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
உலர்ந்த அத்திப்பழத்தில் நம் கண்களுக்குத் தேவையான விட்டமின் ஏ அதிக அளவு நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.
நாம் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆக ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. எலும்பு பலவீனம் அடைய கால்சியம் சத்து அவசியம். அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளது. எனவே, இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மார்பக புற்று நோய் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளை அழிக்கும்.
உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும்.
அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தொண்டைப்புண் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
இருமல் மற்றம் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும். முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
உலர்ந்த அத்திப்பழத்தில் நம் கண்களுக்குத் தேவையான விட்டமின் ஏ அதிக அளவு நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.
நுங்குவை அழகுக்காக பயன்படுத்துவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.
ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள... கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.
தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.
2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.
நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.
ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள... கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.
தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.
2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.
நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.
கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. தற்காலிக முறைகளில் பல கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
காண்டம்
காண்டம் எனப்படும் ஆணுறை மற்றும் பெண்ணுறை, எளிய தற்காலிக கருத்தடை சாதனம். உடலுறவின்போது ஆணோ, பெண்ணோ இதை அணிந்துகொண்டால், விந்து-சினைமுட்டை தொடர்பைத் தடுக்கலாம். இதனால் கருத்தரிப்பு தவிர்க்கப்படும். உறைகளுடன் சேர்த்து 'ஸ்பெர்மிசைட்' எனப்படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவதுண்டு. உடலில் எந்த வகையிலும் வினைபுரியாமல் உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கவல்ல ஒரே கருத்தடை சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணுறையில் 18% மற்றும் பெண்ணுறையில் 21% தோல்விகள் ஏற்பட வாய்ப்புண்டு.
கருத்தடை மாத்திரை
பெண்கள், சினைமுட்டை வெளிவராமல் தடுக்கக்கூடிய 'கான்ட்ராசெப்டிவ் டேப்லட்ஸ்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை மாதவிடாயின் இரண்டாம் நாள் தொடங்கி 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும். மியூக்கஸ் சுரப்பை அடர்த்திபடுத்தியும் இது கருத்தடை செய்யும். தொடர்ந்து உட்கொள்ள வேண்டும், தினமும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை, மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தடை மாத்திரை 9% தோல்வியடைய வாய்ப்புள்ளது. மேலும் பெண்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது கவனிக்க வேண்டியது.
அவசரநிலை மாத்திரை
உடலுறவு முடிந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரை, (Emergency Contraception), கரு உருவாகும் வாய்ப்பை 58% தடுக்கவல்லது.
கருத்தடை பேட்ச்
'கான்ட்ராசெப்டிவ் பேட்ச்(patch)' என்று கூறப்படும் கருத்தடை பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு என்று பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், அது சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்கும். மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான இடைவெளியில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இந்த பேட்ச், இந்தியாவில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லை.
9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள கருத்தடை சாதனம் இது.

கருத்தடை ஊசி
பெண்கள் பொதுவாக மூன்ற மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி, ப்ரொஜெஸ்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி விந்து கருப்பை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது.
6% தோல்வியடைய வாய்ப்புள்ள கருத்தடை ஊசி முறை, பெண்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
நீண்டகால கருத்தடை
நீண்டகாலத்துக்கான கருத்தடை சாதனம், காப்பர் டி(Copper T). மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால்
உட்செலுத்தப்படும் இது, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. இதில் ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தி ஆக்கி விந்துக்கள் முட்டையை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம்.
காப்பர் டி 1% மட்டுமே தோல்வியடைய வாய்ப்புள்ளது என்பதால், இந்தியப் பெண்கள் பரவலாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
நிரந்தர முறைகள்
குழந்தை வேண்டாம் என நிரந்தர முடிவெடுக்கும் பட்சத்தில், பெண்கள் கருமுட்டைக் குழாயை அடைக்கும் அல்லது அகற்றும் ட்யூபக்டமி(Tubectomy) அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். கருக்குழாய் அடைக்கப்படும் ட்யூபெக்டமியில் மீள்முறை உண்டு. அதாவது, ஒருவேளை மீண்டும் குழந்தை பெற விரும்பினால், குழாயின் அடைப்புகள் நீக்கப்பட்டு கருத்தரிக்க வழி ஏற்படுத்தப்படும். அதுவே, கருக்குழாய் அகற்றப்பட்டிருந்தால், அதற்கு மீள் முறை இல்லை.
ஆண்கள், விதைப்பையில் இருது விந்து எடுத்துச் செல்லப்படும் பாதையை அடைக்கும் வாசக்டமி(Vasectomy) கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ட்யூபக்டமியைவிட வாசக்டமி எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
காண்டம்
காண்டம் எனப்படும் ஆணுறை மற்றும் பெண்ணுறை, எளிய தற்காலிக கருத்தடை சாதனம். உடலுறவின்போது ஆணோ, பெண்ணோ இதை அணிந்துகொண்டால், விந்து-சினைமுட்டை தொடர்பைத் தடுக்கலாம். இதனால் கருத்தரிப்பு தவிர்க்கப்படும். உறைகளுடன் சேர்த்து 'ஸ்பெர்மிசைட்' எனப்படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவதுண்டு. உடலில் எந்த வகையிலும் வினைபுரியாமல் உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கவல்ல ஒரே கருத்தடை சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணுறையில் 18% மற்றும் பெண்ணுறையில் 21% தோல்விகள் ஏற்பட வாய்ப்புண்டு.
கருத்தடை மாத்திரை
பெண்கள், சினைமுட்டை வெளிவராமல் தடுக்கக்கூடிய 'கான்ட்ராசெப்டிவ் டேப்லட்ஸ்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை மாதவிடாயின் இரண்டாம் நாள் தொடங்கி 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும். மியூக்கஸ் சுரப்பை அடர்த்திபடுத்தியும் இது கருத்தடை செய்யும். தொடர்ந்து உட்கொள்ள வேண்டும், தினமும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை, மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தடை மாத்திரை 9% தோல்வியடைய வாய்ப்புள்ளது. மேலும் பெண்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது கவனிக்க வேண்டியது.
அவசரநிலை மாத்திரை
உடலுறவு முடிந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரை, (Emergency Contraception), கரு உருவாகும் வாய்ப்பை 58% தடுக்கவல்லது.
கருத்தடை பேட்ச்
'கான்ட்ராசெப்டிவ் பேட்ச்(patch)' என்று கூறப்படும் கருத்தடை பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு என்று பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், அது சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்கும். மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான இடைவெளியில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இந்த பேட்ச், இந்தியாவில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லை.
9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள கருத்தடை சாதனம் இது.

கருத்தடை ஊசி
பெண்கள் பொதுவாக மூன்ற மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி, ப்ரொஜெஸ்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி விந்து கருப்பை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது.
6% தோல்வியடைய வாய்ப்புள்ள கருத்தடை ஊசி முறை, பெண்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
நீண்டகால கருத்தடை
நீண்டகாலத்துக்கான கருத்தடை சாதனம், காப்பர் டி(Copper T). மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால்
உட்செலுத்தப்படும் இது, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. இதில் ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தி ஆக்கி விந்துக்கள் முட்டையை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம்.
காப்பர் டி 1% மட்டுமே தோல்வியடைய வாய்ப்புள்ளது என்பதால், இந்தியப் பெண்கள் பரவலாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
நிரந்தர முறைகள்
குழந்தை வேண்டாம் என நிரந்தர முடிவெடுக்கும் பட்சத்தில், பெண்கள் கருமுட்டைக் குழாயை அடைக்கும் அல்லது அகற்றும் ட்யூபக்டமி(Tubectomy) அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். கருக்குழாய் அடைக்கப்படும் ட்யூபெக்டமியில் மீள்முறை உண்டு. அதாவது, ஒருவேளை மீண்டும் குழந்தை பெற விரும்பினால், குழாயின் அடைப்புகள் நீக்கப்பட்டு கருத்தரிக்க வழி ஏற்படுத்தப்படும். அதுவே, கருக்குழாய் அகற்றப்பட்டிருந்தால், அதற்கு மீள் முறை இல்லை.
ஆண்கள், விதைப்பையில் இருது விந்து எடுத்துச் செல்லப்படும் பாதையை அடைக்கும் வாசக்டமி(Vasectomy) கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ட்யூபக்டமியைவிட வாசக்டமி எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு, கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு தயிர் கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 கப்
தயிர் - 3 கப்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும்.
கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் கரைத்த மாவை ஊற்றி நன்றாக கிளறி விடவும். மாவை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
கூழ் வெந்ததும் இறக்கி ஆறியதும் அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, கரைத்து வைத்துள்ள தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தூவி பருகவும்.
கம்பு மாவு - 1 கப்
தயிர் - 3 கப்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும்.
கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் கரைத்த மாவை ஊற்றி நன்றாக கிளறி விடவும். மாவை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
கூழ் வெந்ததும் இறக்கி ஆறியதும் அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, கரைத்து வைத்துள்ள தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தூவி பருகவும்.
சுவையான கம்பு தயிர் கூழ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும். இந்த தியானம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனாபானசதி தியானத்தின்போது அமைதியான ஆள் அரவமற்ற ஒரு இடத்திலே முதுகெலும்பை நேராக வைத்து அமர்ந்து சுவாசத்தின் மீது முழுக்கவனத்தினை செலுத்தியவாறு தியானம் செய்ய வேண்டும், என்பதனையும் நீங்கள் இப்போது அறிவீர்கள். ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும்.
நிமித்தம் எனக்கூறுவது தியானத்தின்போது முழுக்கவனத்தினையும் செலுத்த வேண்டிய விடயமாகும். அதாவது இந்த தியானத்தின்படி உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவாகும்;. இப்போது நீங்கள் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றின் மீதே உங்கள் முழுக்கவனத்தினையும் செலுத்த வேண்டும். எனவேதான் அது தியான நிமித்தம் எனப்படுகிறது. இதனை தவிர்த்த வேறெந்த நிமித்தத்தினையும் நீங்கள் இந்த தியானத்தினுள் தேட வேண்டாம்.
ஆனாபானசதியினுள்ளேயே அதாவது உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பவற்றினுள்ளேயே முழுக்கவனத்தினையும் குவிக்க பழக்கப்படுத்திக்கொள்ளும் போது சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனை நீங்கள் முன்னர் கற்றுக்கொண்டீர்கள்.

சதிபட்டான சூத்திரத்தினை தவிர கிரிமானந்த சூத்திரம், சம்யுக்த நிகாயத்தின் ஐந்தாம் பாகத்திற்குரிய சதிபட்டான சங்யுக்தம், மற்றும் ஆனாபானசதி சங்யுக்தம் என்பனவற்றிலும் இந்த ஆனாபானசதி எனும் மகத்தான தியானம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கற்பதனூடாக மென்மேலும் இந்த தியானம் தொடர்பாக அறிந்துகொள்ள முடியும். இவை யாரோ ஒருவரது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. மாறாக அனைத்தையும் உய்த்துணர்ந்து கிலேசங்களை வேரறுத்த நிர்மலமான உள்ளம் கொண்ட புத்த பகவான் ஒருவரது அகத்தில் தோன்றிய உன்னத கருத்துக்களாகும்.
ஆனாபானசதி எனும் தியானத்தினுள் இருப்பது அநித்தியமான மனசிகாரமாகும். உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவையும் அநித்தியமானவையா கும். அதேபோல் இந்த சுவாசம் இயங்கும் உருவம் அநித்தியமானதாகும். நாம் சுக துக்கம் மற்றும் சுகமோ துக்கமோ அற்ற நடுநிலை எனும் அனுபவிப்புக்களை அனுபவிக்கிறோம். உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டினுள் எண்ணங்களைக்கொண்டு சங்ஸ்காரங்களை தோற்றுவிக்கிறோம்.
இதுவும் அநித்தியம். இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றினை விஞ்ஞானம் எனும் நுண்னுணர்வினாலேயே அறிந்துகொள்கிறோம். இதுவும் அநித்தியமாகும். நீங்கள் இவ்வாறாக அநித்தியத்தினை சிந்திக்கும்போது அறிவினால் ஆராயும் போது அநித்தியமானதை அநித்தியமானதாகவே காணும் திறன் உருவாகும்.
குழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
குழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இரண்டு வயது கூட நிறைவடையாத குழந்தைகளை எவ்வித உடல் அசைவும் இன்றி வெகுநேரம் கணினி விளையாட்டுகள் போன்றவற்றில் செலவிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் கூறுகிறது.
அதே சமயத்தில், இரண்டிலிருந்து நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே மின்னணுத் திரைகளில் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலான நாடுகளில், குழந்தைகள் உறங்கச் செல்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்பிருந்தே மின்னணுத் திரைகளை அவர்களுக்குக் காண்பிக்கக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறதே தவிர, இதுவரை வரையறுக்கப்பட்ட நேரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
குழந்தைகளின் குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர்கள், அவர்களை டி.வி., செல்போன் மின்னணுத் திரைகளை அதிக நேரம் பார்க்க அனுமதிப்பது, அவர்களின் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதுடன், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் உடல் ரீதியான செயல்பாடு, நடத்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான தூக்கம் ஆகியவை பற்றி உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
மின்னணுத் திரைகளைப் போல, குழந்தைகள் கார் இருக்கை, நாற்காலி போன்றவற்றில் அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்கு மேல் செலவிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வயது கூட நிறைவடையாத குழந்தைகளை எவ்வித உடல் அசைவும் இன்றி வெகுநேரம் கணினி விளையாட்டுகள் போன்றவற்றில் செலவிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் கூறுகிறது.
அதே சமயத்தில், இரண்டிலிருந்து நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே மின்னணுத் திரைகளில் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலான நாடுகளில், குழந்தைகள் உறங்கச் செல்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்பிருந்தே மின்னணுத் திரைகளை அவர்களுக்குக் காண்பிக்கக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறதே தவிர, இதுவரை வரையறுக்கப்பட்ட நேரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
குழந்தைகளின் குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர்கள், அவர்களை டி.வி., செல்போன் மின்னணுத் திரைகளை அதிக நேரம் பார்க்க அனுமதிப்பது, அவர்களின் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதுடன், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் உடல் ரீதியான செயல்பாடு, நடத்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான தூக்கம் ஆகியவை பற்றி உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
மின்னணுத் திரைகளைப் போல, குழந்தைகள் கார் இருக்கை, நாற்காலி போன்றவற்றில் அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்கு மேல் செலவிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






